வியாழன், 2 ஜூலை, 2009

இனத்தை அழிக்கும் இறையாண்மை - மாணிக்கம்

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள், முழுக்க முழுக்க விமான குண்டு வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் குறி வைத்து அழிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் வாழ்கின்ற சம காலத்தில், கண்ணெதிரே நடக்கின்ற இனப்படுகொலை எனும் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியவில்லை! எந்த நியாய விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல், உலகின் எல்லா மனித உரிமைச் சட்டங்களையும் புறக்கணித்து, வல்லரசு அல்லாத ஒரு நாட்டால் இவ்வளவு தன்னிச்சையாக செயல்பட முடியுமெனில் – இத்தருணத்தில் பல கேள்விகளை நாம் முன் வைக்க வேண்டியிருக்கிறது.

இலங்கை அரசின் இனப்படுகொலை வெறியாட்டத்திற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் மற்றும் இந்தியா போன்ற ‘ஜனநாயக நாடு'கள் துணை நிற்பதும்; சீனாவும் ரஷ்யாவும் ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காக அமெரிக்கா அதை எதிர்ப்பதும், அமெரிக்கா எதிர்ப்பதாலேயே புரட்சி நாடான கியூபா, இலங்கை அரசை ஆதரிப்பதும், இனப்படுகொலை என்பது அசிங்கமான சர்வதேச வியாபாரம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற மனித உரிமையாளரும் சர்வதேச சட்ட நிபுணருமான பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், மார்ச் 2009 இல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் மிகவும் கவனத்திற்குரியவை : ‘‘இன்றளவில் 3,50,000 தமிழர்களை வன்னிப் பகுதியில் 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் அடைத்து, திட்டமிட்டு ஈவு இரக்கமற்ற முறையில் பீரங்கி குண்டுகளையும், ராக்கெட் போர் விமானங்களையும், பீரங்கிப் படைகளையும், பிற கொடூர ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொன்று குவிக்கும் செயல்களை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சே, இந்த 3,50,000 மக்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதாக அறிவித்துள்ளது, பன்னாட்டு மனிதஉரிமை சட்டங்களின் அடிப்படைக் கூறுகளை மீறுவதாக உள்ளது. அப்பகுதியிலுள்ள மருத்துவர்களையும் பிற மருத்துவப் பணியாளர்களையும் அச்சுறுத்தி, அவ்விடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர், கொல்லப்பட வேண்டிய தமிழ்ப் பொது மக்களின் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறார். உலக நாடுகள் உடனடியாக இதைத் தடுக்க முன்வராவிட்டால் – செப்ரெனிகா, சாட்ரா மற்றும் ஷாட்டிலா, ருவாண்டா மற்றும் கொசேõவாவில் நடைபெற்ற இனப்படுகொலைகளைப் போல ஓர் அவல நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.''

Eelam
(பாதுகாப்பு வலையத்திற்குள் சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்களைக் காட்டும் இந்தப் படத்தை, லண்டனிலிருந்து வெளிவரும் ‘த டைம்ஸ்' இதழ் எலிகாப்டரில் இருந்து மே 23 அன்று எடுத்துள்ளது. சிக்குண்ட மக்கள் மணல் மூட்டைகள், சாக்குப் பைகள், தலையணை உறைகள் மற்றுமுள்ள வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைக் கொண்டு ஏவுகணை, பீரங்கித் தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காலிகப் பதுங்குக் குழிகளை எவ்வாறு அமைத்திருந்தனர் என்பதை விளக்குகிறது. எரிபொருள் அல்லது ராணுவக் கருவிகள் இல்லாதிருப்பது, முகாம் மற்றும் அதிலுள்ள வசதிகளில் உள்ள தற்காலிகத் தன்மையின் மூலம் அது பொதுமக்களின் வாழ்விடமே என்பது தெளிவாகிறது.)

