வியாழன், 30 ஜூலை, 2009

ராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது

சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.

சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேச சதிவலைப் பின்னல் இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது”.

மகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் மேல் உள்ளவை.

தொடர்ச்சியாக பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் அனைத்தும் இதனை தான் செய்துவந்தன. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமை போரை முற்றாக சிதைத்துவிட சிறீலங்கா அரசுகள் முனைந்து வந்தனவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் முற்படவில்லை.

தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஏறுக்கு மாறாக மேற்கொண்டுவரும் கருத்துக்களில் இருந்து இன்றும் நாம் அதனை உணரமுடிகின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ அல்லது அவர்களுக்கு சிறீலங்காவில் வாழும் உரிமைகளையோ சிங்கள தேசம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை என்பது தான் உண்மையானது.

இதனை உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப்போருக்கு எதிரான போக்கை கொண்டவர்களும் தற்போதும் உணரவில்லை என்றால் அதனை நாடகம் என்றே கொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவராக பதவியேற்க முன்னர் பேசி வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, யாழ்ப்பாணம் வந்து கேணல் கிட்டுவுடன் பேச்சுக்களை மேற்கொண்டு நட்புறவுடன் பழகிய அவரது கணவர் விஜய குமாரணதுங்கா ஆகியோரின் அரசியல் நாடகங்கள் சந்திரிகா அரச தலைவர் ஆனதும் காற்றில் பறந்துவிட்டன.

சிங்கள தேசத்தின் அடக்கி ஆட்சிபுரியும் மனப்பான்மைக்கு முன்னால் சிங்கள தேசத்தில் பதவிக்கு வரும் எந்த அரசுகளும் தப்பி பிழைத்தது கிடையாது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனவோட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே சிங்கள அரசுகளும் தமதுபதவி சுகங்களை தக்கவைப்பதுண்டு. இது தான் கடந்த அறுபது வருடங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள்.

1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம்அடைந்த பின்னர் 1976 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறும் வரையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை «ம்றகொண்டு வந்திருந்தனர். ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அகிம்சை வழியில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினால் தான் அது பின்னர் ஆயுதப்போராக உருவெடுத்தது.

ஆயுதப்போரும் பல வடிவங்களின் ஊடாக 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக (33 வருடங்கள்) பயணித்துள்ளது. இருந்த போதும் தற்போது நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நிற்கின்றோம். அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவும் பல குழப்பங்கள் உள்ளன.

எமது போராட்ட வரலாற்றை பொறுத்தவரையில் முன்னைய மூன்று தசாப்தங்களை விட பின்னைய மூன்று தசாப்தங்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பல வலிகளையும், இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தாலும், எமது இனத்தின் பிரச்சனைகளையும், வேதனைகளையும் உலகறியச்செய்த பெருமை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போருக்கு உண்டு.

ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லா தாக்குதல் மிகச்சிறந்த பிரச்சாரம்என்ற கியூபாவின் முன்னாள் விடுதலைப்போராட்ட வீரரும் அதிபருமான பிடல் கஸ்ரோவின் வார்த்தைகளின் யதார்த்தத்தை இந்த காலம் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியிருந்தது.

இந்தக் காலப்பகுதி சிங்கள தேசத்திற்கும் பெருமளவான இழப்புக்களையும், பொருளாதாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு இனத்தை அடக்கி ஆட்சிபுரிவதற்கு என்ன விலையை செலுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. அகிம்சை வழியில் போரிட்ட போது நாம் தான் இழப்புக்களை சந்தித்திருந்தோம் ஆனால் எமது ஆயுதப்போர் சிங்கள தேசத்திற்கும் இழப்புக்களினதும், வேதனைகளினதும் வலியை உணர்த்தியிருந்தது.

