வெள்ளி, 9 மார்ச், 2012

என் பள்ளி நினைவுகள் - 1


மும்பை தமிழ் மாணவர்களுக்கு சரியான பள்ளி என்று ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால், அது கண்டிப்பாக தாராவி 90 அடி சாலையில் அமைந்துள்ள “காமரசர் உயர்நிலைப்பள்ளி” தான். 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வியும், 5 ஆம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்வியும் அங்கே கற்பிக்க படுகிறது. சரியான வழிகாட்டுதல் உள்ள மாணவர்கள், தமிழ் உள்பட நான்கு மொழிகளை சரளமாக பேசக் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் நாகர்கோவில் பகுதியை சார்ந்தவர்கள் ஆகையால் குழந்தைகளுக்கு கூட நாகர்கோவில் வட்டார வழக்கு தொற்றிக் கொள்ளும், ஆங்கிலவழிக் கல்வியும் கூட நாகர்கோவில் வட்டார வழக்கில்தான் எமக்கு கற்பிக்க படும். ஆங்கிலத்தையும், பிற பாடங்களையும் எழுத்து வடிவிலோ, மனப்பாடம் செய்யும் பொழுதிலோ ஆங்கிலத்தில்தான் நாங்கள் மேற்கொள்ள இயலும் என்றாலும், நாங்கள் பாடங்களை புரிந்து கொண்டது என்னவோ தமிழில்தான்.


ஆசிரியர்களின் பேச்சு வழக்கு சில வேளைகளில் என்னை போன்ற திருநெல்வேலி வட்டார மாணவர்களின் வீட்டில் கூட எதிர்ப்பை ஈட்டும்.

“எம்மா அவிய வந்துட்டாவலா” என்று வீட்டில் பேசினால், ஏய் என்ன பேச்சு பேசுற, வாந்தவிய, போனாவியன்னு....அவிய, பொறியன்னுகிட்டு...ஒழுங்கா பேசுல” என்று திட்டு விழும்.


“எலா படிச்சுட்டு வந்தியாலா”, “எலா நீ உருப்படவே மாட்டாலா”, எலா சோவாரி “நீயெல்லாம் ஏம்லா பள்ளிக்கூடத்துக்கு வாரலா” போன்றுதான் நாங்கள் அடிக்கடி ஆசிரியர்களிடம் வசைகளை வாங்கிக் கொள்வோம். சில ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களிடத்தில் கொஞ்சம் கூடுதலாக சினம் கொள்ளும் நேரத்தில், “ஏலா நாப்பெய உள்ளா”(நாய் பய புள்ள) என்றெல்லாம் கூட திட்டுவார்கள். அப்படியான ஆசிரியர்களில் இன்றும் என்னுடைய பள்ளி தோழர்கள் சந்திக்கும் பொழுதில் இன்றும் நினைவிலிருப்பவர்களில் முக்கியமான ஆசிரியர் “முத்துவேல்” எமது கணக்கு ஆசிரியர். நான் தான் வகுப்பின் லீடர் ஆகையால்.....பள்ளிக்கு மாணவர்களை அடிக்கும் பிரம்பு கம்பு, கரும்பலகையில் எழுதப்படுவதை அழிக்கும் டஸ்டர் போன்றவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று பள்ளிக்கு மீண்டும் மறுநாள் எடுத்து வரும் வேலை எனது. பல நாட்களில் பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் மறந்து வந்துவிடுவேன்..


“எலா, நீயெல்லாம் ஒரு லீடர், சோப்ளாங்கி, சோப்ளாங்கி....வேற எந்த க்ளாஸ்லயாவது போய் ஸ்டிக் வாங்கிட்டு வாலா.....ஏய் லீடர் go and get the stick i say”


என்று வகுப்பிலிருந்து விரட்டி விடுவார். நானும் பள்ளி வளாகம் முழுக்க சுற்றி விட்டு அவரது வகுப்பு நேரம் முடியும் நேரத்திற்கு எதையாவது குச்சியை பொறுக்கிக் கொண்டு வருவேன்...அவரும் ரெண்டு மாணவரை அடித்து விட்டு சென்று விடுவார்..


