சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நீங்கள் மதச்சார்பற்றவரா?

நீங்கள் மதச்சார்பற்றவரா? கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று பல ஆண்டுகளாக ஒரு மின்னஞ்சல் சுற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த மின்னஞ்சலில் பல கேள்விகள் வருகின்றன….

====================================================================

உலகம் முழுக்க 52 இஸ்லாமிய நாடுகள் இருப்பதாகவும், எங்காவது இந்துக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும்..எங்காவது ஹஜ் பயணத்துக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது….

நமது கேள்வி:

எங்கள் கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் கும்பிடும் சுடலை, பட்டறையன், ஐயனார்...போன்ற சிறுதெய்வங்களின் நம்பிக்கைக்கு மதிப்பு வழங்கப்படாதுவிடுமுறை கிருட்டிண ஜெயந்திக்கு வழங்கப்படுகிறதே

நாங்கள் ஏன் இஸ்லாமியரை கேள்வி கேட்க வேண்டும்..

இத்தனை ஆண்டுகாலமாக வழிபாட்டுரிமையை மறுத்து, பொதுத்தெருவில் நடப்பதை மறுத்த பார்ப்பனீயம் இன்று சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தால்வழிப்பாட்டுரிமையை மறுக்க முடியாமல், தீண்டாமை வெளிப்படையாக கடைபிடிக்க முடியாமல், ரகசியமாக கடைபிடிக்கிறது

இங்கிருக்கிற இஸ்லாமியன் எவனும் பாபரின் பேரனோ, ஷாஜகான் தம்பியோ கிடையாது, இஸ்லாமியர்களில் பெரும்பான்மையினர்….இம்மண்ணின் மைந்தர்கள்….

அவர்களுக்கு காலம், காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு, வழிபாட்டுரிமைகளுக்கு வடிகாலாக வேற்று மதத்தை தழுவியிருக்கலாம்….அதன் பொருட்டு, இன்னும் ஆயிரம் ஆண்டுகாலம் உரிமைகள் பெறும் அனைத்து தகுதியும் அவனுக்கு உண்டு….எந்த இந்துத்வ பண்டாரத்திற்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

====================================================================

85% விழுக்காடு பெரும்பான்மையினருக்கு வழங்கப்படாத சலுகைகள் 15% விழுக்காடு சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதை பார்த்து ஏங்குவதை எங்காவது பார்த்த்துண்டா போன்ற கேள்விகள்..

நமது கேள்வி:

இத்தனை ஆண்டுகாலமாக பார்ப்பன பண்டாரங்கள், ஆதிக்க சாதியனரும் அரசு உயர்பதவிகளில் அனுபவித்து வர...தாழ்த்தப்பட்டவர்கள் அங்கும் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனரே……….சிறுபான்மையினர்களுக்கு சலுகை வழங்குவதை குறீத்து நாங்கள் இன்னும் தெளிவாக கவலைப்படவில்லை,…..மெய்யாகவே எம்மக்கள் தெளிவாக கவலைப்படுவார்களேயானால்…. இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சினை இந்நாட்டில் வராது…..

இந்திய அரசு உளவுப்பிரிவில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அடையாளப்படுத்துங்கள்….ஒரு தாழ்த்தப்பட்ட பிரதமரை காண்பியுங்கள்….நடுவண் அரசில் ஒரு தாழ்த்தப்பட்ட பாதுகாப்புதுறை அமைச்சரை காண்பியுங்கள்...

பெரும்பான்மை சுரண்டலை பற்றி யார் பேச வேண்டுமென்றே இல்லாமல் போய் விட்டது ...சொந்த நாட்டு மக்களை சுரண்டும் பார்ப்பனீய பனியா வர்க்கத்தை கேட்க துப்பில்லை..இஸ்லாமிர்களை கேள்வி கேட்க வந்துவிட்டனர்

அதோடு, ஏதாவதொரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர் அல்லாத ஒரு நபர் பதவியில் இருப்பதை பார்த்ததுண்டா? என்ற கேள்விகள் வேறு…….

இதற்கு இவர்கள் பாணியில் பதில் சொல்வதானால்...அதற்கு தகுதி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்….

