ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

இஸ்லாம் நேர் வழியா? போர் வழியா?

  • இஸ்லாத்தைப் பற்றி, இது நேரான வழியை காட்டும் என்று(2-2) அல்லாஹ் கூறுகிறார்; இதற்கும் மேலாக, “நாம் விரும்பி இருந்தால் ஒவ்வொரு மனிதருக்கும், அவன் நேரான வழியில் செல்லக் கூடிய அறிவை கொடுத்திருப்போம் என்று(32-13) வேறு விளம்புகிறார்.

    இதே அல்லாஹ்தான் யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. (2-216)

    நிராகரிப்போரை சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)
    அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்(2-191)

    நீங்கள் அவர்கள் பிடரியின் மேல் வெட்டுங்கள், அவர்களை கணுகணுவாக துண்டித்து விடுங்கள். (8-12)

    கலகம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுடையதாக உறுதிப்படும் வகையில் அவர்களை எதிர்த்து யுத்தம் புரியுங்கள்(8-49)

    இணை வைப்போரை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்; சிறை பிடியுங்கள்; முற்றுகை இடுங்கள்; பதுங்கி இருந்து பாயுங்கள்(9-5)

    விரோதிகளின் இரத்ததை பூமிக்கு ஒட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தருமானதல்ல(8-67)

    அல்லாஹ்வின் மார்க்கத்தை குறை கூறுவோருடன் போரிடுங்கள்(9-12)

    நபியே நீர் விசுவாசிகளை யுத்தத்திற்கு தூண்டுவீராக(8-65)

    விசுவாசிகளை யுத்த களத்தில் ஒழுங்கு படுத்துவீராக(3-121)

    கனவில் கூட யுத்தம் செய்ய தூண்டுகிறார்(8-43)

    வித்தைகள் செய்து யுத்தம் செய்யத் தைரியம் தருகிறார்.(3-13)

    பத்ரி யுத்தகளத்தில் வானத்தில் இருந்து மூவாயிரம் மலக்குகளை அனுப்பி உதவி புரிகிறார்(3-124)

    எத்தனையோ நபிமார்களும் நல்லடியார்களும் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்திருக்கின்றனர்.(3-146)

    எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிகின்றார்களோ, எவர்கள் இவர்களுக்கு இடமளித்து உதவி புரிகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான விசுவாசிகள் (8-74)

    தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம் செய்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவோரே மகத்தான பெரும்பதவி பதவி பெற்றவர்கள், இத்தகையோர்தான் நிச்சயமாக சித்தியடைந்தோர்கள். அல்லாஹ் இவர்களுக்குள் சுவன்பதிகளை சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்(9-89)

    யுத்தத்தை புறக்கணிப்பவர்களை, செப்பம் வேதனை, அழுகை, இழிவு வந்தடையும், அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்(81,81-87,90,95)

    இன்னும் கேளுங்கள்.
    “உங்களை பல பிரிவுகளாக்கி உங்களுக்குள் சிலர் சிலருடன் யுத்தம் புரியும்படி செய்யவும் அவன் செக்தியுடையவனாக இருக்கிறான்(6-65)

    ஆம்! “எங்கள் பாதங்களை யுத்தத்தில் நழுவாது, நீ உறுதிப் படுத்தி வைப்பாயாக. “ (3-147 )என்று மக்கள் இறைவனைப் பார்த்து பிரார்த்திக்க வேண்டுமாம்.

    இதுதான் அல்லாஹ்வின் நேர்வழி, “ இறைவன் விரும்பி வழி நடத்தும் லட்சணம். இத்தகைய வேதங்களை வைத்துக் கொண்டுதான், நாம் உலக அமைதிக்கு தூது விடுகிறோம். நடு நிலையாளர்கள் என்று பெருமைப்பட்டு கொள்கிறோம். “ சமாதன சுகவாழ்வு பற்றி” வாய் கிழிய பேசி வருகிறோம். இடுப்பு வேட்டி நழுவிப்போவது தெரியாமல் தலையில் கிரீடம மாட்டிக் கொள்ள துடிக்கிறோம்.

குரானோ குரான் நூலிருந்து( பக்கம் 8-10)

“நாத்திக மய்யம்”
36F வாட்டர் டாங்கு சமீபம்,நாகர்கோயில்-629001

பகுத்தறிவு,ஒழுக்கம், தியாகம், பொது நன்மை, பொது நோக்கு.எல்லாமே வெங்காயங்கள்தாம்! அ மார்க்ஸ்

பெருங்கதையாதடல் எதையுமே பெரியார் உருவாக்கவில்லை என எப்படி சொல்வது, பகுத்தறிவு என்ற பெருங்கதையாடலை அவர் முன் வைக்கவில்லையா? என்ற கேள்வி எழலாம்.

" பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்." (ஆனைமுத்து தொகுப்பு பக்: 129(௧௨௯))

என்று பகுத்தறிவின் புகழ் பாடியவர் அவர். பகுத்தறிவாளர் கழகங்களை அமைப்பது திராவிட கழக செயல்பாடிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், மதத்தின் ஆட்சி என்பதற்கு பதிலாக பகுத்தறிவுப் பார்வை என்ற அளவில்தான் அவரது சொல்லாடல்கள் அமைந்தன.



தமை காட்டுமிராண்டிமொழி என அவர் சொன்னதுகூட இந்த பொருளில்தான் மதத்திலிருந்து பிரிக்கபடாதது என்கிற வகையில் தமிழ், பகுத்தறிவில் தாழ்ந்த நிலையில் உள்ளது.எனவே அது காட்டுமிராண்டி மொழி அவ்வளவுதான்.



எல்லா பிரச்சனைகளுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லாக் காலங்களுங்களுக்குமான முரணற்ற தீர்வாக அவர் பகுத்தறிவு உட்பட எதையும் முன்வைக்கவில்லை. முற்றுண்மையான வரையறைகளை உருவாக்குதல், முழுமையான கோட்பாடு உருவாக்கங்களைச் செய்தல் என்பதற்கு அவர் தொடர்ச்சியாக எதிராகவே இருந்தார். அவர கட்ட விழிப்பிற்கு பகுத்தறிவும் தப்பவில்லை. பகுத்தறிவு மற்றும் மனித ஜீவிகள் குறித்த அவரது கீழ்க்கண்ட மதிப்பீடுகள் இதனை தெளிவாக்கும்.



" ஆகாரம் நித்திரை, ஆண்-பெண் சேர்க்கை ஆகீய தேவைகளில் மற்ற ஜீவன்கலிடம் உல்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன. இன்னும் பேசப்போனால் மற்ற ஜீவன்களிடையே அதிகமாகவும் காணப்படுகின்றன. அதிருப்தி என்ற கெட்ட குணம் மனிதனிடமே அதிகமாக இருக்கிறது. வேலை என்ற கெட்ட குணமும் மனிதனுக்கே அதிகமாக உண்டு. தன் இனத்தை அடிமைப்படுத்தி அதை கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணமும் மனித ஜீவனிடத்திலே அதிகமாக இருந்து வருகின்றது. தனக்கு புரியாததையும் நம்புதல், பேசுதல், நம்பச் செய்தல் முதலிய மூடதன்மை குணம் மனித ஜீவனிடத்திலே அதிகமாய் இருந்த்த் வருகிறது... இது போன்ற எத்தனையோ கெட்ட குணங்கள் மனித ஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடையதாகவே இருக்கிறது ஆகையால் பகுத்தறிவின் மேன்மையால் மனித ஜீவன் சிறந்தத் என்று எப்படி கூற முடியும்." (ஆனைமுத்து தொகுப்பு பக்: 1132-33 )
என்று கேட்பவர் மற்றோரிடத்தில்,
தன்பிள்ளை , குட்டி, பேத்து பிதிர் ஆகிய சந்ததிகளை பற்றிய முட்டாள்தன்மான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குதான் இருக்கிறதேயொழிய பகுத்தறிவில்லாதவைகளுக்கு இல்லை....பகுத்தறிவில்லாத எந்த உயிரும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை; தன் இனத்தை கீழ்மைபடுத்தி வாழ்வதில்லை; தன் இனத்தில் உழைப்பிலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்மைபடுத்துகிறான். வாகனமாய் பயன்படுத்துகிறான். சோம்பேறியாய் இருந்து தன் இனத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் , பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து வாழ்கிறான்.
எடுத்துக்காட்டுக்கு நாய், கழுதை,பன்றி என்கிற இழிவான மிருகக்கூட்டத்தில் பார்ப்பன சாதி, பறைசாதி, நாயுடுசாதி, முதலிசாதி என்கிற பிரிவுகள் கிடையா. ஆனால் மனித வர்க்கத்தில்தான் தன் இனத்தையே பிரித்து இழிவுப்படுத்துகிறான்

மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான், மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்கிறான், மனிதன் மனிதன் வஞ்சிக்கிறான், பகுத்தறிவின் பயன் இதுவாக இருக்கும்பொழுது மனிதன் நேர்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்" ஆனைமுத்து தொகுப்பு பக்:1115)என்று வினவுகிறார்.

மனித ஏற்றத் தாழ்வுகள் பகுத்தறிவின் மூலமே நியாயப்படுத்தப்படுகின்றன. பகுத்தறிவின் ஆட்சி நடைபெறுகிற மேலை நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல, வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகாரங்களைடும், சுரண்டல்களையும் நியாயப்படுத்துகிற காரியத்தை அறிவும், தர்க்கமும் சிறப்பாகவே செய்து வருகின்றன. அறிவின் வன்முறையைப் பெரியார் விளங்காதவரல்லர்.

-பெரியார்? அ.மார்க்ஸ் நூலிருந்து

வெளியீடு: பயணி வெளியீட்டகம், 6/114வது குறுக்குத்தெரு, வெள்ளாளத் தேனாம்பேட்டை, சென்னை-86. செல்:(9445124576)