ஈழத்தில் நம் உறவுகளை சிங்கள இனவெறி அரசு பல பத்தாண்டுகளாய் கொன்று குவிப்பதை கொள்கையாய் கொண்டு இயங்கி வருகிற, சிங்கள இனவெறிக்கு எதிராக பல்வேறு வகையில் போராடிவிட்டனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். இனவெறிக்கு எதிரான இத்தகைய போராட்டங்களுக்கு தமிழகத்திலும், புலத்திலும் தொடர்ந்து அதற்கான ஆதரவு அலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தமிழக்த்தின் அரசியல் நரிகள் தின்று இன்று போதாமையில் வந்து நிற்கின்ற் அவல நிலையில் இருக்கிறோம். போராட்டங்களுக்கு, சுயமரியாதையின் பொருட்டு தன்னிச்சையாக திரள வேண்டிய இளைஞர்கள் கூட்டத்திடம் சென்று ஈழத்தில் நடந்த அவலத்தை பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
நம் சமகாலத்தில் நடந்த அவலத்தை வலிந்து சென்று கையில் திணித்து துண்டு பிரசுரத்தின் வழி பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், நமீதா "மச்சான்ஸ்" என்று சொன்ன செய்தி, த்ரிசா பாடிகாட் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி, அசின் பிகினி உடையில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி இளைஞர்களிடத்தில் தங்கு தடையின்றி போய் சேரும். தினதந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு என விதிவிலக்குகள் கிடையாது. இவனுங்க பத்திரிக்கை தொழில் நடத்துறானுங்களா, பேப்பர்ல விழிவழி விபச்சாரம் பண்ற தரகர்களான்னு கண்டுபிடிக்கிற அளவு நமக்கு சிக்கல். இதுல என்ன வேடிக்கைன்னா, நடிகை தொப்புளை தெளிவாக படம் பிடித்து போடும் பத்திரிக்கையில்தான் அழகிகள் கைது என்ற படச்செய்தியும் வரும். இந்த நாட்டுல இளைஞர்களுக்கு பாலியல் உணர்வை எவ்வளவு தூண்டனுமோ, அத்தனையும் தூண்டி விட்டு, விட்டு படுக்க மட்டும் இடம் தராது சமூகம், அப்பொழுதும் கலாச்சாரம் காக்க வந்துவிடும் இந்த விபச்சார பத்திரிக்கைகள்...
சமீபத்தில், இந்திய அதிகார வர்க்க விபச்சாரி மேனன் கம்முனாட்டி ஜெயா மாமியை சந்திச்சானாம். அந்த மேனன் வெங்காயத்தை பத்தி இங்கிருக்கிற பத்திரிக்கைகளுக்கு தெரியவே தெரியாதா? இவன் ஈழத்தமிழ் துரோகி என்று தெரியவே தெரியாதா? கேட்டா அந்த பொல்லாப்பு நமக்கு எதுக்கு, அரசு விளம்பரம் கிடைக்காதேன்னு ஒரு சால்ஜாப், ஊரறிந்த காரணம் வரும்.... ஏண்டா, தான் பொண்டாட்டி, புள்ள சேலையை உறிஞ்சாதான்........உங்களுக்கெல்லாம் கோபம் வருமா.... அப்ப காத்திருந்து டி.நகர் சேலை வாங்குங்கடா தாராளமா?
இது போதாதுன்னு, தொலைக்காட்சிகள் சொல்லவே வேண்டாம், நிழற்பட விபச்சாரம் செய்பவர்களுக்கு போட்டியாக, நிழல்கள் ஆடுவதை வைத்து, அதுவும் அரை குறையாய், நிறைவாய் குறைவாய் ஆடுவதை வைத்து விபச்சாரம்...
இப்படில்லாம் ரவுண்டு கட்டி விபச்சாரம் பண்ணா, மசிறாடா நாங்க இளைஞர்கள்கிட்ட போய் பிரச்சாரம் பண்ண முடியும்.... ======================================================================
சரி பத்திரிக்கை காரங்க தொல்லை மசிறுதான் தாங்க முடியலைன்னு பார்த்தா.....
