புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழர்களே உள்ளம் எரிகிறது!!!!



நன்றி: வீர கேசரி 29/10/2009

நீங்கள் என்றுதான் திருந்துவீர்கள்.............

என்ன அப்படி ஒரு மானங்கெட்ட பக்தி............

அந்த மண்னாங்கட்டி கடவுள்கள் நம் இனத்தை கைவிட்ட பிறகும் அவைகள் இல்லை என்பது புரியவில்லை....

இனம் ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரலிட்டுவிட்டு...கோயிலில் பூசைக்கு அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோமே..........கொஞ்சம்கூட சிந்தனை ஆற்றலோ இரக்கமோ நம் இனத்தவர்களுக்கு கிடையாது...

போகிற இடமெல்லாம் சாதியை தூக்கி திரிகிறோம்....சோதிடம், கடவுள், கருவறை கருமாந்திரம்னு கட்டி தொலைக்கிறோம்....

நமக்குள்ளிருக்கும் அழுக்குகளை துடைக்க துணிவில்லை....இந்த லட்சணத்தில் நமக்கு நாடு ஒரு கேடா?

தயவு செய்து திருந்துங்களேன்................சாதி, மதச்சகதியிலிருந்து வெளிவந்து நமக்கான தேசியத்தை, புரட்சியை படையுங்களேன்

வியாழன், 30 ஜூலை, 2009

ராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது

சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.

சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேச சதிவலைப் பின்னல் இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது”.

மகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் மேல் உள்ளவை.

தொடர்ச்சியாக பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் அனைத்தும் இதனை தான் செய்துவந்தன. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமை போரை முற்றாக சிதைத்துவிட சிறீலங்கா அரசுகள் முனைந்து வந்தனவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் முற்படவில்லை.

தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஏறுக்கு மாறாக மேற்கொண்டுவரும் கருத்துக்களில் இருந்து இன்றும் நாம் அதனை உணரமுடிகின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ அல்லது அவர்களுக்கு சிறீலங்காவில் வாழும் உரிமைகளையோ சிங்கள தேசம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை என்பது தான் உண்மையானது.

இதனை உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப்போருக்கு எதிரான போக்கை கொண்டவர்களும் தற்போதும் உணரவில்லை என்றால் அதனை நாடகம் என்றே கொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவராக பதவியேற்க முன்னர் பேசி வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, யாழ்ப்பாணம் வந்து கேணல் கிட்டுவுடன் பேச்சுக்களை மேற்கொண்டு நட்புறவுடன் பழகிய அவரது கணவர் விஜய குமாரணதுங்கா ஆகியோரின் அரசியல் நாடகங்கள் சந்திரிகா அரச தலைவர் ஆனதும் காற்றில் பறந்துவிட்டன.

சிங்கள தேசத்தின் அடக்கி ஆட்சிபுரியும் மனப்பான்மைக்கு முன்னால் சிங்கள தேசத்தில் பதவிக்கு வரும் எந்த அரசுகளும் தப்பி பிழைத்தது கிடையாது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனவோட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே சிங்கள அரசுகளும் தமதுபதவி சுகங்களை தக்கவைப்பதுண்டு. இது தான் கடந்த அறுபது வருடங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள்.

1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம்அடைந்த பின்னர் 1976 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறும் வரையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை «ம்றகொண்டு வந்திருந்தனர். ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அகிம்சை வழியில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினால் தான் அது பின்னர் ஆயுதப்போராக உருவெடுத்தது.

ஆயுதப்போரும் பல வடிவங்களின் ஊடாக 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக (33 வருடங்கள்) பயணித்துள்ளது. இருந்த போதும் தற்போது நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நிற்கின்றோம். அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவும் பல குழப்பங்கள் உள்ளன.

எமது போராட்ட வரலாற்றை பொறுத்தவரையில் முன்னைய மூன்று தசாப்தங்களை விட பின்னைய மூன்று தசாப்தங்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பல வலிகளையும், இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தாலும், எமது இனத்தின் பிரச்சனைகளையும், வேதனைகளையும் உலகறியச்செய்த பெருமை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போருக்கு உண்டு.

ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லா தாக்குதல் மிகச்சிறந்த பிரச்சாரம்என்ற கியூபாவின் முன்னாள் விடுதலைப்போராட்ட வீரரும் அதிபருமான பிடல் கஸ்ரோவின் வார்த்தைகளின் யதார்த்தத்தை இந்த காலம் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியிருந்தது.

