வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழர்களே உள்ளம் எரிகிறது!!!!



நன்றி: வீர கேசரி 29/10/2009

நீங்கள் என்றுதான் திருந்துவீர்கள்.............

என்ன அப்படி ஒரு மானங்கெட்ட பக்தி............

அந்த மண்னாங்கட்டி கடவுள்கள் நம் இனத்தை கைவிட்ட பிறகும் அவைகள் இல்லை என்பது புரியவில்லை....

இனம் ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரலிட்டுவிட்டு...கோயிலில் பூசைக்கு அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமே..........கொஞ்சம்கூட சிந்தனை ஆற்றலோ இரக்கமோ நம் இனத்தவர்களுக்கு கிடையாது...

போகிற இடமெல்லாம் சாதியை தூக்கி திரிகிறோம்....சோதிடம், கடவுள், கருவறை கருமாந்திரம்னு கட்டி தொலைக்கிறோம்....

நமக்குள்ளிருக்கும் அழுக்குகளை துடைக்க துணிவில்லை....இந்த லட்சணத்தில் நமக்கு நாடு ஒரு கேடா?

தயவு செய்து திருந்துங்களேன்................சாதி, மதச்சகதியிலிருந்து வெளிவந்து நமக்கான தேசியத்தை, புரட்சியை படையுங்களேன்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மும்பையில் கொளத்தூர் மணி உரை








குழந்தை வரம் - இடைமீது பலன்

வரம் வேண்டி வேண்டுதல்

செய்தாள், பக்தை! காணிக்கை

செலுத்த இடைத்தரகரிடம்

சென்றவுடனே, இடைமீது பலன்

கிடைத்தது. கடவுளின் ஆசியால்

குழந்தை பிறந்தது.

திங்கள், 26 அக்டோபர், 2009

தமிழின எதிரிகளே!! நாங்கள் உங்களை வெல்வோம்

தமிழின அழிப்பை நடத்திய சிங்கள இனவெறி நாய்களே!!!

சக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சாதி வெறி பிடித்த தமிழ் பேசும் இரண்டு கால் விலங்குகளே உங்களை நாங்கள் வெல்வோம்

நீ எனது ஊன்று கோலைப் பிடிங்கி கொண்டாய்

நான் நிற்கப் பழகிக் கொண்டேன்

நீ, என் வெளிச்சத்தை அணைத்தாய்

நான் நெருப்பை வளர்த்தேன்

நீ என் முன் குழிகளை வெட்டினாய்

நான் தாண்ட பழகிக் கொண்டேன்

நீ, என் குடிசையை கொளுத்தினாய்

நான் வெயில் மழையில் இருக்க பழகினேன்

நீ என் உறவுகளை அழித்தாய்

நான், என் பாசத்தை அழித்தேன்

நீ,என் மனிதத்தை அழித்தாய்

நான் என்னுள் மிருகத்தை வளர்த்தேன்

அதனால், என் பிரிய எதிரியே

உன்னை வெல்லுவது

எனக்கு எளிதாயிற்று

விடுதலை வேட்கை வெற்றி வேந்தன்

நாம் தமிழர்கள்............?

ஒரே மொழிதான்

ஆனாலும்-

நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.

ஒரே ஊர்தான்

ஆனால்-

நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை

ஒரே பண்டிகைதான்

ஆனால்-

நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை

ஒரே மதம்தான்

ஆனால்-

நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை...

நம் இடையினில் இருப்பது

சாதி தோழா.

நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்