ஆனாலும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறீலங்கா அரசுகள் அதிக முனைப்பை காட்டியிருந்தன. 1980 களில் ஏற்பட்டிருந்த மேற்குலகம் சோவியத்து ஒன்றியம் என்ற முனைவாக்கத்?தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது போல, 2009களில் ஏற்பட்டுள்ள சீனா மேற்குலகம் என்ற இந்துசமுத்திர பிராந்திய முனைவாக்கத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்

களின் விடுதலைப் போரின் படை வலுவை மிகப்பெரும் படை வலுக்கொண்டு சிறீலங்கா அரசு முறியடித்துள்ளது.

ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற போர்களில் சந்தித்த இழப்புக்களை விட பல மடங்கு அதிகமான இழப்புக்களை சிங்கள தேசம் சந்தித்திருந்தது என்பதும் உண்மை. வெற்றி பெறுபவர்களுக்கே வரலாறு சொந்தம் என்ற தத்துவத்திற்குள் சிங்களம் தனது இழப்புக்களை மறைத்துவிட்டது.

ஆனால் சிறீலங்காவை அனுசரித்து போவதன் மூலம் கூட தனது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேண

முடியாது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போரை நயவஞ்சகமாக அழிக்கத் துணைபோனது தான் மிகவும் வேதனையானது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன்னரும் தனது படை வலு கொண்டு சின்னஞ் சிறிய ஒரு அமைப்பை இந்தியா முற்றாக துடைத்தளிக்க முற்பட்டிருந்தது. அவரின் மரணத்திற்கு பின்னரும் இந்தியா அதனையே மறுபடியும் மேற்கொள்ள முயன்றுள்ளது. ஆனால் 1987களில் இந்தியாவின் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறை உத்திகள் எவ்வாறு முறியடித்தனவோ அதனைபோலவே தற்போது இந்திய அரசின் முயற்சிகள் இடை நடுவில் தொங்கிபோய் உள்ளன.

அதாவது விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டுமானங்களை இந்திய சிறீலங்கா படையினரால் முறியடிக்க முடிந்ததே தவிர உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கைகயையும், விடுதலைப் புலிகளின் வலையமைப்பையும் அவர்களால் முறியடிக்க முடியவில்லை.

ஒருவேளை 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ தற்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை போன்றதொரு மிகப்பெரும் படுகொலைகளுடன் விடுதலைப் புலிகளை இந்திய மீண்டும் ஒருதடவை அழிக்க முற்பட்டிருக்கலாம்.

அன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை எதிர்கொண்டு எமது விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டிய முதிர்ச்சியும், வளர்ச்சியியும் புலம்பெயர் நாடுகளில் இருக்கவில்லை. எனவே தற்போதைய அழிவை விட மிகப்பெரும் பேரழிவை தமிழ் மக்களின் விடுதலைப்போர் அன்று சந்தித்திருக்கும்.

ஒரு வகையில் பார்த்தால் ராஜீவ் காந்தியின் மரணம் தமிழ் மக்களின் விடுதலைப்போரை 18 வருடங்கள் காப்பாற்றி உள்ளது என்றே கொள்ள முடியும். இந்த 18 வருடங்களில் தமிழ் மக்களின் போராட்டம் கண்ட வளர்ச்சிகள் அதிகம்.

மேலும் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாகவே 25,000 இந்திய இராணுவ கொமோண்டோக்களை யாழ்நகரத்தில் தரையிறக்கி மிகப்பெரும் படுகொலை ஒன்றை நிகழத்தி பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டிருந்தது.

அதற்கு ஏதுவாக 25,000 படையினரை திருவானந்தபுரம் விமானநிலையத்திற்கு கொண்டுவரும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணமோ தெரியாது இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனவே வட இந்தியர்களும், தென்இந்திய பார்பானியர்களும் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலை உணர்வுகளில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எப்போதும் சலித்தவர்கள் அல்ல.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களையும், பிரதிநிதிகளையும் அழித்துவிட முற்படும் இவர்கள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதிலும் சிங்கள தேசத்திற்கு ஒப்பான போக்கையே கையாண்டு வருகின்றனர்.