நம்ம அரைவேக்காட்டு அரசியல் வெண்ணெய்ங்களோடவும் பெருத்த தொல்லையா இருக்கு...
ஐநா என்னும் அமெரிக்க அடிவருடி அவை.....உலக மக்களின் துன்பத்திற்கு சாட்சியாக நின்று "வணக்கம் சார்" மட்டும் சொல்லும் அவை...
அந்த மசிற புடுங்குன அவை அமைச்ச ஒரு மயிர புடுங்காத கமிட்டி சில பரிந்துரைகளை செய்து...சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றது....அது, வெண்ண மயிரானையும் போர்க்குற்றவாளின்னு அறிவிக்கலை....போர்குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு போர்குற்றவாளிகளே நீதிபதிகளாக மாறி விசாரணையை நடத்த வேண்டுமென்று கூறியிருக்கிறது....
நாம் பட்டினி கிடந்தவனுக்கு வாசமும் சுவைதான் என்கிற ரீதியில் அப்படியே துள்ளி குதிச்சோம்...
அடுத்து ஈழத்து தாய், ஜெயலலிதா அம்மையார்...ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்..... சிங்கள அரசை போர்க்குற்றவாளின்னு அறிவிக்க மைய அரசு ஐநா மன்றத்தை வலியுறுத்தணும்...(இதுக்கு நடுவுல இந்திய அதிகார வர்க்கம் மனித உரிமை கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக முயற்சி பண்றானுங்கன்னு செய்தி கேள்விப் பட்டேன்...மேற்கொண்டு தகவல் தெரியல..எப்படி,எதன் வழியா தெரிஞ்சுக்க தோணும்...). சிங்கள வெறியர்களுக்கு உதவி செய்ய துடித்து, துடித்து உதவி செய்த காங்கிரசு கம்முனாட்டிகள் கால்ல மிரட்டி விழற தொனி தெரிஞ்சது.....முழுக்க திமுக சாடல்... இதுல புரட்சி மயிரான்.......விஜயகாந்த...காவிரி பிரச்சினையில் திமுக அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு.....பேசுறார்(ன்). 10 ஆண்டு துரோகம் பண்ண அம்மா முன்னிலையில் என்பதுதான் ஹைலட்டு....
இதுமட்டுமா, என்றால் சாதிக்குள் நின்று கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அறிவுஜீவிகள்.....மதத்திற்குள் படுத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் ஓநாய்கள்..... அடக்குமுறைக்கு எதிராக இன்னொரு விதமான அடக்குமுறையிடம் சரணடைவதை அரசியல் யுக்தி என்று பிதற்றும் அரைவேக்காடுகள்.......என பல மண்டை குடைச்சல்...
இப்படி எல்லா திசையில் நம்ம உயிரை வாங்குற கம்முனாட்டி நாய்ங்களுக்கு நடுவில் தன்னலமற்ற ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட(அதற்கு மேலும் கூட இருக்கலாம்...) தன்னலமற்ற இளைஞர்கள் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மக்களிடம் சென்று குறைந்த பட்சம் மெரினாவில் அணிதிரளச் சொல்லி அழைத்திருக்கிறாள்... குறிப்பாக சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கண்டிப்பாக இந்த அணிதிரள்விற்கு வரவேண்டும்...அதுவும், தங்கள் கட்சி கொடி, கரைவேட்டி இல்லாமல்.... இல்லையென்றால் வேட்டியை கழட்டிட்டு தயவு செஞ்சு ஓடிடுங்க......
இவ்வளவு பேசுற நீ என்ன மசிறுக்குடா இணையத்துல எழுதுக்கிட்டு இருக்கிறே, மக்கள்கிட்ட போக வேண்டியதுதானே என்ற கேள்வி வரலாம்....என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வேன்....இதை படிக்கும் என் நண்பர்கள் அல்லாத தோழர்களும்....தயவு கூர்ந்து............தம்மால் இயன்ற அன்பர்களை அழைத்துக் கொண்டு மெரினாவிற்கு வாருங்கள்.................
