ஞாயிறு, 19 ஜூன், 2011

கழுதை இந்தியா என்னும் நாட்டின் பிரதமராகலாமா?

இந்தியா என்று சொல்லப்படும் என்று சொல்லப்படும் முதலாளித்துவ கட்டமைப்பை பிரதானமாக கொண்ட அரசில், ஜனநாயகம் என்றும் மக்களாட்சி என்றும் ஒரு அமைப்பு இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மக்களை ஆளுமாம், அதுவும் மக்களுக்காக ஆளுமாம், அது மக்களுடைய அரசாக இருக்குமாம். அப்படியா என்று வியப்போடு யாரும் கேட்டு விடாதீர்கள். அப்படித்தான் நடப்பதாக இங்குள்ள அதிகார வர்க்கம் பிரச்சாரம் செய்கிறது.

மக்களை ஆள தகுதி படைத்த பூரண யோக்கிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, அதன் பொருட்டு தேர்தலையும் நேர்மையாக நடத்த(என்னா பித்தலாட்டம்?) சுயேச்சையான அமைப்பு(!!!!) என்று சொல்லப்படுகிற தேர்தல் ஆணையம் நடத்துமாம்...நடத்தி......என்ன இழுவை இன்னும் படிங்க......அந்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாம்....

தேர்தல் முறையை சுறுக்கமா புரிஞ்சுக்கணுமா?

பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாகவும்), ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்), திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) போட்டியிடுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்...

அதற்கு இவர்கள் தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் கட்டி மனுதாக்கல் செய்ய வேண்டும்..

சுயே..ச்சை அமைப்பான தேர்தல் ஆணையம், இவர்களின் சொத்து கணக்கு உள்ளிட்ட கொடுக்கப்பட்ட விபரங்களை Under the table-ஆகவோ, Upper the Table-ஒ வைத்து நீண்ட ஆய்வு நடத்தி, போட்டியிட அனுமதி வழங்கும்...

இந்த கம்முனாட்டி, மன்னிக்கவும் மதிப்பிற்குரிய வேட்பாளர்களும் தமது பிரச்சாரத்தை தொடங்குவர்.....அண்டா தரேன்( ஜெயிச்சு வந்தா தண்ணி தரமாட்டானுங்க), மிக்சி தரேன்( ஒழுங்கா மின்சாரம் வராது) னு திறந்தவெளி வேனிலேயே பயணம் செய்து, இருக்கின்ற தேர்தல் ஆணைய கண்காணிப்பின் முன்னிலையிலேயே வாக்களித்தால் லஞ்சம் தருவேன் என்று மைக்கை முழுங்குவார்கள்...ஆனால், தேர்தலுக்கு முன் பணம் வழங்குவதை மட்டும் குற்றமாக கருதி, பணமே கிடைக்காத இடத்தில் மட்டும் தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்துவார்கள்...


பிரச்சாரம் முடிந்து தேர்தலும் நடக்கும்...

பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாக)-4 வாக்குகளும்,
ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்) - 3 வாக்குகளும்,
திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) - 2 வாக்குகளும் பெற்றிருப்பர்...

உடனே பார்த்தசாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்க படுவார்..கூர்ந்து கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வெளிப்படையாக தெரியும் ஒரு உண்மை...

பார்த்தசாரதிக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கின் எண்ணிக்கை 5, ஆதரவாக விழுந்தது 4... ஆனால், இந்த தேர்தல் முறையில் எதிராக வாக்களித்த மக்களின் மனநிலை முற்றாக நிராகரிக்கப்படுகிறது.

இந்த லட்சணத்திலான தேர்தல் முறையில்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வென்றார்.( நமக்குத்தான் வெக்கமே இல்லை, அதை ஏத்துக்க வேற செஞ்சோம்..)