‘‘இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே அல்ல. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என இலங்கை அரசு கூறும் பொய்யை, இந்தியா முன்மொழிய அத்தனை உலக நாடுகளும் அதை வழிமொழிகின்றன. அய்.நா. தரப்பிலிருந்து இதுவரையிலும் இலங்கை வெறியாட்டத்திற்கு வலுவான கண்டனம் நம் காதுகளை எட்டவில்லை. உரிமைகளை மீட்கத் துடிக்கும் போராளிக் குழுக்கள் – பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதும், பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்று அரசுகள் அந்த இனத்தின் குடிமக்களைக் கொன்று குவிப்பதும் இந்தியா உட்பட உலகெங்கும் நடந்தேறுகிறது. வெகு அண்மையில் கூட, மிக மோசமான எடுத்துக்காட்டுகளை நாம் சுட்டிக்காட்ட முடியும். இனப்படுகொலைகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் பிரித்துப் பார்க்க இயலாமல் நாடகமாடுகிறவர்கள் அதிகரிக்கிற நிலையில், இவ்விரண்டிற்குமான வேற்றுமையை அழுத்தமாக விளக்கியாக வேண்டிய தேவை அதிகரிக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிகழ்ந்த பல்வேறு ஒழுங்காற்றுத் திட்டமிடல்களில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று அய்க்கிய நாடுகள் அவையின் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு (தடுப்பு) ஒப்பந்தமும் ஒன்று. இதில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உட்பட 140 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1951 சனவரி 12 அன்று நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 2, இன அழிப்பு எது என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:

‘‘இனப்படுகொலை என்பது ஒரு தேசிய இன அல்லது மதக் குழுவை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு, குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ சேதம் விளைவிப்பது, குழுவின் மீது முன் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அதன் உடல் சார்ந்தவற்றிற்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிவை ஏற்படுத்த முனைவது, குழுவினரிடையே பிறப்பு நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கோடு செயல்படுவது, ஒரு குழுவின் குழந்தைகளை கட்டாயப்படுத்தி இன்னொரு குழுவுக்கு மாற்றுவது'' – இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டால், அது இனப்படுகொலை நடவடிக்கை என்று குறிப்பிடுகிறது அந்த ஒப்பந்தம்.

இனப்படுகொலையை நிகழ்த்துவதும், இனப்படுகொலைக்கு ரகசியமாகத் திட்டமிடுவதும், இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு நேரடியாகவோ, ரகசியமாகவோ தூண்டுவதும், இனப்படுகொலை நிகழ்த்த முனைவதும், இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என அதே ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 3 குறிப்பிடுகிறது.

கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்படும் மனித உயிர்களைப் பார்த்தவுடன் யாருமே சொல்ல முடியும், இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்று. இதற்கு அதிகபட்சமாக தேவைப்படுவது ஆறறிவு மட்டுமே. ஆனால், அய்.நா.வின் இனப்படுகொலை வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்தியும், இலங்கையை கொலைக்களமாக அங்கீகரிக்க இன்னும் அதற்கு ஆய்வுகள் தேவைப்படுகின்றன! சட்டப்பிரிவு 2 இல் வகுக்கப்பட்டுள்ள அத்தனை அநீதிகளையும் இலங்கை அரசு அன்றாடம் நிகழ்த்துகிறது. மருத்துவமனைகளையும் பொது மக்களையும் இலக்கு வைத்து இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது போர்க்குற்றமெனில், அதற்கு ரகசியமாகவும் நேரடியாகவும் ஆதரவு அளிக்கும் உலக நாடுகள் அனைத்தும் குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை இடம் பெறுகின்றன. இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளே, இன்று முதன்மைக் குற்றவாளிகளாக இலங்கை அரசோடு கைகோத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.

