இந்து மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நீங்கள் மதச்சார்பற்றவரா?

நீங்கள் மதச்சார்பற்றவரா? கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று பல ஆண்டுகளாக ஒரு மின்னஞ்சல் சுற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த மின்னஞ்சலில் பல கேள்விகள் வருகின்றன….

====================================================================

உலகம் முழுக்க 52 இஸ்லாமிய நாடுகள் இருப்பதாகவும், எங்காவது இந்துக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும்..எங்காவது ஹஜ் பயணத்துக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது….

நமது கேள்வி:

எங்கள் கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் கும்பிடும் சுடலை, பட்டறையன், ஐயனார்...போன்ற சிறுதெய்வங்களின் நம்பிக்கைக்கு மதிப்பு வழங்கப்படாதுவிடுமுறை கிருட்டிண ஜெயந்திக்கு வழங்கப்படுகிறதே

நாங்கள் ஏன் இஸ்லாமியரை கேள்வி கேட்க வேண்டும்..

இத்தனை ஆண்டுகாலமாக வழிபாட்டுரிமையை மறுத்து, பொதுத்தெருவில் நடப்பதை மறுத்த பார்ப்பனீயம் இன்று சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தால்வழிப்பாட்டுரிமையை மறுக்க முடியாமல், தீண்டாமை வெளிப்படையாக கடைபிடிக்க முடியாமல், ரகசியமாக கடைபிடிக்கிறது

இங்கிருக்கிற இஸ்லாமியன் எவனும் பாபரின் பேரனோ, ஷாஜகான் தம்பியோ கிடையாது, இஸ்லாமியர்களில் பெரும்பான்மையினர்….இம்மண்ணின் மைந்தர்கள்….

அவர்களுக்கு காலம், காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு, வழிபாட்டுரிமைகளுக்கு வடிகாலாக வேற்று மதத்தை தழுவியிருக்கலாம்….அதன் பொருட்டு, இன்னும் ஆயிரம் ஆண்டுகாலம் உரிமைகள் பெறும் அனைத்து தகுதியும் அவனுக்கு உண்டு….எந்த இந்துத்வ பண்டாரத்திற்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

====================================================================

85% விழுக்காடு பெரும்பான்மையினருக்கு வழங்கப்படாத சலுகைகள் 15% விழுக்காடு சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதை பார்த்து ஏங்குவதை எங்காவது பார்த்த்துண்டா போன்ற கேள்விகள்..

நமது கேள்வி:

இத்தனை ஆண்டுகாலமாக பார்ப்பன பண்டாரங்கள், ஆதிக்க சாதியனரும் அரசு உயர்பதவிகளில் அனுபவித்து வர...தாழ்த்தப்பட்டவர்கள் அங்கும் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனரே……….சிறுபான்மையினர்களுக்கு சலுகை வழங்குவதை குறீத்து நாங்கள் இன்னும் தெளிவாக கவலைப்படவில்லை,…..மெய்யாகவே எம்மக்கள் தெளிவாக கவலைப்படுவார்களேயானால்…. இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சினை இந்நாட்டில் வராது…..

இந்திய அரசு உளவுப்பிரிவில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அடையாளப்படுத்துங்கள்….ஒரு தாழ்த்தப்பட்ட பிரதமரை காண்பியுங்கள்….நடுவண் அரசில் ஒரு தாழ்த்தப்பட்ட பாதுகாப்புதுறை அமைச்சரை காண்பியுங்கள்...

பெரும்பான்மை சுரண்டலை பற்றி யார் பேச வேண்டுமென்றே இல்லாமல் போய் விட்டது ...சொந்த நாட்டு மக்களை சுரண்டும் பார்ப்பனீய பனியா வர்க்கத்தை கேட்க துப்பில்லை..இஸ்லாமிர்களை கேள்வி கேட்க வந்துவிட்டனர்

அதோடு, ஏதாவதொரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர் அல்லாத ஒரு நபர் பதவியில் இருப்பதை பார்த்ததுண்டா? என்ற கேள்விகள் வேறு…….