இதே காங்கிரசு அமைச்சரவை கடந்த தேர்தலில் மன்மோகன் என்னும் அமெரிக்க அடிவருடியை, அடிவருடின்ன உடனே தப்ப நினைச்சுடாதீங்க..குழந்தைங்க கால்ல வருடி விடறது இல்லையா? காதலி கால்ல வருடி விடறத இல்லையா? அதை மாதிரி அன்பா வருடி விட்டிருப்பார்னு புரிஞ்சுக்கோங்க...நல்லா இருக்குல்ல இப்படி புரிஞ்சுக்கிறதுக்கு......

எங்க விட்டேன்...ஆங்..அந்த மன்மோகனை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சு போட்டியிட்டாங்க.....வென்றார்கள்..... இதே சகல வல்லமை படைத்த தேர்தல் முறையின் படி..


இப்ப என்னடான்னா......

கழுதை இந்திய நாட்டின் பிரதமராகும் நேரம் கனிந்திருக்கிறது என்று திக்விஜய்சிங் கூறியிருக்கிறார்...

ஏன் கழுதை ஆனா ஒத்துக்க மாட்டீங்களோ.....மக்களாட்சியில் இதெல்லாம் சகஜம்தானே..ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்களித்ததோடு உங்களிடம் கருத்து கேட்பது முடிந்துவிட்டதே.....இனி உங்ககிட்ட என்ன மசிறுக்கு கேட்கணும்..நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பலத்தை வைத்து.....இனி கழுதையை கூட பிரதமர் ஆக்குவாங்க...கம்முனு கிடக்கணும்...


கழுதையோட பெயர் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறீங்களா? யோவ் கழுதை எப்படியா பிரதமர் ஆகும்னு நீங்க கேக்குற கேள்வி எனக்கு புரியுது...

கழுதைக்கு பதிலா...இந்திய நாட்டின் ஒரே விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்தான் பிரதமராகும் தகுதியோடு இருக்கிறாராம்...

செய்தி:
பிரதமர் பதவியில் ராகுல்: திக்விஜய் சிங்


ஞாயிறு, 12 ஜூன், 2011

ஜூன் 26 இல் மெரினாவிற்கு போவது அப்படி என்ன தேவை?


ஈழத்தில் நம் உறவுகளை சிங்கள இனவெறி அரசு பல பத்தாண்டுகளாய் கொன்று குவிப்பதை கொள்கையாய் கொண்டு இயங்கி வருகிற, சிங்கள இனவெறிக்கு எதிராக பல்வேறு வகையில் போராடிவிட்டனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். இனவெறிக்கு எதிரான இத்தகைய போராட்டங்களுக்கு தமிழகத்திலும், புலத்திலும் தொடர்ந்து அதற்கான ஆதரவு அலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தமிழக்த்தின் அரசியல் நரிகள் தின்று இன்று போதாமையில் வந்து நிற்கின்ற் அவல நிலையில் இருக்கிறோம். போராட்டங்களுக்கு, சுயமரியாதையின் பொருட்டு தன்னிச்சையாக திரள வேண்டிய இளைஞர்கள் கூட்டத்திடம் சென்று ஈழத்தில் நடந்த அவலத்தை பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


நம் சமகாலத்தில் நடந்த அவலத்தை வலிந்து சென்று கையில் திணித்து துண்டு பிரசுரத்தின் வழி பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், நமீதா "மச்சான்ஸ்" என்று சொன்ன செய்தி, த்ரிசா பாடிகாட் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி, அசின் பிகினி உடையில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி இளைஞர்களிடத்தில் தங்கு தடையின்றி போய் சேரும். தினதந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு என விதிவிலக்குகள் கிடையாது. இவனுங்க பத்திரிக்கை தொழில் நடத்துறானுங்களா, பேப்பர்ல விழிவழி விபச்சாரம் பண்ற தரகர்களான்னு கண்டுபிடிக்கிற அளவு நமக்கு சிக்கல். இதுல என்ன வேடிக்கைன்னா, நடிகை தொப்புளை தெளிவாக படம் பிடித்து போடும் பத்திரிக்கையில்தான் அழகிகள் கைது என்ற படச்செய்தியும் வரும். இந்த நாட்டுல இளைஞர்களுக்கு பாலியல் உணர்வை எவ்வளவு தூண்டனுமோ, அத்தனையும் தூண்டி விட்டு, விட்டு படுக்க மட்டும் இடம் தராது சமூகம், அப்பொழுதும் கலாச்சாரம் காக்க வந்துவிடும் இந்த விபச்சார பத்திரிக்கைகள்...