இத்தனைஆண்டுகாலமாகபார்ப்பனபண்டாரங்கள், ஆதிக்கசாதியனரும்அரசுஉயர்பதவிகளில்அனுபவித்துவர...தாழ்த்தப்பட்டவர்கள் அங்கும் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனரே……….சிறுபான்மையினர்களுக்கு சலுகை வழங்குவதை குறீத்து நாங்கள் இன்னும் தெளிவாக கவலைப்படவில்லை,…..மெய்யாகவே எம்மக்கள் தெளிவாக கவலைப்படுவார்களேயானால்…. இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சினை இந்நாட்டில் வராது…..
இந்திய நாட்டின் மிக முக்கிய பிரச்சினை….இந்து சாதிய பயங்கரவாதமும், முதலாளித்துவமும்….இதற்கு எதிராக நாங்கள் நிற்பதை விட்டுவிட்டு,..,...இஸ்லாத்திற்கு எதிராக போராட கிளம்ப முடியாது…
நமதுகேள்வி: இதேகூட்டம்தானேசாதிவாறிகணக்கெடுப்பைவேண்டாமென்றுவலியிறுத்துகிறது, ஏன்துணிச்சலிருந்தால்….மதவாரியானகணக்கெடுப்பிற்குஎதிராகவும்பேசட்டுமே….பேசமாட்டார்கள், காரணம் மதவாரி கணக்கெடுப்பு தங்களின்எண்ணிக்கையை கூட்டி காண்பிக்க இவர்களுக்கு தேவைப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு, இந்து மதத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தும்….
கணக்கெடுப்பில்மதமற்றவர்களுக்குஒருபிரிவைஒதுக்கட்டுமேபார்க்கலாம்…மதசார்பின்மைக்கு ஆதரவாக பேசும் அக்கறை கொண்ட இந்துத்வ மூளைகள் என்றுமே….இதற்கு குரல் கொடுக்காதே? ஏன் அதை செய்வதில்லை..
29 செப், 2010, இதழின் ஆசிரியருக்கு மடல் என்னும் பகுதீயில் அப்சல் இன்சினியர் (ஹாஜி) என்னும் இஸ்லாமிய நபர் எழுதியதாக மடல் ஒன்றை முதலாவதாக வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வந்திருந்த கடிதத்தின் அதன் தமிழ் மொழியாக்கம் வருமாறு,
“அலகாபாத் நீதிமன்றத்தில் வர இருக்கிற பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எப்படியாயினும் ஏதாவதொரு சமூகத்திற்கு ஆதரவாகத்தான் இருக்க போகிறது. அப்படி நிகழ்கையில் இந்த பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான வாய்ப்பை அது நிராகரிக்கும். இந்த தீர்ப்பினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற பதட்டத்தினால் ஏற்பட வாய்ப்பிருக்கிற அசம்பாவதங்களை அரசு தனது வலிமையான கரம் கொண்டு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதே வேளையில் அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் அமைதியான தீர்வை ஏற்படுத்த தன்னார்வத்தோடு முன்வரவேண்டும். அப்படி ஒரு முயற்சி எடுக்கையில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்பட முடியாது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நாளைய நீதிமன்ற தீர்ப்பு, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் இஸ்லாமிய சகோதரர்கள், தமது மூத்த சகோதரர்களாகிய இந்துக்களுக்கு அளிக்க முன்வர வேண்டும். ஏனென்றால், நூற்றாண்டுகளுக்கு முன்பே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட இடமளித்தவர்கள் இந்துக்கள்.”
இப்படி நாட்டாமை தொனியில் இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, இந்துவின் நடுநிலையை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது என்பதற்காக, அடுத்த சிறிய மடலில் ஜே.பி.ரெட்டி என்பவர் இந்துக்களை சர்ச்சைக்குரிய அவ்விடத்தை இந்துக்களுக்கு விட்டுதர கோரியிருக்கிறார்.
என்ன ஒரு அயோக்கியத்தனமான சூழ்ச்சியான பதிவு பார்த்தீர்களா?
எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு? இன்று உன்னுடையதாக இருந்தது, நேற்று மற்றொருவருடையதாக இருந்தது, நாளை மற்றொருவருடையதாக இருக்கும்.என்று வியாக்யான மசிறுகளை பேசும் இந்துத்வ வாதிகளிடம்தானே இந்த விட்டுக்கொடுத்தலுக்கான அறிவுரையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சொல்ல வில்லை பார்ப்பன இந்து.