1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் இருக்கிறது. விதிமுறைகளுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படும் இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க அய்.நா.வுக்கு முழு உரிமை உண்டு. ஈழ மக்களை காக்க வேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா என்றோ தவறவிட்ட நிலையிலும் விதி 1இன் படி, தமிழ் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த சட்டப்பூர்வமான உரிமையும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது. மேலும் 1949 இல் தோற்றுவிக்கப்பட்ட நான்கு ஜெனிவா ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்தியா அந்த ஒப்பந்தங்களை மதிக்கவும், எல்லா சூழ்நிலைகளிலும் அவை மதிக்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும். இதன் பொருள், ஈழத் தமிழர்களை காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு என்பதே.

தமிழர்களோடு கொண்டுள்ள தொப்புள் கொடி உறவு என்ற பந்தமும் இந்தியாவின் துரித நடவடிக்கைக்கு வலு சேர்க்க வேண்டும். ஆனால் ஒரு நாடகத்தை வேடிக்கை பார்ப்பது போல, பச்சைத் துரோகியாக இந்தியா தமிழர்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.

வல்லரசு நாடுகளின் இனப்படுகொலைக் கொள்கையானது, நாட்டுக்கு நாடு மாறுபட்டிருப்பதே உலகின் பல்வேறு பகுதிகளிலும் இனப்படுகொலை தொடர்வதற்கான முக்கியக் காரணம். இன்று இலங்கை அரசின் வெறியாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் – ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நடத்திய இனப்பேரழிவை இவ்வுலகம் அவ்வளவு எளிதில் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது. இலங்கையில் இன அழிப்பிற்கு எதிரான இவற்றின் நிலைப்பாட்டை இந்தப் பின்னணியில்தான் அணுக வேண்டியிருக்கிறது. இந்த நாடுகள் தங்களின் போட்டி நாடுகளின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுவுவதற்காக, எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை ஈழப் பிரச்சனையில் கண் கூடாக நாம் பார்த்து வருகிறோம்.

பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலர் டேவிட் மிலிபேண்ட், கடந்த பிப்ரவரி 24 அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது, ‘‘இலங்கையில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகளை காவு கொடுத்து பயங்கரவாதப் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாது'' என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளில் உண்மை இருந்தும் அதை சொல்லும் நாட்டிடம் நேர்மை இல்லாததால், அந்த உண்மை வலு விழந்து போகிறது. சரி, உலகின் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் ஒரு நாடு தன்னிச்சையாக செயல்பட முடியுமா? இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அய்.நா. கொண்டு வந்தாலும் அதை தங்களின் ‘வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நாடுகள் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறப்படுகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கூட டேவிட் மிலிபேண்ட் இதே கருத்தை வெளியிட்டார்.

‘‘1950இல் உருவாக்கப்பட்ட ‘அமைதிக்காக ஒன்றுபடுவோம்' தீர்மானத்தின்படி, எந்த ஒரு நிரந்தர உறுப்பினர் நாடோ / நாடுகளோ அய்.நா. பாதுகாப்பு அவையில் தங்கள் ‘வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி, உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் தொடர்புடைய எந்த தீர்மானத்தைத் தடுத்தாலும், அதை அய்.நா. பொதுமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணலாம். பாலஸ்தீன இன அழிப்புகளின் போது அய்.நா., குறிப்பிட்ட இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், பல்வேறு தருணங்களில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்று ‘வீட்டோ' அதிகாரத்தை கையிலெடுத்து அச்சுறுத்தும் நாடுகளான சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் அய்.நா. பொது அவை தக்க பதிலடி கொடுக்க முடியும்'' என்று வாதிடுகிறார், பேராசிரியர் பாய்ல். ஆனால் இக்கருத்துக்கு இந்தியா உட்பட எந்த நாடுமே செவி சாய்க்கவில்லை.