அப்படி என் பள்ளி தோழர்கள் இன்றும் சந்தித்தும் நினைவூட்டிச் சிரித்துக் கொள்ளும் இரண்டு சம்பவங்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.


நான் அப்பொழுது 9 ஆம் வகுப்பு படித்து வந்தேன். காலை 7 மணிக்கே வகுப்பு, முதல் வகுப்பே முத்துவேல் சாருடைய வகுப்புதான்.


வகுப்பில் நுழைந்தவுடன் சேட்டை செய்து கொண்டிருந்த நாங்கள் எல்லோரும் அவர், அவர் இருக்கைக்கு சென்றோம். ஆசிரியர் தன்னுடைய இருக்கைக்கு அருகே இருந்த மேசையில் சாய்ந்து கொண்டு நின்றார். மொத்த வகுப்பும் அமைதியாக

“தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.

(those who have not done the home work, stand up)

வகுப்பில் யாருமே எழவில்லை.

மீண்டும்

“தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.

மொத்த வகுப்பில் யாருமே எழல்லை.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த “முத்து” என்ற மாணவனின் நோட்டை கையில் தூக்கிக் கொண்டு “ஹோம் வர்க் எங்கல” என்றார்.

அவனும் புன்முறுவலுடன் “ சார் நோட்,,,,” என்று அவர் கையிலிருந்த நோட்டை வாங்கி....ஏதோ அவன் செய்துவிட்டு வந்த வீட்டுப்பாடம் நோட்டிலிருந்து காணாமல் போய் விட்டது போல நடித்தான்.

கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

மீண்டும், “தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.

மொத்த வகுப்பும் எழுந்து நின்றது.

நானும், வசந்த மேரி என்ற பெண்ணும் மட்டும் எழ வில்லை. ஏனென்றால், நாங்கள் இருவரும் லீடர்...எங்களை பெரும்பாலும் ஆசிரியர்கள் சோதிப்பதில்லை என்ற திமிரில் எழ வில்லை. ஆனால், நாங்கள் இருவருமே வீட்டுப்பாடம் அன்று செய்யவில்லை என்பது வேறு செய்தி.

என்னை நோக்கி “ ஏய், லீடர் ஸ்டிக் எங்கலே, where is the stick” என்றார்.

நான் பம்மி, பம்மி எழுந்தேன்......

“சோப்ளாங்கி, சோப்ளாங்கி நீயெல்லாம் ஒரு லீடர்,,,,போலே போய் ஸ்டிக் வாங்கிட்டு வா”


நான் நேரடியாக தலைமை ஆசிரியரின் அறைக்கு சென்று அவரிடம் கெஞ்சி குச்சியை வாங்கி வந்தேன்.

கம்பை வாங்கியவருக்கு என்னை நினைவு வந்திருக்குமோ தெரியாது.

ஆனால், கண்டிப்பாக அந்த நிகழ்வுதான் நினைவு வந்திருக்கும்.

(சும்மா ஒரு Flash back னு நினைச்சுக்கோங்க.....)

ஒரு நாள் முத்துவேல் சார், வகுப்பில் கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார், கரும்பலகையில் மும்முரமாக sin, cos, tan, cot, sec, cosec என்று எழுதிக் கொண்டிருந்தார். கடைசி இருக்கையில் இருந்த ஒரு மாணவன் எழுந்து, “ஏலே முத்து” என்றான். ஆசிரியரும், முதல் இருக்கையில் இருந்த முத்து இருவரும் திரும்பினர்.

ஆசிரியர், “என்னலே” என்றார்

“சார், பென்சில் சார்” என்றான் கடைசி இருக்கை மாணவன்.