அதோடு, இந்து சகோதரர்கள், சந்து சகோதரர்கள் என்கிறார்களே? இராமாயணத்தின் இராமன் என்றாவது தன்னை இந்து என்றிருக்கிறானா? இல்லையே? பின் எப்படி இந்த இந்துத்வ அமைப்புகள் இராமனுக்கு வீடு கட்ட, மன்னிக்கவும் கோயில் கட்ட இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.. இந்து என்பவன் யார்? அதை தீர்மானித்துவிட்டல்லவா இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூற இவர்கள் புகுந்திருக்க வேண்டும்?
இந்துக்கள் என்று இன்று அடையாளப்படுத்தப்படும் இவர்கள் முப்பாட்டன்கள் செய்த இடிப்புகள்க் கலவரங்கள், உலகத்தில் நிகழந்த மதத்தின் பெயரால் நிகழ்ந்த கலவரங்களுக்கு சற்றும் குறைவானதில்லை பௌத்த, சமண வழி பாட்டு மையங்களை சிதைத்தது, சைவ-வைணவ சண்டைகள்…என்று நீளுமே இவர்களது பட்டியல்….
இது போதாதென்று இன்றளவும் சொந்த மக்களை சேரியில் இருத்தி வைத்துக் கொண்டு, ராமனுக்கு கோயிலை கட்டுறேன், வெங்காயத்தை கட்டுறேன்னு..சொல்லிக் கொன்று... தாழ்த்தப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை மறந்து இராமன் கோயில் கட்ட வர வேண்டுமென்று ஆள் சேர்க்கும் வேலையை இந்த சந்து அமைப்புகள் செய்கின்றன…தாழ்த்தப்பட்டவர்களை தன் வீட்டில் சேர்க்காதவனோடு இணைந்து கொண்டு இஸ்லாமியர்களை எதிரியாக பாவிக்கும் மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் வேலையை செய்த பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு இன்று தீர்ப்பு வருகிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் தமது சகோதரர்களாகிய இஸ்லாமியர்கள் மீது வெறுப்புக் கொள்ளாமல், சாதிய இந்துத்துவ சக்திகளை முறியடிக்கும் பணியில் முற்போக்கு இயக்கங்களோடு இணைந்து பணியாற்றுமாறும், இஸ்லாமிய அன்பர்களுக்கு அரணாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிற அதே வேளையில்..
இஸ்லாமிய அன்பர்கள் இந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை பயங்கரவாதத்தின் வழியாக சந்தித்து வரும் வேளையில், தமது சமூக முன்னேற்றத்தை கொஞ்சம் முற்போக்கு பார்வையோடு நகர்த்த வேண்டும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்க, ஏக இறைவனை வழிபடுவதாக கூறிவிட்டு, அல்லாவுக்கு நிகர் இல்லை என்று கூறிவிட்டு, அவனை தவிர யாரையும் வணங்குவதில்லை என்று கூறிவிட்டு வழிபாட்டு தலங்களுக்காக நாம் சண்டை போடலாமா?
இது இந்து பத்திரிக்கையின் அறிவுரை போன்றதல்ல, தோழமையோடு ஒரு பகிர்வு…
அல்லா அனைவரையும் படைத்தானென்றால், அவனுக்கு கோயில் கட்டித்தர வேண்டி அவன் என்றுமே கேட்டிருக்க மாட்டான், அவனுக்கு அது தேவையுமில்லை..நம் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வோம், கொஞ்சம் விரைவாக, விரிவாக திட்டமிட்டு செய்வோம்…
இந்துத்வ பயங்கரவாதிகளை பயங்கரவாதத்தினை எதிர்கொள்ள எம்மை போன்ற கடவுள் மறுப்பாளர்களும், பொதுவுடமை வாதிகளும், பெரியரிஸ்டுகளும் உங்களோடு என்றும் இருக்கிறோம், என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்..