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை அண்ணாந்து பார்க்கும் நிலையில் தன் முழங்கால்களை பலவீனப்படுத்தி வைத்திருக்கும் உலகச் சமூகம், இலங்கைப் பிரச்சனையிலும் அமெரிக்காவை எதிர்பார்க்கிறது. அதிலும் இன அழிப்பின் முக்கிய கர்த்தாக்களாக குற்றம் சாட்டப்படும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சேவும், ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அமெரிக்கக் குடிமகன்கள் எனும்போது வேறு என்ன நீதியை நாம் எதிர்பார்த்துவிட முடியும்? அமெரிக்க இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தங்களை மீறியதற்காக நியாயப்படி இவ்விருவரும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். வசதிக்கேற்ப கொள்கைகளை வளைத்துக் கொள்ளும் அமெரிக்காவிடம் அப்படியொரு நிலையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

மே மாதத்தில் அய்.நா. அவையின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஓர் தகவலை வெளியிட்டது. அதில், ‘ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்குப் பொது மக்கள் கொல்லப்படுவது குறித்து அய்.நா. அவை ஆழ்ந்த கவலை கொள்கிறது' என்று குறிப்பிட்டிருந்தது. இனப்படுகொலையில் ‘ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு' என்று ஏதாவது இருக்கிறதா என்ன? இன அழிப்பு வெறிக்கு ஒரே ஒரு உயிர் பலியானாலும், அது பேரழிவின் ஆபத்தான தொடக்கம் என்பதை அமெரிக்காவிற்கு யாராவது புரிய வைக்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி, ராணுவத் தாக்குதலில் பொது மக்களை இலக்காக வைப்பது கூடவே கூடாத ஒன்று. இலங்கையில் முழுக்க முழுக்க பொது மக்களே குறி வைத்து தாக்கப்படுகிற நிலையில், வன்னியில் மே 16 அன்று நடந்த ‘கடற்கரை படுகொலை'யில் ஒரே நேரத்தில் 2,000 தமிழர்கள் கொல்லப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாத அளவு என்று ஒபாமா நிர்வாகம் கருதியது போலும். இதை எப்படி நாம் புரிந்து கொள்வது? இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அழிக்க நடத்தும் போரில், ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் சற்றுக் குறைவான அளவு படுகொலை நடந்தால், அது ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு என்றா?

‘டெலிகிராப்' நாளேட்டில் 8.3.09 அன்று, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருக்கும் இரண்டு லட்சம் தமிழர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா தலைமையில் நடத்தப் போகும் படையெடுப்பிற்கு, இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனை ஒபாமா நிர்வாகம் கேட்கப் போகிறது, என்று ஒரு செய்தி வெளியானது. இலங்கையில் போர் நிலைமைகளை அவதானித்துச் சொல்ல ஆட்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எந்நேரமும் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அடுத்த நாளே உறுதியான செய்திகள் வந்தன. ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை. இலங்கையில் போரை முன்னின்று நடத்தும் அமெரிக்க குடிமகன் கோத்தபய ராஜபக்சேவை குறைந்தபட்சம் எச்சரிக்கக் கூட அமெரிக்காவால் முடியவில்லை.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை உறுதி செய்யப் போதுமான ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கட்டுக்கடங்காத போர்க் குற்றங்களும் அங்கு நடந்தேறுவதை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியர் பாய்ல். ஜெனிவா ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 54, சாதாரண பொதுமக்களுக்கு வாழ்வாதாரமான இன்றியமையாத பொருட்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறுவது, போர்த் தந்திரமாக மக்களை உணவின்றி பட்டினியால் சாக விடுவது, மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கும் விவசாய நிலங்கள், பயிர்கள், கால்நடைகள், குடிநீர் நிலைகள், நீர்ப்பாசன நிலைகள் போன்றவற்றை மறுப்பது, அழிப்பது, அப்புறப்படுத்துவது, பயனற்றுப் போகச் செய்வது, மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து இடம் பெறச் செய்வது ஆகியவை போர்க் குற்றங்களாகும்.

