வெள்ளி, 14 நவம்பர், 2008

பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்”




ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ‘எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்’ என்று மார்தட்டும் ‘இந்து’ நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

1984 ஜூலை 24 ஆம் தேதி ‘இந்து’ நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.
“சென்னை-ஜூலை 13 - ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்’ வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் “வீடியோ கேசட்” மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.”

-என்று செய்தி வெளியிட்டது ‘இந்து’ ஏடு.

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான“உண்மைகளை” வெளியிட்ட “தரம் நிறைந்த” ‘இந்து’ பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, ‘மரணச் செய்தி’ வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, “இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்” - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான ‘கெடு’வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் ‘புளோட்’ இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் ‘இந்து’ ஏட்டின் வழியாக பிரபாகரன் “கொல்லப்பட்டார்”.

“இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!”

-என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது ‘Pirabhakaran Phenomenon’என்ற நூலில்.
மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

(It may not be wrong to infer that Indias intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

-என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
-1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,‘ரா’வின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”

-என்று ‘இந்தியா டுடே’ அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

பிரபாகரனின் இரண்டாவது “மரணம்”
1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை “மரணமடையச்” செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை‘மரணமடைய’ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

கொழும்பிலிருந்து வெளிவரும், ‘அய்லேன்ட்’ நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ‘ஏ.எஃப்.பி.’என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

“இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.”

“ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்”.

“சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.”

“இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்”
-இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் ‘இரண்டாவது மரணம்’ பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

“விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்.”

-இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட “கற்பனை மரணத்துக்கு”இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

1989 ஆம் ஆண்டில், பிரபாகரனின் ‘மரணச் செய்தியை’ அறிவித்த ‘இந்து’ பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு ‘கற்பனை மரணச்’ செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன ‘இந்து’ மட்டும், மீண்டும் பிரபாகரன்‘மரணச் செய்தியை’ வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, ‘இந்து’, பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - “பிரபாகரன் எங்கே?” என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

“சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?”

-என்றெல்லாம் கேட்ட ‘இந்து’,

“பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை”

-என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் ‘பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம்’ போலும்!

பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - ‘ஏ.எஃப்.பி.’செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்து‘இந்து’ ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் ‘இந்து’வின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்“மரணமடைந்த” அந்த “செய்தியை” உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் “உறுதி” செய்தார்.

‘ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், ‘மாவீரர்’துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமான“உண்மைத்” தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் “திறமை” மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தினகரா’தலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!“பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது.”

இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
-அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்

புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு “தேசிய நாளேட்டுக்கு” உரிய தகுதியா? ‘இந்து’ ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை “சுனாமிப் பேரலையில் சாகடித்த” பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!



இவற்றையும் வாசிக்கவும்
• மீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்

• இதுதான் ‘ரா’

• ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (2)- பிரதமரிடம் மறைக்கப்பட்ட அறிக்கை
• ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (3)-போராளிகளை மிரட்டிய உளவு நிறுவனங்கள்
• ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (4) - மாலத் தீவில் குழப்பம் செய்த ‘ரா’
• இந்திய உளவு நிறுவனங்களின் சதி பற்றி கருணாநிதி
• யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?





  • ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது.எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம் என்று மார்தட்டும்இந்து நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

    1984
    ஜூலை 24 ஆம் தேதிஇந்து நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.

    சென்னை-ஜூலை 13 - தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் வீடியோ கேசட் மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

    லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

    -
    என்று செய்தி வெளியிட்டது இந்து ஏடு.

    புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் இந்து ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் இந்து ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவானஉண்மைகளை வெளியிட்ட தரம் நிறைந்த இந்து பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, மரணச் செய்தி வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

    ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும் - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான கெடுவை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

    பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

    1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

    அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் இந்து ஏட்டின் வழியாக பிரபாகரன் கொல்லப்பட்டார்.

    இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!

    -
    என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது Pirabhakaran Phenomenonஎன்ற நூலில்.
    மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

    (It may not be wrong to infer that
    Indias
    intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

    -
    என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

    பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு இந்தியா டுடே இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

    1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் எம்.வி. அகத் கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
    -1993
    டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ரா (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,ராவின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

    -
    என்று இந்தியா டுடே அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

    1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

    பிரபாகரனின் இரண்டாவது மரணம்

    1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை மரணமடையச் செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறைமரணமடையச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

    கொழும்பிலிருந்து வெளிவரும், அய்லேன்ட் நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ஏ.எஃப்.பி.என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

    இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.

    ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்.

    சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.

    இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்
    -
    இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

    மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

    இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் இரண்டாவது மரணம் பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

    விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்.

