வெள்ளி, 4 ஜூலை, 2008

ஒரு மத(ல)ம் போக்க இன்னொரு மத(ல)ம் தீர்வாகுமா?

              வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று நாம் பெருமை பேசிக்கொள்வதுண்டு. விருந்தோம்பல் பண்பே தமிழனின் தலையாய பண்பு என்று சில நேரம் சிலிர்த்து கொள்வதுமுண்டு. ஆனால், வந்தவனையெல்லாம் வாழவிட்டுவிட்டு இழித்தவாய்த் தனமாக கீழே விழுந்து கிடக்கும் தமிழனின் இழிநிலை பற்றி பேச ஏனோ தயக்கம் நிலவுகிறது இச்சமூகத்தில். தமிழ்நாட்டை பொருத்தவரை ரவுடி தலைவன், பொறுக்கி தலைவன், சாதி-மத வெறியன் தலைவன், பெண்ணுடன் திரையில் சல்லாபம் புரிபவன் தலைவன். ஆனால், சாதி வெறியை பற்றி கேள்வி கேட்பவனை,எதிர்த்து நிற்பவனை சாதித்தலைவன் என்றோ, கடவுளை கொண்டு பிழைப்பு நட்த்துப்பவனை கேள்வி கேட்பவனை நாத்திகன் என்றோ, மத விரோதி என்றோ ஒதுக்கி வைத்து தன் பிழைப்புக்கு பாதிப்பு வராமல் பழையச் சதிக்கூட்ட்த்தின் சதி இன்றுவரை நீளுகிறது, பழைய சதி இன்றும் தொடர்கிறது.

 

                 அமைதிப்படை திரைப்படத்தில் மணிவண்ணன், சத்யராஜ் பேசுவதாக ஒரு உரையாடல் வரும் மணிவண்ணன் கூறுவார் சீட்டு பணம் குடுத்து வாங்கிடுவே! வோட்டு ஜன்ங்கள்ள போடணும். சத்யராஜ் சொல்லுவார், நாமதான் ஒண்ணுமே பண்ணலையப்பா. மணிவண்ணன் இப்படியாக பதிலளிப்பார், ஆமா! ஏதாவது செஞ்சாதானே மக்கள் ஓட்டு போடுவாங்க.

 

            இதேபோல மக்களை பற்றி சிந்திக்காத, மக்களுக்கு ஏதும் செய்யாதவனெல்லாம் தலைவன். இதை பற்றி கேள்வி கேட்பவனெல்லாம் தீவிரவாதி. எடுத்துகாட்டுக்கு விஜயகாந்தை எடுத்துக் கொள்வோம், இவர் நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டவர், பம்பரம் விட்டவரிடம் சமூக அக்கறை எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா? இது போன்ற உளவியல் கொள்ளையில் ஈடுபடுபவர் எப்படி நாட்டில் நடக்கும் கொள்ளைகளை தீர்ப்பார். இது போதாதென்று நடிகையின் தொப்புளில் தேங்கியிருக்கும் நீரை உறிஞ்சி குடித்தவர் இன்னொரு கட்சி ஆரம்பித்து சமத்துவம் பேசுகிறார்.எப்படி அம்பேத்கரையும், முத்துராமலிங்கம் படங்களை விளம்பரங்களில் போட்டு(?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?).

 

             இதில் இன்னொரு கழிசடையும் நடிகரும் சேர்ந்திருக்கிறார்(ன்) முத்துராமலிங்கம் சமத்துவம் விரும்பினாராம், அவர் எல்லா மதங்களும் சாதியையும் மதித்தாராம்.(பின் ஏன் முத்துராமலிங்கத்தை பின்பற்றுபவர்கள் சாதியக்கொடுமை ஏனோ புரிகிறார்கள்? முத்துராமலிங்கம் சொன்னது காதில் விழ வில்லையோ?) தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்றாராம். அவரின் பட்த்தைஒ கொடியில் பதிப்பது தங்களுக்கு தாங்களே மதிப்பு செய்வதாகுமாம். இதில் எந்த கண்ணை கொண்டு முதுகுளத்தூரில் நடந்த கொடுமையை பார்த்து கொண்டிருந்தார் அல்ல்து எந்த கண்ணை கொண்டு கண்ணசைத்து தூபம் போட்டுக்  கொண்டிருந்தார்.எறையூரில், உத்தபுரத்தில் தீண்டாமை இந்த நடிகருடைய கண் எங்கிருந்த்தாம்?

