சனி, 24 ஜனவரி, 2009

(சுயமரியாதையுள்ள) தமிழர்களுடைய வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம்.-இந்தியாவின் குடியரசு தின விழா


26 சனவரி, 1950 இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல், போனால் போகட்டும் என்பதுபோல் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. (சாதி ஒழிக்கப்பட்டால் இந்து மதத்திற்கு இங்கு வேலை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?) . இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டபிறகும் இதை பற்றியெல்லாம் பேசி பழமைவாதியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களானால், நீங்கள் நானும் அடிமையாக உருவாக்கப்பட்டு


இன்று இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அடிமைகளாக திரிவதற்கு இவைதான் காரணிகள் என்று சொல்லத் தோன்றுகிறது.

இன்று பேச்சுரிமை இருப்பதாக கூறப்படும் இந்தியாவின் நிலை என்ன?எந்த உரிமையாக இருந்தாலும் அரசுக்கு ஒடுக்குவதற்கு உரிமை உள்ளது என்பதுதானே நிலை!


ஈழத்தில் தமிழன் என்பதற்காகவே கொல்லப்படுகிறான், நான் தமிழன் என்பதினாலேயே என்னுள்ளம் துடிக்கிறது குரல் கொடுக்கிறேன்.


இல்லை, இல்லை நீ தமிழன்என்பதற்காக குரல் கொடுக்கக் கூடாது. இப்படி நீ குரல் கொடுத்தால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும்.


இந்தியாவை தூண்டாடும் முயற்சியாக கருதப்படும், கைது நடவடிக்கைகள் ஏற்படும், உங்கள் குரலை ஒடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம், என்றெல்லாம் அரசு பொறுக்கித்திண்ணிகள் குரல் கொடுக்கிறார்கள்.


சரி நான் குரல் கொடுக்கவில்லை? இந்திய அரசே நீ என்ன செய்யப்போகிறாய்? என்றால், கொஞ்சம் பொறுத்திரு, அங்கே இருக்கும் உன் தமிழன உறவுகளின் மொத்த உயிரையும் சிங்கள பேரினவாதம் விரைவில் துடைத்தெரிய நாங்கள் உதவி புரிகிறோம், அவர்கள் அங்கு உயிரோடு போராடிக் கொண்டிருந்தால்தானே நீ குரல் கொடுப்பாய், உனக்கு அந்த பிரச்சினையை நாங்கள் வைக்கமாட்டோம் , நீ வெகு காலம் துடித்து கொண்டிருக்க வேண்டாம் என்பது போல் இந்திய அரசு கொக்கறிக்கிறது, இங்குள்ள அரசியல்வாத, பிழைப்புவாத தமிழர்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு அச்சப்பட்டு, தமிழர்களை காட்டிக் கொடுக்கிறார்கள், அவன்(இந்திய பார்ப்பன, பனியா வடநாட்டுக் கும்பல்) குண்டுகளை கூட்டிக் கொடுக்கிறான்.


இவையெல்லாம் பார்த்து கொண்டு தமிழன் அமைதியாகவே இருக்க வேண்டும்,ஏனென்றால்

இந்தியா ஒரு மாபெரும் குடியரசு!

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு!!

சரி அப்படி என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது இந்தியா?


  • பல்வேறு சாதிகளாக, பிரிந்து கிடந்தாலும், மொழி, இன வேற்றுமைகள் இருந்தாலும் தீண்டாமைக் கொடுமைகளை தொடர்ந்து மாநில வேற்றுமைகள் இன்றி கடைபிடித்து வருகிறது.

    இந்த ஒடுக்குமுறைகளை ஒடுக்குவதற்கு துப்பில்லாமல் இந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒற்றுமை குலைக்கலாமா, நாம்.


  • கர்நாடகம், ஆந்திரா, கேரளம் போன்ற மாநிலங்கள் மொழிவாரியாக வெவ்வேறு மாநிலங்களாக வேறுபட்டு இருந்தாலும், ஒற்றுமையோடு தமிழகத்துக்கு குடிக்க நீர் தரமாட்டோம் என்ற வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றுகிறதே!