மீண்டும் அந்த துடுக்கு பையன் அதே போல செய்ய, ஆசிரியர் திரும்பி “ இப்ப என்னலே, என்க... ”ரப்பர் சார்” என்றான். இவனுக்கு முத்துனு பெயர் இருக்கிறதுனாலதானே இந்த பயலுக நம்மை பெயர் சொல்லி அழைத்து எகத்தாளம் செய்கிறார்கள் என்று அவன் மேல் வஞ்சம் வைத்தாரோ என்னவோ...

(Flash Back முடிஞ்சது)

ஸ்டிக்கை கையில் வைத்திருந்தவர், முத்துவை அடித்து, அடித்தே....

முதல் வரிசையில் இருந்து கடைசி இருக்கை வரை கொண்டு வந்துவிட்டார்.

அவனும் எவ்ளோதான் அடி வாங்குவான்....

“சார், என்ன சார் அடிச்சிட்டே இருக்கீங்க......சும்மா....” என கம்பை பிடுங்கி வீசி எறிந்தான்.

ஆசிரியருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... அப்படியே நடந்து சென்று...தம் மேசையில் சாய்ந்து கொண்டு.....

“ Students எல்லாம் ரவுடிகளாயிட்டானுங்க...ஹோம் வர்க் செய்யாம வந்ததுக்கு சார் அடிச்சா...சார் திருப்பி அடிப்பானுவ....படிங்க....இல்லன்னா படிக்காம நாசமா போங்க” என்று சொல்லி விட்டு வகுப்பை விட்டு வெளியேறிவிட்டார்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மலத்திற்கு சமானம் இந்நாட்டின் விடுதலை...

நல்லதொரு இரவுப்பொழுது, மும்பையின் கொட்டும் மழை...நாங்கள் அதை பேய் மழை என்று கூட கூறுவோம்..பல வேளைகளில் மழையின் பொழுதே மின்சாரம் துண்டிக்கப்படும்....அந்த குளிரில், வழக்கமான அச்சமூட்டும் பேய்களின் குரலும் சில நேரங்களில் இடிவழியாக கேட்கும்...நான் காதை பொத்திக் கொண்டு, போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முயற்சி செய்வேன்...சிறிய அறையில் நான் என் இரு தங்கைகள்,என் தகப்பன், தாய் என ஐந்து பேர்....கிராமத்தின் சமையற்கட்டு அளவு கூட இல்லாத வீடு...நானும் தங்கைகளும் அருகருகே பேய்க்கு பயந்து, காலிலிருந்து போர்வை விலகிவிடாதபடி...நெருக்கி படுத்துக் கொள்வோம். போர்வையை வைத்து உடலை மூடிக் கொண்டால் பேய் வராது என்றொரு நம்பிக்கை எனக்கும், என் தங்கைகளுக்கும்..



தலையில் தீச்சட்டியோடு ஒரு பேய், கருப்புடை அணிந்திருக்கிறது( அப்படித்தானே படத்தில காண்பிச்சானுங்க)...என்னை துரத்திக் கொண்டே ஓடிவருகிறது, நானும் என்னால் இயன்ற அளவு ஓடிக் கொண்டேயிருந்தேன்...ஒரு கட்டத்தில் தனது மந்திர சக்தியால் நேரடியாக தன் கையை நீட்டி என் தோளை தொட்டே விட்டது. ஆ..ஆ..என்று நான் அலறி எழ..."என்னடா எந்திரி..எந்திரி...வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சு.."தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு நின்றது.தண்ணீர் காலை நனைத்த சுகத்தில் மீண்டும் நான் தூங்க சென்றேன்...வீட்டிற்குள் உறங்கும் வேளையில் மூலையில் ஒதுக்கி வைக்கும் கட்டிலை விரித்துவிட்டு..என் அப்பனும், ஆத்தாளும்...என்னையும்,என் தங்கைகளையும் கட்டிலில் அமரவைத்து உறங்கச் சொன்னார்கள்...அப்பொழுதுதான் மெல்ல உறக்கம் கலைந்தது..வீடெல்லாம் மலம்....மிதக்கும் வெளியாக மழைநீர் கலந்த சாக்கடை நீர்...கடந்த சில ஆண்டுகள் முன்புவரை...நாங்கள் வசித்த சாலில்(தெருவில்) இதே நிலையில்...இரவெல்லாம் விழித்து, உறங்கி, விழித்து, உறங்கி நான் விழித்திருக்க...தண்ணீர் வந்து வீட்டிற்குள் கொட்ட கொட்ட இறைத்து இறைத்து வெளியே தண்ணீரை வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்...அள்ளி தெளித்த தண்ணீர் கண்டிப்பாக சில, பல மலத்துளிகளை அவர்தம் உடலில் தெளித்திருக்கும்..