 

(இந்த நடிகர் பற்றி ஆனந்த விகடன் பத்திரிக்கை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது, இவர் சொன்னாராம்,

கண்ணால் கண்டால் கடவுள் என்றால் குருடனுக்கு கடவுள் எப்படி புலப்படுவார்? நான் கேட்கிறேன் குருடனைவிடு, கண் தெரியும் நீ, எப்புலனை கொண்டு கடவுள் உணர்ந்தாய்? குருடனை பற்றி கவலைப்படுபவரே, உன் தத்துவப்படி குருடனை படைத்த்து யார்?)

 

           இப்படி வெந்தது, வேகாதது, அரைவேக்காடு என எல்லாவனையும் ஆழ விட்டதின் விழைவு நம் மண்ணில் நாம் இன்று அடிமை!

 

பார்ப்பான் வந்தான் நம்மை சூத்திரன் என்று சொன்னான், நீ எனக்கு தொண்டு செய்யவே படைக்கப்பட்டேன்னான். அதற்கு எதிர்ப்பு சில அறிவாளிகளிடமிருந்து கிளம்பியது, கேள்வி கேட்க துவங்கினர், கேள்வி கேட்க கற்று கொடுத்தனர். கேள்விகள் தொடர்நத்தும்  உடனேயே கிருஷ்ணன் சொல்றான்னு கிதையை காண்பித்து கடவுளே சொல்லிட்டாரு நீ சூத்திரன்னு அதனாலே நீ எனக்கு தொண்டு செய்தே சாவது உன் பிறப்பு கடமைன்னு அரசன் மூலமாக நடைமுறை படுத்தினான். எதிர்த்தவனை கழுவேற்றினான். ராமன் சூத்திர சம்பூகனை கொன்ன கதை, நந்தனை தீயிலுட்டு கொழுத்தியதை கதை என நம் சூத்திரத்தனமையை நியாயப்படுத்தி பல கதைகள் சொல்லி வழிபாட்டு உரிமையை பறிச்சான். நாம் கீழ்ச்சாதியாக பிறந்தது நம் குற்றம் என நம்ப வைத்தான். முற்பிறவியின் என்று எண்ண வைத்தான்.

                     பார்ப்பான் வந்து அறிவை தின்றான், நம் உழைப்பை தின்றான், நாம் நம் இனத்தவர்களை பட்டினி போட்டு, உழைத்து அவனுக்கு கொடுத்து நம் விருந்தோம்பல் பண்பை மெச்சி கொண்டே இருந்து விட்டோம். கற்சிலை(கடவுள்) என்ற தபால் பெட்டி வாயிலாக பார்ப்பானுக்கு உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் அழித்து நம் தோழர்களை சேரியில் தள்ளிவிட்டோம். பார்ப்பான் செய்தது சூழ்ச்சி என்றால் நம் இனத்தவர்கள் செய்தது துரோகம். பார்ப்பான் நம்மவர்களில் சிலரை நீ இத்தனை பேருக்கு மேல் சாதி என்று சாத்திர சூத்திரம் காண்பிக்க, நம்மவர்களும் எலும்புத்துண்டுக்கு அலையும் நாய் போல சாதிப் பெருமை பேசி, நம் உறவுகளை சாதிவெறி பிடித்து தன் கோர பற்களால் கடித்து குதறி வருகின்றனர் இன்று வரையில்.............!

                    

              பார்ப்பனீயத்தின் கொடுமை தாங்காமல் சிலர் தங்களை இடமாற்றம்(மன மாற்றமல்ல) செய்து கொண்டனர். கிருஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறினர். ஆனால், இன்றைய நிலை என்ன? கிருஸ்துவர்கள் இயேசுவு பிறந்த கொட்டகையின் பக்கத்துக்கு கொட்டகையிலிருந்து பார்த்தவர்கள் போல பீற்றி கொள்(ல்)கின்றனர். இஸ்லாமியர்கள் ஏதோ பாபரின் பேரன் போல பெருமை கொள்(ல்)கின்றனர். மதமாற்றத்தை விட மனமாற்றம் பெரிய சமூக மாற்றத்தை தரும் என்பதை உணர மறுக்கின்றனர்.