இதற்கு இவர்கள் பாணியில் பதில் சொல்வதானால்...அதற்கு தகுதி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்….

பார்ப்பன, உயர்சாதி இந்துக்கள், போலியான இந்து மத விசுவாசிகள் யாரும் அரபு நாடுகளில் பணி புரியவில்லையா?

======================================================================

தீவிரவாதிகளுக்கு எதிராக பத்வா அறிவித்த ஒரு மௌலவியை, முல்லாவை காண்பிக்க முடியுமா? என்ற துணைக்கேள்விகள்..

நமது கேள்வி:

இந்திய நாட்டின் பிதா என போற்றும் காந்தியை கொன்ற இந்துத்வ தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு இந்து அமைப்பை காண்பிக்க முடியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காங்கிரசு, பாஜக போன்ற முதனமை இந்திய தேசிய கட்சிகள் வழங்கி வரும் ஆதரவை நாங்கள் அறியாதவர்கள் அல்ல….முதலில் காங்கிரசிடமும், பாஜகவிடமும் கேள்வி கேட்டுவிட்டு எம்மிடம் அந்த கேள்வியை கேட்க வரட்டும்

இந்துத்துவ தீவிரவாதிகளை அம்பலப்படுத்த துணிந்த காரணத்திற்காக, பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், நேர்மையான அதிகாரியாக, சமரசமில்லாமல் செயல்பட்ட ஒரே காரணத்திற்காக கர்கரே என்னும் அதிகாரியை கொன்ற இந்துத்வ அமைப்புகளா..எம்மிடம் வந்து கேள்வி கேட்பது

குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் முறையே இஸ்லாமியர்களுக்கு எதிரகவும், கிருத்துவர்களுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டிய அமைப்புகளை தடை செய்ய கோரிய இந்துத்வ அகிம்சை இயக்கங்களை எங்கும் காணோமே ஏன்?

இந்திய நாட்டின் மிக முக்கிய பிரச்சினை….இந்து சாதிய பயங்கரவாதமும், முதலாளித்துவமும்….இதற்கு எதிராக நாங்கள் நிற்பதை விட்டுவிட்டு,..,...இஸ்லாத்திற்கு எதிராக போராட கிளம்ப முடியாது…

===========================================================

மராட்டியம், கேரளம், பீகார், பாண்டிச்சேரி ஆகிய இந்து பெரும்பான்மையினர் வசிக்கும் மாநிலங்களில் கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கஇஸ்லாமிய பெரும்பான்மை ஜம்மு-காஷ்மீரில் ஒரு இந்து முதலமைச்சராக வர முடியுமா?

எமது கேள்வி:

ரொம்ப நாளா இந்த பல்லவியை கேட்டு வருகிறோம்….

ஆமாம் யார்தான் இந்து?

குல தெய்வ வழிபாட்டை உடையவனா?

சைவத்தை பின்பற்றுபவனா?

வைணவத்தை பின்பற்றுபவனா?

எவன் இஸ்லாமியனில்லையோ, கிருத்துவனில்லையோ, பார்சியில்லையோ, யூதனில்லையா? அவனா இந்து…..

இதை எந்த புனித வெஙகாய சாத்திரம் இதை வலியிறுத்துகிறது

விட்டால், யார் மனிதன் என்று கேட்டால்.யார் ஆடில்லையோ, யார் மாடில்லையோ, யார் புலியில்லையோ, யார் பன்றியில்லையோ அவன் மனிதன்னு ஒரு கேனத்தனமான ஒரு விளக்கத்தை கொடுத்தாலும் கொடுப்பார்கள்..

துணிச்சலிருந்தால்..இப்படி மின்னஞ்சல் அனுப்புபவர்கள்….யார் இந்து? என்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு அதன் பிரதியை இதுபோன்ற மின்னஞ்சலகளின் பின்னிணைப்பாக அனுப்பவும்

============================================================

1947 இல் இருந்த எண்ணிக்கையைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை கூடிவிட்டதாகவும் அந்த மின்ன்ஞ்சல் கூறுகிறது..