இந்தக் காலப்பகுதி சிங்கள தேசத்திற்கும் பெருமளவான இழப்புக்களையும், பொருளாதாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு இனத்தை அடக்கி ஆட்சிபுரிவதற்கு என்ன விலையை செலுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. அகிம்சை வழியில் போரிட்ட போது நாம் தான் இழப்புக்களை சந்தித்திருந்தோம் ஆனால் எமது ஆயுதப்போர் சிங்கள தேசத்திற்கும் இழப்புக்களினதும், வேதனைகளினதும் வலியை உணர்த்தியிருந்தது.

ஆனாலும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறீலங்கா அரசுகள் அதிக முனைப்பை காட்டியிருந்தன. 1980 களில் ஏற்பட்டிருந்த மேற்குலகம் சோவியத்து ஒன்றியம் என்ற முனைவாக்கத்?தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது போல, 2009களில் ஏற்பட்டுள்ள சீனா மேற்குலகம் என்ற இந்துசமுத்திர பிராந்திய முனைவாக்கத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்

களின் விடுதலைப் போரின் படை வலுவை மிகப்பெரும் படை வலுக்கொண்டு சிறீலங்கா அரசு முறியடித்துள்ளது.

ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற போர்களில் சந்தித்த இழப்புக்களை விட பல மடங்கு அதிகமான இழப்புக்களை சிங்கள தேசம் சந்தித்திருந்தது என்பதும் உண்மை. வெற்றி பெறுபவர்களுக்கே வரலாறு சொந்தம் என்ற தத்துவத்திற்குள் சிங்களம் தனது இழப்புக்களை மறைத்துவிட்டது.

ஆனால் சிறீலங்காவை அனுசரித்து போவதன் மூலம் கூட தனது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேண

முடியாது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போரை நயவஞ்சகமாக அழிக்கத் துணைபோனது தான் மிகவும் வேதனையானது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன்னரும் தனது படை வலு கொண்டு சின்னஞ் சிறிய ஒரு அமைப்பை இந்தியா முற்றாக துடைத்தளிக்க முற்பட்டிருந்தது. அவரின் மரணத்திற்கு பின்னரும் இந்தியா அதனையே மறுபடியும் மேற்கொள்ள முயன்றுள்ளது. ஆனால் 1987களில் இந்தியாவின் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறை உத்திகள் எவ்வாறு முறியடித்தனவோ அதனைபோலவே தற்போது இந்திய அரசின் முயற்சிகள் இடை நடுவில் தொங்கிபோய் உள்ளன.

அதாவது விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டுமானங்களை இந்திய சிறீலங்கா படையினரால் முறியடிக்க முடிந்ததே தவிர உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கைகயையும், விடுதலைப் புலிகளின் வலையமைப்பையும் அவர்களால் முறியடிக்க முடியவில்லை.

ஒருவேளை 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ தற்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை போன்றதொரு மிகப்பெரும் படுகொலைகளுடன் விடுதலைப் புலிகளை இந்திய மீண்டும் ஒருதடவை அழிக்க முற்பட்டிருக்கலாம்.

அன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை எதிர்கொண்டு எமது விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டிய முதிர்ச்சியும், வளர்ச்சியியும் புலம்பெயர் நாடுகளில் இருக்கவில்லை. எனவே தற்போதைய அழிவை விட மிகப்பெரும் பேரழிவை தமிழ் மக்களின் விடுதலைப்போர் அன்று சந்தித்திருக்கும்.

ஒரு வகையில் பார்த்தால் ராஜீவ் காந்தியின் மரணம் தமிழ் மக்களின் விடுதலைப்போரை 18 வருடங்கள் காப்பாற்றி உள்ளது என்றே கொள்ள முடியும். இந்த 18 வருடங்களில் தமிழ் மக்களின் போராட்டம் கண்ட வளர்ச்சிகள் அதிகம்.

மேலும் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாகவே 25,000 இந்திய இராணுவ கொமோண்டோக்களை யாழ்நகரத்தில் தரையிறக்கி மிகப்பெரும் படுகொலை ஒன்றை நிகழத்தி பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டிருந்தது.

அதற்கு ஏதுவாக 25,000 படையினரை திருவானந்தபுரம் விமானநிலையத்திற்கு கொண்டுவரும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணமோ தெரியாது இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனவே வட இந்தியர்களும், தென்இந்திய பார்பானியர்களும் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலை உணர்வுகளில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எப்போதும் சலித்தவர்கள் அல்ல.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களையும், பிரதிநிதிகளையும் அழித்துவிட முற்படும் இவர்கள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதிலும் சிங்கள தேசத்திற்கு ஒப்பான போக்கையே கையாண்டு வருகின்றனர்.

2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் கூட விடுதலைப் புலிகள் சுயாட்சி அதிகாரத்திற்கான திட்டம் ( Interim self governing authority proposal) ஒன்றை முன்வைத்திருந்தனர். ஆனால் அன்றைய சிங்கள அரசு அதனை விவாதிக்க கூட முற்படாமல் குப்பை தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளை ஏவிவிட்டிருந்தது.

சுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வை காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுக்களுக்கான ஒரு திறவுகோல் அதனை வீணாக இழத்தடிப்தை விடுத்து ஆக்கபூவமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் குறிக்கோளாக இருந்தது.

விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முன்வரவில்லை. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்த இந்திய அரசு 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற 1988 களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிந்தது. ஆனால் அதனையும் தற்போதைய அரசு இல்லாது செய்துவிட்டது.

மீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறனதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

அண்மையில் சிறீலங்கா இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனை தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன. மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயசூரியா இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் ஏனெனில் பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியாமாவட்ட கட்டளை தளபதிகளே இராணுவத்தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு. எனினும் ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரமா நியமிக்கப்பட்டதும் நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இனவிகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி செயற்பட்டு வருகின்றது. இந்த வளங்களில் தமிழ் இனத்திற்கு எதிரான தமிழ் குழுக்களும், அமைப்புக்களும், கட்சிகளும் அடக்கம்.

வேல்ஸில் இருந்து அருஷ்

ஈழமுரசு (24.07.09)

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

10,000 தமிழ் மக்களை கொல்ல திட்டமிட்டுருப்பதாக தகவல்

இன்று இரவு 12 தொடங்கி காலை 5 க்குள் இலங்கை இராணுவம் 10,000 தமிழ் மக்களை கொல்ல திட்டமிட்டுருப்பதாக தகவல் அமெரிக்க உளவு நிறுவனம் மூலமாக செய்தி வெளியாகியுள்ளது.- காலம் கடக்கும் முன் ஏதாவது செய்யுங்கள்.

Pls forward this to as many as possible. Act Soon

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

எம்மை கேள்வி கேட்க, எங்களை அடிமைப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை. - தமிழன்

எம்மை கைகட்டி, வாய்மூடி நிற்க சொல்கிறான் சிங்களவன்

சிங்களவனுக்கு ஊதுகுழலாய் இந்தியா!

அடிமைத்தனம் சரியென்றா,


இந்தியா என்றொரு நாடு உருவானது?


இந்திய விடுதலை சரியென்றால்,எங்கள் ஈழ விடுதலைப்போரும் சரிதான்

எம்மை கேள்வி கேட்க, எங்களை அடிமைப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை.

காலம் பதில் சொல்லும்.......

-உள்ளம் கனன்று கொண்டிருக்கும் தமிழன்


திங்கள், 20 ஏப்ரல், 2009

பிரபாகரன் தீவிரவாதியா?

பிரபாகரன் தீவிரவாதியா?

உங்கள் கருத்துக்களை வட இந்திய பார்ப்பனீய பனியா இந்திய ஊடகத்திற்கு தெரிவியுங்கள். நம் உணர்வுகளை தயவு கூர்ந்து பதிவு செய்யுங்கள்

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பின் இணைப்பு

http://timesofindia.indiatimes.com/pollslist/2238809.cms

வியாழன், 16 ஏப்ரல், 2009

தமிழர்களின் எதிரிகளாகிய தமிழர்கள்?-1

நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ எம்மைப் போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 ஆண்டுகளாக போராடி இறுதி லட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும்வேளை, நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா?

உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? வன்னியில் இருக்கும் 2,50,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமல் இருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள் 50,000 இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள் இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.

அன்பிற்குரிய தம்பி, தங்கை, அக்கா, அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது. வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு, பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக எமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதால். நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம், தினம் கண்டு வெதும்பிக் குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது உள்ளம். நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்க வில்லை. அப்படியிருந்தும் என்னைப் போராட ஊந்தியது(அடிமைச் சூழல்). ஆனால், நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராகப் போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.

சிங்கள் இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா?

இன்னும் வலியை ஏற்படுத்தினால்தான் நீங்கள் போராடுவீர்களா?

மேற்கணட சொற்கள் வான்புலி ரூபன் கொழும்பில் தாக்குதல் நடத்தி தன்னை அழித்துக் கொள்ளும் முன் வன்னி மக்களுக்காக எழுதியது.