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர் இயேசு இம்மக்களின் பாவங்களை கழுவ அனுப்பி வைத்தார் என்று நம்பும் கிருஸ்துவர்கள், தமிழர்கள் சாதிச் சாக்கடையில் மூச்சு திணறி கொண்டிருந்த பொழுது இஸ்ரவேலில் என்ன செய்து கொண்டிருந்தார். சிலுவைக்காக காத்துக்கொண்டிருந்தாரா என்ன? தமிழர்களை சாதியக் கொடுமையால் தினம்-தினம் சிலுவையில் அடித்த்து போன்ற கொடுமைகள் நடந்த்தே(நடக்கின்றதே). பாவங்கள் போக்க வந்தவருக்கு எங்கள் வலி தெரியவில்லையோ?

 

அல்லா நபிகளை அனுப்பி வைத்தார், அவர்தான் கடைசித்தூதர், இதற்கு முன் வந்த ஈசா நபியும் கடவுளின் தூதர் என்று நம்பும் இஸ்லாமியர்களே! 400 ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு தூதர்களை அரபு பிரதேசத்தை நோக்கி அனுப்பிய உங்கள் அல்லா, சாதியச் சாக்கடையிலிருந்து எழ எமக்கு ஒரு தூதரை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி எழுமா? இல்லையா?

 

                     நாங்கள் பெருந்திரளாக அடிபட்டு, உதைப்பட்டு, சொரணைக்கெட்டு கிடந்த காலத்தில் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வராவிட்டால் எங்கள் நிலை என்ன? இன்று கிருஸ்துவர்கள் பயன்படுத்தும் பைபிளை பாருங்கள், ஒரே சமஸ்கிருத வாடை, கிருஸ்துவர்கள் மத்தியில் சாதிப்பற்று(இதற்கு எறையூர் போன்ற கிராமங்கள் எடுத்துக்காட்டு), இந்நிலையில் கிருஸ்துவத்தை, இன்னொரு இந்து முகம் என்றுதானே சொல்லத்தூண்டும். கிருஸ்துவர்கள் எத்தனைபேர் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுகின்றனர். அதென்ன? ஆல்பர்ட் நாடார், அந்தோணி பறையர். பார்ப்பன மதம் எங்கள் மொழியையும், பண்பாட்டையும் எப்படி சீரழித்த்தோ அதே போலத்தானே நீங்களும் வரிந்து கட்டி கொண்டு செய்கிறீர்கள். உங்கள் கோயிலில் வெகுவாக பயன்படுத்தப்படும் ஞானஸ்நானம், ஸ்தோத்தரம், பிரத்ர், இவையெல்லாம் தமிழா? நாங்கள் உங்கள் கிருஸ்துவ மத்த்தையும் இன்னொரு பண்பாட்டு படையெடுப்பாகத் தானே கருத முடியும். இவற்றில் பல இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும், இவர்கள் மத மறுப்பு திருமணம் என்றால் குதிக்காமல் இருப்பார்களா? தமிழ் பெயர்களை சூட்டுவார்களா?  இவை நீடித்தால் கிருஸ்துவன் இருப்பான், இஸ்லாமியன் இருப்பான், இந்து இருப்பான், தமிழன் மட்டும் இருக்க மாட்டான்.

 

தோழர்களே! விழிப்படையுங்கள் நமக்கு எதற்கு மதம்? மதம் நம்மை சீரழித்த்து போதாதா? ஒரு மத(ல)ம் போக்க இன்னொரு மத(ல)ம் தீர்வாகுமா?

புதன், 7 மே, 2008

திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு

மும்பையில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நானும் என் தோழர்களை அழைத்துக்கொண்டு உரை எழுச்சியோடு இருக்கும் என்று எதிர்நோக்கி காத்திருந்தோம். எழுச்சியோடு என்றால் என்ன?
1) தன்னிலை மறந்த தாழ்த்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் பற்றி
2) மற்றவர்களைவிட தாழ்த்தப்பட்டவர்கள் அதிகளவில் சாதி ஒழிப்பில் ஈடுபட வேண்டியதன் கட்டாயம்.
3) எம்மதம் நம்மை தாழ்த்தி, நம் அடையாளங்களை அழித்து நம் தனித்துவத்தை ஒழித்த்தோ, அம்மத சூழ்ச்சியிலிருந்து வெளிவர வேண்டிய கட்டாயம். இந்துத்தவத்திலிருந்து விடுபட்டு வரவேண்டிய நிர்பந்தம்
4)பகுத்தறிவின் தேவை.
5) நமக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்களாகிய அம்பேத்கர் போற்றிய பெரியார், பெரியார் மதித்த அம்பேத்கர் பற்றிய குறிப்புகள்.
6) சாமியார்களிடம் ஏமாந்து திரிவதால், நம் அகச்சூழல் மற்றும் நம் புறச்சூழல் பாதிக்கபடுவது குறித்து.
7) பகுத்தறிவின் தேவை.
8) போராட வேண்டிய சூழல்.
9) வாழ்க்கை முறை மேம்பட அரசியல் அதிகாரம்.
10) தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே நாம் காட்டும் பாகுபாட்டை ஒழிப்பது

