மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அறிவற்ற அறிவு

முன்னேறி ஒடுகின்றோம்

பழமையை தூக்கிக் கொண்டே

விஞ்ஞானம் தேடுகிறோம்

மடமையில் வாழ்ந்துக்கொண்டே

சட்டங்கள் போடுகிறோம்

சுதந்திரம் பேசிக்கொண்டே

சாமியை வேண்டுகிறோம்

சாதியில் இருந்துகொண்டே

கவிதைகள் பாடுகின்றோம்

கற்பனையில் வாழ்ந்துக்கொண்டே

நன்றி: விடுதலை வேட்கை, வெற்றி வேந்தன்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழர்களே உள்ளம் எரிகிறது!!!!



நன்றி: வீர கேசரி 29/10/2009

நீங்கள் என்றுதான் திருந்துவீர்கள்.............

என்ன அப்படி ஒரு மானங்கெட்ட பக்தி............

அந்த மண்னாங்கட்டி கடவுள்கள் நம் இனத்தை கைவிட்ட பிறகும் அவைகள் இல்லை என்பது புரியவில்லை....

இனம் ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரலிட்டுவிட்டு...கோயிலில் பூசைக்கு அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமே..........கொஞ்சம்கூட சிந்தனை ஆற்றலோ இரக்கமோ நம் இனத்தவர்களுக்கு கிடையாது...

போகிற இடமெல்லாம் சாதியை தூக்கி திரிகிறோம்....சோதிடம், கடவுள், கருவறை கருமாந்திரம்னு கட்டி தொலைக்கிறோம்....

நமக்குள்ளிருக்கும் அழுக்குகளை துடைக்க துணிவில்லை....இந்த லட்சணத்தில் நமக்கு நாடு ஒரு கேடா?

தயவு செய்து திருந்துங்களேன்................சாதி, மதச்சகதியிலிருந்து வெளிவந்து நமக்கான தேசியத்தை, புரட்சியை படையுங்களேன்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

குழந்தை வரம் - இடைமீது பலன்

வரம் வேண்டி வேண்டுதல்

செய்தாள், பக்தை! காணிக்கை

செலுத்த இடைத்தரகரிடம்

சென்றவுடனே, இடைமீது பலன்

கிடைத்தது. கடவுளின் ஆசியால்

குழந்தை பிறந்தது.

வியாழன், 3 செப்டம்பர், 2009

நாமெல்லாம் திருந்து உருப்பட்டு....

படம்: வீரகேசரி

நாமெல்லாம் திருந்தி, உருப்பட்டு..............நடக்கிற காரியமா இது?

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.