சமீபத்தில், இந்திய அதிகார வர்க்க விபச்சாரி மேனன் கம்முனாட்டி ஜெயா மாமியை சந்திச்சானாம். அந்த மேனன் வெங்காயத்தை பத்தி இங்கிருக்கிற பத்திரிக்கைகளுக்கு தெரியவே தெரியாதா? இவன் ஈழத்தமிழ் துரோகி என்று தெரியவே தெரியாதா? கேட்டா அந்த பொல்லாப்பு நமக்கு எதுக்கு, அரசு விளம்பரம் கிடைக்காதேன்னு ஒரு சால்ஜாப், ஊரறிந்த காரணம் வரும்.... ஏண்டா, தான் பொண்டாட்டி, புள்ள சேலையை உறிஞ்சாதான்........உங்களுக்கெல்லாம் கோபம் வருமா.... அப்ப காத்திருந்து டி.நகர் சேலை வாங்குங்கடா தாராளமா?

இது போதாதுன்னு, தொலைக்காட்சிகள் சொல்லவே வேண்டாம், நிழற்பட விபச்சாரம் செய்பவர்களுக்கு போட்டியாக, நிழல்கள் ஆடுவதை வைத்து, அதுவும் அரை குறையாய், நிறைவாய் குறைவாய் ஆடுவதை வைத்து விபச்சாரம்...

இப்படில்லாம் ரவுண்டு கட்டி விபச்சாரம் பண்ணா, மசிறாடா நாங்க இளைஞர்கள்கிட்ட போய் பிரச்சாரம் பண்ண முடியும்....
======================================================================
சரி பத்திரிக்கை காரங்க தொல்லை மசிறுதான் தாங்க முடியலைன்னு பார்த்தா.....
நம்ம அரைவேக்காட்டு அரசியல் வெண்ணெய்ங்களோடவும் பெருத்த தொல்லையா இருக்கு...

ஐநா என்னும் அமெரிக்க அடிவருடி அவை.....உலக மக்களின் துன்பத்திற்கு சாட்சியாக நின்று "வணக்கம் சார்" மட்டும் சொல்லும் அவை...

அந்த மசிற புடுங்குன அவை அமைச்ச ஒரு மயிர புடுங்காத கமிட்டி சில பரிந்துரைகளை செய்து...சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றது....அது, வெண்ண மயிரானையும் போர்க்குற்றவாளின்னு அறிவிக்கலை....போர்குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு போர்குற்றவாளிகளே நீதிபதிகளாக மாறி விசாரணையை நடத்த வேண்டுமென்று கூறியிருக்கிறது....

நாம் பட்டினி கிடந்தவனுக்கு வாசமும் சுவைதான் என்கிற ரீதியில் அப்படியே துள்ளி குதிச்சோம்...


அடுத்து ஈழத்து தாய், ஜெயலலிதா அம்மையார்...ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்..... சிங்கள அரசை போர்க்குற்றவாளின்னு அறிவிக்க மைய அரசு ஐநா மன்றத்தை வலியுறுத்தணும்...(இதுக்கு நடுவுல இந்திய அதிகார வர்க்கம் மனித உரிமை கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக முயற்சி பண்றானுங்கன்னு செய்தி கேள்விப் பட்டேன்...மேற்கொண்டு தகவல் தெரியல..எப்படி,எதன் வழியா தெரிஞ்சுக்க தோணும்...). சிங்கள வெறியர்களுக்கு உதவி செய்ய துடித்து, துடித்து உதவி செய்த காங்கிரசு கம்முனாட்டிகள் கால்ல மிரட்டி விழற தொனி தெரிஞ்சது.....முழுக்க திமுக சாடல்... இதுல புரட்சி மயிரான்.......விஜயகாந்த...காவிரி பிரச்சினையில் திமுக அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு.....பேசுறார்(ன்). 10 ஆண்டு துரோகம் பண்ண அம்மா முன்னிலையில் என்பதுதான் ஹைலட்டு....