முதலான கருத்துக்களை முழங்குவார் என்று எதிர்பார்த்தோம். அதை திருமாவிடம் தெரிவிப்பதற்காக நாங்கள் பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்த துண்டுபிரசுரமும், அத்தோடு சேர்த்து நாங்களும் ஒரு காகித்த்தில் மேற்சொன்ன கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு மேடையில் அமர்ந்திருந்த ஒரு தோழரிடம் கொடுத்தோம். அதை அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழரிடம் கொடுத்தார். அந்த தோழரோ அதை படித்து பார்த்துவிட்டு படித்து பார்த்துவிட்டு தன் சட்டைபையில் வைத்து கொண்டார். (பிறகு நானே நேரடியாக சென்று அந்த தாள்களின் இன்னொரு பிரதியை திருமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்,என்பது இன்னொரு செய்தி)
இது எப்படிபட்ட சூழல்! தோழர் திருமா சிந்தித்து பார்க்க வேண்டும். தங்களோடு களம் நின்று சாதி ஒழிக்க ஆயத்தாமாய் இருக்கும் என் போன்ற தோழர்களின் கருத்துக்கள் கூட திருமா வரை போக்க்கூட அனுமதிக்கமுடியாத இந்த மாதிரியான கொள்கை அரவேக்காட்டுகளை வைத்துக்கொண்டு நாம் எதை அடையப் போகிறோம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். ஆனால், இதே போன்று பலர் எல்லா இயக்கத்திலும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும். சாதி ஒழிப்பு, சமத்துவம் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இவர்கள் களைகள்,. இவர்கள் கண்டிப்பாக களையப்பட வேண்டியர்கள், அல்லது திருத்தபட வேண்டியர்கள்.
தோழர் திருமா பேசும் போது குறிப்பிட்டார், “எந்த சமூகம் தங்கள் தலைமை யாரென சரியாக தேர்ந்தெடுக்கவில்லையோ அது உருப்படவே செய்யாது” என்று. உண்மை. ஆனால், ஒரு நல்ல தலைமையின் கீழ் கொள்கை-பிடிப்பு, கொள்கை தெளிவில்லாதவர்கள் இருப்பார்களேயானால், அந்த தலைமையின் மேலான நோக்கமே சிதைக்கப்படக்கூடிய அதிகப்படியான வாய்ப்புண்டு என்பதை தோழர் திருமா மறந்து விடக்கூடாது.
நம் மக்கள் அரசியல் படுத்தபட வேண்டும், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று திருமா கூறினார். கண்டிப்பாக நடக்க வேண்டும். ஆனால், மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவரும் முன் அவர்களை களப்போராளிகள் கொண்டு பிரச்சாரத்தின் மூலம் கொள்கையில் செம்மை படுத்த வேண்டும். தெரிந்த எதிரிகளை விட நமக்கு தெரியாத துரோகிகள் பலர் உண்டு,என்பதை மறந்து விடக்கூடாது. எத்தனை தாழ்த்தபட்டவன் ஆர்.எஸ்.எஸுக்கு ஆதரவாக செயல்படுகிறான். கொள்கை தெளிவு பெற்று எழாத வரை, திரளாத வரை உரிமை பெற்றாலும், நம் தோழர்கள் தொலைத்து விடுவார்களேயன்றி வேறென்ன செய்வார்கள். அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும், சரிதான். இந்துத்வம் தலைக்கு ஏறியவர்களையும் கட்சியில் சேர்ப்பது, நம் முன்னேற்றதுக்கு நாமே போட்ட தடையாக போய் முடிய வாய்ப்புள்ளதல்லவா?
இந்துத்வத்திற்கு அடிபணிபவன் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் அடிப்படை உறுப்பினராக கூட வாய்ப்பு கிடையாது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சார்ந்தவன் மதபண்டிகளில் கலந்து வாழ்த்து தெரிவிக்க கூடாது. மாறாக நம் இனத்திற்கு தேவையான கருத்துக்களை எங்கும் தெரிவிக்க தயங்க்க்கூடாது. அதற்காக மற்ற மதங்களில் சேரலாம் என்பது பொருளல்ல.மற்ற மதங்கள் இந்து மத்த்தின் அளவு கொடுமை படுத்தவில்லை அவ்வளவுதான்
“அறிவாளி அடுத்தவன் தவற்றிலிருந்து தன்னை திருத்தி கொள்வான்
முட்டாள் தன் தவற்றிலிருந்து திருந்துவான்.”

