செவ்வாய், 4 நவம்பர், 2008

தமிழன் செத்தொழிவது மேல்

இராமன் வருவானா?

 இந்துத்துவ அடிவருடிகளே! ஒற்றை சீதையை காப்பாற்ற இலங்கை சென்று இராவணனையும்,இலங்கையும் அழித்த இராமன்.

 எங்கள்/உங்கள்(தமிழனாக இருந்தால்) உறவு இலங்கையில் அழிந்து இத்தருணத்தில் கொண்டிருக்கிறது. இராமன் வருவானா காப்பாற்ற?

 இராவணன் என்பதே கற்பனை கதாபாத்திரம்,   கற்பனை கதாபாத்திரத்தை கொன்ற இராமன் இன்னொரு பெரும் போலி,ஏமாற்று, பித்தலாட்ட, பகட்டுக் கற்பனை. அப்படியிருக்க அவன் எப்படி உங்கள் இன மக்களை காப்பாற்ற வருவான் என்று இந்துத்வவாதிகளே முணுமுணுப்பது கேட்கத்தான் செய்கிறது.

 அவன் கற்பனை கதாப்பாத்திரம் மட்டுமல்ல, எம் பண்பாட்டுக்கெதிரான பார்ப்பன புழுகுமூட்டை என்பது எனக்கு நன்றாக தெரியும்.

 ஆனால் என்ன செய்வது? என் உறவு அழியும் போது, இராமன் பேர் சொல்லி இன்னொருபுறம் (இராம-தாச பொறுக்கி) இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் (
ந்து தீவிர-வாத அரசியலு)க்கு துணை போகும் தமிழர்களை என்ன கேள்விகேட்பது. இத்தருணத்தை பயன்படுத்தியாவது, இது மாதிரி கேள்வி கேட்டாவது மதச்சாக்கடைக்குள்ளிருந்து இவர்களை விடுவிக்க மாட்டோமா? என்ற நப்பாசைதான்.

 ஏனென்றால்,ஈழத்தில் தன்னுடைய இருப்புக்காக, சுய மரியாதைக்காக போராடிக்கொண்டிருக்கும் மறத்தமிழர்கள் வாழும் இவ்வுலகில் தமிழகத்தில் மறவர்கள் என்றோ, கள்ளர்கள் என்றோ, கவுண்டர்கள் என்றோ, பிள்ளை என்றோ சாதி பெருமை பேசி, திமிரோடு, காட்டுவிலங்காண்டித்தனமான அணுகுமுறையால் இலங்கையைவிட அருகில் வாழும் பெருவாரியான சகோதரர்களை சேரிகளில் ஒதுக்கி வைத்து விட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க எந்த ஈனத்தமிழனுக்கும் அருகதையில்லை.

 தமிழர்களே தயவு செய்து இந்த தருணத்திலாவது தமிழணர்வு கொள்ளுங்கள், சாதி,மத பிடியற்று வாழுங்கள் அல்லது இலங்கையில் சிங்கள இனவெறி இராணுவம் எறியும் குண்டுகளில் ஏதாவதொன்றை தமிழகத்திலும் உள்வாங்கி செத்து மடியுங்கள். (சாதிக்கட்டமைப்பு தகர்க்கபடாமல் அழுத்தமாக இலங்கையில் இருந்தால் அங்குள்ள தமிழர்கள் வாழ்வது தேவையில்லாதது).

 சாதியோடு வாழும் தமிழன் வாழ்வதற்கு பதிலாக ஒருவன்கூட மீதியில்லாமல் செத்தொழிவது எவ்வளவோ மேல்.

கருத்துகள் இல்லை: