செவ்வாய், 6 நவம்பர், 2007

" இந்த உலகுக்கு கடவுளைவிட மனிதம் உள்ள மனிதனே தேவை"

கொலை செய்யாதே! கொள்ளை அடிக்காதே!என்று கிருஸ்து உபதேசம் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால்,

கர்த்தர் கொலை, கொள்ளை செய்யத் தூண்டியதோடல்லாமல், கொள்ளையடிக்கபட்ட பொருள்களை(பெண்களோடு சேர்த்து) தானும் பங்கு போட்டு கொண்டாராம். அப்படியிருக்க அவர் மகனாகிய(இயேசுவை) மட்டும் கர்த்தர் உலக அமைதிக்காக எப்படி அனுப்பியிருப்பார்.

ஆதாரம் இதோ:

எண்ணாகமம் 31 அதிகாரம், 2ஆம் வசனம்: கர்த்த்ர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

எண்ணாகமம் 31 அதிகாரம், 17-18 ஆம் வசனம்: குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷம் யோகத்தை அறிந்த எல்லா பெண்களையும் கொன்று போடுங்கள். கன்னி பெண்களை உங்களுக்காக விட்டு வையுங்கள்.

எண்ணாகமம் 31ஆம் அதிகாரம் 35-40ஆம் வசனம்: முப்பத்தீராயிரம் கன்னி பெண்களில் (பதினாறாயிரம் பேரில்) 32 பேர் கர்த்தர் எடுத்துக் கொண்டாராம்.

கிருஸ்தவ மதத்தின் அடிப்படை நம்பிக்கையே கர்த்தரின் கன்னி பிறப்பு, மற்றும் இயேசு ம்ரித்து உயிர்த்தெழுதல். ஆனால் இவற்றை வெறும் பக்தி கண்ணோட்டத்தோடு பார்க்காமல், பகுத்தறிந்தால் இவை கட்டுக்கதை என்பது தெரிய வரும்.

ஆணுடைய துணையில்லாமல் பெண் பிள்ளை பெறுவது போன்ற பல கதைகள் அக்காலங்களில் யூத, ரோமனிய,கிரேக்க புராண கதைகளிலும், இந்து புராணங்களிலும் உணடு, உதாரணமாக, இந்து புராணங்களில் கர்ணன் என்ற பாத்திரம் ஆண் துணையில்லாமல் சூரியனுடன் கூடி ஒரு பெண் குழந்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதை நம்புவது எவ்வளவு மடத்தனமாகுமோ அதுபோலவே கன்னிக்கு இயேசு பிறந்தார் என்று நம்புவது.

விஞ்ஞான உலகத்தில் மனிதன் எதை-எதையோ கண்டு பிடித்துக் கொண்டிருக்க இன்னுமா? கடவுள் என்னும் கருத்தை மேம்படுத்த ஒரு நல்ல காரணம் தெரியவில்லை?

கடவுளின் கன்னி பிறப்பை நம்புவோரே,எந்த கன்னியாவது தான் பரிசுத்த ஆவியானாலே கருத்தரித்தேன் என்று சொன்னால் யாரேனும் நம்பத் தயாரா?

இனி அவர் மரித்தலிலும், உயிர்த் தெழுவதிலும் உள்ள குளறுபடிகள்

இயேசு பிறந்த நாட்டின் வழக்கப்படி ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும்,
மக்கள் எந்த குற்றவாளியை விடுதலை செய்யச் சொல்லி வேண்டிக் கொள்கிறார்களோ அந்த குற்றவாளியை விடுதலை செய்வார்கள்.
யாரை விடுதலை செய்ய வேண்டும்? இயேசுவையா? பரபாஸையா? என்று


பிலாத்து(அதிகாரி) மக்களிடம் கேட்டதற்கு மக்கள் " பரபாஸையே விடுதலை செய்யுங்கள, இயேசுவை சிலுவையில் அறையுங்கள. இயேசுவினுடைய இரத்தபழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் விழட்டும்."என்றார்கள்.

பிலாத்துவும் பரபஸை விடுதலை செய்துவிட்டு இயேசுவை வாரினால் அடித்து, சிலுவையில் அறையச் செய்யவும் ஒப்புக் கொண்டான்.( மத்தேயு: அதிகாரம்:24, வசனம்:15)

இயேசுவுக்கு ஆதரவாக பிலாத்துவும்,பிலாத்துவின் மனைவியும்
பிலாத்து கூறுகிறான் "இந்த நீதிமானுடைய இரத்தபழிக்கு நான் குற்றமற்றவன்." (மத்தேயு 27ஆம் அதிகாரம், 24 வசனம்)
மேலும், பிலாத்துவின் மனைவி, பிலாத்துவிடம் ஆள் அனுப்பி, இயேசுவை ஒன்றும் செய்யாமலிருக்கும்படி கூறியிருக்கிறாள், (மத்தேயு 27ஆம் அதிகாரம், 19 வசனம்)

ஆக, பிலாத்துவுக்கும், அவன் மனைவிக்கும் இயேசுவைக் கொல்ல கொஞ்சம் கூட விருப்பம் இல்லைஎன்பது தெளிவாகிறது.

இயேசு உண்மையிலே மரித்தாரா?

இயேசு ஏலீ ஏலீ என்று ம்கா சத்தமாய் கூப்பிட்டு ஆவியை விட்டார்.(மததேயு: அதிகாரம் 27, வசனம் 50)

பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.(லூக்கா:23,வசனம்:46).