இந்துத்தவம் நம் பல்லாயிரம் ஆண்டுகளாக கொடுமை படுத்தியிருக்கிறது ஆதலால் நம் முதல் எதிரி இந்துத்தவத்தை கடைபிடிப்பவன். மற்ற மதங்களை பார்ப்போமானால் உலக வரலாற்றில் இரத்தம் அதிகம் சிந்தியதற்கு காரணமே மதங்கள்தான்(அது யூத மதமாகட்டும், அல்லது அதனின்று தோன்றிய கிருஸ்துவ இஸ்லாமிய மதமாகட்டும், இஸ்லாமிய மதங்களாகட்டும், அல்லது புத்தமதமாகட்டும்). ஆனால் நம் தோழர்களை விநாயகர் சதுர்த்தியை ஆண்டுக்கணக்காக கொண்டாடுகிறார்கள். தோழர் திருமா இது நம் தோழர்களை திசை திருப்ப இந்து மத அமைப்புகள் செய்யும் சூழ்ச்சி என்பதை அறிந்து இதை எப்படியாவது தடுத்து நிறுத்த திட்டங்கள் தீட்ட வேண்டும்
நாம் நம்மை செம்மை படுத்திக்கொண்டு மனிதனாக மாற வேண்டும் என்றால் மதங்கள் விட்டொழிக்க வேண்டும் என்று தோழர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டனா? அவன் அம்பேதகர் ஆளுப்பா! பெரியார் பேரன்யா! என்ற நிலை வருமளவு நம் தோழர்கள் கற்க வேண்டும். சிந்திக்க வேண்டும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்ல அனைத்து தமிழ் அமைப்புகளும் பாடுபட வேண்டும்.

குறிப்பு: திருமாவுக்கு சிந்திக்க கற்று தர வேண்டியதில்லை, ஆனால் இந்த அரசியிலில் உள்ள உளவியல் ரீதியிலான பிரச்சினைகளில், சில விடுபட்டு போக வாய்ப்புண்டு. நம் தோழர்கள், கொள்கை தெளிவில்லாமல் சிறுத்தைகள் என்று அழைத்த உடனேயே விசிலடித்து ஆர்ப்பரிக்கும் விசில் குஞ்சுகளாக மாறிவிடக்கூடாது. தோழர்களை கொள்கை தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு கொள்கை உடன்பாடு உள்ளவர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். கொள்கை தெளிவுள்ளவர்க்ளுக்கு பதவி ஒரு பொருட்டாக இருக்காது என்றே கருதுகிறேன்.

செவ்வாய், 29 ஜனவரி, 2008

மனிதம் போதும், கடவுளும் வேண்டாம்,சாதியும் வேண்டாம்,மதமும் வேண்டாம்.