2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் கூட விடுதலைப் புலிகள் சுயாட்சி அதிகாரத்திற்கான திட்டம் ( Interim self governing authority proposal) ஒன்றை முன்வைத்திருந்தனர். ஆனால் அன்றைய சிங்கள அரசு அதனை விவாதிக்க கூட முற்படாமல் குப்பை தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளை ஏவிவிட்டிருந்தது.

சுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வை காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுக்களுக்கான ஒரு திறவுகோல் அதனை வீணாக இழத்தடிப்தை விடுத்து ஆக்கபூவமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் குறிக்கோளாக இருந்தது.

விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முன்வரவில்லை. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்த இந்திய அரசு 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற 1988 களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிந்தது. ஆனால் அதனையும் தற்போதைய அரசு இல்லாது செய்துவிட்டது.

மீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறனதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

அண்மையில் சிறீலங்கா இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனை தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன. மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயசூரியா இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் ஏனெனில் பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியாமாவட்ட கட்டளை தளபதிகளே இராணுவத்தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு. எனினும் ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரமா நியமிக்கப்பட்டதும் நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இனவிகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி செயற்பட்டு வருகின்றது. இந்த வளங்களில் தமிழ் இனத்திற்கு எதிரான தமிழ் குழுக்களும், அமைப்புக்களும், கட்சிகளும் அடக்கம்.

வேல்ஸில் இருந்து அருஷ்

ஈழமுரசு (24.07.09)

செவ்வாய், 28 ஜூலை, 2009

புத்தர் துறவும் பொய்மைக் கதைகளும்!



1950-ம் ஆண்டு மே 2-ம் நாள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மிக முக்கிய வரலாற்று நிகழ்வொன்று நடந்தேறியது. ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும் புத்த மதத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று அம்பேத்கர் அன்றுதான் அறிவுறுத்தினார். அன்றைய சமூக தளத்தில் மிகப் பெரும் மீறலாகவும் வைதீகப் பரப்புக்குள் மிகப் பெரும் கலகமாகவும் அந்நிகழ்ச்சி அமைந்தது. அன்று ஏழு கோடியாக இருந்த தாழ்த்தப்பட்டோர் இன்று 25 கோடியினர்.

அம்பேத்கர் உணர்ச்சி ரீதியாக எடுத்த முடிவன்று இது. அவர் காலத்தில் மிகப் பெரும் அறிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருந்த அவர், 1935 தொடக்கத்திலிருந்தே மதமாற்றம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருந்தார். புத்தரை நோக்கி அம்பேத்கர் நகர்ந்து கொண்டிருந்தார். அவரின் இந்திய மதங்கள், இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மதங்கள் பற்றிய ஆய்வில், பௌத்தமே தாழ்த்தப்பட்டோர்க்கு ஏற்ற சமயமாக இருந்ததை அவர் கண்டார். தீண்டப்படாத, இந்தியாவின் தொல்குடி மக்களே பௌத்தர்களாக இருந்தவர்கள், புத்தரின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் என்ற சித்தாந்தத்துக்கு வந்து சேர்ந்தார்.

