திங்கள், 28 டிசம்பர், 2009

எங்களை தமிழில் படிக்கவிடு.......இல்லை தமிழில் படிக்க நாடு கொடு

இந்திய என்ற கூட்டு........அவியல்........பொறியல்........

அய்யய்யோ மன்னிச்சுக்கோங்க,...............கொஞ்சம் குழம்பி போய்ட்டேன். இப்படித்தாங்க இந்தியாவை நினைச்சாலே குழப்பாக இருக்கு.........

நான் மராத்திய மாநிலத்தில் வாழும் தமிழன்..........இங்கு ரே ரோடு என்னும் பகுதியில் வாழும் தமிழர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்..........தமிழர்கள் கொடி கட்டி........ஆமாம் கோமணக்கொடி கட்டி வாழாதது மட்டும்தான் குறை.......

அவர்களோடு உரையாடிய போது அவர்களிடம் வந்த பதில்............

படிக்க வாய்ப்பில்லைங்க............குடிக்க தண்ணி இல்லைங்க..........குளிக்கவும்கூட தண்ணி இல்லைங்க...........பணமிருக்கிறவன் தண்ணி வாங்கு குளிக்கிறான்......... ஆனால், துவைக்கிறதுக்கு துணி வாங்குறதுக்குக்கூட வாய்ப்பில்லை காரணம் பணம்தாங்க.......இவ்வளவு செய்திகள் இல்லைனு சொன்னாலும் எங்களை இப்படி இழிநிலையில் வைத்திருக்கும் இந்தியாவை நேசிக்கிறேங்க............என்ன இருந்தாலும் தாய் நாடு இல்லையாங்கிறான்???????????? ஏதாவது வாயில் வந்திருக்கும்.......ஆனால்,எவ்வளவு முயற்சி செய்தாலும் எச்சிலை தவிர வேறெதுவும் வரவில்லை..........எச்சிலை துப்பிவிட்டு.........தாய் மண்ணே வணக்கம்னு சொல்லிட்டு வந்தேன்.........

வேற்று மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் சொல்..........எப்படி.....ஈழ அகதியின் குரலோடு ஒத்துப் போகிறது...குளிக்க நீர் இல்லை.....கல்வி கற்க தமிழில்லை....இந்த நாடு எங்களுடையது என்றால் எங்கள் தாய்மொழியில் படிக்க என்ன தடை?.........தாய்மொழியை மறந்துதான் என்னுடைய நாட்டுப்பற்றை உறுதி செய்ய வேண்டும் என்றால் அப்படி என்ன புடலங்காய் தாய்நாட்டின் மீதான பற்று தேவையிருக்கிறது.........

நீங்கள் பேசுவது பிரிவினைவாதம்......இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று நாக்கில் முட்டாள்தனத்தை நட்டு வைத்துக் கொண்டு பேசும் அன்பர்களிடம் நாங்கள் கேட்பது இதுதான்........

மராத்திய மாநிலத்தில் மராத்தியில்தான் படிக்க வேண்டும் என்பது சரிதான்........ஆனால், மராத்திய மாநிலத்தில் இந்தியன் என்று அடையாளப்படுத்தப்படும் தமிழன் அவனுடைய தாய்வழிக் கல்வி படிக்க்கூடாது என்றால் ஒன்று மராத்தியம் இந்தியாவில் இல்லை..அல்லது தமிழனுக்கு இந்தியா இல்லை........




ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சாதிகள் இடையே சண்டையடி

சாதிகள் இடையே சண்டையடி

நல்ல சமத்துவ போர் வந்ததடி

மங்கிய வீரன் பொங்கி எழுந்து

ஆயுதம் ஏந்தியே வாரானடி

போர் ஆயுதம் ஏந்தியம் வாரானடி

சிவனும் மீண்டு எழுந்தானோ?

அந்த முருக பெருமான் வந்தானோ?

முத்தமிழ் தந்த மூத்த தமிழன்

நக்கீரன் வாயை திறந்தானோ?

மதுரை வீரன் வந்தானோ?

நல்ல மயக்கும் மொழியில் தந்தானோ?

காவேரி சோழன், காத்தவராயன்

கண்களை திறந்து கொண்டானோ?

அழகன் சுடலை மாடனோ?

ஆயுதம் ஏந்திய அழகனோ?

கட்டை விரலை தந்திட மறுத்த

ஏகலைவன் வந்தானோ?

புது ஏகலைவன் வந்தானோ>?