இலங்கையை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற இத்தனை காரணங்கள் இருந்தும், அய்.நா. அவை அமைதி காப்பது, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அய்.நா. மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றிலும் தகர்ப்பதாக இருக்கிறது. அய்.நா. அவையின் பிரிவு 15இன்படி, பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் பற்றி கவலைப்படாமல், இனப்படுகொலை நிகழ்த்தும் நாடுகள் மீது அய்.நா. நடவடிக்கைகள் எடுக்க வழி இருக்கிறது. உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் உண்டாக்கும் எதன் மீதும் நடவடிக்கை எடுக்க அய்.நா. அவைக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இலங்கை நடத்தும் இனப்பேரழிவை நம்புவதற்கு, இன்னும் உறுதியான ஆதாரங்கள் அய்.நா. அவைக்கு தேவைப்படுகிறது. அய்.நா. அவைக்கு இருக்கும் இந்த சட்டப்பூர்வமான பொறுப்புகளை வைத்துதான் அய்.நா. அவையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவசர காலக் கூட்டத்தைத் கூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. போர்க்கால நிலைமையை பார்வையிட அவர் வந்து சேர்ந்த போது, சிதறி குவிந்திருந்த பிணங்களை புல்டோசர் கொண்டு மொத்தமாக அள்ளி எரித்து சாம்பலாக்கியிருந்தது இலங்கை அரசு. பான் கி மூன் பார்வையிட்ட நேரத்தில் பிணங்களற்ற சுடுகாடாக காட்சியளித்தது ஈழம்.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என நம்ப வைக்கப்பட்டது. அதன் பின்னர், பான் கி மூன் தரப்பிலிருந்து சிறு முன்னேற்றமும் இல்லை. அய்.நா. அதிகாரிகளால் வேண்டுமென்றே நிகழ்த்தப்படும் கால தாமதங்களும், மெதுவான நகர்வுகளும்தான் இனப்படுகொலைகள் நடப்பதைத் தீவிரப்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார் பாய்ல். பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் மகுடிக்கு வளைந்து நெளிந்து ஆடுவதை அய்.நா. அதிகாரிகள் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

ஆக, கண்கூடாக, கண்ணெதிரே நடக்கிற இனப் பேரழிவை, இத்தனை சட்டதிட்டங்கள் இருந்தும் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளும், அய்.நா. அவையும் தங்களின் சுய லாபங்களுக்காக காக்கின்ற அமைதியும் மறைமுகமான, நேரடியான ஊக்கமும் இலங்கை அரசின் ரத்த வெறியை தூண்டிக் கொண்டேயிருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, இவ்வுலகின் இரக்கத்தைப் பெற முடியாமல் கும்பல் கும்பலாக செத்து மடிகிறார்கள் ஈழத் தமிழர்கள். 1995 ஆம் ஆண்டு சப்ரெனிகாவில் நடந்தேறிய போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலையைக் கண்டு கிளர்ந்தெழுந்த உலகம், அதை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, இனப்படுகொலை என்று அறிவிக்கச் செய்தது. எட்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு கிளர்ந்தெழுந்த அறிவுஜீவிகள் உலகம், இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தும் எதிர்வினையாற்றாமல் வாய் மூடி கிடக்கிறது.

இன்று உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களுக்கு உணவும் மருந்தும் அளித்து உதவ வேண்டிய செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. பாதுகாப்பு வலையத்திலிருந்து தப்பித்து வந்தவர்களின் நிலை ஹிட்லரின் நாஜி முகாம்களிலிருந்து தப்பி வந்தவர்களின் நிலையை ஒத்திருப்பதாக பாய்ல் கூறுகிறார். படுகொலைக்கான ஆதாரங்களை உலகின் பார்வையிலிருந்து இலங்கை அரசு அழித்தாலும் அமெரிக்காவின் உளவு செயற்கைக் கோள்களில் அவை துல்லியமாகப் பதிவாகியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? மனசாட்சியால் மட்டுமே உணர முடிகிற கொடுமை இது. அது இல்லாமல் போனதால்தான் களத்திற்கு நேரடியாக சென்று பார்த்தும் இனப்படுகொலையா, இல்லையா என விவாதம் செய்து நாடகமாடுகின்றன உலக நாடுகள். ஓர் இனம் அழிக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் பார்த்து ஒன்றுமே செய்யாமல் அருவருப்பாக அமைதி காக்கின்றன.