19-
ம் நூற்றாண்டின் மிகப் பெரும் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியே ஒரு சின்னஞ்சிறு நிகழ்ச்சிதான் என்று சொன்ன அம்பேத்கர், 2500 ஆண்டுகளுக்கு முன் பௌத்தர்களுக்கும் பிராமண வைதீகத்துக்கும் நிகழ்ந்த போராட்டமே மிகப் பெரும் புரட்சி என்று வரலாற்று ரீதியாக வரையறை செய்தார். தன் கண்டுபிடிப்பு-களுக்கு ஆதாரமாக புத்தரின் வாழ்க்கையையும், அவர் போதனைகளையும் பரிசீலிக்க நேர்ந்தது. அப்போதுதான் புத்தரின் வாழ்க்கை வரலாறே மாற்றியும் பொய்மை கலந்தும் எழுதப்பட்டிருப்பதை அவர் கண்டார். புத்தர் வரலாறு மட்டுமல்லாமல், புத்த தத்துவங்களே பிராமண மயமாக்கப்பட்டும், வைதீகத்துக்கு உகந்த முறையில் திரிக்கப்-பட்டும் உலவி வரும் மோசடிகளை அவர் கண்டுபிடித்தார். புத்தரையே மகாவிஷ்ணு-வின் இன்னொரு அவதாரமாக மாற்றி-யமைக்கும் வைதீகத்தின் புரட்டலையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆகவே புத்தரின் வரலாற்றையும், அவர் போதித்த தம்மத்தையும் (தர்மத்தையும்) பற்றி மிகச் சரியான, கறாரான, உண்மை ஒளிமிகுந்த ஒரு புத்தகத்தை அம்பேத்கர் எழுதி வெளியிட்டார். அதுவே, ‘புத்தரும் அவர் தம்மமும்என்ற புத்தகமாகும்.

கௌதம சித்தார்த்தனாகப் பிறந்து, துறவு ஏற்று புத்தராக உயர்ந்தோங்கிய புத்தரைப் பற்றிய, அவர் துறவு பற்றிய நாம் அறிந்த, நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட கதைகள் பொய்யானவை என்கிறார் அம்பேத்கர். நாம் அறிந்தது என்ன?

சித்தார்த்தர், ஒரு நாள் தன் மாளிகை ஜன்னலைத் திறந்து உலகத்தைப் பார்த்தார். இறந்தவர் ஒருவரின் பிணம் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மனிதன் ஒரு நாள் இறப்பான் என்கிற உண்மை அவரைத் தாக்கி அவரை நிலைகுலைய வைக்கிறது. அப்புறம் அவர், நோயால் உடல் தளர்ந்த சீர்கெட்ட நோயாளியைப் பார்க்க நேர்கிறது. நோய் என்பது வரும், வந்து உடம்பை இவ்வாறு சிதறடிக்கும் என்கிற இரண்டாம் உண்மை அவரை வந்தடைந்தது. நோய் என்கிற யதார்த்தம் அவரை திடுக்குற வைத்தது. பிறகு ஒரு முதியவரை அவர் கண்டார். முடி நரைத்து, தோல் சுருங்கி, உடம்பு திரைந்து, கோலூன்றி நடந்து தடுமாறும் மனித முதுமை அவருக்கு அறிமுகமாகிறது. இதன் காரணமாகவே, வாழ்வு நிலையாமையை உணர்ந்து அவர் துறவு மேற்கொண்டார்... இந்தக் கதைதான் பள்ளிக்கூடப் பாடத்திலிருந்து பெரிய அறிஞர்கள், ஆராய்ச்சி-யாளர்கள் வரை கற்றுக் கொடுக்கப்பட்டு சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது.

எடுத்த எடுப்பிலேயே இக் கதையை அபத்தம்என்று விலக்குகிறார் அம்பேத்கர். புத்தர் துறவு ஏற்றது, அவரது 29-வது வயதில். இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதர், ஒரு சிற்றரசராக மதிக்கப்-பட்ட-வர், மிகுந்த அறிவுத்தேட்டம் கொண்டவர் ஆகிய புத்தர், மரணத்தைக் காணாமல், அறியாமல் வளர்க்கப்-பட்டார், முதுமையை, நோயை அறியாமல் வளர்ந்தார் என்ப-தெல்லாம் ஒப்புக்கொள்ளக் கூடிய செய்தி-களா என்று கேட்கிறார் அம்பேத்கர். உண்மை. ஒப்புக் கொள்ள முடியாதவை.

