ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நீங்கள் வணங்குவது அறியாமையைத்தானே - அம்பேத்கர்

ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ளும் தலித்துகளை நோக்கி,
நம்முடைய மக்களின் எத்தனை தலைமுறைகள் இப்படி இந்த ஆலயப் படிக்கட்டுகளில் தம் நெற்றியை தேய்த்து தேய்த்து, தேய்ந்து போயின. எந்த காலத்திலாவது இந்தக் கடவுள் உங்களுக்குக் அனுதாபம் காட்டியதுண்டா? அதன் மூலம் என்ன பெரிய பலன் கிட்டியுள்ளது? தலைமுறை தலைமுறையாக இந்தக் கிராமத்தின் குப்பைகளைக் கூட்டியதற்கு இந்தக் கடவுள் உங்களுக்கு கொடுத்ததென்ன? செத்த மாட்டைத் தானே, நீங்கள் வணங்குவது கடவுளை அல்ல, உங்கள் அறியாமையைத்தானே…. – அம்பேத்கர்

புதன், 14 ஜூலை, 2010

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு....ஆமாம், அதற்கான வாய்ப்பை சமூக நீதி தளத்தில் முன்னோடி என்று மார்த்தட்டி கொள்ளும் தமிழகத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது....

"மானமிகு சிங்கள் இனவெறி இராணுவத்தின் மதிப்புமிக்க மானங்கெட்ட செயலை அன்போடு வன்மையாக கண்டிக்கிறோம்,"என்று கண்டிக்காததால், தமிழக ஊழல் பெருச்சாலிகளின் அதிகார வர்க்கம் சீமானை கைது செய்திருக்கிறது.

கையூட்டு கொடுத்தால் கையை கூட வெட்டி கொடுத்து விடும் இன்றைய நேர்மையான ஊழல் அரசியல்வாதிகளுக்கு, இனத்தை காட்டி கொடுப்பது பெரிய செயலா? நாம்தான் புரியாமல் இவர்களை நோக்கி வெற்றுக் கூச்சல் போடுகிறோம்.

சோனியா என்னும் இரக்கத்தின் உருவை கொண்டு, தமிழை கொன்ற தமிழ்நாட்டில், தமிழனை கொன்ற ஓராண்டில் மாநாடு நடத்தும், மதிப்பிற்குரிய டாஸ்மாக் புகழ் அரசிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.

ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க குரல் கொடுக்கும் தமிழர்களை நோக்கி கண்டிக்கும் குரல் கொடுக்கும் மானமிகு ( ஆமாம் அதென்ன மிகு? ) அமைச்சர் பெருமக்களுக்கு ஒரு கேள்வி, தன்னை அடிமையாக அறிவித்துக் கொண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் தங்கள் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பிடம் கேட்டுப்பாருங்கள்...

தனது வீரத்தை, சமூக நீதி கோட்பாட்டை ஏன் உத்தபுரத்தில் நிலைநிறுத்த முடியவில்லை என்று? வீராதி வீரர்கள் இலங்கைக்கு சென்று காப்பாற்றி வர முடியுமா என்று எள்ளி நகையாடும் உங்கள் தலைவருக்கு தில்லியை விட உத்தபுரம் தொலைவில் இல்லை என்ற செய்தி தெரியாதா? ஆமாம், தில்லிக்கு போனால் பதவி கிடைக்கும்.....உத்தபுரத்திற்கு போனால்..................?
இதைத்தான் ................வக்கில்லாதவனுக்கு.......................ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க தோழர்கள் நிரப்பிக் கொள்ளவும், எனக்கு மறந்து போச்சு....

(தமிழர்களுக்கு ஓங்கி குரல் கொடுப்பவர்களின் விழிகளுக்கும், செவிகளுக்கு உத்தபுரம் அவலம் போய் சேரவில்லையோ என்ற கவலை எமக்குண்டு, சேர்ந்தால் அதற்கும் குரல் கொடுங்கள்.....தயவு செய்து...)