இனப்படுகொலை வரலாற்றிலேயே இது உச்சபட்சமானது என்ற நிலையிலும் தடுக்க முடியாத அவலம், இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவர் மனதிலும் அச்சத்தை விதைக்கின்றன. ஈராக்கில் நடந்தது, இலங்கையில் நடக்கிறது. இந்த சங்கிலி எங்கு வேண்டுமானாலும் நீட்டிக்கப்படும். அரசுகள் நடத்தும் அதிகாரப் போரில் உரிமைகளைக் கோரும் பொது மக்களின் உயிர்கள் பணயம் வைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டியது உலக பொது மக்களின் கடமை. ஆனால் உலக மக்களின் கடைசி நம்பிக்கை உணர்வுக்கும் சாவுமணியாக இனப்படுகொலைக்கு இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்று அய்.நா. அவையின் மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. மேற்குல நாடுகள் ஆதரவில் எழுப்பப்பட்ட தீர்மானம் முதன் முறையாக பிற நாடுகளின் முயற்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இலங்கையின் வெற்றி, மனித உரிமைகளுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியிருக்கும் கேவலமான முடிவு. முந்தைய ஊழல் மலிந்த, செயல் திறனற்ற அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கு மாற்றாக 2006ஆம்ஆண்டு 47 உறுப்பு நாடுகளைக் கொண்டு உருவான இந்த புதிய அமைப்பு, தன் முதல் சோதனையில் படுதோல்வியை தழுவியுள்ளது. இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் பல ஆசிய – இஸ்லாமிய நாடுகளின் நோக்கம், தங்கள் நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மீது அய்.நா. அவையின் விசாரணைகள் வருவதைத் தடுப்பதே. அதிலும் அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டு விவகாரம் என்று இஸ்ரேல் கூறியது மிகப்பெரிய கொடுமை.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகும் அய்.நா. அவையின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கை படுகொலைகள் குறித்து இன்னும் விசாரணை தேவை என்று கூறியிருப்பது, உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் படுகொலைகள் உலகம் நினைத்திருந்ததைவிட கொடூரமானது என்று இப்போது வரும் தகவல்கள் பறை சாற்றுகின்றன. இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 7,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக வந்த செய்தி தவறு என்றும், இப்போது தெரியவரும் தகவல்களின்படி குறைந்தது 20,000 தமிழர்களாவது அந்த நான்கு மாதங்களில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றும் ‘த டைம்ஸ்' இதழ் கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை ராணுவ குண்டு வீச்சிலேயே கொல்லப்பட்டதாக நடுநிலை உலக பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

Francis Boyle இங்கிலாந்தின் ‘டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் சப்öரனிகா, டர்பர் போன்றே ஈழத்திலும் வெளிப்படையான இனப்படுகொலை நடந்திருப்பதை அறிய முடிகிறது. விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இலங்கை அரசு நடந்து கொண்ட விதம், எதிரெழுச்சிகளை அடக்க புதிய பல கொடுமையான தந்திரங்களை உலக நாடுகளுக்கு கற்றுத் தந்திருக்கிறது. இனி உரிமை கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை சாட்சியின்றி கொல்லும் புதுப்புது வித்தைகளை இலங்கை அரசு கண்டுபிடித்து தந்திருக்கிறது.

தன் கழுத்தில் அணிந்திருக்கும் சிவப்பு அங்கியைக் கொண்டு, மாய வித்தையைப் போல பிணங்களை மறைத்த ராஜபக்சே, உலகளவில் இதுவரை கொடும் சர்வாதிகாரிகளாக அறியப்பட்ட அத்தனை பிம்பங்களையும் உடைத்து, சர்வாதிகாரிகளின் தலைவனாக மகுடம் சூட்டிக் கொண்டுள்ளான். வரலாறு அவன் பெயரை அவன் தேடித் தேடி அழித்த உயிர்கள் எரிக்கப்பட்ட சாம்பலைக் கொண்டே எழுதும்.