இந்த சொற்களுக்கு பொதிந்திருக்கும் வலி நம் உள்ளத்தை ஆழமாக தைக்கிறது. ஆனால், இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட தமக்குள் விடுதலை உணர்வை, தமக்காக மட்டுமில்லாமல் தம் மக்களுக்காக போராடும் போராளிகளை பேரினவாதம் மட்டுமல்ல, அறிவுலக மேதைகள் என்று தம்மை பறைசாற்றிக் கொள்பவர்கள்

மக்களை பலிகடா ஆக்குகிறார்கள், மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.என்று கொச்சைப்படுத்தி தம் இருப்பை பதிவு செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் தமக்கு தெரிந்த வகையில் போராடுகிறார்கள், அவர்கள் ஒன்றும் பல்வேறு நாட்டின் தொழில்நுட்ப, பொருளாதார உதவியுடன் போராட வரவில்லை. தமக்கும், தம் அன்பானவர்களுக்கும் இழைக்கப்பட்ட துன்பங்களில் ஆழமான உள்ளத்தின் அழுத்தத்தினால் போராட வந்தார்கள். இவர்களின் போராட்டம் இறுதி இலக்கை அடைவதை விரும்பாத வல்லரசுகள் இவர்களின் போராட்டத்தை தடுக்க இவர்களுக்கே பயிற்சி கொடுத்து போராளிகளுக்குள்ளேயே மோதவிட்டார்கள். இந்திய வல்லாதிக்கத்தின் சதிகார உளவுக்கும்பல் போராளிகளுக்கு சண்டை மூட்டி பார்த்தது ,சண்டையில் மிஞ்சியவர்கள் புலிகள்.

இவற்றை எழுதுவதற்கு எமக்குள்ள தகுதி, நாம் மனிதனாக இருக்க முனைவதும், இனத்தின் மீது கொண்ட பற்றுதலுமே காரணம். போராட்டத்திற்கான கரு தோன்றிய, சிங்கள இனவெறி அடக்குமுறையின் தொடக்கத்தில் என் பெற்றோர்கள் பிறந்திருக்கவில்லை, புலிகள் மற்றும் இன்னபிற ஆயுதம் தாங்கிய போராளிகள் பிறந்த பொழுது நானும் பிறந்திருக்கவில்லை, ஆனாலும் சிங்கள இனவெறி தொடர்ந்து கொல்கிறது, நான் பதின்பருவம் கடந்த பின்னும் கொல்கிறது.

புலியாக இருப்பவன் யார்? என் சகோதரன்.

இயல்பான மனிதர்களின் வாழ்வின் மெனுணர்வுகள், பாசம், இளைப்பாற உறவு, துன்பம் பகிர்ந்து கொள்ள நண்பன் என அடிப்படை தேவைகள் அடங்கிய ஆழ்ந்த விருப்பங்களை தொலைத்து, தம்மை மறந்து தம் இனத்திற்காக, தம் இனத்தின் விடியலுக்காக, அடுத்த தலைமுறைக்காக போராட முனைந்த ஒருவனை உலகம் வல்லாதிக்கங்கள் அழிக்க முனைந்தாலும், அறிவு ஜீவிகள் மாற்று பிரச்சாரங்களை செய்தாலும், உள்ளம் ஏனோ வெறுக்க மறுக்கிறது.

நாம் இங்கே எழுத முனைந்தது புலிகள் மீது ரசிக மனோபாவம் கொண்டல்ல மாறாக அங்கு புலிகளாக அங்கே போராடுபவர்கள் எம்மை போன்ற மனிதர்கள், எம் இனவழி சகோதரர்கள் என்ற ஆழ்ந்த அன்பின் காரணமாக........ சிங்கள் பேரினவாதத்திலிருந்து புலிகள் மட்டும்தான் உருவாக முடியுமா? வேறு யாராகவும் உருவாகியிருக்க முடியாதா?என்று சிலர் கேள்வி கேட்கின்றனர். அடிபட்டு, மிதிபட்டு தனக்கென சிங்கள் பேரினவாதம் பச்சைகுத்திய சொந்த காயங்களின் வடுகளோடு போராட வந்தவர்கள்தாம் புலிகள். புலிகள் என்ற அமைப்பு உருவான உடன் சிங்கள் பேரினவாதம் தலைதூக்க வில்லை, சிங்கள பேரினவாதம் தலைதூக்கியதால்தான் போராளிகள் தோன்றினார்கள், அவர்களில் ஒரு பிரிவினர் புலிகள்.

அடிப்பவனை, காயப்படுத்துபவனை, கொடுமைப்படுத்துபவனை எதிர்த்து தற்காத்து கொள்ள போராடுபவனை நோக்கி அறிவுரைக் கூறுவதும்.

இல்லை! இல்லை!! இப்படி போராடக் கூடாது, இப்படித்தான் போராட வேண்டும், என்று போராட்டத்தில் கலந்து கொள்ளாதவன் பேசக்கூடாது இல்லையா.

அதோடு , இழவு வீட்டில் போய் இறந்தவரின் உடலுக்கு அருகே அமர்ந்து கொண்டு அவரின் உறவுகளிடம், இறந்தவரை பற்றி குறை கூறுவது,எந்தளவு காயப்படுத்துமோ, அந்தளவு காயப்படுத்துகிறது, புலிகள் மீதான இன்றைய விமர்சன தொகுப்புகள். புலிகளை விமர்சியுங்கள், மறுக்க வில்லை, ஆனால், இது தருணமில்லை.