இதுமட்டுமா, என்றால் சாதிக்குள் நின்று கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அறிவுஜீவிகள்.....மதத்திற்குள் படுத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் ஓநாய்கள்..... அடக்குமுறைக்கு எதிராக இன்னொரு விதமான அடக்குமுறையிடம் சரணடைவதை அரசியல் யுக்தி என்று பிதற்றும் அரைவேக்காடுகள்.......என பல மண்டை குடைச்சல்...

இப்படி எல்லா திசையில் நம்ம உயிரை வாங்குற கம்முனாட்டி நாய்ங்களுக்கு நடுவில் தன்னலமற்ற ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட(அதற்கு மேலும் கூட இருக்கலாம்...)
தன்னலமற்ற இளைஞர்கள் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மக்களிடம் சென்று குறைந்த பட்சம் மெரினாவில் அணிதிரளச் சொல்லி அழைத்திருக்கிறாள்...

குறிப்பாக சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கண்டிப்பாக இந்த அணிதிரள்விற்கு வரவேண்டும்...அதுவும், தங்கள் கட்சி கொடி, கரைவேட்டி இல்லாமல்.... இல்லையென்றால் வேட்டியை கழட்டிட்டு தயவு செஞ்சு ஓடிடுங்க......

உங்க பிழைப்புவாதத்திற்கு தமிழ்த்தேசியத்தின் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்.

================================================================

இவ்வளவு பேசுற நீ என்ன மசிறுக்குடா இணையத்துல எழுதுக்கிட்டு இருக்கிறே, மக்கள்கிட்ட போக வேண்டியதுதானே என்ற கேள்வி வரலாம்....என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வேன்....இதை படிக்கும் என் நண்பர்கள் அல்லாத தோழர்களும்....தயவு கூர்ந்து............தம்மால் இயன்ற அன்பர்களை அழைத்துக் கொண்டு மெரினாவிற்கு வாருங்கள்.................

தொடர்புகளுக்கு: தோழர் உமர்: 9600781111, தோழர் ஸ்டாலின்:9884877487

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நீங்கள் மதச்சார்பற்றவரா?

நீங்கள் மதச்சார்பற்றவரா? கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று பல ஆண்டுகளாக ஒரு மின்னஞ்சல் சுற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த மின்னஞ்சலில் பல கேள்விகள் வருகின்றன….

====================================================================

உலகம் முழுக்க 52 இஸ்லாமிய நாடுகள் இருப்பதாகவும், எங்காவது இந்துக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும்..எங்காவது ஹஜ் பயணத்துக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது….

நமது கேள்வி:

எங்கள் கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் கும்பிடும் சுடலை, பட்டறையன், ஐயனார்...போன்ற சிறுதெய்வங்களின் நம்பிக்கைக்கு மதிப்பு வழங்கப்படாதுவிடுமுறை கிருட்டிண ஜெயந்திக்கு வழங்கப்படுகிறதே

நாங்கள் ஏன் இஸ்லாமியரை கேள்வி கேட்க வேண்டும்..

இத்தனை ஆண்டுகாலமாக வழிபாட்டுரிமையை மறுத்து, பொதுத்தெருவில் நடப்பதை மறுத்த பார்ப்பனீயம் இன்று சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தால்வழிப்பாட்டுரிமையை மறுக்க முடியாமல், தீண்டாமை வெளிப்படையாக கடைபிடிக்க முடியாமல், ரகசியமாக கடைபிடிக்கிறது

இங்கிருக்கிற இஸ்லாமியன் எவனும் பாபரின் பேரனோ, ஷாஜகான் தம்பியோ கிடையாது, இஸ்லாமியர்களில் பெரும்பான்மையினர்….இம்மண்ணின் மைந்தர்கள்….