பக்தர்கள் சிந்தனைக்கு!!!!
1) உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளை படைத்தது யார்?
2) நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
3) குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்?
4) கடவுளர் படை இருக்க,எல்லையில் காவற்படையினர் ஏன்?
5) எல்லாம் வல்ல கடவுளின் கோயிலுக்கு பூட்டும், காவலும் ஏன்?
6) எல்லாமே அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும் எவன் செயல்?
7) ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளி-தொழிலாளி,ஏழை-பணக்காரன், பார்ப்பான்-சூத்திரன் என்ற ஏற்றத்தாழ்வு எதற்கு?
8) பல அவதாரங்கள் எடுத்த கடவுள், தேவதூதர்கள் அனுப்பிய கடவுள், இன்றைய சூழலில், தீவிரவாதத்திற்கு எதிராக், லஞ்சத்திற்கு எதிராக அவதாரம் எடுப்பதோ, தூதர்களை அனுப்புவதில்லையே ஏன்?
9) அவனின்றி ஓரணுவும் அசையாது எனில், கோயில் சிலை களவு போவதேன், மக்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவது ஏன்?
10) கடவுள் தேர் மனிதனால் இழுக்கபடுவது ஏன்?
11) அன்பே உருவான கடவுளுக்கு ஆயுதங்கள் எதற்கு?
12) குழந்தைகள் கட்டுப்பாடுக்கு பிறகு கடவுளால் குழந்தை படைக்க முடிவதில்லையே ஏன்?
13) கடவுள் தூணிலும் இருப்பான் எனில் மலத்தில் இருப்பானா?
14) ஆண்டவன் ஆணா? பெண்ணா?
15) கடவுளுக்கு பெண்டாட்டி பிள்ளை எதற்கு?
16) திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனில் காதலும், கள்ளக் காதலும் எஙகு நிச்சயிக்கப்படுகிறது?
17) விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று சொல்பவர்கள் நோய் வந்தால், மருத்துவரிடம் செல்வது ஏன்?
18) தீங்கு என்பது சாத்தானின் செயல்கள் என்று கூறுபவர்கள், மக்களுக்கு தீங்கு செய்யும் அந்த சாத்தானை கடவுளால் ஏன் கொல்வ இயலவில்லை என்று ஏன் சிந்திப்பதில்லை?
19) தனக்காக சுயநலத்தோடு பிரார்திக்கும் பக்தர்கள், இலங்கையில் நம் உறவுகள் கொல்லப்படாமல் இருப்பதற்குஎனோ பிரார்திப்பதில்லை?
20) சரசுதியை வணங்கும் இந்நாட்டில் தற்குறிகள் இருப்பது ஏன்?
21) இலட்சுமியை வணங்கும் இந்நாட்டில் வறுமை இன்னும் பரவ்லாக இருப்பது ஏனோ?மாறாக இவர்களை வணங்காத அமேரிக்கா,ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கல்வித்துறையிலும், பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பது ஏனோ?
22) ஆத்திகனை படைத்தது கடவுள் என்றால், நாத்திகனை படைத்தது யார்?
23) கடவுள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றால், கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் அவன்தான் காரணமோ?
24) திருச்செந்தூரில் முருகன் இருந்த்தால் சுனாமி இல்லை என்று கூறும் பக்தர்களே, சென்னையில் ஓம் சக்தி இருந்தும் சுனாமி வந்தாது ஏனோ?
25) கடவுளுக்கு பெயர் வைத்தவன் யார்?
26) மதச்சண்டைகள், சாதிச்சண்டைகள் பெருகி கொண்டிருக்கும் இந்நேரத்தில் கடவுள் மக்கள் முன் தோன்றி நான் மதங்களுக்கும், சாதிக்கும் அப்பாற்பட்டவன் என்று இச்சச்சர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமல்லவா?
27) மயிரை-மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கை, கால்களை ஏன் வெட்டி காணிக்கை செலுத்துவதில்லை?
28) திருப்புகளைப் பாடபாட வாய் மணக்கும் என்று கூறும் பக்தர்கள் பல் விளக்காமல் இருப்பார்களா?
29) பிள்ளையார் போல பிள்ளை பிறந்தால், கொஞ்சுவீர்களா? அஞ்சுவீர்களா?