சித்தார்த்தர் (புத்தர்) பிறந்த ஏழாம் நாள் அவர் தாய் இறந்தார். அரண்மனையில் மூத்த அதிகாரிகளும், உறவினர்களும் இறந்திருக்கக் கூடும். மற்றும் சித்தார்த்தக் குழந்தை வளர வளர அவரின் பெற்றோரே முதுமை அடையக் காணக் கூடியவர் அவர். நோய், மிகச் சாதாரணமாக எவரையும் தாக்கவல்லதே ஆகும். இவைகளை எல்லாம் அறியாமல் சித்தார்த்த புத்தர் வளர்ந்து 29 ஆனார் என்பதெல்லாம் அறிவுலகம் ஏற்க முடியாதவை.

சித்தார்த்தர் துறவேற்றும் பின்பு புத்தரான கதையை இவ்வாறு வடிவமைத்திருக்கிறார் அம்பேத்கர்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னால், அதாவது இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னால், வட இந்தியா பல முடியாட்சி நாடுகளையும், முடியாட்சி அல்லாத நாடுகளையும் கொண்டிருந்தது. இந்தியா-வின் வட கிழக்கு நாடுகளில் ஒன்று கபிலவஸ்து. இந்த நாடு சாக்கியர்களின் பூமி. சாக்கியர்களின் குடி அரசில் அரச குடும்பங்கள் பலப்பல இருந்ததால் சுழற்சி முறையில் அது ஆளப்பட்டது. சித்தார்த்தர் பிறந்த-போது, அரசராக இருந்தவர் சுத்தோதனர். அரச சுத்தோ-தனருக்கும் மகா மாயாவுக்கும் மகனாக, கி.மு. 563-ம் ஆண்டில் விசாக பௌர்ணமி நாளில் பிறந்த குழந்தைக்கு சித்தார்த்தன் என்று பெயர் சூட்டப்-படுகிறது. கௌதமர் என்பது அவர் குலத்தின் பெயர். ஆகவே அவரை கௌதம சித்தார்த்தர் என்று அழைக்கும் மரபு ஏற்பட்டது. அரச மகன் அரண்-மனையில் பிறக்கவில்லை என்பது புத்தரின் வாழ்வில் ஒரு முரண். பூரண கர்ப்பக் காலத்தில் அன்னை மாயாவுக்குத் தன் தந்தை வீட்டுக்குச் செல்லும் அவா ஏற்பட்டுப் புறப்பட்டுப் போகும் வழியில் லும்பினி சோலை எனும் இடத்தில். தாய் எதிர்பாராமல், அவர் நின்றபடி குழந்தை பிறக்கிறது. ஒரு பெரிய சால் மரத்தின் கீழ் புத்தர் ஜனனமாகிறார்.

புத்தரை ஈன்ற தாய், ஏழாம் நாளில் மரணம் அடைகிறார்.

அரச குமாரர்க்குரிய போர்ப்பயிற்சிகளும், மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்-பட்டிருக்-கின்றன. போர்ப்பயிற்சியில் பூந்து வேட்டை ஆடுதல். இளவரசன் வேட்டையை விரும்பாது புறக்-கணிக்கிறார். ‘அப்பாவிப் பிராணிகளைக் கொல்வதை நான் விரும்பவில்லை. கொல்லப்-படு-வதைக் காணவும் நான் சகியமாட்டேன்என்பது அவர் கருத்தாக இருந்தது. வேட்டை என்பது ஒரு பொருளைக் குறிபார்த்து, எதிரியைக் குறி தவறாது வீழ்த்துவதற்கு உதவும் கலை ஆயிற்றேஎன்கிறார் சிற்றன்னை. மேலும் சத்திரியனின் கடமையும் அல்லவா போர்க்-கலை பயில்வதுஎன்றும் கேட்கிறார். ‘ஒரு சத்திரியன் ஏன் போர் புரிய வேண்டும்? ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொல்வது எப்படிக் கடமையாகும்?’ என்கிறான் சித்தார்த்தன்.