பார்ப்பன, உயர்சாதி இந்துக்கள், போலியான இந்து மத விசுவாசிகள் யாரும் அரபு நாடுகளில் பணி புரியவில்லையா?

======================================================================

தீவிரவாதிகளுக்கு எதிராக பத்வா அறிவித்த ஒரு மௌலவியை, முல்லாவை காண்பிக்க முடியுமா? என்ற துணைக்கேள்விகள்..

நமது கேள்வி:

இந்திய நாட்டின் பிதா என போற்றும் காந்தியை கொன்ற இந்துத்வ தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு இந்து அமைப்பை காண்பிக்க முடியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காங்கிரசு, பாஜக போன்ற முதனமை இந்திய தேசிய கட்சிகள் வழங்கி வரும் ஆதரவை நாங்கள் அறியாதவர்கள் அல்ல….முதலில் காங்கிரசிடமும், பாஜகவிடமும் கேள்வி கேட்டுவிட்டு எம்மிடம் அந்த கேள்வியை கேட்க வரட்டும்

இந்துத்துவ தீவிரவாதிகளை அம்பலப்படுத்த துணிந்த காரணத்திற்காக, பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், நேர்மையான அதிகாரியாக, சமரசமில்லாமல் செயல்பட்ட ஒரே காரணத்திற்காக கர்கரே என்னும் அதிகாரியை கொன்ற இந்துத்வ அமைப்புகளா..எம்மிடம் வந்து கேள்வி கேட்பது

குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் முறையே இஸ்லாமியர்களுக்கு எதிரகவும், கிருத்துவர்களுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டிய அமைப்புகளை தடை செய்ய கோரிய இந்துத்வ அகிம்சை இயக்கங்களை எங்கும் காணோமே ஏன்?

இந்திய நாட்டின் மிக முக்கிய பிரச்சினை….இந்து சாதிய பயங்கரவாதமும், முதலாளித்துவமும்….இதற்கு எதிராக நாங்கள் நிற்பதை விட்டுவிட்டு,..,...இஸ்லாத்திற்கு எதிராக போராட கிளம்ப முடியாது…

===========================================================

மராட்டியம், கேரளம், பீகார், பாண்டிச்சேரி ஆகிய இந்து பெரும்பான்மையினர் வசிக்கும் மாநிலங்களில் கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கஇஸ்லாமிய பெரும்பான்மை ஜம்மு-காஷ்மீரில் ஒரு இந்து முதலமைச்சராக வர முடியுமா?

எமது கேள்வி:

ரொம்ப நாளா இந்த பல்லவியை கேட்டு வருகிறோம்….

ஆமாம் யார்தான் இந்து?

குல தெய்வ வழிபாட்டை உடையவனா?

சைவத்தை பின்பற்றுபவனா?

வைணவத்தை பின்பற்றுபவனா?

எவன் இஸ்லாமியனில்லையோ, கிருத்துவனில்லையோ, பார்சியில்லையோ, யூதனில்லையா? அவனா இந்து…..

இதை எந்த புனித வெஙகாய சாத்திரம் இதை வலியிறுத்துகிறது

விட்டால், யார் மனிதன் என்று கேட்டால்.யார் ஆடில்லையோ, யார் மாடில்லையோ, யார் புலியில்லையோ, யார் பன்றியில்லையோ அவன் மனிதன்னு ஒரு கேனத்தனமான ஒரு விளக்கத்தை கொடுத்தாலும் கொடுப்பார்கள்..

துணிச்சலிருந்தால்..இப்படி மின்னஞ்சல் அனுப்புபவர்கள்….யார் இந்து? என்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு அதன் பிரதியை இதுபோன்ற மின்னஞ்சலகளின் பின்னிணைப்பாக அனுப்பவும்

============================================================

1947 இல் இருந்த எண்ணிக்கையைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை கூடிவிட்டதாகவும் அந்த மின்ன்ஞ்சல் கூறுகிறது..

நமது கேள்வி: இதே கூட்டம்தானே சாதிவாறி கணக்கெடுப்பை வேண்டாமென்று வலியிறுத்துகிறது, ஏன் துணிச்சலிருந்தால்….மதவாரியான கணக்கெடுப்பிற்கு எதிராகவும் பேசட்டுமே….பேசமாட்டார்கள், காரணம் மதவாரி கணக்கெடுப்பு தங்களின் எண்ணிக்கையை கூட்டி காண்பிக்க இவர்களுக்கு தேவைப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு, இந்து மதத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தும்….

கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஒரு பிரிவை ஒதுக்கட்டுமே பார்க்கலாம்…மதசார்பின்மைக்கு ஆதரவாக பேசும் அக்கறை கொண்ட இந்துத்வ மூளைகள் என்றுமே….இதற்கு குரல் கொடுக்காதே? ஏன் அதை செய்வதில்லை..

தாழ்த்தப்பட்டவர்களை வர்ணத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களக வரையறுத்துவிட்டு,…..நீயும் இந்து, சந்து, பொந்துனு வந்து நிற்கும் இந்த கூட்டம் எம்மை ஏன் வலுக்கட்டாயமாக இந்துமத பிடிக்குள் இழுக்கிறதுபௌத்திஸ்டுகளையும் இப்படியே இணைத்துக் கொண்டு இந்துன்னு தானே கூவி விற்கிறார்கள்..

மதசார்பற்ற அரசு கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஏன் ஒரு பிரிவை வழங்குவதில்லை

60 ஆண்டுகளுக்கும் மேலான விடுதலை இந்தியாவில் கிருத்துவத்தையும், இஸ்லாத்தையும் தழுவியர்களின் எண்ணிக்கையை ஒரு முறை சரிபார்த்தால், இவர்கள் கோரும் இந்து மதத்தின் லட்சணம் தெரிந்துவிடுமேதாழ்த்தப்பட்டவர்களின் முறையான அளவில் விழிப்புணர்வில்லாத்தால்..இன்னும் இந்து மதம் நீடித்திருக்கிறது….இல்லையென்றால்...இந்து மத்த்தின் துகள்கள் இம்மண்ணில் எஞ்சியிருக்காதே..

மேற்கொண்டும் பல கேள்விகள் உண்டு….இந்த கேள்விகளுக்கு முதலில் இந்த பண்டார இந்துக்கள் பதிலளிக்கட்டும்,….பிறகு நாம் நம் நிலையை உரக்க எடுத்து வைப்போம்….

இந்திய இந்து தேசியத்தின் போலித்தனத்தை குறித்த தெளிவான பார்வை பெற தோழர்களுக்கு என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் பரிந்துரைக்கும் நூல்கள் இரண்டு

1) இந்திய வரலாற்றில் பகவத் கீதை -

2) இந்து இந்தியாஎஸ்.வி.ராஜதுரை

வியாழன், 25 மார்ச், 2010

ப்ளாஸ்டிக் க்ளாஸ்



தூக்கம் விழித்த கதிரவன் ஒளிபரப்பப்பட்டிருக்கும் வானம் பார்த்துக்கொண்டே, பறவைகளை வானமும், வானத்தை பறவைகளும் அடைந்துவிட துடித்து கொண்டிருக்கும் அழகை காண்கிறான். என்னதான் சொன்னாலும் “ சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா” ன்னு பாட்டு படிச்சிக்கிட்டே எழுந்திருச்சு மொட்டை மாடியிலிருந்து கீழே வருகிறான்.

“ஏலே! ஐயா டீ குடிக்கிறியா? உங்க அப்பனும் ஆத்தாளும் ஒத்த உசிறு ஊரிலே தவிச்சிட்டு கிடக்குதுன்னு நகரத்துல படிச்ச உன்னை இந்த காட்டுப்பய ஊருலே படிக்க அனுப்பிருக்காங்க, கொஞ்சம் சூதானமா நடந்துக்கய்யா? வடக்கூருக்கு போனா உன் வெளியூரு பேச்சையெல்லாம் இங்க பேசாதய்யா, போனமா டீ குடிச்சமான்னு வந்துரு....2 ரூபாய் கொடுத்து பேப்பரு வாங்கிட்டு வந்து எம்புட்டு படிக்கணுமோ, இங்கேயே படி ராசா? இந்தா பிடி 20 ரூபாய், டீ, இட்லி சாப்பிட்டுட்டுவா. பாட்டி ஒரு வாய் கஞ்சி குடிச்சிட்டு போய் புல்லறுத்துட்டு வாரேன்.”