30) மணத்திற்கு மனம் பாராமல், சாதி பார்க்கும் பெற்றோர்களே, மருத்துவமனை இரத்த-தேவைக்கு ஏனோ சாதி பார்ப்பதில்லை?
31) கடவுள் படங்களை நாத்திகர்கள் எரித்தால் கூச்சல் போடும் பக்தர்கள், சாமி படம் போட்ட பட்டாசை கொழுத்தலாமா?
32) நோய் கடவுளின் தண்டனை என்றால், நோய்க்கு மருந்து கொடுக்கும் மருத்துவர் கடவுள் எதிரியா?
33) பெண் சாமிக்கு ஆண் பூசாரி சேலை கட்டலாமா?
34) ஐயப்பன் கோயிலில் பெண் நுழைந்தால் தீட்டு என்றால், பெண் மூலம் பிறந்த ஆண் தீட்டில்லையா?
35) கடவுளுக்கு வருடம் ஒரு கல்யாணம் செய்து வைக்கும் பக்தர்களே, இதுவரை அந்த கடவுளர்க்கு பிறந்த குழந்தைகள் எத்தனையோ?
36) பெண்ணின் உடம்பில் இருந்து பிறந்த அழுக்குருண்டை (பிள்ளையார்) எப்படி கடவுளாக முடியும்?
37) தன் உடம்பில் உள்ள அழுக்கை வைத்து குழந்தை செய்யும் அளவுக்கு அளுக்கு இருந்ததென்றால் எத்தனை நாள் குளிக்காமல் இருந்தாளாம் அந்த க்டவுள்?
38) கன்னிக்கு பிறந்தவன் கடவுள் என்றால்? கிருஸ்துவர்கள் கர்ணனையும், இந்துக்கள் இயேசுவையும் கடவுளாக ஏற்று கொள்ளத் தயாரா?
39) பூணூல் போடுபவன் மேல் சாதி என்றால், பஞ்சு தயாரிப்பவனும், நூல் நூற்பவனும் அவனைவிட மேல்ச் சாதியில்லையா?
40) பக்தனே நீ கை வைக்காமல் கற்(கடவுள்) சிலை ஒரு அடி நகருமா?
41) பிள்ளை பெறுவதற்கு அரசமரம் சுற்றும் பெண்களே, பிள்ளை வேண்டாம் என்பதற்கு எந்த மரம் சற்றுவீர்கள்?
42) ஐயப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழக கடவுள்களையும், கோயில்களையும் என்ன செய்யலாம்?
43) நாற்பத்தோரு நாட்கள் நல்லவர்களாக் நடிக்கும் ஐயப்ப பக்தர்கள், பிற நாட்கள் ஏனோ ஒழுக்கதோடு இருப்பதில்லை? உங்கள் ஐயப்பனும் தட்டி கேட்பதில்லை?
44) தீக்குண்டம் மிதிப்பவர்கள் அதில் படுத்து உருண்டு காட்டுவார்களா?
45) பச்சை இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டி சாமியார்கள், பாலிடாயில் குடித்து காட்டுவார்களா?
46) சாமியாடுபவர்கள் மின்சாரம் பாயும் கம்பியை தொடத்தயாரா?
47) அம்மை நோயை தடிப்பது ஆத்தாளா? மருத்துவமனையா?
48) பக்தனே நீ கை வைக்காமல் உன் கடவுள் ஒரு அடி நகருமா?
49) அன்று பேசிய, நடமாடிய கடவுள் இன்று நடமாடுவதில்லையே ஏன்?
50) பக்தியுள்ளவன் படிக்காமல் பாஸ் ஆவானா?
51) கோபியர் கொஞ்சிய கண்ணன் இன்று பிறந்தால் எத்தனை பக்தியுள்ள பெண்கள் தயார்?
52) தூதர்களை அனுப்பிய கடவுள் தானே வருவதில்லையே ஏன்?
53) இயற்கை கடவுளின் அற்புதம் என்றால் ஏழ்மையும்,ஊனமும் அவன் செயல் இல்லையா?
54) ஆடு கோழி ஆகிய மிருகங்களை கடவுளுக்கு பலியிடும் பக்தர்கள் ஏனோ புலி, சிங்கங்களை பலியிடுவதில்லை.
55) விழியால், புலனால் அறிய முடியாதவன் கடவுள் என்றால் கடவுள் உண்டென்று நீ எதை கொண்டு நம்புகிறாய்.
56) இயற்கை என்னும் அற்புதத்தால் நம்புகிறாய் என்றால்! செயற்கை அற்புதங்களான அறிவியல் கண்டுபிடுப்புகளை கடவுள் ஏனோ படைக்கவில்லை?
57) சோதிடம் உண்மையென்றால் காவல்துறை எதற்கு?
58) விதி உண்மையென்றால் நோயை தடுக்கும் மருத்துவம் எதற்கு?
59) சோதிடம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் மணவிலக்கு கோருவதில்லையா?
60) தமிழன் வறுமையில், சாதியில் வாடி கொண்டிருந்த நேரம் இயேசு தமிழகத்தில் ஏனொ அவதரிக்க வில்லைச
61) கடவுள் தன் தூதனை ஏற்கனவே அரபுப் பிரதேசத்திற்கு அனுப்பியிருக்க அடுத்த தூதனை சாதி பிரச்சனையில் தவித்து நம் மக்களை விடுவிக்க ஏன் அனுப்ப வில்லை.