    இந்த ஒற்றுமையை பேணி காக்க உயர்நீதிமன்ற தீர்ப்பை கூட அமல்படுத்தாமல் திராணியற்று கிடக்கும் இந்திய அரசின் ஒற்றுமையை (அப்)பாவி தமிழர்களே குலைக்கலாமா?
  • இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் மட்டும் வருந்தும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஒற்றுமையாக மௌனம் காக்கும் வேற்று மாநில மக்களின் ஒற்றுமையை குலைக்கலாமா, தமிழர்களே?


தமிழனின் உணர்வு புரியாத நாடு தமிழனின் நாடுதான். ஏனென்றால், அப்படித்தான் தாளில்/சட்டபுத்தகத்தில் வரையறுக்கப்பட்டுவிட்டது, அப்படியிருக்க நீங்கள் இந்திய வல்லாதிக்க நாட்டை எதிர்க்கலாமா?


தமிழர்களே உங்களுக்கு ஒற்றுமையுணர்வு இல்லை, இந்தியா வல்லரசு நாடாக கனவு கண்டு கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் சாதாரண உங்கள் அற்ப தமிழ் உயிர்ளுக்காக குரல் கொடுக்கிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம், இந்தியாவின் வெளியுறவு/உள்ளுறவு கொள்கையே தமிழனின் எச்சில் இலைக்கு சமானமாக மதிப்பதுதான், இதை புரிந்து கொள்ளாமல் இந்திய வல்லரசு நாட்டை எதிர்க்கிறீர்களே?


சரி இந்தியா வல்லராசும் லட்சணத்தை கீழ் வரும் கட்டுரையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் என்ன கொடி ஏற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



.

செய்தி ரசம்

Related Article:

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!
India grows so does the Inflation - Don’t talk about Indians!!!
India is First always!!! The record breaking Three seconds

================================================
"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை
நன்றி: இரும்பு

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

டிசம்பர் "புதிய ஜனநாயகம்"
"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து


திங்கள், 19 ஜனவரி, 2009

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

இன்றைய சிக்கலான சூழலில் தமிழுணர்வோடு மின்னஞ்சல்தான் எழுத முடிகிறது. தமிழுணர்வு என்பது கையாலாகத்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டோ? என்று கூட தோன்றுகிறது. தமிழன் யார்? தமிழனின் பழமை/ பெருமை என்ன? இதற்கு முன் நடந்த பிரச்சினைகள் என்ன? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ன செய்யவில்லை? மற்றவர்கள் என்ன சாதித்தார்கள்? என்ன துரோகம் செய்தார்கள்? என்றெல்லாம் பட்டியலிட்டு காட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து நம் துயரை மேலும் துயராக்க விரும்பவில்லை. அல்லது பட்டியலிடுவதற்கு எனக்கு போதிய அறிவோ, என்னிடம் தகவலோ இல்லை என்று கூட நினைத்து கொள்ளலாம்.

ஆனால்,

இந்திய வல்லாதிக்கம் திட்டமிட்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி விட்டது, கோரிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்திருக்கிறான். நீங்களும் உங்களுடைய ஏமாற்றம் என்ற ஒற்றைச்சொல்லில் அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

எம்மை பொருத்தவரை போராளிகளும் தமிழர்களே! அவர்கள் போராளிகளாக தூண்டிய சிங்கள இனவெறிதான் தமிழின நீதிமன்றத்தில் குற்றவாளி. இத்தனை ஆண்டுகாலமாக கொடுமைகளை இழைத்துவிட்டு, இப்பொழுது உரிமைக்கு போராட வந்தவர்களையும் அழிப்பது என்பது சிங்கள இனவெறியின் வெற்றிதானே தவிர வேறில்லை. இதற்கு இந்திய அரசு துணைபோவதுஎன்பது தமிழர்களை இளித்தவாயர்கள் என்று கருதுவதுதானேயன்றி வேறென்ன இருக்க முடியும்? தமிழர்கள் இந்திய/பார்ப்பன வல்லாதிக்கத்திற்கு கட்டுபட்டு மொழியை, பண்பாட்டை தன்னடையாளத்தை இழந்தது போதாதா? உயிரையும் இழக்க வேண்டுமா,என்ன? ஈழத்தமிழன் என் சகோதரன் அதை எத்தனை வல்லாதிக்கம் வந்தாலும் மறைத்துவிட முடியாது. எத்தனை பார்ப்பன வந்தேறி கூட்டம் அறிக்கை விட்டாலும் அழிக்க இயலாது.