பிரான்சிஸ் அந்தோணி பாய்ல் அமெரிக்காவின் இலினாயி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். சர்வதேச சட்டங்களிலும் மனித உரிமை சட்டங்களிலும் உலகளாவிய புகழ் பெற்றவர். போஸ்னிய முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையை எதிர்த்து வழக்காடி, சர்வதேச நீதிமன்றத்தில் யுகோஸ்லாவியாவுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றவர். இலங்கையில் நடைபெறுவது உள்நாட்டுப் போரல்ல; மிகக் கொடிய இனப்படுகொலையே என்பதை ஆதாரப்பூர்வமாக உலக அரங்கில் இடையறாமல் வாதிட்டு வருகிறார்.

செவ்வாய், 23 ஜூன், 2009

பிரபாகரன் நிழற்படங்கள்






























மேலும் படங்களுக்கு:

http://www.aruchuna.net



செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் மரணம், படம், காட்சி- பொய்

ஈழத்தமிழ் பெண் சொன்ன செய்தி

புலிகள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாள அட்டை வைத்துக் கொள்ளும் வழக்கம் கிடையாதென்றும்,

போராளிகள் கழுத்தில் சிகப்பு மற்றும் கருப்பு நிறக் கயிறுதான் அணிந்திருப்பர் என்றும் சிகப்பு நிறக்கயிற்றில் அடையாள தகடும், கருப்பு நிறத்தகட்டில் நஞ்சுக்குப்பியையும் அணிந்திருப்பர் என்றும் தெரிவித்தார்,

நான் சந்தித்த ஈழத்தமிழ் பெண்.

மேலும் அவர் கூறுகையில்,

பிரபாகரன் அடையாள அட்டை வைத்திருந்தார், அந்த உடலை கைப்பற்றிவிட்டோம்,

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முகத்தில் சுருக்கங்களோடு இருந்தவர், நீண்ட இடைவெளியில் போர்ச்சூழலில் வாழ்ந்த பின்பு, குண்டு தாக்கியதில் முகத்தில் இளமை வந்துவிட்டது.

என்றெல்லாம் கூறுவது தூய பொய், இது பொய்யாக உருவாக்கப்பட்டது.

இது தொடர்பான மற்ற பதிவுகள்:

http://kundumani.blogspot.com/2009/05/blog-post_3404.html

http://veltharma.blogspot.com/2009/05/blog-post_19.html

திங்கள், 18 மே, 2009

பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்” 15




ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ‘எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்’ என்று மார்தட்டும் ‘இந்து’ நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

1984 ஜூலை 24 ஆம் தேதி ‘இந்து’ நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.
“சென்னை-ஜூலை 13 - ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்’ வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் “வீடியோ கேசட்” மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.”

-என்று செய்தி வெளியிட்டது ‘இந்து’ ஏடு.

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான“உண்மைகளை” வெளியிட்ட “தரம் நிறைந்த” ‘இந்து’ பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, ‘மரணச் செய்தி’ வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, “இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்” - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான ‘கெடு’வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் ‘புளோட்’ இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் ‘இந்து’ ஏட்டின் வழியாக பிரபாகரன் “கொல்லப்பட்டார்”.

“இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!”

-என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது ‘Pirabhakaran Phenomenon’என்ற நூலில்.
மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

(It may not be wrong to infer that Indias intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

-என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
-1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,‘ரா’வின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”

-என்று ‘இந்தியா டுடே’ அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

பிரபாகரனின் இரண்டாவது “மரணம்”
1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை “மரணமடையச்” செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை‘மரணமடைய’ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

கொழும்பிலிருந்து வெளிவரும், ‘அய்லேன்ட்’ நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ‘ஏ.எஃப்.பி.’என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

“இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.”

“ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்”.

“சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.”

“இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்”
-இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் ‘இரண்டாவது மரணம்’ பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

“விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்.”

-இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட “கற்பனை மரணத்துக்கு”இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

1989 ஆம் ஆண்டில், பிரபாகரனின் ‘மரணச் செய்தியை’ அறிவித்த ‘இந்து’ பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு ‘கற்பனை மரணச்’ செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன ‘இந்து’ மட்டும், மீண்டும் பிரபாகரன்‘மரணச் செய்தியை’ வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, ‘இந்து’, பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - “பிரபாகரன் எங்கே?” என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

“சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?”

-என்றெல்லாம் கேட்ட ‘இந்து’,

“பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை”

-என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் ‘பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம்’ போலும்!

பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - ‘ஏ.எஃப்.பி.’செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்து‘இந்து’ ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் ‘இந்து’வின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்“மரணமடைந்த” அந்த “செய்தியை” உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் “உறுதி” செய்தார்.

‘ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், ‘மாவீரர்’துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமான“உண்மைத்” தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் “திறமை” மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தினகரா’தலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!“பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது.”

இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
-அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்

புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு “தேசிய நாளேட்டுக்கு” உரிய தகுதியா? ‘இந்து’ ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை “சுனாமிப் பேரலையில் சாகடித்த” பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

  • ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது.எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம் என்று மார்தட்டும்இந்து நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

    1984
    ஜூலை 24 ஆம் தேதிஇந்து நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.

    சென்னை-ஜூலை 13 - தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் வீடியோ கேசட் மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

    லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

    -
    என்று செய்தி வெளியிட்டது இந்து ஏடு.

    புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் இந்து ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் இந்து ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவானஉண்மைகளை வெளியிட்ட தரம் நிறைந்த இந்து பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, மரணச் செய்தி வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

    ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும் - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான கெடுவை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

    பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

    1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

    அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் இந்து ஏட்டின் வழியாக பிரபாகரன் கொல்லப்பட்டார்.

    இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!

    -
    என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது Pirabhakaran Phenomenonஎன்ற நூலில்.
    மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

    (It may not be wrong to infer that
    Indias
    intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

    -
    என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

    பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு இந்தியா டுடே இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

    1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் எம்.வி. அகத் கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
    -1993
    டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ரா (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,ராவின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

    -
    என்று இந்தியா டுடே அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

    1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

    பிரபாகரனின் இரண்டாவது மரணம்

    1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை மரணமடையச் செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறைமரணமடையச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

    கொழும்பிலிருந்து வெளிவரும், அய்லேன்ட் நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ஏ.எஃப்.பி.என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

    இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.

    ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்.

    சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.

    இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்
    -
    இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

    மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

    இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் இரண்டாவது மரணம் பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

    விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்.

    -
    இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட கற்பனை மரணத்துக்குஇந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

    1989
    ஆம் ஆண்டில், பிரபாகரனின் மரணச் செய்தியை அறிவித்த இந்து பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு கற்பனை மரணச் செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன இந்து மட்டும், மீண்டும் பிரபாகரன்மரணச் செய்தியை வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

    ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, இந்து, பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - பிரபாகரன் எங்கே? என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

    சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?

    -
    என்றெல்லாம் கேட்ட இந்து,

    பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை

    -
    என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம் போலும்!

    பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - ஏ.எஃப்.பி.செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்துஇந்து ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் இந்துவின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்மரணமடைந்த அந்த செய்தியை உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் உறுதி செய்தார்.

    ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

    வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், மாவீரர்துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
    அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

    இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமானஉண்மைத் தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

    உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் திறமை மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

    சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தினகராதலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது.

    இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன இந்து ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
    -
    அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்


    புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு தேசிய நாளேட்டுக்கு உரிய தகுதியா? இந்து ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

    உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

    சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை சுனாமிப் பேரலையில் சாகடித்த பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

    இவற்றையும் வாசிக்கவும்