நமது கேள்வி: இதே கூட்டம்தானே சாதிவாறி கணக்கெடுப்பை வேண்டாமென்று வலியிறுத்துகிறது, ஏன் துணிச்சலிருந்தால்….மதவாரியான கணக்கெடுப்பிற்கு எதிராகவும் பேசட்டுமே….பேசமாட்டார்கள், காரணம் மதவாரி கணக்கெடுப்பு தங்களின் எண்ணிக்கையை கூட்டி காண்பிக்க இவர்களுக்கு தேவைப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு, இந்து மதத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தும்….

கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஒரு பிரிவை ஒதுக்கட்டுமே பார்க்கலாம்…மதசார்பின்மைக்கு ஆதரவாக பேசும் அக்கறை கொண்ட இந்துத்வ மூளைகள் என்றுமே….இதற்கு குரல் கொடுக்காதே? ஏன் அதை செய்வதில்லை..

தாழ்த்தப்பட்டவர்களை வர்ணத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களக வரையறுத்துவிட்டு,…..நீயும் இந்து, சந்து, பொந்துனு வந்து நிற்கும் இந்த கூட்டம் எம்மை ஏன் வலுக்கட்டாயமாக இந்துமத பிடிக்குள் இழுக்கிறதுபௌத்திஸ்டுகளையும் இப்படியே இணைத்துக் கொண்டு இந்துன்னு தானே கூவி விற்கிறார்கள்..

மதசார்பற்ற அரசு கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஏன் ஒரு பிரிவை வழங்குவதில்லை

60 ஆண்டுகளுக்கும் மேலான விடுதலை இந்தியாவில் கிருத்துவத்தையும், இஸ்லாத்தையும் தழுவியர்களின் எண்ணிக்கையை ஒரு முறை சரிபார்த்தால், இவர்கள் கோரும் இந்து மதத்தின் லட்சணம் தெரிந்துவிடுமேதாழ்த்தப்பட்டவர்களின் முறையான அளவில் விழிப்புணர்வில்லாத்தால்..இன்னும் இந்து மதம் நீடித்திருக்கிறது….இல்லையென்றால்...இந்து மத்த்தின் துகள்கள் இம்மண்ணில் எஞ்சியிருக்காதே..

மேற்கொண்டும் பல கேள்விகள் உண்டு….இந்த கேள்விகளுக்கு முதலில் இந்த பண்டார இந்துக்கள் பதிலளிக்கட்டும்,….பிறகு நாம் நம் நிலையை உரக்க எடுத்து வைப்போம்….

இந்திய இந்து தேசியத்தின் போலித்தனத்தை குறித்த தெளிவான பார்வை பெற தோழர்களுக்கு என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் பரிந்துரைக்கும் நூல்கள் இரண்டு

1) இந்திய வரலாற்றில் பகவத் கீதை -

2) இந்து இந்தியாஎஸ்.வி.ராஜதுரை

வியாழன், 30 செப்டம்பர், 2010

தீர்ப்பு நாள் 30 செப் 2010

29 செப், 2010, இதழின் ஆசிரியருக்கு மடல் என்னும் பகுதீயில் அப்சல் இன்சினியர் (ஹாஜி) என்னும் இஸ்லாமிய நபர் எழுதியதாக மடல் ஒன்றை முதலாவதாக வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் வந்திருந்த கடிதத்தின் அதன் தமிழ் மொழியாக்கம் வருமாறு,