ஆனாலும், இந்தியா என்னும் முதலாளிகளின் கூட்டமைப்பில், காசுமீரம், தண்டகாரண்யா காட்டில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் உரிமைக்கான போராட்டங்களை அங்கிருக்கும் பொம்மை அரசுகள் எப்படி காட்டி கொடுக்க வேண்டுமென்று முன்மாதிரி ஒன்றை ஒரு மாதிரி ஏற்படுத்தி தந்திருக்கும் தமிழ்நாட்டு அரசை அதிகார வர்க்க ஹிட்லர்-முசோலினி சகோதர, சகோதரிகளின் சார்பாக பெருத்த வருத்தம் கலந்த மகிழ்ச்சியோடு பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்....

அதோடு, இந்தியாவில் இருந்த பொடா, போடா சட்டம், தடா சட்டம், என்றும் இருக்கும் தாடா சட்டம்(லஞ்சம்) என எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் சீமானின் கைது,


இந்திய பனியா கூட்டம் கட்டியமைத்திருக்கும் எதிரி பாகிஸ்தானை விமர்சிப்பவர்களை சிறையில் தள்ளும் சட்டம் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு வர இருக்கிறது..........

இதை இப்பொழுது, இந்த சட்டத்தின் முன்வரைவு தீர்மானத்தை கலைஞர் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் இணைந்தே நேரடியாக ஒளிபரப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை....கூட்டு களவாணிங்கதானே இவிங்க

திங்கள், 5 ஜூலை, 2010

இஸ்லாமியர்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா?

சில/பல தமிழ்த்தேசிய அன்பர்கள் உட்பட (சில உரையாடல்களின் )

உலக ஊடகங்களின் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் உலகத்தின் மாபெரும் அச்சுறுத்தல்.....என்ற மூடநம்பிக்கையை சுமந்து கொண்டிருக்கிறோம்....

இந்தியா என்னும் கூட்டமைப்பு இன்றைய சூழலில் சந்தித்து வரும்......இந்துத்தவ பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு சிறிய தொகுப்பு............

தயவு கூர்ந்து இந்த இணைப்புகளை கண்டிப்பாக படிக்கவும்.....




கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...4.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...5

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...6.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...7

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...8.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...9

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...10.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...11

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...12.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...13

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...14.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...15.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...16.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...17.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...18.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...19.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...20.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...21.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...22.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...23.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...24.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...25.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...26.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...27.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...28.

மகிழ்நன்,
9004840300 (மும்பை எண்)
9042274184 ( சென்னை எண்)

ஞாயிறு, 30 மே, 2010

கடவுளை கொல்ல வழி சொல்லுங்கள்

ஆமாம், பிறக்கும் உயிரனைத்தும் இறந்துதானே தீரணும்.......

1) பிஞ்சு மழலை..பிறந்தநாளே இறப்பது,

2) என் சிறுவயதில் வீட்டின் அருகே தலைநசுங்கி லாரி டயரில் இறந்த குழந்தை...

3) 10 பேர் வெட்ட கையறு நிலையில் வெட்டுப்பட்டு பரிதாபமாய் செத்துப்போனவன்........

4) ஈழத்தில் புலிகளை விடுங்கள் புலிகளைத்தான் உங்களுக்கு பிடிக்காதே, செத்தொழிந்த மக்கள்..........

5) சாதி ஒடுக்குமுறையில் செத்தொழியும் என் சகோதர - சகோதரிகள்.......

6) சமீபத்தில் விமான விபத்தில் மடிந்த நபர்கள்.....

7) மும்பை தீவிரவாத தாக்குதலில் செத்த மக்கள்

8) அமெரிக்க கேனத்தனத்திற்கு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மடிந்த மக்கள்.........இன்னும் உலகமெங்கும் மடியும் மக்கள்..........

இப்படி எல்லாம் கடவுளின் செயலென்றால்..........

அப்படி ஒரு கடவுள் இருக்கு, நீ நம்பு, நான் நிறைய படிச்சிருக்கேன்.....இதெல்லாம் நீதி...........
என்று சொல்வதில் உங்களுக்கு நியாயமாக பட்டால்..........
அந்த கடவுளை கொல்வதற்கு தயவு கூர்ந்து ஒரு வழி கேட்டுச்சொல்லுங்கள் உங்கள் கடவுளிடம்