வியாழன், 12 மார்ச், 2009

தேர்தலில் யாரையெல்லாம் விரட்டியடிக்க வேண்டும்- ஒரு பாமரத்தமிழனின் சினம்

நான் பாமரன். நடக்கும் தீமை கண்டு கொதிக்கும் உள்ளம் இருந்தும், தடுக்கும் திராணியற்று போயிருக்கும் சமூகத்தின் ஒரு உறுப்பினன். தன் இனத்தை சார்ந்த ஒரு பெருங்கூட்டம் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யமுடியாமல், உருவாகாத இந்திய போலி தேசியத்திடம் பிச்சை கேட்டு நிற்கும் பழம் பெருமை வாய்ந்த இந்நாள் தலைமுறையின் ஒரு பாமரன். பேசும் மொழியால் தமிழன் நான், கொள்கையின் வழியால் பெரியாரியல் மாணவன் நான். மற்றபடி சொல்வதற்கோ, பேசுதற்கோ ஏதுமில்லை என்னை பற்றி.

என்னை பற்றி பேசவா,எழுதத் தொடங்கினேன்.எம் நிலை பற்றி பேசத்தானே பேச/எழுதத் தொடங்கினேன். ஆனால், நம் நிலை பேசும் நிலையில் இல்லை, பேசினால் நாம் வெளியில் இல்லை. காலம், காலமாக மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்திய பார்ப்பன நச்சு பாம்புகளைவிடக் கொடிய பெரியாரை கொச்சைப்படுத்தும் திராவிட பாம்புகள்தான் நம்மை ஆளும் வர்க்கம். பெரியாரை உள்வாங்கிக் கொள்ளுங்கள், அவர் தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்.............., அவ்வளவுதான் அவரை பற்றி அவர் வழியில் பேச முடியும். சொன்ன கடவுள் மறுப்பை பேசக்கூடாது, அவர் பேசிய தன்மதிப்பு கொண்ட, சுயநிர்ணய உரிமைக் கொண்ட தேசியம் பற்றி பேசக் கூடாது. பேசினால்............

சரி பேசத்தான் கூடாது,எழுதினால்

தமிழர்களின் தலைவர் என்று தமிழர்களிடம் சொல்லாமலேயே தலைவராகிப்போன தலைவர் கலைஞர்,

மிகவும் நல்லவர்...........அவருடைய குடும்பத்திற்கு,

சமதர்மம் பேணுபவர்...............அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் எழுதி வச்சிட்டு இருக்காரே,

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.........தன் குடும்பத்திற்காக காங்கிரசு கொடுக்கும் குடைச்சல் அத்தனையையும் தாங்கி கொண்டவர்,

மிகவும் அன்புள்ளம் கொண்டவர் தமிழர்கள் வீட்டில் கருமாதி விழுந்தாலும், அடுப்பெறிய வேண்டும், வாய்க்கரிசி வேண்டும் என்று அக்கறையோடு பிச்சை எடுத்து பிச்சை போட்டுருக்காரே,

பெண்ணுரிமை பேணுபவர்......சோனியா என்னும் தனிப்பெண்ணின் ஒரே கணவனை கொன்றதாக சந்தேகத்திற்கிடமாக சந்தேகப்படப்படும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் பெரும்பாலான ஈழத்தமிழ் கூட்டம் அழித்தொழிக்கப்பட வேண்டும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க தாமதமானாலும் பரவாயில்லை , சோனியாவில் ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பில் தைத்த குண்டூசியை உடனடியாக எடுக்கப்பட வேண்டும், அதை புரிந்து கொள்ளாத ஆணாதிக்க தமிழர்களை புரிந்து கொள்ளாமல் தவிர்த்து, தமிழர்களை மைய-அரசை புரிந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறாரே. பெண்ணின் உள்ளுணர்வை புரிந்து கொண்டுள்ளாரே.

கலையார்வம் இன்னும் கலையாதவர்....