“அலகாபாத் நீதிமன்றத்தில் வர இருக்கிற பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எப்படியாயினும் ஏதாவதொரு சமூகத்திற்கு ஆதரவாகத்தான் இருக்க போகிறது. அப்படி நிகழ்கையில் இந்த பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான வாய்ப்பை அது நிராகரிக்கும். இந்த தீர்ப்பினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற பதட்டத்தினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற அசம்பாவதங்களை அரசு தனது வலிமையான கரம் கொண்டு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அதே வேளையில் அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் அமைதியான தீர்வை ஏற்படுத்த தன்னார்வத்தோடு முன்வரவேண்டும். அப்படி ஒரு முயற்சி எடுக்கையில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்பட முடியாது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நாளைய நீதிமன்ற தீர்ப்பு, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் இஸ்லாமிய சகோதரர்கள், தமது மூத்த சகோதரர்களாகிய இந்துக்களுக்கு அளிக்க முன்வர வேண்டும். ஏனென்றால், நூற்றாண்டுகளுக்கு முன்பே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட இடமளித்தவர்கள் இந்துக்கள்.”

இப்படி நாட்டாமை தொனியில் இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, இந்துவின் நடுநிலையை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது என்பதற்காக, அடுத்த சிறிய மடலில் ஜே.பி.ரெட்டி என்பவர் இந்துக்களை சர்ச்சைக்குரிய அவ்விடத்தை இந்துக்களுக்கு விட்டுதர கோரியிருக்கிறார்.

என்ன ஒரு அயோக்கியத்தனமான சூழ்ச்சியான பதிவு பார்த்தீர்களா?

எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு? இன்று உன்னுடையதாக இருந்தது, நேற்று மற்றொருவருடையதாக இருந்தது, நாளை மற்றொருவருடையதாக இருக்கும்.என்று வியாக்யான மசிறுகளை பேசும் இந்துத்வ வாதிகளிடம்தானே இந்த விட்டுக்கொடுத்தலுக்கான அறிவுரையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சொல்ல வில்லை பார்ப்பன இந்து.

அதோடு, இந்து சகோதரர்கள், சந்து சகோதரர்கள் என்கிறார்களே? இராமாயணத்தின் இராமன் என்றாவது தன்னை இந்து என்றிருக்கிறானா? இல்லையே? பின் எப்படி இந்த இந்துத்வ அமைப்புகள் இராமனுக்கு வீடு கட்ட, மன்னிக்கவும் கோயில் கட்ட இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.. இந்து என்பவன் யார்? அதை தீர்மானித்துவிட்டல்லவா இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூற இவர்கள் புகுந்திருக்க வேண்டும்?

இந்துக்கள் என்று இன்று அடையாளப்படுத்தப்படும் இவர்கள் முப்பாட்டன்கள் செய்த இடிப்புகள்க் கலவரங்கள், உலகத்தில் நிகழந்த மதத்தின் பெயரால் நிகழ்ந்த கலவரங்களுக்கு சற்றும் குறைவானதில்லை பௌத்த, சமண வழி பாட்டு மையங்களை சிதைத்தது, சைவ-வைணவ சண்டைகள்…என்று நீளுமே இவர்களது பட்டியல்….

இது போதாதென்று இன்றளவும் சொந்த மக்களை சேரியில் இருத்தி வைத்துக் கொண்டு, ராமனுக்கு கோயிலை கட்டுறேன், வெங்காயத்தை கட்டுறேன்னு..சொல்லிக் கொன்று... தாழ்த்தப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை மறந்து இராமன் கோயில் கட்ட வர வேண்டுமென்று ஆள் சேர்க்கும் வேலையை இந்த சந்து அமைப்புகள் செய்கின்றன…தாழ்த்தப்பட்டவர்களை தன் வீட்டில் சேர்க்காதவனோடு இணைந்து கொண்டு இஸ்லாமியர்களை எதிரியாக பாவிக்கும் மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் வேலையை செய்த பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு இன்று தீர்ப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் தமது சகோதரர்களாகிய இஸ்லாமியர்கள் மீது வெறுப்புக் கொள்ளாமல், சாதிய இந்துத்துவ சக்திகளை முறியடிக்கும் பணியில் முற்போக்கு இயக்கங்களோடு இணைந்து பணியாற்றுமாறும், இஸ்லாமிய அன்பர்களுக்கு அரணாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிற அதே வேளையில்..