“போ, பாட்டி. நான் படிச்சிருக்கேன், இந்தியா என் தாய்நாடு,எல்லோரும் இந்நாடு மன்னர்கள்னு, நான் அவனுங்கள் பேசி திருத்திடுறேன். நீ டென்ஷன் ஆகாத பாட்டி.”என்று கதிரவன், கதிரவன் பல்விளக்க சென்றான்.

வீட்டுக்கருகில் பாயும் ஓடை, துள்ளி பாயும் மீன்கள் சிதறி தெறிக்கும் தண்ணீர், எல்லாம் பார்க்க அழகாக இருந்தது. “ஏண்டா, நாம சென்னையில படிச்சோம், சின்ன வயசுலேயே ஊருக்கு வந்துருக்கலாம் அழகா இருந்திருக்கும். பத்தாம் வகுப்பு வரை அப்பா காக்க வச்சிட்டாரே.” என்று கதிரவனின் சிந்தனையை சிதறச்செய்தது இயற்கை

“கவனம்ய்யா....”என்ற பாட்டியின் குரல் தொடர்ந்து “ பாட்டி, வரேன், புதுக்குடிக்கு கொடைக்கு போன தாத்தா வந்தா அந்த கஞ்சியை குடிக்க சொல்லுயா..”என்றதோடு மறைந்தது

“சரி பாட்டி.”என்று கதிரவன் பறந்து செல்லும் பறவைகளை பார்த்தபடியே பதில் சொன்னான்.

தனது தாத்தா சுடலைமுத்துவுடைய பெயர் சைக்கிளில் எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் சீட் விலகி கொஞ்சம் லூசாகியிருந்தது. லேசாக சரி செய்து கொண்டு, சைக்கிளை அழுத்தினான். சைக்கிள் முன்னோக்கி நகர, இவனுக்கு சிந்தனை செல்வியை நோக்கி நகர்ந்தது. முந்தைய நாள் பள்ளி நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.

காலை எட்டு மணி, வெள்ளிக்கிழமை, பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள், மறுநாள் சனிக்கிழமை விடுமுறை. குறைந்த எண்ணிகையிலேயே மாணவர்கள் வந்திருந்தனர். அறிவியல் ஆசிரியர்தான் முதலில் வகுப்புக்கு வந்தார். அனைவருடைய பெயரையும் கேட்டுவிட்டு, இன்று பாடம் ஏதுமில்லை, “அதனால், என் ஆலோசனைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தொடங்கி “பசங்க பொண்ணுங்ககிட்ட, பொண்ணுங்க பசங்ககிட்ட பள்ளிக்கூட நேரங்களில், பேசக்கூடாது, படிக்கிற வயதில் படிக்கணும், சாதிச்சு பெரிய ஆளா வரணும்னு...............” நிறைய நிறைய பேசிட்டே வகுப்பறையை விட்டு நேரம் முடிந்து வெளியே சென்றுவிட்டார்.

“பசங்க பொண்ணுங்ககிட்ட...” ன்னு ஆசிரியர் சொன்னவுடன்தான் கதிரவன் பெண்கள் அந்த அறையில் இருப்பதை கவனித்தான். அத்தனை பெண்களும் ஆண்களின் பார்வையில் அலட்டி கொள்ள, கொஞ்சம் முகத்தில் திமிரோடு அமர்ந்திருந்தாள். “திமிருக்கு அழகென்று பெயர்” என்ற தபூ சங்கரின் நூலை கொடுத்துவிடலாமென்று தோன்றியது, எல்லாம் அவன் நூலக நண்பனின் பழக்கதோசம். மதிய இடைவேளையில் சாப்பாடு பையோடு மரத்தடியில் அமர்ந்தாள் செல்வி. தோழிகள் யாரும் அவளோடு இல்லை. நல்ல சூழலில் ஏதாவது பேசிடலாமென்று சென்றவனை அவள் பார்த்ததை இவன் பார்த்ததும் இரண்டடி பின்நகர்ந்த்து மீண்டும் முன்நகர்ந்தான்.

