புதன், 16 ஜூலை, 2008

கடவுளைக் கேவலப்படுத்துபவர்கள் பக்தர்கள் தானே!

                                               இந்துமதக் கடவுள்களிலேயே பிள்ளையாரும் அனுமானும் அசிங்கமானவை. அதனால்தானோ என்னவோ, அவற்றிற்கு மகத்துவம் கற்பிக்க வேண்டிப் பிள்ளையாரை முழு முதல் கடவுள் என்றாக்கிக் கதை எழுதி விட்டார்கள். அனுமானை சர்வவல்லமையும், சனீஸ்வரனுக்கே தொல்லை கொடுத்தவன் என்றும், சனியைக் கும்பிடாமல் இவனைக் கும்பிட்டால் போதும் என்றும் வைணவர்கள் கதைகட்டி விட்டார்கள்.

அசிங்கமான சைவக் கடவுள் விநாயகனுக்கு அசிங்கமான பெயர்களையே வைத்து விட்டனர். பார்ப்பனர் பச்சரிச்சோறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். அதனால், கடவுளுக்குப் படையல் பச்சரிசியில் என்றாக்கி விட்டனர். இதற்கு மாறாகப் புழுங்கல் அரிசியில் கொழுக் கட்டை செய்து திருவில்லிப்புத்தூரில் உள்ள பிள்ளையாருக்குப் படைப்பார்களாம் அதனால் புழுங்கல் அரிசி விநாயகர் எனப் பெயராம்.

27 கிலோ அரிசியில் (மூன்று குறுணி) கொழுக்கட்டை செய்து படைப்பதால் மதுரை, மீனாட்சி கோயில் பிள்ளையாருக்கும் முக் குறுணிப் பிள்ளையார் என்றே பெயர். இதற்கு நேர்மாறாக 400 கிராம் (உழக்கு) அரிசியில் கொழுக்கட்டை செய்து படைப்பதால் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பிள் ளையாருக்கு உழக்கரிசிப் பிள்ளையார் என்றே பெயராம்.
கடவுளைக் கேவலப்படுத்துபவர்கள் பக்தர்கள் தானே!


http://viduthalai.com/20080621/sunday_news10.html

ஏமாற்றும் அர்ச்சகரையே ஏமாற்றியவர்

கடலூர், ஏப். 24-

மாவட்ட ஆட்சியர் பூஜைக்கு வருவதாகக் கூறி கோவில் அர்ச்சகரிடம் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒருவர் ஓடிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மஞ்சைநகர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வினைதீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இதன் அர்ச்சகர் அறிவழகன். 45 வயதுள்ள டிப்டாப் ஆசாமி அங்கே வந்தார். அவர் அர்ச்சகரிடம் அங்கன்வாடி பணியாளராக நான் இருக்கிறேன். நாங்கள் 40 பேர் சேர்ந்து விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜை செய்ய உள்ளோம். இதற்கு வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியலும் இரண்டாயிரம் ரூபாயும் கொடுங்கள். மாவட்ட ஆட்சியர் இதில் கலந்து கொள்கிறார். பொருள்களை வாங்கி வந்து கோயிலில் வைத்து விட்டு நான் பணத்தை எடுத்து வந்து தருகிறேன் என்று கூறினார்.

பணத்தை வாங்கிச் சென்றவர் திரும்பி வராததால் அர்ச்சகர் புலம்பத் தொடங்கினார். பூஜை செய்ய வந்தவர் அர்ச்சகரிடம் பணம் கேட்ட போதே, உனக்கு வேண்டுமானால் நீயே உனது பணத்தைக் கொண்டு பொருள்கள் வாங்கி வா என்று அர்ச்சகர் சொல்லி பணம் கொடுக்க மறுத்திருக்கவேண்டும். விநாயகர் பொம்மை நன்மை செய்யும் என்று நம்புவதைப் போலவே வழிப்போக்கன் சொன்னதையும் நம்பிவிட்டார் போலும்! எத்தனுக்கு எத்தன்!