இஸ்லாமிய அன்பர்கள் இந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை பயங்கரவாதத்தின் வழியாக சந்தித்து வரும் வேளையில், தமது சமூக முன்னேற்றத்தை கொஞ்சம் முற்போக்கு பார்வையோடு நகர்த்த வேண்டும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்க, ஏக இறைவனை வழிபடுவதாக கூறிவிட்டு, அல்லாவுக்கு நிகர் இல்லை என்று கூறிவிட்டு, அவனை தவிர யாரையும் வணங்குவதில்லை என்று கூறிவிட்டு வழிபாட்டு தலங்களுக்காக நாம் சண்டை போடலாமா?

இது இந்து பத்திரிக்கையின் அறிவுரை போன்றதல்ல, தோழமையோடு ஒரு பகிர்வு…

அல்லா அனைவரையும் படைத்தானென்றால், அவனுக்கு கோயில் கட்டித்தர வேண்டி அவன் என்றுமே கேட்டிருக்க மாட்டான், அவனுக்கு அது தேவையுமில்லை..நம் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வோம், கொஞ்சம் விரைவாக, விரிவாக திட்டமிட்டு செய்வோம்…

இந்துத்வ பயங்கரவாதிகளை பயங்கரவாதத்தினை எதிர்கொள்ள எம்மை போன்ற கடவுள் மறுப்பாளர்களும், பொதுவுடமை வாதிகளும், பெரியரிஸ்டுகளும் உங்களோடு என்றும் இருக்கிறோம், என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்..

திங்கள், 5 ஜூலை, 2010

இஸ்லாமியர்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா?

சில/பல தமிழ்த்தேசிய அன்பர்கள் உட்பட (சில உரையாடல்களின் )

உலக ஊடகங்களின் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் உலகத்தின் மாபெரும் அச்சுறுத்தல்.....என்ற மூடநம்பிக்கையை சுமந்து கொண்டிருக்கிறோம்....

இந்தியா என்னும் கூட்டமைப்பு இன்றைய சூழலில் சந்தித்து வரும்......இந்துத்தவ பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு சிறிய தொகுப்பு............

தயவு கூர்ந்து இந்த இணைப்புகளை கண்டிப்பாக படிக்கவும்.....




கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...4.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...5

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...6.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...7

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...8.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...9

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...10.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...11

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...12.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...13

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...14.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...15.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...16.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...17.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...18.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...19.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...20.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...21.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...22.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...23.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...24.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...25.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...26.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...27.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...28.

மகிழ்நன்,
9004840300 (மும்பை எண்)
9042274184 ( சென்னை எண்)

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழர்களே உள்ளம் எரிகிறது!!!!



நன்றி: வீர கேசரி 29/10/2009

நீங்கள் என்றுதான் திருந்துவீர்கள்.............

என்ன அப்படி ஒரு மானங்கெட்ட பக்தி............

அந்த மண்னாங்கட்டி கடவுள்கள் நம் இனத்தை கைவிட்ட பிறகும் அவைகள் இல்லை என்பது புரியவில்லை....

இனம் ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரலிட்டுவிட்டு...கோயிலில் பூசைக்கு அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமே..........கொஞ்சம்கூட சிந்தனை ஆற்றலோ இரக்கமோ நம் இனத்தவர்களுக்கு கிடையாது...

போகிற இடமெல்லாம் சாதியை தூக்கி திரிகிறோம்....சோதிடம், கடவுள், கருவறை கருமாந்திரம்னு கட்டி தொலைக்கிறோம்....

நமக்குள்ளிருக்கும் அழுக்குகளை துடைக்க துணிவில்லை....இந்த லட்சணத்தில் நமக்கு நாடு ஒரு கேடா?