அருகில் சென்று “ சாப்பிட போறீயா?”என்று அசடு வழிந்தான். அவளுடைய பார்வைக்கு பதில் பார்வை தராமல் எங்கோ பார்த்துக் கொண்டு அருகிலேயே நின்றான். அவன் இவனை ஒரு பொருட்டாக மதிக்காமல், சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தும் விட்டாள்.

“என்ன லவ்வா, போங்கடா? நடக்கிற கதையை பாருங்க...சாதாரணமா பொண்ணுங்களே எங்கப்பாவுக்கு பயந்து பக்கத்துல வரமாட்ராளுக, வந்தவனுங்களும் இன்னாரு மகள்னு சொன்னதும், வந்த வழித்தடத்தை கூட அழிச்சிட்டு போயிடுறானுங்க..நீ என்னடான்னா? 15 நிமிசமா அசடு வழியுற...உனக்கு நான் வேலை வைக்கலை.....உன் மூஞ்சே சொல்லுது...உனக்கு எனக்கும் ஒத்து வராது. ஏன்னா நீ ப்ளாஸ்டிக் க்ளாஸ் நான் கண்ணாடி க்ளாஸ்”

கதிரவனுக்கு ஒரே அதிர்ச்சி, “நாம் காதலிக்கிறதா சொல்லவே இல்லை, நட்புக்குத்தான் முயற்சி செய்யலாமுன்னு பார்த்தோம், அதுக்குள்ள அவளாவே படபடன்னு அப்பளப்பூ மாதிரி பொறிஞ்சு தள்ளிட்டு போறா.. ம் நமக்கொரு காலம் வரும் இப்படி பொறியறதுக்கு.” ன்னு திரும்பவும் பள்ளிக்கூடத்துல உள்ளதில சொன்னதை உளறிட்டே வரான்............

“யாருப்பா அது? புதுசா இருக்கு..சொல்லைமுத்து பேரன்தானே நீ?” அலாரமடித்து கேட்டு சைக்கிள் கனவை கலைத்தார், வடக்கு ஊர் தாத்தா.

“ம், ஆமாம்” ன்னு இவன் மண்டையாட்ட

“உங்க தாத்தன்ன எங்கே”ன்னு 50 வயது மதிக்கத்தக்க நபர் 70 வயது கதிரவனோட தாத்தாவ விசாரிக்கவும்..வந்த கோவத்தில பாட்டி சொன்ன “நகரத்து பேச்சை பேசாதேங்”கிற வசனம் நினைவுக்கு வந்தது, வந்ததை அடக்கி கொண்டான்.

கடைக்குள் நுழைந்தவன் இட்லி சாப்பிட அமர்ந்தான்..

வாழை இலை போட்டு பரிமாறப்பட்டது, சாப்பிட்டு முடித்தவுடன் இலையை இவனையே எடுத்து சென்று குப்பையில் போடச் சொன்னார்கள். கதிரவனுக்கு அந்த அணுகுமுறை பிடித்திருந்தது...தன் வேலையை தானே செய்யணும்னு பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுத்தது மாதிரியே இருக்கே...ன்னு நினைச்சிக்கிட்டான்

கைகழுவி விட்டு கடையின் வாசல் பக்கம் வந்தவன்..

“ஐயா ஒரு டீ போடுங்க”ன்னு சொல்லிட்டு சுத்துமுத்தும் பார்த்தான் குப்பையில் பிளாஸ்டிக் கிளாஸும், இலையோடு சேர்ந்து கிடந்தது...அலமாரியில் அதிகம் பயன்படுத்தப்படாத சில்வர் பாத்திரமும், க்ளாசும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நோட்டம் விட்டே கொண்டிருந்தவனின் கண்ணில் செல்வியும், அவரோடு வந்த முதியவரும் கண்ணில் பட்டனர்.

செல்வி “ போய்ட்டு சாயந்தரமா வந்துடறேன் தாத்தா, அத்தை வீட்டுக்கு போய் சேர்ந்ததும் ஃஃபோன் பண்றேன்” னு சொல்லி விட்டு தேநீர் கடைக்கு அருகிலிருகும் நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறி பயணம் செய்கிறாள்.