பசி...நாட்டு மக்கள் பசியில் வாடிக்கிடப்பதில் உலகச்சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பொழுது இந்தியாவின் உள்துறைஅமைச்சராக இருக்கும்….பசி அதாங்க ப.சிதம்பரம்,,,,,
பழங்குடியின மக்களை மாவோயிஸ்டுதீவிரவாதிகள்என்றார்...ஆம்என்றனர்இந்துமதஅடிப்படைவாதிகள்
ஆனால், ப.சிதம்பரம்காவிதீவிரவாதம்என்றசொல்லைபயன்படுத்தியவுடன்கொதித்தெழுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்மீதுஅபாண்டமாகபழிசுமத்தப்படுவதைஆதரிக்கமுடியாதுஎன்றுமக்களைவிலேயேதெரிவிக்கின்றனர். தீவிரவாதம்மதம்கடந்தது, தீவிரவாதத்திற்குநிறம்கிடையாதுஎன்றுவேறுவிளக்கம்கொடுக்கின்றனர்(இணைப்பு).
இந்துமதஅடிப்படைவாதத்தின்கோரமுகம் மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கங்கள், சிறுபான்மை இயக்கத்தினர்மூலமும்கர்கரே, முஷ்ரீப்போன்றநேர்மையானஅதிகாரிகளின்மூலமும்வெளிப்பட்டுவரும்சூழலில்….
ஈழத்திற்கு செய்யப்பட்ட துரோகத்தால் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சிமிகு பிரச்சாரத்தால் தோற்றார்….தமிழக மக்களின் உணர்ச்சியிடம் தோற்றார்….ஆனால், மாண்புமிகு (மான்ஙகெட்ட)இந்திய மக்களாட்சியின் துணை கொண்டு வென்றார்…
காங்கிரசு என்னும் பேராயக்கட்சி அணுசக்தி ஒப்பந்தத்தை பாரதீய ஜனதா போன்ற எதிர்கட்சிகளோடு இந்தியா என்னும் கூட்டமைப்பின் சார்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ள தருணம் இது. மத உணர்வுகளை உரமாய் வைத்து அரசியல் நடத்துவதை தெரிந்து கொண்ட இவர்களால்…அணுசக்தி ஒப்பந்தத்தின் மக்கள் விரோத கூறுகளை அம்பலப்படுத்தவதிலிருந்து சமூக நலன் கருதிகளையும், பொது மக்களையும் திசை திருப்புவதற்கான...நோக்கமாக இருக்குமென ஆழமாக நம்பலாம்…
ஏனென்றால், மும்பையில்நடந்ததாக்குதலுக்குமுன்பாகசிவராஜ்பாட்டில்உள்துறைஅமைச்சராகஇருக்க, இந்துதீவிரவாத்திற்குபின்புலமாகஇயங்கும் சக்திகளின் சதிதிட்டத்தை விளக்கி, அந்த சதி திட்டத்தை முறியடிக்க, முளையிலேயேகிள்ளிஎறியமுக்கியஅரசியல்பிரபலங்கள்உள்ளிட்ட சதிகார அயோக்கியர்களை(காங்கிரசுகாரர்களும்உண்டு)கைதுசெய்வதற்கும், கர்கரேஆதரவுகோரியதாகமுஷ்ரீஃப்(கர்கரேயின்காவல்துறையின்நண்பர்) தனது“கர்கரேயைகொன்றதுயார்”என்றநூலில்பதிவுசெய்திருக்கிறார்…
அதன் பிறகுதான் மும்பைதாக்குதல்நடந்ததுஅல்லதுவலிந்துஇங்குள்ளஅடிப்படைவாதஅமைப்புகளின்உதவியோடுநிகழ்த்தப்பட்டது...அதில்இஸ்லாமியர்அமைப்புமட்டுமென்றுகுற்றம்சுமத்துவோர்...தங்களுக்குஇருக்கும்சார்புணர்ச்சியையும், கருத்தியல்வறுமையைசரிபார்க்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…
தாக்குதல் நடந்தநாள்நவம்பர் 26,2008 இல்...கர்கரேயும்கொல்லப்படுகிறார்…
தாக்குதல்முடிவடைந்தபின்னர்…. கர்கரேயின்மனைவிக்குகுஜராத்கண்டமாமனிதன், இந்தியராஜபக்சேமேன்மைமிகு.மோடி1 கோடிரூபாய்வழங்கமுன்வந்தார்…செருப்பாலடித்ததுபோல்...மோடிக்குஉண்மையைதான்உணர்ந்திருப்பதைஉணர்த்தினார்...கர்கரேயின்மனைவி தனக்கு வழங்கப்பட்ட தொகையை, ரத்தக்கரை படிந்த மோடியிடமிருந்து பெற மறுத்தார்...