தயவு செய்து திருந்துங்களேன்................சாதி, மதச்சகதியிலிருந்து வெளிவந்து நமக்கான தேசியத்தை, புரட்சியை படையுங்களேன்

திங்கள், 26 அக்டோபர், 2009

தமிழின எதிரிகளே!! நாங்கள் உங்களை வெல்வோம்

தமிழின அழிப்பை நடத்திய சிங்கள இனவெறி நாய்களே!!!

சக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சாதி வெறி பிடித்த தமிழ் பேசும் இரண்டு கால் விலங்குகளே உங்களை நாங்கள் வெல்வோம்

நீ எனது ஊன்று கோலைப் பிடிங்கி கொண்டாய்

நான் நிற்கப் பழகிக் கொண்டேன்

நீ, என் வெளிச்சத்தை அணைத்தாய்

நான் நெருப்பை வளர்த்தேன்

நீ என் முன் குழிகளை வெட்டினாய்

நான் தாண்ட பழகிக் கொண்டேன்

நீ, என் குடிசையை கொளுத்தினாய்

நான் வெயில் மழையில் இருக்க பழகினேன்

நீ என் உறவுகளை அழித்தாய்

நான், என் பாசத்தை அழித்தேன்

நீ,என் மனிதத்தை அழித்தாய்

நான் என்னுள் மிருகத்தை வளர்த்தேன்

அதனால், என் பிரிய எதிரியே

உன்னை வெல்லுவது

எனக்கு எளிதாயிற்று

விடுதலை வேட்கை வெற்றி வேந்தன்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை

சாதி ஒழிக்கப்படும் வரை............தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்

மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் நிர்மல் புரஸ்கார்விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.

வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திருன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.

நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போனு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லிகடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.

மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.

நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.

சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.

எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்என்றார் பாண்டி படபடப்போடு.

லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.

ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டைஎன்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மைஎன்கிறார் அந்தச் சமூக சேவகி.

வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி அமைதிகமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்கஎன விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=519&rid=26



சனி, 24 ஜனவரி, 2009

(சுயமரியாதையுள்ள) தமிழர்களுடைய வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம்.-இந்தியாவின் குடியரசு தின விழா


26 சனவரி, 1950 இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல், போனால் போகட்டும் என்பதுபோல் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. (சாதி ஒழிக்கப்பட்டால் இந்து மதத்திற்கு இங்கு வேலை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?) . இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டபிறகும் இதை பற்றியெல்லாம் பேசி பழமைவாதியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களானால், நீங்கள் நானும் அடிமையாக உருவாக்கப்பட்டு


இன்று இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அடிமைகளாக திரிவதற்கு இவைதான் காரணிகள் என்று சொல்லத் தோன்றுகிறது.

இன்று பேச்சுரிமை இருப்பதாக கூறப்படும் இந்தியாவின் நிலை என்ன?எந்த உரிமையாக இருந்தாலும் அரசுக்கு ஒடுக்குவதற்கு உரிமை உள்ளது என்பதுதானே நிலை!


ஈழத்தில் தமிழன் என்பதற்காகவே கொல்லப்படுகிறான், நான் தமிழன் என்பதினாலேயே என்னுள்ளம் துடிக்கிறது குரல் கொடுக்கிறேன்.


இல்லை, இல்லை நீ தமிழன்என்பதற்காக குரல் கொடுக்கக் கூடாது. இப்படி நீ குரல் கொடுத்தால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும்.


இந்தியாவை தூண்டாடும் முயற்சியாக கருதப்படும், கைது நடவடிக்கைகள் ஏற்படும், உங்கள் குரலை ஒடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம், என்றெல்லாம் அரசு பொறுக்கித்திண்ணிகள் குரல் கொடுக்கிறார்கள்.