இந்த அனுபவத்தை என்றுமே அனுபவத்திராத சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஜெயா, கருணா உள்ளிட்ட மேன்மைமிகு தலைவர்கள்(த்தூ.............) எனக்கு வாழ்த்து செய்தி சொல்லுதுங்க...நானும் வெட்கங்கெட்டத்தனமான மலத்திற்கு சமானமான இந்நாட்டின் விடுதலையை கொண்டாடணுமாம்..

===================================================================

இன்னும் ஒடுக்கப்பட்ட சகோதரர்களை மலமள்ள 100% இட ஒதுக்கீடு செய்து வைத்திருக்கும் இந்த கேடுகெட்ட இந்தியாவின் விடுதலையை மலத்திற்கு ஒப்பிடாமல் எதோடு ஒப்பிடுவது..



ஞாயிறு, 19 ஜூன், 2011

கழுதை இந்தியா என்னும் நாட்டின் பிரதமராகலாமா?

இந்தியா என்று சொல்லப்படும் என்று சொல்லப்படும் முதலாளித்துவ கட்டமைப்பை பிரதானமாக கொண்ட அரசில், ஜனநாயகம் என்றும் மக்களாட்சி என்றும் ஒரு அமைப்பு இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மக்களை ஆளுமாம், அதுவும் மக்களுக்காக ஆளுமாம், அது மக்களுடைய அரசாக இருக்குமாம். அப்படியா என்று வியப்போடு யாரும் கேட்டு விடாதீர்கள். அப்படித்தான் நடப்பதாக இங்குள்ள அதிகார வர்க்கம் பிரச்சாரம் செய்கிறது.

மக்களை ஆள தகுதி படைத்த பூரண யோக்கிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, அதன் பொருட்டு தேர்தலையும் நேர்மையாக நடத்த(என்னா பித்தலாட்டம்?) சுயேச்சையான அமைப்பு(!!!!) என்று சொல்லப்படுகிற தேர்தல் ஆணையம் நடத்துமாம்...நடத்தி......என்ன இழுவை இன்னும் படிங்க......அந்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாம்....

தேர்தல் முறையை சுறுக்கமா புரிஞ்சுக்கணுமா?

பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாகவும்), ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்), திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) போட்டியிடுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்...

அதற்கு இவர்கள் தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் கட்டி மனுதாக்கல் செய்ய வேண்டும்..

சுயே..ச்சை அமைப்பான தேர்தல் ஆணையம், இவர்களின் சொத்து கணக்கு உள்ளிட்ட கொடுக்கப்பட்ட விபரங்களை Under the table-ஆகவோ, Upper the Table-ஒ வைத்து நீண்ட ஆய்வு நடத்தி, போட்டியிட அனுமதி வழங்கும்...

இந்த கம்முனாட்டி, மன்னிக்கவும் மதிப்பிற்குரிய வேட்பாளர்களும் தமது பிரச்சாரத்தை தொடங்குவர்.....அண்டா தரேன்( ஜெயிச்சு வந்தா தண்ணி தரமாட்டானுங்க), மிக்சி தரேன்( ஒழுங்கா மின்சாரம் வராது) னு திறந்தவெளி வேனிலேயே பயணம் செய்து, இருக்கின்ற தேர்தல் ஆணைய கண்காணிப்பின் முன்னிலையிலேயே வாக்களித்தால் லஞ்சம் தருவேன் என்று மைக்கை முழுங்குவார்கள்...ஆனால், தேர்தலுக்கு முன் பணம் வழங்குவதை மட்டும் குற்றமாக கருதி, பணமே கிடைக்காத இடத்தில் மட்டும் தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்துவார்கள்...


