அந்த மண்னாங்கட்டி கடவுள்கள் நம் இனத்தை கைவிட்ட பிறகும் அவைகள் இல்லை என்பது புரியவில்லை....
இனம் ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரலிட்டுவிட்டு...கோயிலில் பூசைக்கு அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமே..........கொஞ்சம்கூட சிந்தனை ஆற்றலோ இரக்கமோ நம் இனத்தவர்களுக்கு கிடையாது...
போகிற இடமெல்லாம் சாதியை தூக்கி திரிகிறோம்....சோதிடம், கடவுள், கருவறை கருமாந்திரம்னு கட்டி தொலைக்கிறோம்....
நமக்குள்ளிருக்கும் அழுக்குகளை துடைக்க துணிவில்லை....இந்த லட்சணத்தில் நமக்கு நாடு ஒரு கேடா?
தயவு செய்து திருந்துங்களேன்................சாதி, மதச்சகதியிலிருந்து வெளிவந்து நமக்கான தேசியத்தை, புரட்சியை படையுங்களேன்
மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.