மும்பை தாக்குதலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு கர்கரே உள்ளிட்ட காவல்துறையின் படுகொலை நடந்தது....( மும்பை தாக்குதலிலும் இந்து பயங்கரவாதிகளின் பங்கென்ன? என்பதும்ஆழமான தேடலுக்குரியது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம்)...தாக்குதல் நடந்து வருகிற நவம்பர் 26 ஆம் நாளோடு 2ஆண்டுகள் முடிவடையப்போகிறது. இத்தனை காலம் மௌனம் காத்ததின் பிண்ணனி என்ன?
இந்த இரண்டு ஆண்டுகாலமும் சிதம்பரம் என்ன செய்து கொண்டிருந்தார். ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம்..மீண்டும் பதவியேற்றவுடன் என்ன செய்தார்...? (முன்னர் மட்டும் என்ன செய்தார்?) இந்துத்வ பயங்கரவாதத்தை வேரறுக்கவா கிளம்பினார்…. இல்லையே….ஈழத்தின் கருவறுக்கத்தானே கிளம்பினார்.. சிங்கள இனவெறி கூட்டத்தின் பாதுகாவலனாய் திகழ்ந்தார்..
அப்பொழுது, ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தது.....ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து படுகொலைகளை நடத்தி வந்த நேரமது...வல்லரசு கனவுகளோடு மக்களை ஏய்த்து கொண்டிருக்கும் அரச பிரதிநிதி, ஆசிய பிராந்தியத்தின் தனது ஆதிக்க நலனை நிறுவுவதில் மட்டும் கவனமாக இருந்த அதிகார வர்க்க பிரதிநிதி தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தை ஒரு சுண்டக்காய் நாடான இலங்கையிடம் வலியிறுத்த முடியவில்லை....நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தமிழகத்தில் எழுந்த எழுச்சியை அடக்க மட்டும் திரைமறைவு வேலைகள அப்பட்டமாக தெரியும் வண்ணம் நடந்தன....
போரை நடத்த இலங்கையை வலியிறுத்தச்சொன்னால்..........புலிகளை நோக்கிய இவர் உட்பட்ட இந்திய அதிகார வர்க்கத்தின் விரல்கள் நீண்டது, மீண்டும் ராஜீவ் காந்தி என்னும் மகாமனிதரின் தியாக மரணத்தை வைத்து பிரச்சாரம் நடந்தது. ஆனால், கடைசிவரை அவர் அப்படி என்ன தியாகம் இந்நாட்டின் மக்களுக்காக செய்தார் என்று மட்டும் சொல்லப்படவேயில்லை…ராஜீவ் கொலையை மறக்க மாட்டோம்ஆனால், நீங்கள் ஈழத்தில் இந்திய இராணுவம் நிகழ்த்திய அட்டூழியங்களை மறந்து இந்திய இறையாண்மையை காப்பாற்ற வேண்டும், ஏனென்றால், இந்தியாவின் இறையாண்மை காங்கிரசின் வீட்டு வாசலில் நிற்கிறது….என்று கூக்குரலிட்டனர், இன்றும் அதையே தொடர்ந்து செய்கின்றனர்
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிதம்பரம் மும்பை தாக்குதலின் பொழுது தீவிரவாதத்திற்குஎதிராகசூழுரைத்தார், ஆனால், கர்கரேயின்கொலையின்பின்னிருந்தஇந்துத்வசக்திகள்குறித்துகண்டுகொள்ளவேயில்லை…மும்பைதாக்குதல்விசாரணைஅவசர, அவசரமாகமுடிவடைந்துகொலையின்பின்னிருந்தமர்மங்களைகுறித்துநீதிமன்றமும்கேள்வியெழுப்பியது…..ஊடகங்கள்லாவகமாகமறந்தன...ஊடகங்கள்மறைத்ததால் (இணைப்பு)உள்துறைஅமைச்சருக்கும் தெரியாமலிருக்குமென்று நாம் நம்பித்தான் ஆகவேண்டும்...அந்த லட்சணத்தில்தான் இந்திய அமைப்பு இருக்கிறது வாசிக்கும்அன்பர்கள் அறியாமல்இருக்க வாய்ப்பில்லை…
சரி விடுங்கங்க, இப்பொழுதாவது அவருக்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டாரே, என்று யாராவது தமக்குத்தாமே ஆதரவு சொல்லிக் கொள்வார்களானால்…..