பக்கத்தில் உள்ள பாகிஸ்தானுக்கும் மற்றுமுள்ள நாடுகளுக்கும் அஞ்சி ராணுவத்திற்கென்று பல லட்சம் கோடி ரூபாய்கள் விரயமாக்கும் இந்திய அரசும், அதே போலப் பாழ் செய்யும் பாகிஸ்தான் அரசும், உலக நாடுகளில் அமைதியே ஏற்பட விடக் கூடாது என்ற கொள்கையில் இயங்கும் அமெரிக்க அரசும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் புத்த போதனைகளில் இருக்கின்றன. ஏதோ, நாடுகளை ராணுவம்தான் காக்கிறது என்று நினைக்கும் மூட அரசுகள், அந்நாட்டு மக்களை மிகச் சௌகரியமாக மறந்து போகின்றன என்பதே வரலாற்றுச் சோகம்.

சித்தார்த்தர் தம் 16-ம் வயதில், அதே வயதான யசோதராவை மணக்கிறார். யசோதரா, சாக்கியர் தண்டபாணி என்பவர் மகள். (தண்டபாணி என்ற பெயர் உங்களுக்கு வேறு யோசனைகளை அளிக்கிறதா - நல்லது) துறவிகளுடனான சித்தார்த்தரின் உறவும் நட்பும் தந்தையைக் கவலைக்குள்ளாக்குகிறது. இளவரசனின் அந்தப்புரத்தில் அழகிகளை நிரப்புகிறார். அழகிகள் தோற்றுப் போகிறார்கள்.

சித்தார்த்தர் இருபது வயதை அடைகிறார். சாக்கிய வழக்கப்படி அவர் சங்கத்தில்சேர வேண்டும். சாக்கியர்களின் சங்கம் என்பது மிகவும் அதிகாரம் மிக்க, தனிமனிதர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க, ஏறக்குறைய ஓர் அரசதிகாரம் கொண்ட அமைப்பாகச் செயல்படும் நிறுவனம் ஆகும். சங்கத்தில் சித்தார்த்தர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். சங்கத்தில் சேனாபதி, சித்தார்த்தருக்குச் சங்க விதிகளைக் கற்றுத் தருகிறார்.

1.
உடல், மனம், உடைமையால் சாக்கிய நலனைப் பாதுகாக்க வேண்டும்.

2.
சங்கக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகை தர வேண்டும்.

3.
சக சாக்கியரின் தவறுகளைப் பொது நலன் கருதி சுட்டிக் காட்டுதல் விரும்பத்தக்கது.

4.
தவறுகளை ஒப்புக் கொள்ளும் மனம் வேண்டும்.

மேலும், சங்க உறுப்பினர் என்னும் தகுதியை இழக்கும் குற்றங்களாகச் சேனாபதி சொல்வதும் கவனிக்கத்தக்கது.

கற்பழிப்பு, கொலை செய்தல், களவு, பொய் சாட்சி சொல்லுதல் ஆகியவை சங்கத்தால் குற்றங்கள் என்று வரையறை செய்யப்பட்டன.

சித்தார்த்தர் எட்டு ஆண்டுகள் சங்கத்தின் மெய் உறுப்பினராகச் செயல்பட்டு உழைத்-திருக்கிறார். ஏற்ற பொறுப்பைச் சிதறாமலும், சிந்தாமலும் செயல்படும் பண்பு சித்தார்த்-தருக்கு இருந்தது. இச் சங்க அனுபவம், எதிர்காலத்தில் அவர் சங்கம் கட்டும் முயற்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பேருதவி செய்திருப்பதை வரலாறு நமக்கு உணர்த்து-கிறது. மிகச் சிறந்த தொண்டர், மிகச் சிறந்த தலைவராவதன் முன் நிபந்தனையை அவர் நிறைவேற்றினார்.

எட்டாம் ஆண்டின் இறுதியில் சித்தார்த்தருக்கும் சங்கத்துக்கும் முரண்பாடு வந்தது.