இறப்பு என்பது ஒரு முறைதான், அது இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? என்று ஈழத்தமிழர்கள் கொத்து குண்டுகளுக்கு பலியாகி கொண்டிருக்கும் பொழுது சொன்னதை வைத்து தமிழர்கள் கருணாநிதி ஏதோ தன் உயிரை பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தனர். வயதான பின்னாவது உண்மையான தமிழுணர்வோடு பேசுகிறார்,என்று தமக்குள் கதைத்துக் கொண்டனர். ஆனால், அத்துனை பேரையும் ஏமாற்றும் விதமாக தான் சொன்ன வசனம் ஈழத்தமிழர்களின் உயிரைப்பற்றிதான் என்பதை புரியாமல் இருக்கும் தமிழர்களிடம் இப்பொழுதும் ஓட்டு வாங்க கிளம்பிவிட்டாரே? ஒரு மாத மருத்துவமனை இடுப்பு(நடிப்பு) சிகிச்சை முடிந்து.

என்ன தமிழ்நாட்டில் இவர் மட்டும் தான் நல்லவரா?

எதிர்கட்சித் தலைவர் செயலலிதா என்ன குறைந்தவரா? அவர் அரக்கிக்கு அரக்கி, வீராதி வீர, வீர பராக்கிரம சூரி? திராவிடத்தின் பரிணாம கோளாரில் எம்ஜிஆர் என்னும் நடிகரால் ஒரு பெரிய திராவிட கட்சியின் தலைவி, தன்னை பாப்பத்தி என்று அறிவித்துக் கொண்ட பின்பும் பார்ப்பன அடிவருடிகளின், கொள்கை அடிவருடிகளின், ஓட்டு பொறுக்கிகளின் தலைவி, பெரியார் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடித்த ஆப்புக்கெல்லாம் ஆப்படிக்கும் விதமாக நாளும் பாப்பத்தி காலில் விழ திராவிடர்களை காத்தி நிற்க வைக்க பார்ப்பன சாதுர்யம். என ஆரியர்களின் இனசொறிக்கு(வெறிக்கு) அருமருந்து என கொள்கை பிளம்பாக இருக்கும் செயலலிதா.

இன்றும் தமிழ்நாட்டில் செல்வி என்னும் பட்டத்தோடு வலம் வரும் இவர், திமிரோடு சிறிது கூட மனிதாபிமானம் இல்லாமல், போர் நடக்கும் இடங்களில் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர். ஒரு கண்டுபிடிப்போடு நிற்காமல் ,இங்கு தமிழுணர்வு சாதிக்கு பின்னாலும், பணத்திற்கு பின்னாலும் இலகுவாக ஒழிந்து கொள்ளும் என்ற பழைய இவருடைய கண்டுபிடிப்புக்கு உரிமம் வாங்கும் விதமாக ஓட்டுப்பொறுக்க ஈழத்தமிழர்களுக்கு பணம் பொறுக்கி, அதற்கு வைகோ, தா. பாண்டியன் போன்றவர்களை ஒத்து ஊத, பக்க மேளம் அடிக்க வைத்து ஒரு உண்ணாவிரத நாடகத்தையும் (பழைய நடிப்பு திறமை கைகொடுத்திருக்கும்!) நடத்தி முடித்திருக்கிறார்(டேக் எத்தனை?)

புயல் வருது விலகுங்க, அக்காவோட தம்பி வர்ராறு வழி விடுங்க!

அடுத்தது வைகைபுயல் வடிவேலு, மன்னிக்கவும் வைகோ. அவர்கள். இவர் தமிழின துரோகத்தை, தமிழின எதிரியோடு இருந்து கண்டுபிடிப்பார், பின்னர் கண்டிப்பார். என்னை ஜெயலலிதா கைது செய்ததில்லை,என்பது போல் பேசும் இவர், கைது செய்ததை மறக்க அது போன ஆட்சி, நான் சொல்றது இந்த மைனாரிட்டி கருணாநிதி ஆட்சி. கருணாநிதி ஆட்சியில கருணாநிதி அரசுதான் கைது செய்யும், ஜெயலலிதா கைது செய்ய முடியாது. என்பது ஏன் இந்த கொள்கை புயலுக்கு புரியவில்லை, என்பதுதான் நம்மால் கண்டுபிடிக்க முடியாதது.