பாலஸ்தீனத்தில் அந்நிய ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்த போதெல்லாம் ஒதுங்கியே இருந்த யூதன், தப்பித்து வேறு நாட்டிற்கு தன் உயிர் காக்க நாடோடிகளாக திரிந்த யூதன் உலக வல்லாதிக்கத்தின் துணை கொண்டு , இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1948 இல் தன்னுடைய புராண(பழைய) தொடர்பு , நம்பிக்கையை மையப்படுத்தி இஸ்ரேல் என்னும் தேசம் அமைத்தான்

அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களில் கைகொடுக்காமல், நம் வியர்வையால், உழைப்பால் கட்டிக்காத்த மண்ணை, சூழ்ச்சியால் நம்மை வஞ்சித்து நாடு மட்டும் பிடுங்கிக் கொள்ள இவனுக்கு(யூதனுக்கு) என்ன உரிமை உண்டு? என்ற பாலஸ்தீனியர்களின் நெருடல் தானே இன்று வரை பாலஸ்தீனத்தில் விடுதலை போராட்டமாக தொடர்கிறது.

அதேபோல, புலிகளை விமர்சித்து விட்டு தமிழர்களை கொன்றொழிக்கும் பேரினவாதத்திடம் கை கோர்த்து நிற்கும் கருணா வகையறா கோஷ்டிகளும், புலிகள்-கருணா கோஷ்டி என பாரபட்சம் இல்லாமல் திட்டி தீர்க்கும், விமர்சிக்கும் கோஷ்டிகளும், களத்தில் நின்று தாம் விரும்பும் மாற்றத்திற்கு போராடாமல், தமக்கு தெரிந்த வகையில் போராடும் புலிகளை மட்டும் விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

மக்களை மந்தைகளாக்கி விட்டனர் புலிகள், தமக்காக தாமே போராட மக்களை அனுமதிக்க வில்லை

என்றெல்லாம் உண்மையான அக்கறையோடோ (அல்லது) உள்ளார்ந்த சூழ்ச்சியோடோ விமர்சிக்கும் தோழர்கள், மேற்குறிப்பிட்ட மடலில் வான்புலி ரூபன் அழைத்தது போல மக்களை தற்போதைய சூழலின் படி புலிகளோடு சேர்ந்து போராடத்தானே மக்களை தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான பிரச்சாரத்தைதானே இன்று இந்த மாற்று சிந்தையானளர்கள் செய்ய வேண்டும்.

மாறாக புலிகள் அழிந்துவிட்டால் மக்கள புரட்சிகர பாதையில் பயணித்து தானே போராடி தம் விடுதலையை வென்றெடுத்துவிடுவார்கள், பேரினவாதம் அழிந்து ஒழிந்து போகும் என்பதைப் போல மாயையை ஏற்படுத்துவது எந்த வகையிலான நியாயம். (நம் மக்கள் ஏற்கனவே மத, சாதி பிரிவுகளின் மந்தைகளாகத்தான் உள்ளனர்)

புலிகள் அமைப்பில் கொள்கை ரீதியாக சரியான கட்டமைப்பு இல்லையென்றால், அது நம் பிள்ளைகள் போராடும் களம், நம் பிள்ளைகள் உருவாக்கிய அமைப்பு என்றுஅங்கு தாமே முன்வந்து உண்மையான உணர்விருந்தால் இன்னின்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று திருத்தங்கள் கூறியிருக்க வேண்டும். திருத்தங்களுக்காக போராடியிருக்க வேண்டும். புலிகள் பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும், புலிகளின் இராணுவ ஆற்றலை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டிய கடமை, அறிவுஜீவிகளுக்குத்தானே உள்ளது.

ஆண்டன் பாலசிங்கம் சரியில்லை, பிரபாகரன் சரியில்லை, சரி நீங்கள் தலைமையேற்றிருக்க வேண்டியதுதானே.

பெரியார்

என்னைவிட தகுதியான நபர்கள் யாரும் இந்த பணிக்காக தம்மை அர்பணிக்க முன்வராததால், நான் இந்த சமூக சீர்திருத்த பணியை மேற்கொண்டிருக்கிறேன், அந்த பணியை வேறு யாரவது தகுதியான செய்ய முன்வந்தால், நான் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க தயாராயிருக்கிறேன்.

என்று கூறியதாகப் படித்தேன். அதே போல, பிரபாகரன் சரியில்லாத தலைவர், என்றால் அறிவுஜீவிகள், போராட்டக் களம் கண்டு சிங்கள பேரினவாதத்தின் ஆணிவேரை பிடுங்கியிருக்க வேண்டியதுதானே.

பாலஸ்தீனத்தில் அறிவாளிகள் அடங்கிய ஹமாஸ் இயக்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் யாசர் அராஃபத்தின் பி.எல்.எஃப்போடு வேறுபட்டிருந்தாலும், அவருடைய இயக்கத்தை முழுமையாக நிராகரிக்க வில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. யாசர் அரபத்துக்கு இஸ்ரேல் நாட்டினால் ஆபத்து என்ற போது, அவரை காப்பாற்ற முன்முயற்சி எடுத்தவர்கள் பிஎல்எஃப் போராளிகள், மற்றும் ஹமாஸ் இயத்தவர்கள்...........

நமக்கான போராட்டத்தை நீ போராடக்கூடாது, நாம்தான் போராட வேண்டும் என்றால், முதலில் நாம் உருப்படியாக போராடத் தயாராக வேண்டும், அதுவரை, போராடுபவர்களை விமர்சிக்கலாம், கொச்சைப்படுத்த துணியக் கூடாது. அதுவரை,எழுத்து ரீதியிலான புரட்சி ஒன்றுக்கும் உதவாது, நான் எழுதும் இந்த கட்டுரையும் இதற்குள் அடங்கும்.

இது வளர்ந்தும், வளராத கருத்து மொட்டின், சமூக போராளியாக உருவெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும், மொட்டின் உள்ளத்தின் ஆதங்கங்கள் மட்டுமே. திருத்தங்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் ,திருந்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்.ஏனென்றால், என்னை பண்படுத்துவதும் அறிவுஜீவிகளின் கடமை என்று நினைக்கிறேன்.

அதோடு, துரோகிகளும் துரோகங்களும், கருணா...க்கள் வடிவிலும், மக்களின் அலட்சியத்திலும், தன்னார்வ மிகுந்த விருப்பத்தாலும் நிறைந்து கிடக்கிறது. அடுத்த பதிவில் பட்டியலை கொட்டி தொலைக்கிறேன்.

அடுத்து, சமூகத்திற்குள்ளே நமக்கு எதிராக இருக்கும் எதிரிகளான சாதி, மத, அரசியல் பிரிவினைகள், முதலாலித்துவ சிந்தனைகள் நிரம்பி வழியும் தமிழர்கள் குறித்து.

திங்கள், 13 ஏப்ரல், 2009

தமிழக கூ(ஓ)ட்டுக் களவாணிகள்

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் - ஜெயலலிதா

கைது செய்தால், மரியாதையோடு நடத்த வேண்டும் - கருணாநிதி

என்ன கொள்கை ஒற்றுமை பார்த்தீர்களா?

ஜெயலலிதா முன் மொழிகிறார், கருணா-நிதி வழிமொழிகிறார்.

தாய்த்தமிழகத்தின் தமிழர்களை கொள்ளையடித்தது போதாதென்று, ஈழத்தமிழனின் ரத்தமும் சதையும் கேட்கிறது இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு.

வாக்குச்சாவடிக்கு போக மறவாதீர்!

ஆனால், உங்கள் வாக்கை இவர்களுக்கும், இவர்களுடைய கூட்டுக் களவாணிகளுக்கும் அளிக்க கண்டிப்பாக கவனமாக மறந்து விடுங்கள்.

மறக்காமல், 49 O வை முன்னிருத்துங்கள், தகவலை அறிந்து கொண்டு, உங்களது ஓட்டுப் போட மறுக்கும் உரிமையாவது நிலைநாட்டுங்கள்.

எதிர்ப்புக்காட்டாமல் எறும்புகூட மடிவதில்லை, நாம் மனிதர் என்று கூறிக்கொள்கிறோம்.

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

வியாழன், 9 ஏப்ரல், 2009

உங்கள் கவனத்திற்கு ஈழத்தில் மனித பேரவலம் நிகழப் போகிறது.

அவசரமாக விடுதலைப்புலிகளின் வேவுப்பிரிவினர் இத்தகவலை அறிவித்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்கரையோர பிரதேசத்தில் எழு(07) குழிதோண்டும் (வைக்கோ இயந்திரம் நின்று பாரிய குழிகள் தோண்டப்படுகின்றது. அக்குழிகளில் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்ற அப்பாவி மக்கள் மீது இந்தியா கொடுத்த நச்சுவாயுவை வீசி கொண்றுவிட்டு இக்குழிகளி ல் போடும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.. இப் பணியில் ஈடுபடுவதற்கென தென்பகுதியில் இருந்து ஊர்காவற்படையினர் அலம்பில் பிரதேசத்தில் வந்து நிலை கொண்டுள்ளனர். அவர்களிற்கு ஒவ்வொரு நாளும் காலை, மாலை முகமூடி(மாஸ்க்) அணிவிக்கப்பட்டு கடற்கரையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.


இரவு வேளை வேவுப்பணியில் போராளிகள் ஈடுபட்டிருந்த போது அங்கு நின்ற ஊர்காவற்படையினரின் உரைகளில் இருந்து இத்தகவல் மேலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இவ் கொடூரத்தை அரங்கேற்றுவதற்காகவே வன்னியில் சுமார் அறுபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. உண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி வன்னியில் உள்ள மக்கள்; தொகை இரண்டு லட்சத்துக்கும் மேல் என்று உத்தியோகப10ர்வமாக அறிவித்திருக்கின்றார்.


எனவே உடனடியாக சர்வதேசசமூகமும், புலம்பெயர் தமிழர்களும், குறிப்பாக தழிழக தலைவர்கள் இவ்விடயத்தில் ஒற்றுமையாக தலையிட்டு இங்கு நடக்கப்போகின்ற பாரிய மனித அவலத்தை தடுத்து நிறுத்துங்கள்.. இல்லையேல் ஒரு வரலாற்றுத் தமிழினம் பூண்டோடு அழிந்து விடும். இந்த நாகரிகமான புதிய நுற்றாண்டில் இப்படியொரு அவலம் தமிழனுக்கும், மனிதகுலத்திற்கும்.


தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது.

புதன், 4 மார்ச், 2009

ராஜீவ் கொலையில் நடந்த சதி( சு(னா) சாமிக்கு தொடர்பு)



ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமி - சுப்ரமணியசாமி இருவர் மீதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ராஜீவ் கொலையில் - தமிழகத் தலைவர்களைத் தொடர்புபடுத்தி மிரட்டி வந்தவர் சுப்ரமணியசாமி. இந்த பார்ப்பனரே - ராஜீவ் கொலையில் சந்தேகத்துக்கு உரியவர். ஜெயின் கமிஷன் - சுப்ரமணியசாமி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்ரமணியசாமி பற்றி கூறப்பட்டிருப்பது என்ன? இதோ சில பகுதிகள்:

1995 ஜூன், ஜூலையில் சந்திராசாமியும், சுப்ரணியசாமியும் லண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களில் லண்டன் பயணத்தின் நோக்கம் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்து கிறது.

காலிஸ்தான் விடுதலைப் படையைச் சார்ந்த ஜெக்ஜித்சிங் சவுகான் என்பவர் - அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவா தாஸ் என்பவரிடம் ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டம் இருப்ப தாகக் கூறி இருக்கிறார். இதை சேவா தாஸ் என்பவர் ஜெயின் கமிஷன் முன் தெரிவித்தார். லண்டனில் உள்ள சவுகான் வீட்டில் - தீவிரவாதிகள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் நடந்தது என்றும், அதில் இந்தக் கொலைத் திட்டம் பற்றி கூறப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நிலையில் - சவுகானை அப்ரூவராக மாறும்படி வலியுறுத்தவே சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் லண்டன் சென்றார்களா என்று, கமிஷனில் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயின் தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு சுப்ரமணியசாமிக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்.

கமிஷன் முன்பு சுப்ரமணியசாமி நடந்து கொண்ட முறையையும் கமிஷன் குறை கூறியுள்ளதோடு, பல தேவை யான பொருத்தமுள்ள கேள்விகளுக்கு, சுப்ரமணியசாமி பதிலளிக்க மறுத்து விட்டதால் உண்மையைக் கண்டறிய அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் 8-வது பகுதியில் 231-வது பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

If would appear that consistant and persistant effort is there on his (Subramania samy) part not to answer the questions which are most relevant in order to find out the truth (jain commission report vol. viii-page 231)

இந்தப் பின்னணியில் - சுப்ரமணிய சாமி பற்றி அவரது கட்சிச் செயலாளராக இருந்த வேலுசாமி என்பவர் ஜெயின் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தையும் குறிப்பிட வேண்டும்.

வேலுசாமி அளித்த சாட்சியம்:

1991 மே 24-ம் தேதியோடு தமிழகத் தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருந்தது. அதற்கு 3 நாட்களுக்கு முன்பு மே 31-ம் தேதி ராஜீவ் திருப்பெரும் புதூரில் கொலை செய்யப்பட்டார்.

மே 19-ம் தேதி தில்லியிலிருந்து தமிழகம் வந்த சுப்ரமணியசாமி திருப்பெரும்புதூர் பகுதிக்குத்தான் சென்றார். திருப்பெரும்புதூர் வழியாக நாங்கள் காஞ்சிபுரம் சென்று, பகல் உணவை முடித்துக் கொண்டு வாலாஜா பாத்துக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி கூட்டம் பேசிவிட்டு, பிறகு திருத்தணி, பள்ளிப்பட்டுக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர் திரும்பினோம்.