இயேசு காடியை வாங்கியபின்பு, முடிந்தது,என்று சொல்லி தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக் கொடுத்தார். (யோவான்:19, வசனம் 30)

இயேசு அறையப்பட்டபோதும், அதன் பின்பும் காட்சிகளை பார்த்ததாகக் கூறப்படும் சுவிஷேகர்களின் காதுகளில், இயேசு ஆவியை விடும்போது கூறிய வார்த்தைகள் ஒரே மாதிரியாகத்தானே விழுந்திருக்க வேண்டும்? பின் வேறுவேறாகக் கூறுகிறார்கள். இயேசு எப்படி வேறுவேறாக சத்தம் போட்டு மரித்தார்.

இயேசுவைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி

சிலுவையில் அறையப்பட்டவர்கள் இறக்காமல் இருக்கும் பட்சத்தில் கால்களை முறித்து கொல்வது வழக்கமாக இருந்தது.
ஓய்வு நாளில் சிலுவையில் உடல்கள் இல்லாதபடிச் செய்வதற்காக யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய் அவர்களுடைய காலெலும்பகளை முறிப்பதற்கும், உடல்களை அப்புறப்படுத்துவதற்கும் பிலாத்துவினடத்திலே உத்தரவு கேட்டனர்( யோவான்:அதிகாரம் 19, வசனம் 31)

இது இருக்க, இயேசுவோடு அறையப்பட்ட மற்ற இருவருடைய கால்களும் முறிக்கப் பட்டனவாம். இயேசு மட்டும் முன்னரே மரித்துவிட்டாராம், ஆதலால், அவருடைய கால்கள் மட்டும் முறிக்க படவில்லையாம்,
மரித்த இயேசுவின் விலாவிலே ஈட்டியால் குத்தினபொழுது ரத்தமும் தண்ணிரும் வெளிப்பட்டதாம். (யோவான்:அதிகாரம் 19, வசனம் 34)

மரித்தவருடைய உடலில்தான் இரத்த ஓட்டம் நின்றிருக்குமே, பின் எப்படி இது சாத்தியமாகும்.

இதோடு மட்டுமல்லாமல், மரித்த இயேசுவின் உடலை யோசோப்பு பிலாத்துவினிடத்திலே கேட்க எந்த விசாரணையும் இல்லாமல் பிலாத்து இயேசுவின் உடலை யோசோப்பிடம் கொடுக்க உத்தரவிட்டான்.

மரித்தாரா என்று கூட ஒழுங்கான ஆய்வு செய்யாமல், கால்களை முறிக்காமல் யோசோப்பிடம் ஒப்படைத்தது. இயேசுவை காப்பாற்றுவதற்காகத்தான் என்றே கருதத் தூண்டுகிறது.
இயேசு என்ற ஒருவரை அடக்கம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்லறை இரண்டு மூன்று பேர் உள்ளே இருக்க கூடிய அளவில் இருந்திருக்கிறதே ஏன்?
நிக்கொதேமு என்பவன் வெள்ளை போளம், கருப்பு போளம் போன்ற மருந்து வகைகளை முன்கூட்டியே கொண்டுவந்திருந்ததையும் பார்க்கும் பொழுது (யோவான்:அதிகாரம்19, வசனம்:39)

இயேசுவை அடக்கம் பண்ணுகிற பாவனையில் கல்லறைக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை.
உடல்நிலை சரியானபின்பு உயிர்த்தெழுந்த்தாக கதை அழந்திருக்க வேண்டும்.

இயேசு சீடர்களை ரகசியமாகச் சந்தித்தல்,ஏன்?
இயேசுவை எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சம் ஆகும் படிக்குச் செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்து தம் நலம் விரும்பிகளை மட்டும் சந்தித்தது ஏன்?( அப்போஸ்தலர் நடபடிகள் 10-41) கள்ளத்தனமாக காப்பாற்றப்பட்ட இயேசு பொது மக்கள் மத்தியில் நடமாடினால், மீண்டும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால்தான் சீடர்களை மட்டும் அவர் தனிமையில் சந்தித்திருக்கக் கூடும்.
அனைத்து மக்களின் பாவத்தை கழுவ வந்தவர், ஒருமுறை எல்லோர் முன்பும் தோன்றி மக்களுக்கு விளக்கி இருக்கக் கூடாதா? இது பாவங்கள் பெருகாமல் பார்த்திருக்குமே.

இன்னும் மதச்சண்டைகள் நடந்து கொண்டிருக்க விடுதலை எப்படி கிடைக்கும். மனிதச் சிந்தனைக்கு கட்டாகவே மதங்கள் இருக்கின்றன. விடுதலை பெற விரும்புவர்கள் மதத்திலிருந்து வெளியேறுங்கள். மனிதனாய் வாழ முடிவெடுங்கள்.
பாவங்கள் பெருகி கடைசி காலத்தில் கர்த்தர் வந்து கடைசி தீர்ப்பு வழங்குவார் என்று பொய் நம்பிக்கை கொள்ளாமல், பாவங்களே நடைபெறாமல் இருக்க சுயவிழிப்புணர்வே தேவை? கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதற்காக நல்லது செய்யாமல் , இயல்பாகவே நல்லது செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
கடவுள் ஒருவேளை இருந்தால் அவர் கண்டிப்பாக தன்னை துதிப்பதற்காக நேர, பண விரயத்தை விரும்ப மாட்டார். கடவுள் விரும்பியாக இருப்பதை விட்டுவிட்டு, மனிதம் போற்றி கடவுளே உங்களை விரும்புபவராக மாறுங்கள்.


" இந்த உலகுக்கு கடவுளைவிட ம்னிதம் உள்ள மனிதனே தேவை"