அடுத்தது மருத்துவர் ஐயா தமிழ்க்குடி தாங்கி (இராமதாசு),

இவரது ஊடகம்தான் ஈழம் குறித்த செய்திகளை தமிழ்நாட்டில் பெருமளவில் உண்மையாக தெரிவித்தது. அதில் மிகவும் உரிமையோடும், கடமையோடு பாராட்டுகிற அதே வேளையில், எந்த அரசு தமிழக மக்களை கொன்று குருதி குடிக்க ஆவலோடு உதவி செய்து வருகிறதோ, அந்த அரசில் அமைச்சராக தமது மகனை அமைச்சராக வைத்துக் கொண்டு, யாரை எதிர்த்து போலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா என்னும் நாட்டில் விரும்பியோ/ விரும்பாமலோ குடிமகனாக இருந்து கொண்டு யாருக்கு எதிராக போராடுகிறீர்கள். சோனியாவை எதிர்க்கமாட்டாமல், கலைஞரை மட்டும் எதிர்த்து கொண்டு, காங்கிரசை எதிர்க்காமல் இலங்கை தமிழரை காப்பாற்ற அமைப்பை யாருக்கு எதிராக உருவாக்கியிருக்கிறீர்கள்.

அதோடு, உங்கள் தமிழுணர்வு சாதியுணர்வை தமிழர்கள் மத்தியில் மழுங்கடிக்க உதவுமென்றால என்னை போன்ற இன்றைய தலை முறை இளைஞர்கள் கண்டிப்பாக குரல் கொடுப்போம். சாதி ஒழிப்பை இனியாவது, ஈழப்பிரச்சினைக்கு பிறகாவது, நீங்கள் சார்ந்ததாக இந்த சமூகம் கருதும் வன்னிய சமூகத்தாரிடம் கொண்டு செல்லும் வழியை விரைவில் சென்றடையுங்கள், இதை நீங்கள் செய்வீர்களேயானால் தமிழ் இனம் ஈழத்தில் மட்டுமல்ல, இங்கும் விடுதலை பெறும்.

தமிழக தலைவர்களே உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கோடு இதை நான் எழுதவில்லை,மாறாக நீங்கள் விமர்சிக்கும் படியாக அயோக்கியத்தனம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதனால் எழுதப்பட்டது.

நீங்கள் எடுக்கும் முன்னெடுப்பை தவறு கூறுவதற்காக அல்ல இது, தயவு கூர்ந்து தமிழக மக்களுக்காக சிந்திக்க தொடங்குங்கள். மைய அரசை மையப்படுத்தி சிந்திப்பதை தவிர்த்தாலே, தமிழர்களை மையப்படுத்தி சிந்தித்தாலே, மைய அரசு நம் காலில் விழும், ஆனால் நாம் கண்டிப்பாக காலில் விழும் நிலை வந்திருக்காது. மைய அரசில் அமைச்சர் பதவி கனவு கண்டிப்பாக நம் சுய உரிமைக்கான சிந்தனையை மழுங்கடித்திருக்கிறது.

தயவு கூர்ந்து, அரசியலிலிருந்து அரசியல் சாராமல் தமிழின எழுச்சிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள், இங்கு விமர்சனத்தில் திருமா சேர்க்கப்படாதது, அவருடைய இன்றைய நிலைதான் காரணம் நாளை, இந்த அரசியல் காய்நகர்த்தலால் அவரும் வந்து சேரலாம்.

தமிழர்கள் யாரும் திமுகவையோ, அதிமுகவையோ விரும்பவில்லை, காங்கிரசை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள வில்லை. ஒரு மாற்றை தேடுகிறது ஒரு பாமர தமிழரின் உள்ளம். இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களுக்கு மாத்தை தேடுகிறது, விளக்கு மாத்தை தேடுகிறது.

இனத்துரோகம், செய்பவர்கள் வருங்கால இளைஞர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரசியல்வாதிகளிடம் இந்த கோரிக்கை தவறானதுதான், இருந்தாலும்

நீங்கள் களைகளாக இருக்காதீர்கள், களைஎடுப்பவர்களாக மாறுங்கள், தமிழனின் வாழ்வுநிலை, சிந்திக்கும் திசை மாறும்.

