செவ்வாய், 2 செப்டம்பர், 2008

போப் வருகையால் பெருகியது விபச்சாரம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற உலக இளைஞர் கள் தினத்துக்கு வருகை தந்தார் போப் பெனடிக்ட் சுமார் 1,25,000 பன்னாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்காக சிறப்புச் சலுகைகளையும், புதிய தொகுப்புத் திட்டங்களையும், அறிவித்திருக்கிறார்கள். பன்னாட்டு மக்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்கேற்ப பல மொழியிலிருந்து பாலியல் பணியாளர்களை இறக்குமதி செய்திருக்கும் இவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அடையாள அட்டையும் வருவோருக்கு 10 விழுக்காடு சிறப்புக் கழிவும் அறிவித்ததாம், இதேபோல 1990-இல் உலக சர்ச்சுகளின் கவுன் சில் கூடிய போதும் நல்ல வசூல் இருந்தது; அதைப்போல பன்மடங்கு எதிர்பார்க்கிறோம் என்று பாலியல் தொழில் செய்வோரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

2000-இல் போப் அன்றைய இரண்டாம் ஜான் பால் தலைமையில் ரோமில் நடைபெற்ற இதேபோன்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு அவ்விடத்தைத் தூய்மை செய்த பணியாளர்கள் ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைக் கண்டெடுத்தார்களாம் பரமண் டலத்தில் இருக்கும் பரமபிதாவே உம்முடைய இரட்சகத்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் எம் தொழில் பெருகுவதாக... நின் கிருபையினால் இவ்வாண்டு எங்களுடைய வருமானம் உயருவதாக... ஆமென்... என்று அவர்களும் இயேசுவின் புனித ஆசியைக் கோரி நிற்கிறார் கள் போலும். ஏனெனில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரிகள் உட்பட பலருக்கு ஆடி மாத சிறப்புக் கழிவு அறிவித்து வணிகம் நடத்துவதைப் போல ஒட்டுமொத்தமாக பாவ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறதல்லவா அண்மையில்... அந்த வரிசையில் ஆங்காங்கே (ஏ.டி.எம்.) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் போல, தானியங்கி பாவ மன்னிப்பு வழங்கும் இயந்திரச் சேவையும் அறிமுகப்படுத்தப்படலாம். அச்சூழலில் இந்த பாவங்களையெல்லாம் கார்டைச் செருகி கணநேரத்தில் காணாமல் செய்துவிடலாம். ஆ....மென்...!

2 கருத்துகள்:

Bleachingpowder சொன்னது…

இந்து மததிற்கு எதிராக பேசுபவர்கள், எழுதுபவர்கள் மட்டுமே பகுத்திறிவு என சிந்திக்கும் இந்த கூட்டத்திற்கு முன்பு. அது என்ன மதத்தில் இருந்தாலும், அதிலிருக்கும் குறைகளை சுட்டி காட்டி, சமரசம் செய்யாமல் சொன்ன உங்கள் துணிவிற்கு பாராட்டுக்கள்.

நீங்கள் சொன்ன இந்த கருத்தை விரமணியோ அல்லது கருணாநிதியோ பகிரங்கமா அமோதிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா மகிழ்நன்?

மகிழ்நன் சொன்னது…

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய உணர்வு. இதை ஒரு இயக்கமாக நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்கு காரணம் மதம் பரப்பியுள்ள நச்சு வேர்தான்.

இந்திய-நாடு என்று கருதப்படும் நாட்டில் இந்து மதத்திற்கு எதிரான பகுத்தறிவு அடிப்படையிலான கேள்விகள் வரும் பொழுது கண்டிப்பாக வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த பகுத்தறிவு கேள்விகளை தன்னுடைய சுயலாபத்துக்காக பயன்படுத்துவது என்பது அயோக்கியத்தனம்.


இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் அதிகமாக உழைக்கும் வர்க்கத்தை கொண்ட இந்திய நாட்டின் மதங்களை பற்றி ஆய்வு நடத்தி அதை தர்க்க ரீதியில் வென்றெடுப்பது உழைக்கும் வர்க்கத்துக்கு கடினமான செயல்.

இவர்கள் ஒரு மதத்தை கேள்வி எழுப்புவதே பெரிய செயல். பக்குவபடுத்தப்பட்ட பகுத்தறிவு கண்டிப்பாக அடுத்த மதத்திற்கு தன் கேள்வியை பரப்பும் ஐயம் கொள்ள வேண்டாம்.


கருணாநிதியாகட்டும், வீரமணியாகட்டும்,ஏன் பெரியாரகட்டும் கொள்கையில் சமரசம் செய்து கொண்டால் எல்லோருமே எதிர்க்கப் பட வேண்டியவர்கள்தான்.

இதையும் கற்று தந்தது பெரியாரியல்தான்.

மேற்கண்டவர்கள் யாரும் கொடூர பார்ப்பனீய-இந்து மதத்திற்கு அடி பணியவில்லை.என்ற அடிப்படையில் நான் கண்டிப்பாக் ஆதரிக்கிறேன்.

மேலும் அடுத்த மதத்தை ஏன் குற்றம் கூற மாட்டேன் என்கிறீர்கள் என்ற அழுகுனி வாதத்தை கைவிடவும்.

நன்றி,
மகிழ்நன்