வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழர்களே உள்ளம் எரிகிறது!!!!



நன்றி: வீர கேசரி 29/10/2009

நீங்கள் என்றுதான் திருந்துவீர்கள்.............

என்ன அப்படி ஒரு மானங்கெட்ட பக்தி............

அந்த மண்னாங்கட்டி கடவுள்கள் நம் இனத்தை கைவிட்ட பிறகும் அவைகள் இல்லை என்பது புரியவில்லை....

இனம் ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரலிட்டுவிட்டு...கோயிலில் பூசைக்கு அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமே..........கொஞ்சம்கூட சிந்தனை ஆற்றலோ இரக்கமோ நம் இனத்தவர்களுக்கு கிடையாது...

போகிற இடமெல்லாம் சாதியை தூக்கி திரிகிறோம்....சோதிடம், கடவுள், கருவறை கருமாந்திரம்னு கட்டி தொலைக்கிறோம்....

நமக்குள்ளிருக்கும் அழுக்குகளை துடைக்க துணிவில்லை....இந்த லட்சணத்தில் நமக்கு நாடு ஒரு கேடா?

தயவு செய்து திருந்துங்களேன்................சாதி, மதச்சகதியிலிருந்து வெளிவந்து நமக்கான தேசியத்தை, புரட்சியை படையுங்களேன்

1 கருத்து:

ரோஸ்விக் சொன்னது…

புரட்சியில் பட்டுப்புடவைகளையும், நகைகளையும் காட்ட முடியாதே...
மனம்தான் நோகிறது....:-(