சாதிய கனல்கள் அழியட்டும்

காதலர் பூங்கா மலரட்டும்

சாதிகள் இல்லா சங்கத் தமிழ் தந்த உலகம்

மீண்டும் உதிக்கட்டும்

தமிழ் உலகம் மீண்டும் உதிக்கட்டும்

அம்பேத்கர் போட்ட விதைகளாம்

அந்த அறிஞன் வளர்த்த செடிகளாம்

ஆலம், அரசம் நிழல்கள் தந்திட

வானம் தொட்டு வளர்ந்தோம்

நீல வானம் தொட்டு வளர்ந்தோம்.......

இருள் நீக்க வளர்ந்தோம்.....

நன்றி: தோழர் ராசேந்திரன், ரே ரோட், மும்பை

திங்கள், 30 நவம்பர், 2009

இயேசுவை கைது செய்!!!!

நீலகிரியில் நடந்த மலைச்சரிவை முன்னமே தீர்க்க தரிசனமாக கூறிய இயேசு........ஈழத்தில் மக்கள் கொல்லப்படுவதை, கொல்லப்பட்டத்தை நேரடியாக சென்று சாட்சி தரிசனமாக கூட சொல்லாமல்...........மௌனமாக குற்றம் நடப்பது தெரிந்தும் வெளியே வெளிப்படையாக தெரிவிக்காமல் இயேசுவை கைது செய்...........

இவரோடு இணைந்து கொண்டு மற்ற மதத்து மக்கள் இருப்பதாக நம்பும் அல்லா, இந்து மதத்தின் முப்பத்து முக்கோடி தேவர்களையும் சேர்ந்தே கைது செய்ய வேண்டும்....

சனி, 21 நவம்பர், 2009

தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்களே இதை கண்டிக்க வக்கில்லையா?

ஈழத்தில் முள்வேலிகம்பிகளுக்குள் துன்புறுத்த சிங்கள அரசுக்கு துணைபோன இந்திய தேசிய அதிகாரம் வர்க்கம், குறிப்பாக மலையாளிகள் ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததே போராளிகளின் பின்னடைவுக்கு காரணம் இப்படி பக்கம் பக்கமாக அறிக்கைவிடும் தமிழ்த்தேசியவாதிகள்...........

கொஞ்சம் கூட அறிவேயில்லாமல்..........

தமிழர்களை தமிழர்களே தமிழ்நாட்டில் ஒடுக்கும் பொழுது குரல் கொடுப்பதேயில்லை..........

அது உத்தப்புரமாகட்டும் அல்லது திண்ணியமாகட்டும்...................

காரணம் இவர்களுக்கு தேவை ஆட்டுமந்தைகள்தானேயொழிய அறிவுள்ள மாந்தர்கள் அல்ல........

இந்திய பார்ப்பனீய, பனியா (மலையாளிகள் நிறைந்த)அதிகார வர்க்கம் செய்த துரோகத்தால் ஈழமக்கள் கொல்லப்பட்டனர்....

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து கூட்டம் போட்டால், போராட்டம் நடத்தினாலோ சேராத கூட்டம், சுத்த தமிழர்களின் பெருங்கூட்டம் இன்று மலையாள தேசம் நோக்கி படையெடுத்துப்போகிறது..........

மாவீரர்கள் நாள் என்றுஎன்றே தெரிந்து கொள்ள விருப்பப்படாத இந்த பச்சைத்தமிழர்களின் கூட்டத்தை விமர்சிக்க என்று உண்மையில் திராணி வரப்போகிறதோ..........தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்களுக்கு....

திங்கள், 2 நவம்பர், 2009

சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?

முதல் முறையாக மும்பையில் சீமானை இரண்டு ஆண்டுகளுக்கு(சரியாக நினைவில்லை, மூன்று ஆண்டுகளாக கூட இருக்கலாம்) முன்பு தொலைவில் இருந்து ஒரு அரங்கில் உரையாற்றியதை கண்டேன் ,கேட்டேன்.....

தமிழன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டானே, வேற்று மொழியில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயங்காதவன், தன் தாய்மொழி பேசும் நபர்களோடு திருமண உறவு கொள்ள தயங்குகிறானே? மொழி, இன பற்றை விட சாதி பற்று தமிழனிடத்தில் என்று ஆட்கொண்டதோ அன்றே தமிழன் வீழ்ந்தான், வந்தவனெல்லாம் ஏறி மிதித்து போய்க் கொண்டே இருக்கிறான்.