அந்த முதியவர், மெல்ல நகர்ந்து கதிரவனை நோக்கி வர, செல்விதான் ஏதும் சொல்லிக் கொடுத்திருப்பாளோ, நம்மிடம் வந்து அந்த தாத்தா என்ன சொல்வாரோ? என்ன கேட்பாரோ என்ற அச்சத்தில் திரும்பி நின்று கொண்டான் கதிரவன்...

“ஏலே, ஒரு டீ போடுறா?” ன்னு ஒரு குரல். பின் திரும்பினால் அதே தாத்தா...

சிறுது நேரத்தில் இருவருக்கும் டீ வழங்கப்பட்டது, தாத்தாவுக்கு கண்ணாடி க்ளாசிலும், கதிரவனுக்கு ப்ளாஸ்டிக் க்ளாசிலும். அப்பொழுதுதான் குப்பையில் கிடந்த ப்ளாஸ்டிக் க்ளாசை பரிதாபத்தோடு பார்த்துவிட்டு.....

அதுவரை செல்வியை காதலிக்க சிந்திக்காத கதிரவன், அவளை காதலித்தால்தான் என்ன என்று வேகமாய் சைக்கிளை அழுத்தி பயணத்தை தொடர்ந்தான்..............


காதல் இப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பொங்கல்.........ஏன்? தேவையா? நாம் என்ன செய்ய வேண்டும்


அன்பார்ந்த மும்பைவாழ் தமிழர்களே!!

உங்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

நகரத்திலே வாழ்ந்து தமிழை, பண்பாட்டை, நன்றியுணர்ச்சியை மறந்த குடியாகிப்போன நாம், பணம் கொடுத்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உண்மை அதுவல்லவே உறவுகளே, உழவனின் உழைப்பும், இயற்கையின் கொடைதான் நம் உணவுக்கு, இருப்புக்கு அடிப்படை. இதை நினைவூட்ட உழவர்களின் வியர்வையை மதிக்கும் பொருட்டு, இயற்கையின் கொடையாகிய நிலம், நீர், காற்று, பகலவன் என அனைத்திற்கும் நம் வாழ்விடங்களிலிருந்தே நம்முடைய நன்றியை தெரிவிக்கும் ஒரு நன்றி பெருவிழாகவே இந்த விழாவை

விழித்தெழு இளைஞர் இயக்கம்

ஏற்பாடு செய்துள்ளது.எங்களின் உண்மையான முயற்சிகளுக்கு எப்போதும் இப்பொழுதும் நீடிக்கும் உங்களின் உள்ளார்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களது இந்த ஆதரவை வாய்ப்பாக பயன்படுத்தி சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

நாம்தானா தமிழர்கள்? நம்மிடைய தமிழ் மீதமிருக்கிறதா?

தோழர்களே எம் முயற்சி நமக்கான பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியல்ல, நமக்கான பண்பாட்டை உருவாக்கும் முயற்சி.......நாம் இழந்தவைகளை நற்பண்புகளை மீட்கும் முயற்சி........

என்ன அப்படி இழந்துவிட்டோம்?எங்கு தவறவிட்டோம்

நம்மிடையே பயன்பாட்டில் உள்ள வழக்குகளை கொஞ்சம் பாருங்கள்...........

« நம்மிடையே தமிழ் எண்கள் இல்லை

க, 2 , 3-, 4-, 5-, 6-, 7-, 8-,9-,10-, 100-,1000-

« நம்மிடையே தமிழ் திங்கள் இல்லை (மாதம் என்பது தமிழ் சொல் இல்லை)

1.தை(சுறவம்), 2.மாசி (கும்பம்), 3. பங்குனி(மீனம்), 4. சித்திரை (மேழம்), 5. வைகாசி (விடை),

6. ஆனி(ஆடவை), 7. ஆடி (கடகம்),8. ஆவணி (மடங்கல்), 9. புரட்டாசி(கன்னி),10. ஐப்பசி (துலாம்),11. கார்த்திகை(நளி),12. சிலை (மார்கழி)

« நிகழும் வட மொழி ஆண்டின் பெயர் விரோதி.....(விரோதி தமிழ் கிடையாது என்று தெரியாதவர்களெல்லாம் இங்கு தமிழார்வலர்கள் காலத்தின் கொடுமை தோழர்களே)

« நாம் கடவுள் என்று வணங்கும் கடவுளுக்கு தமிழ் பெயர் இல்லை

பிரம்மா, 2) லட்சுமி, 3) கிருட்டிணன், 4)ராமன், 5) அல்லா, 6)யேசு

« குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில்கூட தமிழில் பெயர் சூட்டும் அக்கறையில்லை நம்மிடம் இருக்கும் பெயர்களை பாருங்கள்

சுரேஷ், ராமன், கிருஷ்ணன், ரமேஷ், கணேஷ், கீதா, சீதா, லட்சுமி, ஜோசப், ஸ்டெல்லா, முகம்மது, ரஃபீக்.................