இத்தனை வலிதோய்ந்த சொறகளுக்குள்ளும் இருப்பது கீழுள்ளவைதான்

ஈழத்தமிழனுக்கு செய்யும் துரோகம் என்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்யும் துரோகம், அவர்கள்தான் தமிழின் பெருமை, தமிழை உலகுக்கு எடுத்து சொன்னவர்கள், என்னை பொருத்தவரை இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமைப்பட்டதில்லை, ஆனால் எதிர்க்கவில்லை. ஆனால், இது தொடருமானால் அதுவும் நிகழ வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறியாதது அல்ல. இது என்னுடைய சொந்த குரல் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் கண்ணில் வழியும் கண்ணீரில் உள்ளது, சொற்களாக வெளிப்பட்டுவிடாமல் பாதுகாப்பது உங்கள் கடமை. திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் பொழுது சொன்ன காரணங்கள் தீர்க்கபடாமல் இருப்பதாக கூறினார். ஆனால், இன்றைய நிலையில் காரணங்கள் கூடிக்கொண்டே இருக்கின்றன துரோக பட்டியலில்

இறுதியாக ஒன்றே ஒன்று,

நீங்கள் தமிழர்களின் முதல்வர், இந்திய துணைக்கண்டத்தில் ஏதோ ஒரு பகுதியை நிர்வகிக்கும் நிர்வாகி அல்ல. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

சனி, 3 ஜனவரி, 2009

நீங்களெல்லாம் மனிதர்களா? உங்கள் சகோதரன் படும் துயரத்தை கேட்டும் அமைதியாக இருக்கும் நீங்கள் மனிதர்களாக இருக்க முடியுமா?


       "உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும் என்கிறார்கள்.

       ஆனால் மனிதனின் முகவரி சிரிப்பில் இல்லை கண்ணீரில் இருக்கிறது."

சக மனிதனின் துன்பத்திற்காகக் கண்ணீர் வடிப்பவனே தன்னை மனிதன் என்று நிரூபித்துக் கொள்கிறான்.

சக மனிதரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வது சமூகப் பண்பாடு.

இன்பத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வருவார்கள் ஏனெனில் அது பயனுள்ளது.

 துன்பத்தில் பங்கு கொள்வதுதான் உயர்ந்த பண்பாடு.


புன்னகையில் பங்கு கொள்ள வருபனல்லன், கண்ணீரை பகிர்ந்துகொள்ள வருபவனே உண்மையான நண்பன்.

 இந்த உலகம் வாழ்வது விண் மழையால் அல்ல, கண் மழையால்!

மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும். உண்மைதான்.

ஆனால், சக மனிதனின் துயரம் கண்டு சிலர் சிரிக்கிறார்களே அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?

துன்பத்திலும் பணக்கார துன்பம்,ஏழைத் துன்பம் என்று பேதம் பாராட்டுகிறார்களே!

பணக்காரன் துன்பத்தில் பங்கு கொள்ள வரும் ஏழையின் துன்பத்தை ஏளனம் செய்கிறதே!(வலிந்து ஆதரவு தரும் இந்தியம் பேசும் பொறுக்கி நாய்கள் தமிழர்களை வஞ்சிக்கிறார்களே- மகிழ்நன்)



இந்த மனிதர்கள் எவ்வளவு கொடூரனமானவர்கள்! பிறர் அழுவதை பார்த்து சிரிப்பவர்கள், தாம் சிரிப்பதற்காக பிறரை அழ வைப்பவர்கள், மற்றவர்கள் கண்ணீரை வார்த்து தங்கள் புன்னகைகளை வளர்ப்பவர்கள், இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

மலர் தோட்டத்து பூக்களையும்...பனித்துளியையும் பார்த்த கவிஞர் அர்ஷ் மல்ஸியானி இப்படித்தான் எண்ணினார்,

பூக்களும் பனித்துளியும்....புன்னகை கண்ணீரும்.... மலர்த் தோட்டத்தில் மனித நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

பனித்துளியின் துக்கத்தை விசாரிக்கப்

பூவனத்தில் யார் இருக்கிறார்கள்?