அவர்களுக்கு காலம், காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு, வழிபாட்டுரிமைகளுக்கு வடிகாலாக வேற்று மதத்தை தழுவியிருக்கலாம்….அதன் பொருட்டு, இன்னும் ஆயிரம் ஆண்டுகாலம் உரிமைகள் பெறும் அனைத்து தகுதியும் அவனுக்கு உண்டு….எந்த இந்துத்வ பண்டாரத்திற்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

====================================================================

85% விழுக்காடு பெரும்பான்மையினருக்கு வழங்கப்படாத சலுகைகள் 15% விழுக்காடு சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதை பார்த்து ஏங்குவதை எங்காவது பார்த்த்துண்டா போன்ற கேள்விகள்..

நமது கேள்வி:

இத்தனை ஆண்டுகாலமாக பார்ப்பன பண்டாரங்கள், ஆதிக்க சாதியனரும் அரசு உயர்பதவிகளில் அனுபவித்து வர...தாழ்த்தப்பட்டவர்கள் அங்கும் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனரே……….சிறுபான்மையினர்களுக்கு சலுகை வழங்குவதை குறீத்து நாங்கள் இன்னும் தெளிவாக கவலைப்படவில்லை,…..மெய்யாகவே எம்மக்கள் தெளிவாக கவலைப்படுவார்களேயானால்…. இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சினை இந்நாட்டில் வராது…..

இந்திய அரசு உளவுப்பிரிவில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அடையாளப்படுத்துங்கள்….ஒரு தாழ்த்தப்பட்ட பிரதமரை காண்பியுங்கள்….நடுவண் அரசில் ஒரு தாழ்த்தப்பட்ட பாதுகாப்புதுறை அமைச்சரை காண்பியுங்கள்...

பெரும்பான்மை சுரண்டலை பற்றி யார் பேச வேண்டுமென்றே இல்லாமல் போய் விட்டது ...சொந்த நாட்டு மக்களை சுரண்டும் பார்ப்பனீய பனியா வர்க்கத்தை கேட்க துப்பில்லை..இஸ்லாமிர்களை கேள்வி கேட்க வந்துவிட்டனர்

அதோடு, ஏதாவதொரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர் அல்லாத ஒரு நபர் பதவியில் இருப்பதை பார்த்ததுண்டா? என்ற கேள்விகள் வேறு…….

இதற்கு இவர்கள் பாணியில் பதில் சொல்வதானால்...அதற்கு தகுதி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்….

பார்ப்பன, உயர்சாதி இந்துக்கள், போலியான இந்து மத விசுவாசிகள் யாரும் அரபு நாடுகளில் பணி புரியவில்லையா?

======================================================================

தீவிரவாதிகளுக்கு எதிராக பத்வா அறிவித்த ஒரு மௌலவியை, முல்லாவை காண்பிக்க முடியுமா? என்ற துணைக்கேள்விகள்..

நமது கேள்வி:

இந்திய நாட்டின் பிதா என போற்றும் காந்தியை கொன்ற இந்துத்வ தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு இந்து அமைப்பை காண்பிக்க முடியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காங்கிரசு, பாஜக போன்ற முதனமை இந்திய தேசிய கட்சிகள் வழங்கி வரும் ஆதரவை நாங்கள் அறியாதவர்கள் அல்ல….முதலில் காங்கிரசிடமும், பாஜகவிடமும் கேள்வி கேட்டுவிட்டு எம்மிடம் அந்த கேள்வியை கேட்க வரட்டும்

இந்துத்துவ தீவிரவாதிகளை அம்பலப்படுத்த துணிந்த காரணத்திற்காக, பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், நேர்மையான அதிகாரியாக, சமரசமில்லாமல் செயல்பட்ட ஒரே காரணத்திற்காக கர்கரே என்னும் அதிகாரியை கொன்ற இந்துத்வ அமைப்புகளா..எம்மிடம் வந்து கேள்வி கேட்பது

குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் முறையே இஸ்லாமியர்களுக்கு எதிரகவும், கிருத்துவர்களுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டிய அமைப்புகளை தடை செய்ய கோரிய இந்துத்வ அகிம்சை இயக்கங்களை எங்கும் காணோமே ஏன்?