தமிழனிடம் இருக்கும் சாதிய பிரச்சினைகளை பேச, பகுத்தறிவு சிந்தனைகளை பரப்ப இப்படியொரு ஆளா? அதுவும் திரைப்படத்துறையிலிருந்தா? என்று பிரம்மித்துதான் போனேன், எனக்கு அப்பொழுது 21 வயதுதான் இருக்கும். அதிகம் புரிதல் இல்லா நேரம், பெரியார் அப்பொழுதுதான் அறிமுகமாயிருக்கிறார். பெரியாரை அப்பொழுதுதான் படிக்க தொடங்கியிருக்கிறேன்....புரட்சிகர கருத்துக்கள் சீமானின் சிந்தையில் இருந்ததா இல்லையா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால், சொற்களில் இருந்தன.

புரட்சி என்பது காய்ந்த சருகு போன்றது, யார் முதலில் தீக்குச்சி ஆவது என்பதுதான் இங்கே கேள்வி.என்று அவர் சொற்களை உதிர்த்து கொண்டே போனார். அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது. அந்த தாக்கம்தான் பெரியார் என்னும் பெரும் தலைவனை எனக்குள் ஆழமாக விதைத்தது.....பெரியாரை படிக்க தொடங்கியது உலகத்தில் உள்ள விடுதலைச்சிந்தனைகளை தேடி தேடி படிக்க வைத்து, தேடலை விரிவுப்படுத்தியது......தேடல் தொடர்கிறது

இவரை மேடையில் பார்த்தபின்பு அவரின் சீமானின் தம்பி திரைப்படம் பார்க்க நேரிட்டது. படத்தில் மாதவன் தன்னுடைய குடும்பத்தில் வீட்டிலிருக்கும் காட்சி வந்தது, பெரியாரின் படம் வந்தது, பாரதிதாசன் படம் வந்தது, கூடவே முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியனின் படமும் அந்த திரைப்படத்தில் வந்தது...அதிர்ச்சியுற்றேன்...தோழர்களோடு இதை பகிர்ந்து கொண்ட பொழுது மிகவும் வருத்தமடைந்தடைந்தனர்..ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சீமானோடு அப்பொழுது தொடர்பு கொண்டு எனது தோழர் ஒருவர் கேட்டதற்கு அது பிழையாக நடந்துவிட்டது...என்று கூறியிருக்கிறார்...பேச்சுனூடாக இன்னும் சாதி வெறியை கக்கி கொண்டிருக்கும், தமிழன் என்ற உணர்வேயில்லாமல் சாதிய வெறி கொண்டு சகதமிழனை ஒடுக்கும் சாதி வெறியர்களையும் சீமான் கண்டித்ததாக தொடர்பு கொண்ட தோழர் கூறினார்....

அது தற்செயலாக நடந்தது. இனி அதை தவிர்த்து விடுகிறேன் என்று கூறியவுடன் விமர்சனங்களையும், அதன் மீதான தனது நிலைப்பாட்டையும், தவறிருந்தால் திருத்திக் கொள்ளும் மனப்பான்மையும் இவருக்கு இருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

அதோடு மட்டுமில்லாமல் கீற்றுவில் அவரது நேர்காணலையும் படித்தேன் அதில் சாதியை குறித்து அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருந்தார்..

கேள்வி: தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து வேதம் புதிதுன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...

மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.

கேள்வி:நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?

கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.

கீற்று நேர்காணல் இணைப்பு

அதற்கு பிறகு அவரை சமீபத்தில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சார்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில்தான் அவரை சந்தித்தேன். அவரை கண்டு வியந்து போனேன், கூர்ந்து கவனித்த பொழுது தன்னலமில்லா, கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர் என்றே இதுவரை நினைத்து வருகிறேன். இன்னமும் குழந்தை உள்ளத்தோடு இந்தச்சமூகத்திற்கு ஏதாவது செய்துவிட முடியாதா? என்ற ஏக்கமும் அவரிடம் என்னால் காண முடிந்தது....

ஆனால்,எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அவரின் தவறான அரசியல் நிலைப்பாடுகளை எப்படி ஆதரிக்க இயலும்......

பெரியாரின் பேரன் முத்துராமலிங்கம் என்ற சாதிவெறி பிம்பத்திற்கு சீமான் மாலை அணிவித்ததைத்தான் குறிப்பிடுகிறேன்.