பாவம்! இந்த ஏழை அழுதால்

அரும்புகள் சிரிக்கின்றன.

                                              -         அப்துல் ரகுமானின்

                                     மகரந்த சிறகு நூலிருந்து

வெள்ளி, 2 ஜனவரி, 2009

தமிழர்களே! உங்களை நீங்களே செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்

தமிழர்களே! உங்களை நீங்களே செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்

பாலஸ்தீனம் மீதான தாக்குதல் இந்தியா கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா

 

என்று தேர்தல் பரபரப்புக்கு நடுவிலும் அறிக்கை விடும் ஜெயலலிதா என்ற பாப்பாத்தி ஈழத்தமிழர்கள் அங்கு கொன்றொழிக்கப்பட கண்ட மனம் பதைபதைக்க எந்த ஒரு அறிக்கையும் வெளியடக் காணோமே.

என்ன  நெஞ்சழுத்தம், என்ன பார்ப்பன கொழுப்பு. நம்மை அறிவற்றவர்கள் என்று முடிவு கட்டிவிட்டுதான் நம்மிடம் ஓட்டு பொறுக்க வருகிறார்கள். எச்சரிக்கை!!!!

 

பாலஸ்தீனத்திற்கு ஏன் குரல் கொடுத்தாய்? என்பதல்ல நம் கேள்வி, தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாக உன் நிலைப்பாடு ஏன் இல்லை? என்பதே நம் ஆதங்கம்.

 

காலம், காலமாக ஆபாசங்களையும், பொய்களையும் புராணங்கள், கடவுளர் கதைகள் என்று கூறி நம்மை நம்ப வைத்து மடையர்களாக்கி, இன்னும் நம்  மக்கள் மடையர்களாக இருக்கும் திமிரில்தானே இந்த கும்பல்கள் இப்படி நன்றிகெட்டு திரிகின்றன.

 

இதில் திமுக மட்டும் என்ன விதிவிலக்கா? அந்த கூட்டமும் ஓட்டு பொறுக்க திருமங்கலத்தில் காத்து கிடக்க போய் விட்டது.

 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் சில காலம் நாடகம் ஆடி, இப்பொழுது நாடகத்தை வைத்து ஓட்டு வசூல் செய்ய கிளம்பியாகிவிட்டது.

 

சாதிய சாக்கடையில் உங்களை இன்னும் அழுத்தி ஓட்டு பொறுக்க வருகிறது.

இந்த ஓட்டு பொறுக்கி கட்சிகள். இனவுணர்வை கொன்று சாதிவெறி, கட்சி வெறி ஊட்ட வருகிறது இந்த பார்ப்பன, பார்ப்பன அடிவருடி கும்பல்.

 

தமிழர்களே தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். நமது அரசியல் தலைவர்களாக நாம் கருதிக் கொள்ளும் இந்த பொறுக்கிகள் ஒட்டு பொறுக்க வரும் பொழுது செருப்பை கழட்டி அடியுங்கள், அது அநாகரீகம் என்று நாம் கருதுவோமானால், ஓட்டு போடுவதையாவது தவிர்த்து விடுங்கள். குறைந்த பட்சம் உங்கள் உணர்வுக்காவது மதிப்பு கொடுங்கள்.

 

இல்லையேல் நீங்கள் அநாகரீகமாக கருதி ஒதுக்கி வைத்த செருப்பாலேயே தம்மை தாமே அடித்துக் கொள்ளுங்கள்.

 

பதிவுலக அன்பர்களே! இது குறித்து கொஞ்சம் காட்டமாகவே பதில் எழுதுங்கள்.

இப்பதிவு மக்கள் இவ்வளவு மடையர்களாக இருக்க முடியுமா? இவ்வளவு சகித்து கொள்ள முடியுமா? என்ற சினத்தினால் எழுந்தது.