இந்திய நாட்டின் மிக முக்கிய பிரச்சினை….இந்து சாதிய பயங்கரவாதமும், முதலாளித்துவமும்….இதற்கு எதிராக நாங்கள் நிற்பதை விட்டுவிட்டு,..,...இஸ்லாத்திற்கு எதிராக போராட கிளம்ப முடியாது…

===========================================================

மராட்டியம், கேரளம், பீகார், பாண்டிச்சேரி ஆகிய இந்து பெரும்பான்மையினர் வசிக்கும் மாநிலங்களில் கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கஇஸ்லாமிய பெரும்பான்மை ஜம்மு-காஷ்மீரில் ஒரு இந்து முதலமைச்சராக வர முடியுமா?

எமது கேள்வி:

ரொம்ப நாளா இந்த பல்லவியை கேட்டு வருகிறோம்….

ஆமாம் யார்தான் இந்து?

குல தெய்வ வழிபாட்டை உடையவனா?

சைவத்தை பின்பற்றுபவனா?

வைணவத்தை பின்பற்றுபவனா?

எவன் இஸ்லாமியனில்லையோ, கிருத்துவனில்லையோ, பார்சியில்லையோ, யூதனில்லையா? அவனா இந்து…..

இதை எந்த புனித வெஙகாய சாத்திரம் இதை வலியிறுத்துகிறது

விட்டால், யார் மனிதன் என்று கேட்டால்.யார் ஆடில்லையோ, யார் மாடில்லையோ, யார் புலியில்லையோ, யார் பன்றியில்லையோ அவன் மனிதன்னு ஒரு கேனத்தனமான ஒரு விளக்கத்தை கொடுத்தாலும் கொடுப்பார்கள்..

துணிச்சலிருந்தால்..இப்படி மின்னஞ்சல் அனுப்புபவர்கள்….யார் இந்து? என்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு அதன் பிரதியை இதுபோன்ற மின்னஞ்சலகளின் பின்னிணைப்பாக அனுப்பவும்

============================================================

1947 இல் இருந்த எண்ணிக்கையைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை கூடிவிட்டதாகவும் அந்த மின்ன்ஞ்சல் கூறுகிறது..

நமது கேள்வி: இதே கூட்டம்தானே சாதிவாறி கணக்கெடுப்பை வேண்டாமென்று வலியிறுத்துகிறது, ஏன் துணிச்சலிருந்தால்….மதவாரியான கணக்கெடுப்பிற்கு எதிராகவும் பேசட்டுமே….பேசமாட்டார்கள், காரணம் மதவாரி கணக்கெடுப்பு தங்களின் எண்ணிக்கையை கூட்டி காண்பிக்க இவர்களுக்கு தேவைப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு, இந்து மதத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தும்….

கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஒரு பிரிவை ஒதுக்கட்டுமே பார்க்கலாம்…மதசார்பின்மைக்கு ஆதரவாக பேசும் அக்கறை கொண்ட இந்துத்வ மூளைகள் என்றுமே….இதற்கு குரல் கொடுக்காதே? ஏன் அதை செய்வதில்லை..

தாழ்த்தப்பட்டவர்களை வர்ணத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களக வரையறுத்துவிட்டு,…..நீயும் இந்து, சந்து, பொந்துனு வந்து நிற்கும் இந்த கூட்டம் எம்மை ஏன் வலுக்கட்டாயமாக இந்துமத பிடிக்குள் இழுக்கிறதுபௌத்திஸ்டுகளையும் இப்படியே இணைத்துக் கொண்டு இந்துன்னு தானே கூவி விற்கிறார்கள்..