சாக்கியர்களின் அரச எல்லையில் கோலியர்கள் என்பவர்களின் அரசு இருந்தது. இரு அரசுகளையும் பிரிப்பது ரோகிணி நதி. நதிநீரைப் பாசனத்துக்காக இருவருமே பயன்படுத்தினார்கள். யார் முதலில் பயன் கொள்வது என்பதில் எப்போதுமே சச்சரவு இருக்கவே செய்தது.

சித்தார்த்தருக்கு 28 வயதாகும்போது, சாக்கியப் பணியாளர்களுக்கும் கோலியர்ப் பணியாளர்-களுக்கும் மோதல் நிகழ்ந்துவிட்டது. இருபக்கத்-தார்க்கும் கடும் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. நதிநீர்ப் பிரச்னையைப் போர் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இருவரும் தீர்மானித்தார்கள். சாக்கியச் சங்கம் கூட்டப்பட்டது. கோலியர்களின் மேல் படையெடுப்பது என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார் சேனாபதி.

சித்தார்த்தர் எழுந்து கூறுகிறார்.

சேனாபதியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன். எந்தப் பிரச்னையையும் போர் தீர்த்துவிடுவதில்லை. போர் நமக்கு உதவப் போவதில்லை. ஒரு போர் மற்றொரு போரைத்தான் உருவாக்கும். ஒரு கொலைஞன், மற்றொரு கொலைஞனால் கொல்லப்-படுவான். ஆக்கிரமிப்பாளன், மற்றொரு ஆக்கிரமிப்-பாளனால் அழிவான். அழிகிறவன் அழிக்கப்படுவான்.”

சித்தார்த்தர் ஒரு நடுவழியைக் காட்டத் தவறவில்லை.

நம் பக்கத்து இருவரும், அவர்கள் பக்கத்துக்கு இருவரும், அந் நால்வரும் ஒரு பொது ஐந்தாமரைத் தெரிவுசெய்து பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்னையைத் தீர்க்கலாம்.”

சித்தார்த்தர் கருத்தைச் சங்கம் தோற்கடித்தது.

பகைமையை அன்பால் மட்டுமே வெல்ல முடியும்என்றார் சித்தார்த்தர். அவர் உபதேசத்தைப் பெரும்பான்மைச் சங்கம் ஏற்கவில்லை. மறுநாள் நடந்த சங்கக் கூட்டத்தில் போர்தான் என்று முடிவு செய்யப்பட்டது.

இருபதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட சாக்கியர் அனைவரும் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

சித்தார்த்தர் மீண்டும் எழுந்து தம் கருத்தை வற்புறுத்தலானார்.

நண்பர்களே, பெரும்பான்மை உங்கள் பக்கம் உள்ளதால் நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். நான் உங்கள் முடிவை எதிர்த்தாக வேண்டி இருக்கிறது. நான் உங்கள் படையில் சேரமாட்டேன். நான் போரில் பங்கேற்க மாட்டேன்...”

நெருங்கிய உறவினர்களும், அடுத்து வாழ்பவர்-களுமான கோலியர்களுடன் போர் செய்ய மறுக்கிறார் சித்தார்த்தர். எந்தப் பிரச்னையையும் பேசித் தீர்க்கலாம் என்றே கருதுகிறார். எந்த வகையிலும் மனித ரத்தம் சிந்தப்படுவதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து சங்கத்தில் அவருக்கும் சேனாபதிக்கும் ஏற்பட்ட விவாதங்களையும், அதன் பயனாக அவர் துறவு கொள்வதையும் அடுத்து நாம் காணப் போகிறோம்.

புத்தரின் துறவோடும், அவர் நிர்மாணித்த பௌத்த சமயத்தோடுமே, இந்தியத் தலித்துக்களின் வரலாறு தொடங்குகிறது. எனவேதான் புத்தரின் துறவில் நாமும் தொடங்கி இருக்கிறோம்.

(
சரித்திரம் தொடர்கிறது)

நன்றி :30.07.2009