தமிழர்களே! தேர்தலில் இவர்கள் எல்லோரையும்தான் விரட்டியடிக்க வேண்டும், ஆனால், விரட்டமுடியாதபடி வித்தியாசமாய், துரத்தும் முன்னே அவர்களே கைகோர்த்து ஓடத் தொடங்கியுள்ளனர். ஓடும் வரை ஓடட்டும், நாம் காத்திருந்து கண்டிப்பாக இந்த புல்லுருவிகளை ஓட வைப்போம்.

புதன், 4 மார்ச், 2009

ராஜீவ் கொலையில் நடந்த சதி( சு(னா) சாமிக்கு தொடர்பு)



ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமி - சுப்ரமணியசாமி இருவர் மீதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ராஜீவ் கொலையில் - தமிழகத் தலைவர்களைத் தொடர்புபடுத்தி மிரட்டி வந்தவர் சுப்ரமணியசாமி. இந்த பார்ப்பனரே - ராஜீவ் கொலையில் சந்தேகத்துக்கு உரியவர். ஜெயின் கமிஷன் - சுப்ரமணியசாமி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்ரமணியசாமி பற்றி கூறப்பட்டிருப்பது என்ன? இதோ சில பகுதிகள்:

1995 ஜூன், ஜூலையில் சந்திராசாமியும், சுப்ரணியசாமியும் லண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களில் லண்டன் பயணத்தின் நோக்கம் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்து கிறது.

காலிஸ்தான் விடுதலைப் படையைச் சார்ந்த ஜெக்ஜித்சிங் சவுகான் என்பவர் - அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவா தாஸ் என்பவரிடம் ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டம் இருப்ப தாகக் கூறி இருக்கிறார். இதை சேவா தாஸ் என்பவர் ஜெயின் கமிஷன் முன் தெரிவித்தார். லண்டனில் உள்ள சவுகான் வீட்டில் - தீவிரவாதிகள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் நடந்தது என்றும், அதில் இந்தக் கொலைத் திட்டம் பற்றி கூறப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நிலையில் - சவுகானை அப்ரூவராக மாறும்படி வலியுறுத்தவே சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் லண்டன் சென்றார்களா என்று, கமிஷனில் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயின் தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு சுப்ரமணியசாமிக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்.

கமிஷன் முன்பு சுப்ரமணியசாமி நடந்து கொண்ட முறையையும் கமிஷன் குறை கூறியுள்ளதோடு, பல தேவை யான பொருத்தமுள்ள கேள்விகளுக்கு, சுப்ரமணியசாமி பதிலளிக்க மறுத்து விட்டதால் உண்மையைக் கண்டறிய அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் 8-வது பகுதியில் 231-வது பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

If would appear that consistant and persistant effort is there on his (Subramania samy) part not to answer the questions which are most relevant in order to find out the truth (jain commission report vol. viii-page 231)

இந்தப் பின்னணியில் - சுப்ரமணிய சாமி பற்றி அவரது கட்சிச் செயலாளராக இருந்த வேலுசாமி என்பவர் ஜெயின் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தையும் குறிப்பிட வேண்டும்.

வேலுசாமி அளித்த சாட்சியம்:

1991 மே 24-ம் தேதியோடு தமிழகத் தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருந்தது. அதற்கு 3 நாட்களுக்கு முன்பு மே 31-ம் தேதி ராஜீவ் திருப்பெரும் புதூரில் கொலை செய்யப்பட்டார்.

மே 19-ம் தேதி தில்லியிலிருந்து தமிழகம் வந்த சுப்ரமணியசாமி திருப்பெரும்புதூர் பகுதிக்குத்தான் சென்றார். திருப்பெரும்புதூர் வழியாக நாங்கள் காஞ்சிபுரம் சென்று, பகல் உணவை முடித்துக் கொண்டு வாலாஜா பாத்துக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி கூட்டம் பேசிவிட்டு, பிறகு திருத்தணி, பள்ளிப்பட்டுக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர் திரும்பினோம்.

அடுத்த நாள் 20-ம் தேதி சேலம், ஆத்தூர் சென்றுவிட்டு நான் விடை பெற்று திருச்சி சென்றுவிட்டேன். அடுத்து 21-ம் தேதி காலை சுப்ர மணியசாமி, விமானம் மூலம் டில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். 21-ம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே, அதை முடித்துக் கொண்டு 22-ம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்குச் செல்கிறேன் என்று என்னிடம் சுப்ரமணியசாமி பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார்.