மதசார்பற்ற அரசு கணக்கெடுப்பில் மதமற்றவர்களுக்கு ஏன் ஒரு பிரிவை வழங்குவதில்லை

60 ஆண்டுகளுக்கும் மேலான விடுதலை இந்தியாவில் கிருத்துவத்தையும், இஸ்லாத்தையும் தழுவியர்களின் எண்ணிக்கையை ஒரு முறை சரிபார்த்தால், இவர்கள் கோரும் இந்து மதத்தின் லட்சணம் தெரிந்துவிடுமேதாழ்த்தப்பட்டவர்களின் முறையான அளவில் விழிப்புணர்வில்லாத்தால்..இன்னும் இந்து மதம் நீடித்திருக்கிறது….இல்லையென்றால்...இந்து மத்த்தின் துகள்கள் இம்மண்ணில் எஞ்சியிருக்காதே..

மேற்கொண்டும் பல கேள்விகள் உண்டு….இந்த கேள்விகளுக்கு முதலில் இந்த பண்டார இந்துக்கள் பதிலளிக்கட்டும்,….பிறகு நாம் நம் நிலையை உரக்க எடுத்து வைப்போம்….

இந்திய இந்து தேசியத்தின் போலித்தனத்தை குறித்த தெளிவான பார்வை பெற தோழர்களுக்கு என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் பரிந்துரைக்கும் நூல்கள் இரண்டு

1) இந்திய வரலாற்றில் பகவத் கீதை -

2) இந்து இந்தியாஎஸ்.வி.ராஜதுரை

வியாழன், 30 செப்டம்பர், 2010

தீர்ப்பு நாள் 30 செப் 2010

29 செப், 2010, இதழின் ஆசிரியருக்கு மடல் என்னும் பகுதீயில் அப்சல் இன்சினியர் (ஹாஜி) என்னும் இஸ்லாமிய நபர் எழுதியதாக மடல் ஒன்றை முதலாவதாக வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் வந்திருந்த கடிதத்தின் அதன் தமிழ் மொழியாக்கம் வருமாறு,

“அலகாபாத் நீதிமன்றத்தில் வர இருக்கிற பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எப்படியாயினும் ஏதாவதொரு சமூகத்திற்கு ஆதரவாகத்தான் இருக்க போகிறது. அப்படி நிகழ்கையில் இந்த பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான வாய்ப்பை அது நிராகரிக்கும். இந்த தீர்ப்பினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற பதட்டத்தினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற அசம்பாவதங்களை அரசு தனது வலிமையான கரம் கொண்டு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அதே வேளையில் அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் அமைதியான தீர்வை ஏற்படுத்த தன்னார்வத்தோடு முன்வரவேண்டும். அப்படி ஒரு முயற்சி எடுக்கையில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்பட முடியாது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நாளைய நீதிமன்ற தீர்ப்பு, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் இஸ்லாமிய சகோதரர்கள், தமது மூத்த சகோதரர்களாகிய இந்துக்களுக்கு அளிக்க முன்வர வேண்டும். ஏனென்றால், நூற்றாண்டுகளுக்கு முன்பே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட இடமளித்தவர்கள் இந்துக்கள்.”

இப்படி நாட்டாமை தொனியில் இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, இந்துவின் நடுநிலையை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது என்பதற்காக, அடுத்த சிறிய மடலில் ஜே.பி.ரெட்டி என்பவர் இந்துக்களை சர்ச்சைக்குரிய அவ்விடத்தை இந்துக்களுக்கு விட்டுதர கோரியிருக்கிறார்.

என்ன ஒரு அயோக்கியத்தனமான சூழ்ச்சியான பதிவு பார்த்தீர்களா?

எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு? இன்று உன்னுடையதாக இருந்தது, நேற்று மற்றொருவருடையதாக இருந்தது, நாளை மற்றொருவருடையதாக இருக்கும்.என்று வியாக்யான மசிறுகளை பேசும் இந்துத்வ வாதிகளிடம்தானே இந்த விட்டுக்கொடுத்தலுக்கான அறிவுரையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சொல்ல வில்லை பார்ப்பன இந்து.

