திங்கள், 25 ஆகஸ்ட், 2008

நாய் வாழ்க்கை வாழ்க்கையும் தமிழர்களும்.

பணக்கார, நடுத்தர,ஏழை என எல்லோர் வீட்டிலும் நாயை வளர்க்கும் பட்சத்தில், நாய் மீது அன்பை பொழிவர், கொஞ்சம் நாய் மீது அன்பு கூடிவிட்டாலோ தாங்கள் சாப்பிடும் தட்டிலேகூட உணவு வழங்க தயங்க மாட்டார்கள் நம் மனிதர்கள்(இதில் தமிழர்களும் அடங்குவர்கள்தானே!), இவ்வளவு ஏன் தங்கள் படுக்கையிலே கூட உறங்க கூட நாயை அனுமதித்து விடுவர். ஆனால், நாய்க்கு பெண் வழங்கமாட்டார்கள், வழங்க முடியாது ஏனென்றால் அது இயற்கைக்கு முரணானது. நாய் மனித இனமல்ல.

இதையே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும், சாதிக்குள் மட்டும்தான் பெண் எடுப்பேன்/கொடுப்பேன் என்ற கொள்கை கொண்ட (ஈன)மனித தமிழர்கள் இன்னொரு சாதிக்காரனை நாயைவிட உயர்வாக என்ன நடத்திவிடுகிறான்?

இன்றைய தொலை-தொடர்பு/தொழில்நுட்ப உலகத்தில் தொடர்பு பெருகி விட்ட காரணத்தினாலும், நாகரீகம் என்ற போர்வையில் பேச வேண்டியிருக்கிறதே என்ற எண்ணத்திலும் வேற்று சாதி மனிதனோடு தொடர்பு ஏற்படும், நட்பு உருவாகும், வீட்டிற்கு அழைத்து செல்ல நேரிடும், உணவளிக்க நேரிடும், ஆனால், பெண் கொடுக்க மாட்டான், உறவு ஏற்படுத்தி கொள்ள மாட்டான், ஏனென்றால் அவன் வேறு சாதியாம்!

ஒரு சாதிக்காரன் இன்னோர் சாதிக்காரனை நாய் போல நடத்துகிறான், மற்றொருவன் இவனை நாய் போல எண்ணுகிறான். இதுதானே சங்கம் வைத்து சாதி வளர்க்கும் தமிழனின் நிலை.

இது நாய் பிழைப்பு அல்லாமல் வேறென்ன?

புதன், 6 ஆகஸ்ட், 2008

மறுபடியும் சொல்கிறேன், ரஜினிதான் தமிழனுக்கு தலைவர்!!!!!!!!!!

ஈழத்தில் நம் உறவுகள் இப்படி கொடுரமாக கொல்லபடுவதை கண்டு கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ரஜினி/சினிமா பைத்தியம் பிடித்து திரியும் தமிழனுக்கு ரஜினிதான் தலைவன்







தமிழன் எப்படி செத்து மடிஞ்சாலும் சினிமா பைத்தியங்கள் இப்படித்தான் தன்னிலை மறந்து திரியும்.


உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்குன்னு சொல்லிட்டு இருந்தே, இப்பதானே தெரியுது அது ஆட்டு உயிருன்னு

 ஏண்டா! தலைவன் தலைவன்னுட்டு ஒரு ஆட்டின் தலையை எடுக்குறே, அவருக்கு எதுவும் வேணும்னா, அவருக்குதான் இமயமலை இருக்கே! பாபா இருக்காரே!! ராகாவேந்திரா இருக்காரே!!!

 நீ ஏண்டா ஒரு ஆட்டை கொல்லுரே, ஆடு என்னைக்காவது தன்னை வீணடிச்சுருக்கா????? 

ஆனா நீ உன்னையும் வீணடிச்சு, இந்த மண்ணையும் வீணடிச்சு, சுயமரியாதை இழந்து ஆன்மிக ரஜினியின் மூடபக்தனாக இருக்குறப்போ! 

உனக்கு ரஜினி தலைவனாகாம யாருடா தலைவரார்?

கூலித்தொழிலாளி போல் நடித்து கூலித்தொழிலாளியின் ஒரு நாள் கூலியை பிடுங்கும் இவனா உன் தலைவன்?  ???   ? ?


ஏண்டா ,எங்கேயாவது சூடம் காண்பித்து கொண்டே இருக்கணுமா? கோயில்லை கல்லை கண்டா சூடம் காண்பிக்கிறே! தெருவோரம் மலம் துடைத்த கல்லாயிருந்தாலும் கொஞ்சமேனும் குங்குமம் வைத்துவிட்டால் அதற்கும் சூடம் காண்பிக்கிறே!! படத்தாளுக்கு சூடம் காண்பிக்கிறே!!!

 நாய் கம்பத்தை கண்டா காலத்தூக்குது, நீ எதை கண்டாலும் கையத்தூக்குறே!! சூடம் காண்பிப்பதற்கு!!!!

உங்களுக்கு ரஜினி தலைவனாகாம, வேற எவண்டா தலைவனாவான்!?



முத்தமிழ் அறிஞர், கலைஞர் தமிழனை குரல்வளையை மேலும் அருக்க , வாள் வழங்குகிறாரோ!!!!!!!!!!!!!





சிவாஜி படத்திற்காக நடந்த விருந்தில் ஒரு தொழில் நுட்ப கலைஞர் இறந்ததற்கு, ரஜினி வருத்தம் தெரிவித்ததாகவோ, இரங்கல் தெரிவித்ததாகவோ நாம் செய்தி படிக்கவில்லை, ஆனால், குசேலன் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும்,என்பதற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாராம் ரஜினி,எதற்கு?

 

தயாரிப்பாளர்களுக்கு கேடு வந்துவிடக்கூடாது, போட்ட முதலுக்கு பங்கம் வந்து விடக்கூடாது. என்று ஒரு பொது நல்நோக்கோடு மன்னிப்பு கேட்டார் என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுவர்.

 

ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் பலன் தேடி கொண்டவர்கள் அரசியல்வாதிகளும் ரவுடிகளும்தான்.இதுஎல்லோரும் அறிந்தது  அப்படியிருக்க யாரிடம் வருத்தம் தெரிவித்தான் ரஜினிகாந்த்.

 

தமிழன் குடிக்க தண்ணியில்லாம செத்தாலும் சரி,எனக்கு நான் நடித்த படம் ஓடணும், என் முதலாளி நட்டப்படக்கூடாதுன்னு நினைக்கறவன் தலைவன்னா? பணம்போடறவன் முதலாளியா, அப்படத்தை ஓடவைக்கிறவன்/ரசிகன் முதலாளியா?

 

வச்சுக்கோ, அவர்(ன்)தான் உனக்கு தலைவனாக இருக்க தகுதியானவர். நீ ஏமாந்து கொண்டே இரு அவரு உன்னை ஏமாத்திக்கிட்டே இருப்பாரு