பிரச்சாரம் முடிந்து தேர்தலும் நடக்கும்...

பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாக)-4 வாக்குகளும்,
ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்) - 3 வாக்குகளும்,
திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) - 2 வாக்குகளும் பெற்றிருப்பர்...

உடனே பார்த்தசாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்க படுவார்..கூர்ந்து கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வெளிப்படையாக தெரியும் ஒரு உண்மை...

பார்த்தசாரதிக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கின் எண்ணிக்கை 5, ஆதரவாக விழுந்தது 4... ஆனால், இந்த தேர்தல் முறையில் எதிராக வாக்களித்த மக்களின் மனநிலை முற்றாக நிராகரிக்கப்படுகிறது.

இந்த லட்சணத்திலான தேர்தல் முறையில்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வென்றார்.( நமக்குத்தான் வெக்கமே இல்லை, அதை ஏத்துக்க வேற செஞ்சோம்..)

இதே காங்கிரசு அமைச்சரவை கடந்த தேர்தலில் மன்மோகன் என்னும் அமெரிக்க அடிவருடியை, அடிவருடின்ன உடனே தப்ப நினைச்சுடாதீங்க..குழந்தைங்க கால்ல வருடி விடறது இல்லையா? காதலி கால்ல வருடி விடறத இல்லையா? அதை மாதிரி அன்பா வருடி விட்டிருப்பார்னு புரிஞ்சுக்கோங்க...நல்லா இருக்குல்ல இப்படி புரிஞ்சுக்கிறதுக்கு......

எங்க விட்டேன்...ஆங்..அந்த மன்மோகனை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சு போட்டியிட்டாங்க.....வென்றார்கள்..... இதே சகல வல்லமை படைத்த தேர்தல் முறையின் படி..


இப்ப என்னடான்னா......

கழுதை இந்திய நாட்டின் பிரதமராகும் நேரம் கனிந்திருக்கிறது என்று திக்விஜய்சிங் கூறியிருக்கிறார்...

ஏன் கழுதை ஆனா ஒத்துக்க மாட்டீங்களோ.....மக்களாட்சியில் இதெல்லாம் சகஜம்தானே..ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்களித்ததோடு உங்களிடம் கருத்து கேட்பது முடிந்துவிட்டதே.....இனி உங்ககிட்ட என்ன மசிறுக்கு கேட்கணும்..நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பலத்தை வைத்து.....இனி கழுதையை கூட பிரதமர் ஆக்குவாங்க...கம்முனு கிடக்கணும்...


கழுதையோட பெயர் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறீங்களா? யோவ் கழுதை எப்படியா பிரதமர் ஆகும்னு நீங்க கேக்குற கேள்வி எனக்கு புரியுது...

கழுதைக்கு பதிலா...இந்திய நாட்டின் ஒரே விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்தான் பிரதமராகும் தகுதியோடு இருக்கிறாராம்...

செய்தி:
பிரதமர் பதவியில் ராகுல்: திக்விஜய் சிங்


ஞாயிறு, 12 ஜூன், 2011

ஜூன் 26 இல் மெரினாவிற்கு போவது அப்படி என்ன தேவை?