21-ம் தேதி இரவு தான் ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். அன்று சுப்ரமணியசாமி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 21-ம் தேதி காலையில் அவர் திட்ட மிட்டபடி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருந்தன. அன்று, அவர் யாரை யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21-ம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். சென்னையில் அவர் ஏன் மர்மமாகத் தங்கினார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய தோழர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அவர் தில்லி பயணத்தை ரத்து செய்தது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது.

நான் 21-ம் தேதி காலை - தில்லிக்கு சுப்ரமணியசாமியின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண் டேன். அவர் சென்னையில்தான் இருப்பார் என்று அவரது மனைவி கூறினார். பிறகு கட்சிப் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். சுப்ரமணியசாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

21-ம் தேதி காலை தில்லிக்கு விமானம் மூலம் புறப்படப் போவதாகக் கூறிய சுப்ரமணியசாமி அன்று காலையில் தில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பிறகு சென்னையி லிருந்து பெங்களூருக்கு திருப்பெரும் புதூர் வழியாக காரில் செல்ல வேண்டிய அவசியமென்ன? இதைத் தனது முக்கியத் தோழர்களுக்குக்கூட தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?

பெங்களூரில் யாரைச் சந்திக்க அவர் அவசரமாகப் போனார்? ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டிருக்கலாம். ராஜீவ் கொலைக்குப் பிறகு கூடி அவர்கள் பெங்களூர் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம். இந்த நிலையில் பெங்களூருக்கு யாரையோ அவசர மாகச் சந்திக்க சுப்ரமணியசாமி சென்றிருக்கிறார்.

அப்போது சுப்ரமணியசாமி மத்திய அமைச்சர். அமைச்சர் பதவிக்குரிய பல்வேறு வசதிகள் அவருக்கு உண்டு. மே 21-ம் தேதி அவருக்காக செய்யப் பட்ட ஏற்பாடுகள் என்ன? பாது காப்புக்காக செய்யப்பட்ட வசதிகள் என்ன? இது பற்றிய ஆவணங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் பெற வேண்டும்.

21-ம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணியசாமி வீட்டுக்குத் தொலை பேசியில் பேசினேன். அப்போது ராஜீவ் கொலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. யாருக்குமே எதுவுமே தெரியாது. 23-ம் தேதி அவரது திருச்சிப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிக சர்வ சாதாரணமாக, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியைச் சொல்லத்தானே போன் செய்தீர்கள்? என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளி உலகத்துக்குத் தெரியாத தகவல் - இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

சிறிது நாட்கள் கழித்து - அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த திருப்பெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை நலம் விசாரிக்க நானும் சாமியும் போனோம். மரகதத்துக்குத் துளி காயம் கூட ஏற்படவில்லை. மரதகம் அம்மாள் பாசாங்கு செய்வது போலவே எனக்குத் தோன்றியது.

மரகதம் பற்றி பேச்சு எடுத்தபோது - அறையில் சொல்கிறேன் - நிறைய விஷயம் இருக்கு என்றார் சாமி. திருப் பெரும்புதூரில் - பொதுக் கூட்டத் துக்குத் தேர்வு செய்த இடம் மரகதத்துக்கேத் தெரியாது. அவருக்கே தெரியாமல் சிலர் தேர்வு செய்து விட்டனர். அது சதிகாரர்களுக்குச் சாதகமாகிவிட்டது என்றார் சாமி. இந்த அளவுக்குத் துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படித் தெரிந்தன?

பிரதமர் சந்திரசேகருக்குத் தெரியும் முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி தெரிந்துவிட்டது என்று சுப்ரமணியசாமி கூறியிருப்பதை கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- என்று சுப்ரமணியசாமியுடன் மிக நெருக்கமாக உடனிருந்த திருச்சி இ.வேலுசாமி தனது சாட்சியத்தில் கூறி இருக்கிறார்.

ஜெயின் கமிஷன் முன்பு தரப்பட்ட இந்த சாட்சியமும் கமிஷன் தந்துள்ள பரிந்துரையும் சுப்ரமணியசாமி மீது விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.