இந்தியர்கள் என்று கூறப்படும்..(அழுத்தம் எமது)..அல்லது பிரச்சாரம்செய்யப்படும்அல்லது நம்பப்படும் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கசென்று….அழுத்தமான சுண்ணாம்பு கோட்டால் கடலில் போடப்பட்ட கோட்டை வேண்டுமென்றே பேராசையோடு லட்சக்கணக்கான மதிப்புள்ள மீன்களை பிடிக்கும் ஆவலில்...இரு நாட்டின் உறவுக்கு குந்தகம் விளைவிக்க வந்த படுபாவிகள் என்ற ரீதியில் சிதம்பரம் பேட்டியளிக்கிறார்......அவர் கண்டுபிடித்துச்சொன்ன மாபெரும் கண்டுபிடிப்பை பாருங்கள்
“எனக்குத் தெரிந்த வரையில் இந்த ஆண்டு ஒரு நிகழ்வு தான் நடந்திருக்கிறது.அதுவும் வருந்தத்தக்கது. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் ஏற்பட்டஉடன்பாட்டின்படி இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சுடக்கூடாது.இந்த உடன்பாட்டிற்கு பின் ஒரேயொரு நிகழ்வு தான் நடந்திருக்கிறது. அதுபற்றிநாங்கள் இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்லி, அது உடன்பாட்டை மீறிய செயல்என்றும், இந்திய மீனவர்களை சுடக்கூடாது, கைது செய்து பேச்சுவார்த்தைகள்நடத்தி விடுவிக்கலாம். என்று உடன்பாடு செய்து கொண்டிருக்கிறோம். அதை மீறிஇந்த நிகழ்வு நடந்திருக்கிறது. இனி நடக்காது என்று சொல்லியிருக்கிறார்கள்.
என்ன திமிர் இருந்திருந்தால் என் நாட்டின் மீனவனை சுட்டிருப்பான் என்று இந்தியனாகவோ அல்லது என்ன துணிவிருந்தால் என் இனத்தானை சுட்டிருப்பானென்று தமிழனாகவோ கேள்விக்கணை பறந்திருந்தால், இலங்கை அரசுக்கு எச்சரிகைகணை பறந்திருந்தால்....ஆனால், என்ன செய்வது? அந்த மீனவனின் பெயர் கார்த்தி அல்லவே....
ஆக சிதம்பரத்திற்கு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது, இதில் சிதம்பரம் என்று குறிப்பிடுவது, சிதம்பரம் என்ற ஒற்றை மனிதரை மட்டுமல்ல….நாம் தலைவர்களாக பெற்றிருக்கும் அனைத்து தருதலை தலைவர்களையும்தான்...சிறுபான்மையினர்கள், காங்கிரசு, பாஜக என மாறி, மாறி ஏமாந்து திரிவதற்கு பதிலாக, இவர்களை நம்பி, நம்பி விரக்தியடைவதற்கு பதிலாக..இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களோடு அணிசேர்ந்து, இந்த ஏமாற்றுக்காரர்களில் போலி மக்கள் பற்றை செருப்பால் அடித்தால்தான்….வேண்டாம் வேண்டாம் செருப்பால் அடித்தும் நம் தலைவர்களுக்கு சுரணை வரவில்லை….துடைப்பம் பயன்படுத்திப்பாருங்கள்…
பசிச்ச வயித்துக்கு சோறில்லாமல் திரியும் நம் நாட்டிற்கு பசி போன்ற பசியறியாத தலைவர்கள்இனியும் தேவையா என்று சிந்தியுங்கள்….