ஈழத்தில் நம் உறவுகளை சிங்கள இனவெறி அரசு பல பத்தாண்டுகளாய் கொன்று குவிப்பதை கொள்கையாய் கொண்டு இயங்கி வருகிற, சிங்கள இனவெறிக்கு எதிராக பல்வேறு வகையில் போராடிவிட்டனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். இனவெறிக்கு எதிரான இத்தகைய போராட்டங்களுக்கு தமிழகத்திலும், புலத்திலும் தொடர்ந்து அதற்கான ஆதரவு அலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தமிழக்த்தின் அரசியல் நரிகள் தின்று இன்று போதாமையில் வந்து நிற்கின்ற் அவல நிலையில் இருக்கிறோம். போராட்டங்களுக்கு, சுயமரியாதையின் பொருட்டு தன்னிச்சையாக திரள வேண்டிய இளைஞர்கள் கூட்டத்திடம் சென்று ஈழத்தில் நடந்த அவலத்தை பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


நம் சமகாலத்தில் நடந்த அவலத்தை வலிந்து சென்று கையில் திணித்து துண்டு பிரசுரத்தின் வழி பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், நமீதா "மச்சான்ஸ்" என்று சொன்ன செய்தி, த்ரிசா பாடிகாட் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி, அசின் பிகினி உடையில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி இளைஞர்களிடத்தில் தங்கு தடையின்றி போய் சேரும். தினதந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு என விதிவிலக்குகள் கிடையாது. இவனுங்க பத்திரிக்கை தொழில் நடத்துறானுங்களா, பேப்பர்ல விழிவழி விபச்சாரம் பண்ற தரகர்களான்னு கண்டுபிடிக்கிற அளவு நமக்கு சிக்கல். இதுல என்ன வேடிக்கைன்னா, நடிகை தொப்புளை தெளிவாக படம் பிடித்து போடும் பத்திரிக்கையில்தான் அழகிகள் கைது என்ற படச்செய்தியும் வரும். இந்த நாட்டுல இளைஞர்களுக்கு பாலியல் உணர்வை எவ்வளவு தூண்டனுமோ, அத்தனையும் தூண்டி விட்டு, விட்டு படுக்க மட்டும் இடம் தராது சமூகம், அப்பொழுதும் கலாச்சாரம் காக்க வந்துவிடும் இந்த விபச்சார பத்திரிக்கைகள்...


சமீபத்தில், இந்திய அதிகார வர்க்க விபச்சாரி மேனன் கம்முனாட்டி ஜெயா மாமியை சந்திச்சானாம். அந்த மேனன் வெங்காயத்தை பத்தி இங்கிருக்கிற பத்திரிக்கைகளுக்கு தெரியவே தெரியாதா? இவன் ஈழத்தமிழ் துரோகி என்று தெரியவே தெரியாதா? கேட்டா அந்த பொல்லாப்பு நமக்கு எதுக்கு, அரசு விளம்பரம் கிடைக்காதேன்னு ஒரு சால்ஜாப், ஊரறிந்த காரணம் வரும்.... ஏண்டா, தான் பொண்டாட்டி, புள்ள சேலையை உறிஞ்சாதான்........உங்களுக்கெல்லாம் கோபம் வருமா.... அப்ப காத்திருந்து டி.நகர் சேலை வாங்குங்கடா தாராளமா?

இது போதாதுன்னு, தொலைக்காட்சிகள் சொல்லவே வேண்டாம், நிழற்பட விபச்சாரம் செய்பவர்களுக்கு போட்டியாக, நிழல்கள் ஆடுவதை வைத்து, அதுவும் அரை குறையாய், நிறைவாய் குறைவாய் ஆடுவதை வைத்து விபச்சாரம்...

இப்படில்லாம் ரவுண்டு கட்டி விபச்சாரம் பண்ணா, மசிறாடா நாங்க இளைஞர்கள்கிட்ட போய் பிரச்சாரம் பண்ண முடியும்....
======================================================================
சரி பத்திரிக்கை காரங்க தொல்லை மசிறுதான் தாங்க முடியலைன்னு பார்த்தா.....
நம்ம அரைவேக்காட்டு அரசியல் வெண்ணெய்ங்களோடவும் பெருத்த தொல்லையா இருக்கு...

ஐநா என்னும் அமெரிக்க அடிவருடி அவை.....உலக மக்களின் துன்பத்திற்கு சாட்சியாக நின்று "வணக்கம் சார்" மட்டும் சொல்லும் அவை...