அதோடு, இந்து சகோதரர்கள், சந்து சகோதரர்கள் என்கிறார்களே? இராமாயணத்தின் இராமன் என்றாவது தன்னை இந்து என்றிருக்கிறானா? இல்லையே? பின் எப்படி இந்த இந்துத்வ அமைப்புகள் இராமனுக்கு வீடு கட்ட, மன்னிக்கவும் கோயில் கட்ட இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.. இந்து என்பவன் யார்? அதை தீர்மானித்துவிட்டல்லவா இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூற இவர்கள் புகுந்திருக்க வேண்டும்?

இந்துக்கள் என்று இன்று அடையாளப்படுத்தப்படும் இவர்கள் முப்பாட்டன்கள் செய்த இடிப்புகள்க் கலவரங்கள், உலகத்தில் நிகழந்த மதத்தின் பெயரால் நிகழ்ந்த கலவரங்களுக்கு சற்றும் குறைவானதில்லை பௌத்த, சமண வழி பாட்டு மையங்களை சிதைத்தது, சைவ-வைணவ சண்டைகள்…என்று நீளுமே இவர்களது பட்டியல்….

இது போதாதென்று இன்றளவும் சொந்த மக்களை சேரியில் இருத்தி வைத்துக் கொண்டு, ராமனுக்கு கோயிலை கட்டுறேன், வெங்காயத்தை கட்டுறேன்னு..சொல்லிக் கொன்று... தாழ்த்தப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை மறந்து இராமன் கோயில் கட்ட வர வேண்டுமென்று ஆள் சேர்க்கும் வேலையை இந்த சந்து அமைப்புகள் செய்கின்றன…தாழ்த்தப்பட்டவர்களை தன் வீட்டில் சேர்க்காதவனோடு இணைந்து கொண்டு இஸ்லாமியர்களை எதிரியாக பாவிக்கும் மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் வேலையை செய்த பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு இன்று தீர்ப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் தமது சகோதரர்களாகிய இஸ்லாமியர்கள் மீது வெறுப்புக் கொள்ளாமல், சாதிய இந்துத்துவ சக்திகளை முறியடிக்கும் பணியில் முற்போக்கு இயக்கங்களோடு இணைந்து பணியாற்றுமாறும், இஸ்லாமிய அன்பர்களுக்கு அரணாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிற அதே வேளையில்..

இஸ்லாமிய அன்பர்கள் இந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை பயங்கரவாதத்தின் வழியாக சந்தித்து வரும் வேளையில், தமது சமூக முன்னேற்றத்தை கொஞ்சம் முற்போக்கு பார்வையோடு நகர்த்த வேண்டும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்க, ஏக இறைவனை வழிபடுவதாக கூறிவிட்டு, அல்லாவுக்கு நிகர் இல்லை என்று கூறிவிட்டு, அவனை தவிர யாரையும் வணங்குவதில்லை என்று கூறிவிட்டு வழிபாட்டு தலங்களுக்காக நாம் சண்டை போடலாமா?

இது இந்து பத்திரிக்கையின் அறிவுரை போன்றதல்ல, தோழமையோடு ஒரு பகிர்வு…

அல்லா அனைவரையும் படைத்தானென்றால், அவனுக்கு கோயில் கட்டித்தர வேண்டி அவன் என்றுமே கேட்டிருக்க மாட்டான், அவனுக்கு அது தேவையுமில்லை..நம் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வோம், கொஞ்சம் விரைவாக, விரிவாக திட்டமிட்டு செய்வோம்…

இந்துத்வ பயங்கரவாதிகளை பயங்கரவாதத்தினை எதிர்கொள்ள எம்மை போன்ற கடவுள் மறுப்பாளர்களும், பொதுவுடமை வாதிகளும், பெரியரிஸ்டுகளும் உங்களோடு என்றும் இருக்கிறோம், என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்..