மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 மே, 2010

கடவுளை கொல்ல வழி சொல்லுங்கள்

ஆமாம், பிறக்கும் உயிரனைத்தும் இறந்துதானே தீரணும்.......

1) பிஞ்சு மழலை..பிறந்தநாளே இறப்பது,

2) என் சிறுவயதில் வீட்டின் அருகே தலைநசுங்கி லாரி டயரில் இறந்த குழந்தை...

3) 10 பேர் வெட்ட கையறு நிலையில் வெட்டுப்பட்டு பரிதாபமாய் செத்துப்போனவன்........

4) ஈழத்தில் புலிகளை விடுங்கள் புலிகளைத்தான் உங்களுக்கு பிடிக்காதே, செத்தொழிந்த மக்கள்..........

5) சாதி ஒடுக்குமுறையில் செத்தொழியும் என் சகோதர - சகோதரிகள்.......

6) சமீபத்தில் விமான விபத்தில் மடிந்த நபர்கள்.....

7) மும்பை தீவிரவாத தாக்குதலில் செத்த மக்கள்

8) அமெரிக்க கேனத்தனத்திற்கு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மடிந்த மக்கள்.........இன்னும் உலகமெங்கும் மடியும் மக்கள்..........

இப்படி எல்லாம் கடவுளின் செயலென்றால்..........

அப்படி ஒரு கடவுள் இருக்கு, நீ நம்பு, நான் நிறைய படிச்சிருக்கேன்.....இதெல்லாம் நீதி...........
என்று சொல்வதில் உங்களுக்கு நியாயமாக பட்டால்..........
அந்த கடவுளை கொல்வதற்கு தயவு கூர்ந்து ஒரு வழி கேட்டுச்சொல்லுங்கள் உங்கள் கடவுளிடம்

செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் மரணம், படம், காட்சி- பொய்

ஈழத்தமிழ் பெண் சொன்ன செய்தி

புலிகள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாள அட்டை வைத்துக் கொள்ளும் வழக்கம் கிடையாதென்றும்,

போராளிகள் கழுத்தில் சிகப்பு மற்றும் கருப்பு நிறக் கயிறுதான் அணிந்திருப்பர் என்றும் சிகப்பு நிறக்கயிற்றில் அடையாள தகடும், கருப்பு நிறத்தகட்டில் நஞ்சுக்குப்பியையும் அணிந்திருப்பர் என்றும் தெரிவித்தார்,

நான் சந்தித்த ஈழத்தமிழ் பெண்.

மேலும் அவர் கூறுகையில்,

பிரபாகரன் அடையாள அட்டை வைத்திருந்தார், அந்த உடலை கைப்பற்றிவிட்டோம்,

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முகத்தில் சுருக்கங்களோடு இருந்தவர், நீண்ட இடைவெளியில் போர்ச்சூழலில் வாழ்ந்த பின்பு, குண்டு தாக்கியதில் முகத்தில் இளமை வந்துவிட்டது.

என்றெல்லாம் கூறுவது தூய பொய், இது பொய்யாக உருவாக்கப்பட்டது.

இது தொடர்பான மற்ற பதிவுகள்:

http://kundumani.blogspot.com/2009/05/blog-post_3404.html

http://veltharma.blogspot.com/2009/05/blog-post_19.html