சரி நான் குரல் கொடுக்கவில்லை? இந்திய அரசே நீ என்ன செய்யப்போகிறாய்? என்றால், கொஞ்சம் பொறுத்திரு, அங்கே இருக்கும் உன் தமிழன உறவுகளின் மொத்த உயிரையும் சிங்கள பேரினவாதம் விரைவில் துடைத்தெரிய நாங்கள் உதவி புரிகிறோம், அவர்கள் அங்கு உயிரோடு போராடிக் கொண்டிருந்தால்தானே நீ குரல் கொடுப்பாய், உனக்கு அந்த பிரச்சினையை நாங்கள் வைக்கமாட்டோம் , நீ வெகு காலம் துடித்து கொண்டிருக்க வேண்டாம் என்பது போல் இந்திய அரசு கொக்கறிக்கிறது, இங்குள்ள அரசியல்வாத, பிழைப்புவாத தமிழர்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு அச்சப்பட்டு, தமிழர்களை காட்டிக் கொடுக்கிறார்கள், அவன்(இந்திய பார்ப்பன, பனியா வடநாட்டுக் கும்பல்) குண்டுகளை கூட்டிக் கொடுக்கிறான்.


இவையெல்லாம் பார்த்து கொண்டு தமிழன் அமைதியாகவே இருக்க வேண்டும்,ஏனென்றால்

இந்தியா ஒரு மாபெரும் குடியரசு!

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு!!

சரி அப்படி என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது இந்தியா?


  • பல்வேறு சாதிகளாக, பிரிந்து கிடந்தாலும், மொழி, இன வேற்றுமைகள் இருந்தாலும் தீண்டாமைக் கொடுமைகளை தொடர்ந்து மாநில வேற்றுமைகள் இன்றி கடைபிடித்து வருகிறது.

    இந்த ஒடுக்குமுறைகளை ஒடுக்குவதற்கு துப்பில்லாமல் இந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒற்றுமை குலைக்கலாமா, நாம்.


  • கர்நாடகம், ஆந்திரா, கேரளம் போன்ற மாநிலங்கள் மொழிவாரியாக வெவ்வேறு மாநிலங்களாக வேறுபட்டு இருந்தாலும், ஒற்றுமையோடு தமிழகத்துக்கு குடிக்க நீர் தரமாட்டோம் என்ற வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றுகிறதே!

    இந்த ஒற்றுமையை பேணி காக்க உயர்நீதிமன்ற தீர்ப்பை கூட அமல்படுத்தாமல் திராணியற்று கிடக்கும் இந்திய அரசின் ஒற்றுமையை (அப்)பாவி தமிழர்களே குலைக்கலாமா?
  • இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் மட்டும் வருந்தும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஒற்றுமையாக மௌனம் காக்கும் வேற்று மாநில மக்களின் ஒற்றுமையை குலைக்கலாமா, தமிழர்களே?


தமிழனின் உணர்வு புரியாத நாடு தமிழனின் நாடுதான். ஏனென்றால், அப்படித்தான் தாளில்/சட்டபுத்தகத்தில் வரையறுக்கப்பட்டுவிட்டது, அப்படியிருக்க நீங்கள் இந்திய வல்லாதிக்க நாட்டை எதிர்க்கலாமா?


தமிழர்களே உங்களுக்கு ஒற்றுமையுணர்வு இல்லை, இந்தியா வல்லரசு நாடாக கனவு கண்டு கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் சாதாரண உங்கள் அற்ப தமிழ் உயிர்ளுக்காக குரல் கொடுக்கிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம், இந்தியாவின் வெளியுறவு/உள்ளுறவு கொள்கையே தமிழனின் எச்சில் இலைக்கு சமானமாக மதிப்பதுதான், இதை புரிந்து கொள்ளாமல் இந்திய வல்லரசு நாட்டை எதிர்க்கிறீர்களே?


சரி இந்தியா வல்லராசும் லட்சணத்தை கீழ் வரும் கட்டுரையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் என்ன கொடி ஏற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



.

செய்தி ரசம்

Related Article:

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!
India grows so does the Inflation - Don’t talk about Indians!!!
India is First always!!! The record breaking Three seconds

================================================
"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை
நன்றி: இரும்பு

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

டிசம்பர் "புதிய ஜனநாயகம்"
"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து