« கோவிலில், சர்ச்சில், மசூதியில் என வழிப்பாட்டு தலத்தில் என எதிலும் தமிழில்லை..

« பைபிள், குரான், கீதை என எதுவும் இதுவரை தூயதமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை

« நாம் பேசும் தமிழை கொஞ்சம் பாருங்கள் ஹோட்டல்(உணவகம்), ஸ்டோர்ஸ்(கடை), பஸ்(பேருந்து),டீ(தேநீர்), டிவி(தொலைக்காட்சி), ரேடியோ(வானொலி)

« நம் வீட்டில் குழந்தைகள்......மம்மி என்றோ டாடி என்று அழைப்பதையோ பெருமையாக கருதுகிறோம்..........

« அதுமட்டுமா? கொஞ்சம்கூட வெட்கமில்லாமல்..........

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்..........குறள்: 972

என்ற வள்ளுவன் வாக்குக்கு எதிராக சாதிகள் என்னும் வீண் சுமையை சுமந்து திரிகிறோம். சக தமிழனை சாதியின் பெயரால் ஒடுக்குகிறோம். நல்லதொரு பண்பாட்டை பின்பற்றாதிருந்தால்தான் நாம் தமிழர்களா?

இப்படி எதிலும் தமிழை பின்பற்றாத நாம்.........தமிழ் தவிர வேற்று மொழி தெளிவாக பேசத்தெரியாத காரணத்தினாலே, வழக்கில் தமிழ் தேவைப்படுவதால் தமிழை பயன்படுத்துகிறோம்.....இல்லையேல் விட்டுவோம் என்ற நிலையிருந்தால்.............இது நன்றி கொன்ற செயலாகிவிடாதா?

தமிழல்லாது தமிழர்களுக்கு ஏது சிறப்பு.......தமிழை நாம் பாதுகாக்காவிட்டால் யார் பாதுகாப்பது...தமிழார்வம் என்றாலே வேலைவெட்டி இல்லாதவர்களின் வேலை என்றல்லவா பார்க்கிறோம். கொஞ்சம் சிந்தியுங்கள், அக்கறை கொள்ளுங்கள். நமக்காக நாம் உழைக்காமல் யார் உழைப்பது?

எனக்கா தமிழ்பற்று கிடையாது புலிகளை எவ்வளவு ஆதரிக்கிறேன் தெரியுமா? பிரபாகரன் என் தலைவர் என்றெல்லாம் எகிறும் தோழர்கள்..எத்தனை பேர் புலிகள் செய்ததை செய்யத்தயார்?

புலிகள் தனித்தமிழ் பெயர்களைத்தான் இயக்கத்தோழர்களுக்கு இட்டார்கள்.

அலுவலகங்கள், வழக்கு மொழி என அனைத்திலும் வடமொழி கலப்பில்லாத தமிழையே கையாண்டார்கள்.

புலிகள் சாதியை ஒழிக்க முயற்சித்தார்கள், நீங்கள் தயாரா?

புலிகள் தமது இயக்கத்தில் ஆணும், பெண்ணும் சரிநிகர் என்று நிறுவினார்கள். நீங்கள் தயாரா?

சாதி கடந்து, மதம் கடந்து வாருங்கள் தோழர்களே..தமிழ் காப்போம் , நம் அடையாளம் மீட்போம்....தயவுகூர்ந்து சாதி, மதம் மறந்து வராதீர்கள்...மீண்டும் என்றாவது உங்கள் நினைவுக்கு வரலாம்.

மகிழ்நன் (+919769137032)

விழித்தெழு இளைஞர் இயக்கம்