புதன், 16 ஜூலை, 2008

கடவுளைக் கேவலப்படுத்துபவர்கள் பக்தர்கள் தானே!

                                               இந்துமதக் கடவுள்களிலேயே பிள்ளையாரும் அனுமானும் அசிங்கமானவை. அதனால்தானோ என்னவோ, அவற்றிற்கு மகத்துவம் கற்பிக்க வேண்டிப் பிள்ளையாரை முழு முதல் கடவுள் என்றாக்கிக் கதை எழுதி விட்டார்கள். அனுமானை சர்வவல்லமையும், சனீஸ்வரனுக்கே தொல்லை கொடுத்தவன் என்றும், சனியைக் கும்பிடாமல் இவனைக் கும்பிட்டால் போதும் என்றும் வைணவர்கள் கதைகட்டி விட்டார்கள்.

அசிங்கமான சைவக் கடவுள் விநாயகனுக்கு அசிங்கமான பெயர்களையே வைத்து விட்டனர். பார்ப்பனர் பச்சரிச்சோறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். அதனால், கடவுளுக்குப் படையல் பச்சரிசியில் என்றாக்கி விட்டனர். இதற்கு மாறாகப் புழுங்கல் அரிசியில் கொழுக் கட்டை செய்து திருவில்லிப்புத்தூரில் உள்ள பிள்ளையாருக்குப் படைப்பார்களாம் அதனால் புழுங்கல் அரிசி விநாயகர் எனப் பெயராம்.

27 கிலோ அரிசியில் (மூன்று குறுணி) கொழுக்கட்டை செய்து படைப்பதால் மதுரை, மீனாட்சி கோயில் பிள்ளையாருக்கும் முக் குறுணிப் பிள்ளையார் என்றே பெயர். இதற்கு நேர்மாறாக 400 கிராம் (உழக்கு) அரிசியில் கொழுக்கட்டை செய்து படைப்பதால் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பிள் ளையாருக்கு உழக்கரிசிப் பிள்ளையார் என்றே பெயராம்.
கடவுளைக் கேவலப்படுத்துபவர்கள் பக்தர்கள் தானே!


http://viduthalai.com/20080621/sunday_news10.html

கருத்துகள் இல்லை: