கடவுள் கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 மே, 2010

கடவுளை கொல்ல வழி சொல்லுங்கள்

ஆமாம், பிறக்கும் உயிரனைத்தும் இறந்துதானே தீரணும்.......

1) பிஞ்சு மழலை..பிறந்தநாளே இறப்பது,

2) என் சிறுவயதில் வீட்டின் அருகே தலைநசுங்கி லாரி டயரில் இறந்த குழந்தை...

3) 10 பேர் வெட்ட கையறு நிலையில் வெட்டுப்பட்டு பரிதாபமாய் செத்துப்போனவன்........

4) ஈழத்தில் புலிகளை விடுங்கள் புலிகளைத்தான் உங்களுக்கு பிடிக்காதே, செத்தொழிந்த மக்கள்..........

5) சாதி ஒடுக்குமுறையில் செத்தொழியும் என் சகோதர - சகோதரிகள்.......

6) சமீபத்தில் விமான விபத்தில் மடிந்த நபர்கள்.....

7) மும்பை தீவிரவாத தாக்குதலில் செத்த மக்கள்

8) அமெரிக்க கேனத்தனத்திற்கு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மடிந்த மக்கள்.........இன்னும் உலகமெங்கும் மடியும் மக்கள்..........

இப்படி எல்லாம் கடவுளின் செயலென்றால்..........

அப்படி ஒரு கடவுள் இருக்கு, நீ நம்பு, நான் நிறைய படிச்சிருக்கேன்.....இதெல்லாம் நீதி...........
என்று சொல்வதில் உங்களுக்கு நியாயமாக பட்டால்..........
அந்த கடவுளை கொல்வதற்கு தயவு கூர்ந்து ஒரு வழி கேட்டுச்சொல்லுங்கள் உங்கள் கடவுளிடம்

வியாழன், 3 செப்டம்பர், 2009

நாமெல்லாம் திருந்து உருப்பட்டு....

படம்: வீரகேசரி

நாமெல்லாம் திருந்தி, உருப்பட்டு..............நடக்கிற காரியமா இது?

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.




செவ்வாய், 1 செப்டம்பர், 2009

தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி..............தேவை நமக்கு புத்தி.............

தோழர்களே! ஈழ மக்களின் அவலத்தில் உள்ளம் மிகுந்த ரணமாகியிருக்கிறது. இந்த அவலமான வருத்தமான தருணத்தில் நம் மக்கள் அனைவருமே உண்மையான அக்கறையோடு இருக்கிறார்களா?என்பது சுய ஆய்வுக்குரியது. கொஞ்சம் இந்த இணைப்புகளை பார்க்கவும்.

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா

சுவிஸில் உள்ள இந்து ஆலயங்களில் தாயகமக்கள் அமைதி வேண்டி அமைதிப் பிராத்தனை

வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்

3 லட்சம் மக்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் சூழலில் பிரார்த்தனை போன்ற ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்குமா?

கடைசி நாளில் 10,000 மேற்பட்ட தமிழ்மக்கள் சாக கிடந்த வேளையில் வந்து காப்பாதாத கடவுளை இன்னும் நம்பித்தான் ஆக வேண்டுமா?

மாதாவாகட்டும்,ஏசுவாகட்டும், முருகனாகட்டும், அல்லாவாகட்டும் எவனும் தமிழனத்தின் இக்கட்டான சூழலில் வரவில்லையே...........இன்னும் எதற்கு இந்த பக்தி போதை....நம்பி கெட்டது போதாதா?

பக்தி என்னும் மூடத்தன்த்திற்கு மகுடம் போல, சாதி என்னும் கொடூரம் நம் உள்ளங்களில் உள்ளதே?

ஈழத்தமிழருக்காய் குரல் கொடுக்கும் எத்தனை தமிழர்கள் தங்கள் வீட்டில், வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள்.....வீட்டில் சாதியை பின்பற்றுபவன் வெளியில் வந்து தமிழன் என்று கத்தினால் கொஞ்சம் நெருடலாகத்தானே இருக்கிறது....

ஈழத்தமிழர்களும் இதில் விதிவிலக்கல்ல, இவ்வளவு ரணங்கள், வலிகள் இருந்தும் சாதியை பின்பற்றுவதில், பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வத்தோடு திருமணத்திற்கு துணைதேடும் நிலையில் நாமெல்லாம் தமிழர்கள் என்பது கொஞ்சம் போலியாக தோன்றவில்லையா.....?

தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல், பின்பற்றாமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்...கடவுள் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டால்தான் நாம் மனிதர்கள்..........

நாம் தமிழராக சாதியை விடுங்கள், மதத்தை துரத்தி அடியுங்கள்.......தமிழில் உரிமை கோரும் மனிதராக உயருங்கள்......

தமிழர்களே திருந்துங்கள்...பெரியாரின் பாதைக்கு திரும்புங்கள்...

பகுத்தறிவுப்பாதை தேர்ந்தெடுங்கள்..............

தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி..............தேவை நமக்கு புத்தி.............

செவ்வாய், 4 நவம்பர், 2008

கடவுள் பிடிபட்டார்!

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.


இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் "கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.


எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.


புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


···


முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider)அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.


"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் "அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.


நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.


கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.


புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் "ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை "கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.


களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!


"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் "கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது "பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.


ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.


"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், "அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, "தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?


வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் "காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் "இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.


"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.


இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, "தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் "கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் "அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.


"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் "ஏசு அவர் முன் "தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.


"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.


"ஒருவேளை மூளையில் கடவுள் "குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?'' என்று அவர்களை "சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு "ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.


கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!


காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் "கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.


டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், "அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.


தியானத்தில் ஈடுபடும்போது, "தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற "பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.


இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் "அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட "ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.


மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று "ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், "இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.


எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.


ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!


மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.


பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.


பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!


இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து "கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் "சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.


உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.


எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், "கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.


"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.


பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).


விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.


"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.


http://tamilcircle.net/index.php?view=article&catid=67%3A2008&id=4243%3A2008-10-15-19-23-47&option=com_content&Itemid=29

திங்கள், 14 ஜூலை, 2008

கடவுள் கற்பனையே-2

நேர்மையான ஆய்வு மூலம்

 உண்மை என்னவென்றால், கடவுள் என்றும் நம்பும் ஒரு கருத்தாக்கம் என்றும் வேண்டுகோளுக்கு இறங்கி வேண்டியதை அளித்த்தில்லை. கடவுள் உதவுவார் என்ற உண்மை என்று நம்ப வைக்கப்பட்ட பொய், உருவகம்.

 கடவுள் வேண்டுகோளுக்கு இறங்குவது என்பது பொய்/பொய்யான நம்பிக்கை என்பதை நாம் எப்படி அறிவது, சிறிது அறிவியல் கண்ணோட்ட்த்தோடு ஆய்வு செய்வதே இதற்கு உதவும். அதாவது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஏதாவது ஒன்றை வேண்டிக் கொள்ள செய்து, அவர்களையும் மேற்கொண்டு விளைவுகளையும் கவனிப்பது. இந்த ஆய்வின் முடிவில் தெளிவாக நாம் அறிய இயலுவது என்னவென்றால் பிரார்த்தனை, வேண்டுகோள் இவற்றில் எதுவும் முடிவை பாதிப்பதில்லை என்பதே!

 இதில்

 1)       யார் வேண்டுகோள் வைக்கிறார்கள் என்பது பிரச்சினையில்லை.

2)       யாரிடம் வேண்டுவதாக நினைத்து கொள்கிறார்கள் என்பது பிரச்சினையில்லை அது அல்லா, இயேசு, சிவன், விஷ்ணு என யாராக இருந்தாலும் சரி.

3)       என்ன வேண்டுகிறார்கள் என்பது பிரச்சினையில்லை.

அதாவது அறிவியல் ரீதியில் Double-Blind Test(ஆய்வுக்கு உட்படுபவர், ஆய்வு செய்பவர் இருவரும் ஒருவர்- மற்றொருவரின் தகல்களை அறிந்திருக்க மாட்டார்) , செய்து அதன் அடிப்படையில் வேண்டுதலின் தாக்கத்தை அளந்து, ஆய்வு செய்து பார்த்தால் பலன் ஒன்றும் இல்லாதிருப்பது தெள்ளத்தெளிவாகும். இதில் வேண்டுதல் பதிலளிக்கப்பட்ட்தாக வாதிடுதல் நிகழ்வை பொருத்தி, உறவுபடுத்தி பார்ப்பதல்லாமல் வேறொன்றுமில்லை. இது அறிவியல் ஆய்வுக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நேர்மையாக ஆய்ந்து பார்த்தாலும் பொருந்தும்.

எடுத்துக்காட்டுக்கு இந்த கட்டுரை,

சார்புணர்ச்சியில்லாமல் கடுமையான நேர்மையோடு, அறிவியல் கண்ணோட்ட்த்தோடு, உண்மை அறியும் தீவிர ஆவலோடு செய்யப்பட்ட ஆய்வுகளின் வேண்டுதல் இருதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நோயாளிகளின் நிலைமையிலோ அல்லது இறப்பின் விகித்தையோ சிறிதளவும் குறைக்கவில்லை என்று வரையறுக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல்,

தொலைவு-சிகிச்சை(Distance Healing ) பற்றி செய்யப்பட்ட கடந்த 17 ஆய்வுகளின் அடிப்படையை , 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஆய்வாளர்  ஆய்ந்து வேண்டுதலோ, தொலைவு-சிகிச்சையோ பலன் அளிப்பதில்லை என்று திடமாக நிறுவியுள்ளார்.

மார்ச் 2006 இல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையும் இதை ஆமோதிக்கிறது,

இதே போன்று செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெளிவுறுவது என்னவென்றால் இதய நோயாளிகளின் நிலையில் வேண்டுதல் எந்த மாற்றத்தை கொண்டு வருவதில்லை என்பதோடல்லாமல் மாறாக பிரச்சினைகளைதான் உருவாக்குகிறதாம்.

இந்த கட்டுரையில் சிறிது வியப்பு அளிக்க்கூடயதான, நகைப்புக்குறியதான செய்தி வாசிக்கக் கிடைக்கிறது.

தத்துவயிலாளர்களும், மதத்தலைவர்களும் வேண்டுதலுக்கு பலனில்லை என்று அறிவிக்கின்றனர்: மதத்தலைவர்கள் இதில் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம், பக்தர்களுக்காக இனி இவர்கள் வேண்டுவது தேவையாயிருக்காதல்லவா (மக்களின் ஏமாளித்தனத்தையும், அறியாமையையும் வைத்துதானே இவர்களின் பிழைப்பு நடக்கிறது, மேற்கூறிய கூற்றை அறிந்த பக்தர்கள் எனக்காக வேண்டுதல் செய்யவும் என்று யாரும் மதத்தலைவர்கள் தொல்லை தரமாட்டார்கள், ஆனால் என்ன இவர்கள் பிழைப்பு ஓடாது),

நண்பர்களே, வேண்டுதல் மீது நம்பிக்கை கொள்வது என்பது மூடநம்பிக்கையே இது பலமுறை நிருபக்கப்பட்டிருந்தாலும், உள்ளத்தில் உள்ள தகுதிக்கு மீறிய, உண்மைக்கு புறம்பான விருப்பங்கள் மூடநம்பிக்கைக்கு உட்படுத்துகின்றன. பிராமானந்தாவிடம் மயங்கிக் கிடந்த கூட்டம் இன்று பங்காரு அடிகளார், சதய்சாய்பாபா என்று பிடிபடாத சாமியார்களிடம் போகிறது, பிடிபட்டவன் போலிச் சாமியாராம், பிடிபடாத சாமியாராம் (எந்த அளவுகோலில்)

இந்த பித்தலாட்டக்கார்ர்களின் விளம்பரத்தில் ஏமாந்து இவர்களின் காலையும் கழுவி குடிக்கும் மட மக்களின் நிலையை நினைத்து சினம் வருவதற்கு பதிலாக பரிதாபம்தான் மேலோங்குகிறது,

சிலர் இயேசு அழைக்கிறார் என்று பிரச்சாரம் செய்து,     இவன் அழைத்து நோய் தீர்க்கிறேன் என்று பொய் விளம்பரம் செய்து கூட்ட்த்தை கூட்டி அதையும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள், இயேசு எங்களை அழைத்த்து எஙகளுக்கு கேட்கவில்லையே உனக்கு மட்டும் எப்படி கேட்டது என்று கேட்க துப்பில்லை இந்த மக்களுக்கு

இந்த அயோக்கியர்களில் எவனாவது ஒரு யோக்கியன் நான் தொடுக்கும் பந்தயத்திற்கு தயாரா?

இந்த  சாதாரண நடுத்தர வகுப்பைச் சார்ந்த நான் அழைக்கிறேன் பந்தயத்திற்கு நான் நிறுத்தும் நோயாளிகளுல் 20 பேரை இவனுடைய வேண்டுகோளால் குணப்படுத்த இயலுமா?

அப்படி முடிந்தால் நேர்மையோடு சொல்கிறேன், நான் என்னுடைய பகுத்தறிவு பிரச்சாரத்தை விடுத்து இயேசு விளம்பரத்திற்காக, பிரச்சாரத்திற்காக, ஊழியத்திற்காக நடிக்க(நம்புவது எப்படி?) தயார்.

கீழே உள்ளதையும் கவனிக்கவும்


நாம் சந்திக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட தோழர்களில் பலர் அறிவியல் ஆய்வுகளின் மூலம் கடவுளை கண்டறிய இயலாது, அவர் இதற்கெல்லாம் புலப்படாதவர். ஆனால் இப்படி சொல்லும் நண்பர்கள் இயேசு பூமிக்கு வந்தார் என்ற கதையை நம்புவார்கள், சிவன் பூமிக்கு வந்தான் என்று கதையளந்தால் நம்புவார்கள், அல்லா குரானை அனுப்புனாருன்னு அளந்தா நம்புவார்கள்.

இவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே என்றால்? கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், ஆனால் தெரியமாட்டார். அது உனக்கு எப்படி தெரியும் என்றால் பேந்த பேந்த விழிப்பர்.

கடவுள் கருத்தில் மட்டும் அறிவியல் ஆய்வை மறுப்பவர்கள், அறிவியல் ஆய்வால் பிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒதுக்கத் தயாரா? வண்டிகளை, விமானங்களை, கணிணியை ஒதுக்க முடியுமா? இவை அத்தனையும் அறிவியலின் பிள்ளைகள்தானே, ஆய்வின் தரவிறக்கம்தானே?

வேண்டுதலுக்கே திரும்ப வருவோம்,

வேண்டுதல் நிறைவேற்றப்படுதலின் மேல் உள்ள நம்பிக்கை என்பது நிகழ்வுகளை பொருத்தி பார்ப்பதோடு மட்டுமல்லாமல், நிறைவேறாத வேண்டுதலை லாவகமாக மறப்பதும்தான்.

எடுத்துக்காட்டுக்கு,

ஒரு குறிப்பிட்ட நோயிலிருந்து மீழுவது 5 விழுக்காடுதான் சாத்தியம் என்று வைத்து கொள்வோம்,

அந்நோயினால் 20 பேர் பாதிக்கபட்டிருக்கிறார்கள், 20 பேரும் வேண்டுகிறார்கள் என்று வைத்து கொள்வோம் (அல்லது) பிறர் அவர்களுக்காக வேண்டுகிறார்கள் என்றே வைத்து கொள்வோம். இவர்கள் அத்தனை பேரும் மத்தேயு 21:21, மாற்கு 11:24. யோவான் 14:12-14, மத்தேயு 18:19, ஜேம்ஸ் 5:15-16 படித்து விட்டு சிரத்தையோடு வேண்டினார்கள் என்று கருதுவோம்.

இந்த வேண்டுதலுக்கு பிறகும் கண்டிப்பாக 20 பேரில் 19 பேர் மடிந்து போவர்.

உயிர்பிழைத்த அந்த ஒருவன் தான் வேண்டுதலால் பிழைத்ததாக நம்புவான், கடவுள் வேண்டுதலுக்கு பதிலழித்தாக நம்புவான், அதை அவன் பிரச்சாரமும் செய்வான், இதை கேட்டு இன்னும் 20 பேர் வேண்டுவார்கள் இந்த சங்கிலி தொடரும்.

 

ஆனால் , 19 பேர் மடிந்து போனார்களே இவர்களை பற்றி எந்த நம்பிக்கையாளரும் வினா எழுப்புவதில்லை, எந்த பத்திரிக்கையும் வேண்டுதலுக்கு பிறகும் 19 பேர் மடிந்தார்கள் என்ற செய்தியை வெளியிடுவதுமில்லை. இப்படி நம்பி தானும் அறிவால் தானும் பிறர் அறிவையும் மழுங்கடிப்பது முட்டாள்தனமில்லாமல் வேறென்ன?

நன்றி: http://godisimaginary.com/

 

 

 

வெள்ளி, 11 ஜூலை, 2008

கடவுள் கற்பனை-1

வழிமுறை1:

 கடவுளிடம் நாம் மனதுருகி அவரிடம் கீழ்கண்டவாறு கர்த்தரை நோக்கி வேண்டுயோமாயின் என்ன நடக்கும்

 மதிப்பிற்குரிய/அன்பிற்குரிய எல்லாம்வல்ல உலக உருவாக்கதிற்கு காரணமான கடவுளே, இவ்வுலகிலுள்ள கொடிய நோய்களில் ஒன்றாகிய புற்று  நோயை இன்றே தீர்த்திடுமாறு, முழு நம்பிக்கையோடு வேண்டிகொள்கிறோம் தாங்களும் மத்தேயு 21:21, மாற்கு 11:24. யோவான் 14:12-14, மத்தேயு 18:19, ஜேம்ஸ் 5:15-16 இல் கூறியபடி எங்கள் நம்பிக்கைக்கு இறங்குவீர் என்று இயேசுவில் பெயராலே வேண்டுகிறோம். ஆமேன்.

 இதுபோன்று நாம் உண்மையிலேயே கடவுளிடம் நம்பிக்கையோடு, தன்னலம் கருதாமல், வேண்டினால், அவ்வேண்டுதலுக்கு கடவுள் இரங்கினாரேயானால் உலகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான புற்று நோயாளிகள் பலனடைவார்களே!

 ஆனால், இப்படி உளமுறுகி, உண்மை உள்ளத்தோடு வேண்டினாலும் ஏதாவது நடக்குமா? ம்ஹும் ஒன்றும் நடக்காது.

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த கட்டுரையின் படி அமெரிக்காவில் 54 விழுக்காட்டினர் பைபிளை முழுமையாக உண்மையென்று நம்புகின்றனராம், இன்னும் அந்நாட்டின் சில பகுதிகளில் பைபிளின் மேல் நம்பிக்கை கொண்டவர்களின் விழுக்காடு 75 ஐ தாண்டுகிறதாம்.

 பைபிள் உண்மையையாயிருந்தால் கண்டிப்பாக நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டுமில்லையா?

 பைபிளின்படி, தொடர்ந்து கேட்டால் கடவுள் கொடுப்பாராம், தொடர்ந்து தேடினால் கண்டிப்பாக கிடைக்குமாம், தொடர்ந்து தட்டினால் எந்த கதவும் திறக்குமாம். (மத்தேயு 7:7)

 யார் கேட்டாலும் கிடைக்குமென்றால்

1)       இந்து மத நம்பிக்கையுள்ளவன் கேட்டால் கிடைக்குமா?

2)       இஸ்லாமிய மத நம்பிக்கையுள்ளவன் கேட்டால் கிடைக்குமா?  அல்லது

3)       கிருஸ்து மீது நம்பிக்கை கொண்டால்தான் கிடைக்குமா? என்ற கேள்வி எழாமலில்லை.

யார் கேட்டு நடக்கின்றதோ இல்லையோ ஒரு சுயநலமில்லாமல் இருக்கும் ஒருவனுடைய வேண்டுகோள் ஏற்க பட வேண்டுமாயில்லையா? அப்படியிருக்கையில் உலகிலுள்ள புற்று நோயாளிகளை குணபடுத்தி தாரும் என கடவுளை வேண்டுவதும் ஏற்கப்பட்டு தீர்க்க படவேண்டுமாயில்லையா? ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாது.

 மத்தேயு 17:20 இல் இயேசு கூறுகிறார்,

கடுகளவேனும் நம்பிக்கையிருந்தால் இம்மலையை இங்கிருந்து அங்கே நகர்ந்து செல் என்று கூறினால் இம்மலையும் நகரும். "

 மத்தேயு 21:21 இல் இயேசு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்,

நான் உங்களுக்கு உண்மையாக சொல்லுகிறேன், நீங்களும் விசுவாசத்துடன் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்கு செய்த்து போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் அதிகமாக சாதிக்க இயலும். இம்மலையை போய் கடலில் விழு என்று நீங்கள் விசுவாசத்துடன் கூறினால் அது நடக்கும். நீங்கள் நம்பிக்கையோடு வேண்டுவது எதுவும் கிடைக்கும்.

 மாற்கு 11:24 இல் இவ்வாறு கூறுகிறார்

உங்கள் வேண்டுதலின் போது கடவுளிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள், அவை கிடைக்கப்பெற்றன் என நம்புங்கள், அவை கண்டிப்பாக உங்களுக்கு உரியதாகும்.

கடவுளே சொல்லிவிட்டார், வேண்டுதலை அடைந்துவிட்ட்டோம் என நம்பினால், அது கண்டிப்பாக உங்களுடையது இது உண்மையானால் புற்று நோய் எல்லோருக்கும் தீர வேண்டும் இல்லை கடவுள் பொய் சொல்லியிருக்க வேண்டும்.

 பொய் சொல்லியவர் கடவுளாக இருக்க முடியுமா...........................?

 

தொடரும்.