அந்த மசிற புடுங்குன அவை அமைச்ச ஒரு மயிர புடுங்காத கமிட்டி சில பரிந்துரைகளை செய்து...சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றது....அது, வெண்ண மயிரானையும் போர்க்குற்றவாளின்னு அறிவிக்கலை....போர்குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு போர்குற்றவாளிகளே நீதிபதிகளாக மாறி விசாரணையை நடத்த வேண்டுமென்று கூறியிருக்கிறது....

நாம் பட்டினி கிடந்தவனுக்கு வாசமும் சுவைதான் என்கிற ரீதியில் அப்படியே துள்ளி குதிச்சோம்...


அடுத்து ஈழத்து தாய், ஜெயலலிதா அம்மையார்...ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்..... சிங்கள அரசை போர்க்குற்றவாளின்னு அறிவிக்க மைய அரசு ஐநா மன்றத்தை வலியுறுத்தணும்...(இதுக்கு நடுவுல இந்திய அதிகார வர்க்கம் மனித உரிமை கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக முயற்சி பண்றானுங்கன்னு செய்தி கேள்விப் பட்டேன்...மேற்கொண்டு தகவல் தெரியல..எப்படி,எதன் வழியா தெரிஞ்சுக்க தோணும்...). சிங்கள வெறியர்களுக்கு உதவி செய்ய துடித்து, துடித்து உதவி செய்த காங்கிரசு கம்முனாட்டிகள் கால்ல மிரட்டி விழற தொனி தெரிஞ்சது.....முழுக்க திமுக சாடல்... இதுல புரட்சி மயிரான்.......விஜயகாந்த...காவிரி பிரச்சினையில் திமுக அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு.....பேசுறார்(ன்). 10 ஆண்டு துரோகம் பண்ண அம்மா முன்னிலையில் என்பதுதான் ஹைலட்டு....

இதுமட்டுமா, என்றால் சாதிக்குள் நின்று கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அறிவுஜீவிகள்.....மதத்திற்குள் படுத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் ஓநாய்கள்..... அடக்குமுறைக்கு எதிராக இன்னொரு விதமான அடக்குமுறையிடம் சரணடைவதை அரசியல் யுக்தி என்று பிதற்றும் அரைவேக்காடுகள்.......என பல மண்டை குடைச்சல்...

இப்படி எல்லா திசையில் நம்ம உயிரை வாங்குற கம்முனாட்டி நாய்ங்களுக்கு நடுவில் தன்னலமற்ற ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட(அதற்கு மேலும் கூட இருக்கலாம்...)
தன்னலமற்ற இளைஞர்கள் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மக்களிடம் சென்று குறைந்த பட்சம் மெரினாவில் அணிதிரளச் சொல்லி அழைத்திருக்கிறாள்...

குறிப்பாக சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கண்டிப்பாக இந்த அணிதிரள்விற்கு வரவேண்டும்...அதுவும், தங்கள் கட்சி கொடி, கரைவேட்டி இல்லாமல்.... இல்லையென்றால் வேட்டியை கழட்டிட்டு தயவு செஞ்சு ஓடிடுங்க......

உங்க பிழைப்புவாதத்திற்கு தமிழ்த்தேசியத்தின் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்.

================================================================

இவ்வளவு பேசுற நீ என்ன மசிறுக்குடா இணையத்துல எழுதுக்கிட்டு இருக்கிறே, மக்கள்கிட்ட போக வேண்டியதுதானே என்ற கேள்வி வரலாம்....என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வேன்....இதை படிக்கும் என் நண்பர்கள் அல்லாத தோழர்களும்....தயவு கூர்ந்து............தம்மால் இயன்ற அன்பர்களை அழைத்துக் கொண்டு மெரினாவிற்கு வாருங்கள்.................

தொடர்புகளுக்கு: தோழர் உமர்: 9600781111, தோழர் ஸ்டாலின்:9884877487