அடுத்த நாள் 20-ம் தேதி சேலம், ஆத்தூர் சென்றுவிட்டு நான் விடை பெற்று திருச்சி சென்றுவிட்டேன். அடுத்து 21-ம் தேதி காலை சுப்ர மணியசாமி, விமானம் மூலம் டில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். 21-ம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே, அதை முடித்துக் கொண்டு 22-ம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்குச் செல்கிறேன் என்று என்னிடம் சுப்ரமணியசாமி பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார்.

21-ம் தேதி இரவு தான் ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். அன்று சுப்ரமணியசாமி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 21-ம் தேதி காலையில் அவர் திட்ட மிட்டபடி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருந்தன. அன்று, அவர் யாரை யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21-ம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். சென்னையில் அவர் ஏன் மர்மமாகத் தங்கினார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய தோழர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அவர் தில்லி பயணத்தை ரத்து செய்தது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது.

நான் 21-ம் தேதி காலை - தில்லிக்கு சுப்ரமணியசாமியின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண் டேன். அவர் சென்னையில்தான் இருப்பார் என்று அவரது மனைவி கூறினார். பிறகு கட்சிப் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். சுப்ரமணியசாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

21-ம் தேதி காலை தில்லிக்கு விமானம் மூலம் புறப்படப் போவதாகக் கூறிய சுப்ரமணியசாமி அன்று காலையில் தில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பிறகு சென்னையி லிருந்து பெங்களூருக்கு திருப்பெரும் புதூர் வழியாக காரில் செல்ல வேண்டிய அவசியமென்ன? இதைத் தனது முக்கியத் தோழர்களுக்குக்கூட தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?

பெங்களூரில் யாரைச் சந்திக்க அவர் அவசரமாகப் போனார்? ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டிருக்கலாம். ராஜீவ் கொலைக்குப் பிறகு கூடி அவர்கள் பெங்களூர் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம். இந்த நிலையில் பெங்களூருக்கு யாரையோ அவசர மாகச் சந்திக்க சுப்ரமணியசாமி சென்றிருக்கிறார்.

அப்போது சுப்ரமணியசாமி மத்திய அமைச்சர். அமைச்சர் பதவிக்குரிய பல்வேறு வசதிகள் அவருக்கு உண்டு. மே 21-ம் தேதி அவருக்காக செய்யப் பட்ட ஏற்பாடுகள் என்ன? பாது காப்புக்காக செய்யப்பட்ட வசதிகள் என்ன? இது பற்றிய ஆவணங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் பெற வேண்டும்.

21-ம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணியசாமி வீட்டுக்குத் தொலை பேசியில் பேசினேன். அப்போது ராஜீவ் கொலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. யாருக்குமே எதுவுமே தெரியாது. 23-ம் தேதி அவரது திருச்சிப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிக சர்வ சாதாரணமாக, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியைச் சொல்லத்தானே போன் செய்தீர்கள்? என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளி உலகத்துக்குத் தெரியாத தகவல் - இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

சிறிது நாட்கள் கழித்து - அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த திருப்பெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை நலம் விசாரிக்க நானும் சாமியும் போனோம். மரகதத்துக்குத் துளி காயம் கூட ஏற்படவில்லை. மரதகம் அம்மாள் பாசாங்கு செய்வது போலவே எனக்குத் தோன்றியது.

மரகதம் பற்றி பேச்சு எடுத்தபோது - அறையில் சொல்கிறேன் - நிறைய விஷயம் இருக்கு என்றார் சாமி. திருப் பெரும்புதூரில் - பொதுக் கூட்டத் துக்குத் தேர்வு செய்த இடம் மரகதத்துக்கேத் தெரியாது. அவருக்கே தெரியாமல் சிலர் தேர்வு செய்து விட்டனர். அது சதிகாரர்களுக்குச் சாதகமாகிவிட்டது என்றார் சாமி. இந்த அளவுக்குத் துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படித் தெரிந்தன?

பிரதமர் சந்திரசேகருக்குத் தெரியும் முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி தெரிந்துவிட்டது என்று சுப்ரமணியசாமி கூறியிருப்பதை கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- என்று சுப்ரமணியசாமியுடன் மிக நெருக்கமாக உடனிருந்த திருச்சி இ.வேலுசாமி தனது சாட்சியத்தில் கூறி இருக்கிறார்.

ஜெயின் கமிஷன் முன்பு தரப்பட்ட இந்த சாட்சியமும் கமிஷன் தந்துள்ள பரிந்துரையும் சுப்ரமணியசாமி மீது விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.