ஈழத்தில் சிங்கள இனவெறி தமிழர்கள் மீது ஏவிவிட்ட அடக்குமுறைக்கு எதிராக முழங்கும் தமிழ்த்தேசியவாதிகள் தமிழகத்திலேயே சம மரியாதை இல்லாமல் சக தமிழன் சாதியின் பெயரால் மிகக்கொடுமையாக ஒடுக்கப்படும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே என்ற ஆதங்கம் எமக்கு இருந்தாலும் அதை தருணம் கருதி ஈழப்பிரச்சினையின் தற்காலத்திய முக்கியத்துவம் கருதி, குரல் கொடுக்க வேண்டிய தேவை கருதி அதைப்பற்றி விரிவாக விவாதத்திற்குள் உட்புகவில்லை...ஆனால், சாதிய ஒழிப்புதான் தமிழர்களை அணிதிரட்டும் என்பதில் மாறுபடாமல் இருந்தோம்.....

ஈழத்தில் நடக்கும் கொடுமைக்கு தீண்டாமை கொடுமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இனியாவது உணர்வார்களா என்றால் அதுதான் நடக்கவில்லை....என்ன ஒரே வேறுபாடு..ஈழத்தில் ஒடுக்குபவன் சிங்களவன், தமிழகத்தில் தமிழன்

ஈழக்கொடுமை கண்டாவது விழிப்புணர்வு பெற்று தமிழர்கள் சாதி வெறிக்கெதிராக வரமாட்டார்களா? என்ற ஏக்கம்தான் காரணம்..

பெரியார் திராவிடர் கழகம் இனி என்ன செய்யப்போகிறோம்என்ற குறுந்தகட்டை பிரதி எடுத்து மும்பையில் தமிழர்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்த வேளையில் ஒரு நபர் என்னை அணுகினார்..

ஈழக்கொடுமையெல்லாம் சரிதான்....ஆனால், அதில் வரும் பெரியாரின் படத்தை எடுத்து விட்டு தாருங்களேன். என்று கூறினார். அங்கு வெளிவந்தது சாதிய திமிர் என்னும் பூனை...பெரியாரின் சாதிக்கு எதிரான கொள்கையின் வீரியம் அங்கே நினைவுக்கு வந்தது......

சாதி வெறிக்கெதிராக தமிழகத்தில் இயங்குவதற்கு பெரியார்தான் கருவி என்பதை நான் அன்று நன்கு புரிந்து கொண்டேன்...இதையே தமிழர்களோடு சமூக தளத்தில் இயங்கிய பொழுது பல நிகழ்வுகள் இதையே வலுவாக உறுதி செய்தன.

முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது சாதிக்கு ஆதரவாக இயங்குவதாகத்தான் போய் முடியும்.என்பதையும் சேர்த்தே உணர்த்தியது...

தமிழர்களாக அணிதிரட்ட கிளம்பியிருப்பதாக கூறும் பெரியாரின் பேரனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீமான் சாதி ஒழிப்பிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும்...ஆனால், அதை விடுத்து பெரியாரை சாதி வெறி தேவர் பூசை கொண்டாட்டத்தில் கொண்டு போய் விட்டு விட்டு சாதியை தூக்கி பிடிக்கும் மக்களிடம், அவர்களிடம் வைக்க வேண்டிய நேர்மையான விமர்சனங்களை வைக்காமல் முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டு வந்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது...

அவர்களும் தமிழர்கள்தானே அவர்களை புறக்கணிப்பது சரியா? என்று என்னதான் சமாதானம் கூறினாலும்... அது

ராஜபக்சேவும், பிரபாகரனும் எனக்கு நண்பர்கள்தான் என்று சொல்வதுபோல்தான் முடியும்..

இனத்திற்கு தலைவனாக விரும்புவன் மக்களிடம் சமரசம் செய்து கொண்டால் சமரச சாதாரண பிழைப்புவாத அரசியல்வாதிதான் ஆக முடியும், மாறாக மக்களிடம் பரப்ப வேண்டிய கொள்கைகளை பரப்புரையின் மூலமாக தம் பின்னே அணி திரள வைப்பவன்தான் நேர்மையான அரசியல்வாதியாக,இந்த இனத்திற்கான விடிவாக வர முடியும்

சீமான் செய்ய வேண்டியது தமிழர்களிடையே இருக்கும் சாதியை ஒழிப்பதற்கு களம் காண்பதுதான்..சாதி ஒழிப்பை மறந்தாலோ, சிறுது நாட்களுக்கு ஒதுக்கி வைத்தாலோ, சாதிய ஆதிக்க வாதிகளிடம் அடங்கி போனதாய்தான் முடியும்.

கால ஓட்டத்தில்

நாம் தமிழர் என்பது போலி முழக்கமாகிவிடும்...

ஏனென்றால்....சாதி ஒழியாத வரை தமிழகத்தில்

தமிழ் தேவர், தமிழ் பறையர், தமிழ் பள்ளர், தமிழ் கோனார்,தமிழ் பிள்ளைதான் இருப்பார்களேயொழிய...

தமிழர்களாக தமிழகத்தில் எவனும் சீமானுக்கு கிடைக்கமாட்டான்.

தொடர்பான இணைப்புகள்:

சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தியதால் மறுப்பு கூறு தலித் முரசு 2006 இதழிற்கு சீமான் அனுப்பிய மடல் அழுத்துக

தோழர் சுகுணாதிவாகரின் இணைப்புகள் 1, 2, 3

தோழர் அசுரன் மாமேதை முத்துராமலிங்கத்தை பற்றிய பதிவு : 1

தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி வன்முறையின் ஓர் தொகுப்பு.

இணைப்புக்கு அழுத்துங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழர்களே உள்ளம் எரிகிறது!!!!



நன்றி: வீர கேசரி 29/10/2009

நீங்கள் என்றுதான் திருந்துவீர்கள்.............

என்ன அப்படி ஒரு மானங்கெட்ட பக்தி............

அந்த மண்னாங்கட்டி கடவுள்கள் நம் இனத்தை கைவிட்ட பிறகும் அவைகள் இல்லை என்பது புரியவில்லை....

இனம் ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரலிட்டுவிட்டு...கோயிலில் பூசைக்கு அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமே..........கொஞ்சம்கூட சிந்தனை ஆற்றலோ இரக்கமோ நம் இனத்தவர்களுக்கு கிடையாது...

போகிற இடமெல்லாம் சாதியை தூக்கி திரிகிறோம்....சோதிடம், கடவுள், கருவறை கருமாந்திரம்னு கட்டி தொலைக்கிறோம்....

நமக்குள்ளிருக்கும் அழுக்குகளை துடைக்க துணிவில்லை....இந்த லட்சணத்தில் நமக்கு நாடு ஒரு கேடா?

தயவு செய்து திருந்துங்களேன்................சாதி, மதச்சகதியிலிருந்து வெளிவந்து நமக்கான தேசியத்தை, புரட்சியை படையுங்களேன்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மும்பையில் கொளத்தூர் மணி உரை








குழந்தை வரம் - இடைமீது பலன்

வரம் வேண்டி வேண்டுதல்

செய்தாள், பக்தை! காணிக்கை

செலுத்த இடைத்தரகரிடம்

சென்றவுடனே, இடைமீது பலன்

கிடைத்தது. கடவுளின் ஆசியால்

குழந்தை பிறந்தது.

திங்கள், 26 அக்டோபர், 2009

தமிழின எதிரிகளே!! நாங்கள் உங்களை வெல்வோம்

தமிழின அழிப்பை நடத்திய சிங்கள இனவெறி நாய்களே!!!

சக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சாதி வெறி பிடித்த தமிழ் பேசும் இரண்டு கால் விலங்குகளே உங்களை நாங்கள் வெல்வோம்

நீ எனது ஊன்று கோலைப் பிடிங்கி கொண்டாய்

நான் நிற்கப் பழகிக் கொண்டேன்

நீ, என் வெளிச்சத்தை அணைத்தாய்

நான் நெருப்பை வளர்த்தேன்

நீ என் முன் குழிகளை வெட்டினாய்

நான் தாண்ட பழகிக் கொண்டேன்

நீ, என் குடிசையை கொளுத்தினாய்

நான் வெயில் மழையில் இருக்க பழகினேன்

நீ என் உறவுகளை அழித்தாய்

நான், என் பாசத்தை அழித்தேன்

நீ,என் மனிதத்தை அழித்தாய்

நான் என்னுள் மிருகத்தை வளர்த்தேன்

அதனால், என் பிரிய எதிரியே

உன்னை வெல்லுவது

எனக்கு எளிதாயிற்று

விடுதலை வேட்கை வெற்றி வேந்தன்

நாம் தமிழர்கள்............?

ஒரே மொழிதான்

ஆனாலும்-

நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.

ஒரே ஊர்தான்

ஆனால்-

நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை

ஒரே பண்டிகைதான்

ஆனால்-

நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை

ஒரே மதம்தான்

ஆனால்-

நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை...

நம் இடையினில் இருப்பது

சாதி தோழா.

நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்