    -
    இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட கற்பனை மரணத்துக்குஇந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

    1989
    ஆம் ஆண்டில், பிரபாகரனின் மரணச் செய்தியை அறிவித்த இந்து பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு கற்பனை மரணச் செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன இந்து மட்டும், மீண்டும் பிரபாகரன்மரணச் செய்தியை வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

    ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, இந்து, பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - பிரபாகரன் எங்கே? என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

    சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?

    -
    என்றெல்லாம் கேட்ட இந்து,

    பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை

    -
    என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம் போலும்!

    பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - ஏ.எஃப்.பி.செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்துஇந்து ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் இந்துவின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்மரணமடைந்த அந்த செய்தியை உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் உறுதி செய்தார்.

    ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

    வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், மாவீரர்துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
    அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

    இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமானஉண்மைத் தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

    உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் திறமை மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

    சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தினகராதலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது.

    இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன இந்து ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
    -
    அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்


    புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு தேசிய நாளேட்டுக்கு உரிய தகுதியா? இந்து ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

    உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

    சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை சுனாமிப் பேரலையில் சாகடித்த பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

    இவற்றையும் வாசிக்கவும்


மீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் - உளவு நிறுவனங்கள் தொடர்ந்து தலையிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக அரங்கேற்றி வரும் நாடகங்களின் சில உண்மைக் காட்சிகளை, ‘புரட்சி பெரியார் முழக்கம்வழியாக அம்பலப்படுத்தி வருகிறோம். இந்திய கப்பல் படையும், இலங்கை கப்பல் படையும் இணைந்து, இந்தியக் கடற்பரப்பில் கூட்டு ரோந்துநடத்தும் திட்டத்தை அமுல்படுத்திவிட்டால், ஈழப் போராளிகளின் கடல்வழி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்தோடு - இந்திய உளவு நிறுவனங்கள் தமிழகத்தில் முகாமடித்து, தமிழகக் காவல்துறையையும் மிரட்டி, செயல்படத் துவங்கியதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். ஆனால், முற்றிலும் இவர்கள் எதிர்பாராத நிலையில், ஈழப் போராளிகள், வான் வழித் தாக்குதலைத் துவக்கியவுடன், உளவுத் துறை அதிர்ச்சியடைந்தது.


இதனால் இந்தியாவுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வருகிறார்கள். போராளிகளின் விமானத் தாக்குதல் அந்நாட்டு சிங்கள மக்களையே குறிவைக்கவில்லை. ராணுவ, பொருளாதார நிலைகளை மட்டுமே தாக்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு, தமிழ் நாட்டுக்கு ஆபத்து என்று கூக்குரல் போடுவது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் என்பது, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் நன்றாகவே புரியும் (ஈழப் போராளிகளை தொடர்ந்து எதிர்த்து வரும் துக்ளக் பார்ப்பன ஏடு கூட - இந்த விமானத் தாக்குதலால் தமிழ் நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ ஆபத்து வரும் என்கிற கருத்தை ஏற்க முடியாது என்று எழுதியிருப்பதை நினைவூட்டுகிறோம்).

ஆனாலும் - தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உருவாகி வரும் மக்கள் ஆதரவை - திசை திருப்பிக் குழப்பிடும் முயற்சிகளில் உளவு நிறுவனங்கள், இப்போது தீவிரமாக செயல்படத் துவங்கி விட்டன. தமிழக மீனவர்கள் 5 பேரை கடந்த மார்ச் 29 ஆம் தேதி சுட்டுக் கொன்றது - விடுதலைப் புலிகளின் கடற்படையினர்தான் என்றும், அதற்கு 25 நாட்களுக்கு முன் மார்ச் 4 ஆம் தேதி மீன் பிடிக்கப் போய் திரும்பி வராத தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலைப் புலிகள்தான் சிறை பிடித்து வைத்துள்ளனர் என்றும், உளவுத் துறை பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழக காவல்துறையும் இது உண்மைதான் என்று உறுதிப்படுத்துகிறது. இதற்கான ஆதாரம் என்ன?

விடுதலைப்புலிகளின் கடற்படையினரையே நாங்கள் பிடித்து வைத்துள்ளோம். அவர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு விட்டார்கள். அவர்கள் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளோம்என்கிறது தமிழக காவல்துறை. தமிழக காவல்துறை இயக்குனராக இருக்கும் முகர்ஜி என்ற பார்ப்பன அதிகாரி - சட்டம் ஒழுங்குப் பிரச்சினைஎன்ற எல்லைகளைத் தாண்டி இப்படி எல்லாம் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குறிப்பிட்டதுபோல், சட்ட மீறலைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் கடமையே தவிர, நிகழ்ந்த சம்பவத்தில் அரசியல் யூகங்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பது அல்ல.

இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் மோதல் நடந்தால், குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கு தொடருவதுதான் காவல்துறை வேலையாக இருக்க முடியுமே தவிர, கைதானவர், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரங்களைத் தேடி - அறிவிப்பது அல்ல; அதைத்தான் தமிழக காவல்துறை இயக்குனர் முகர்ஜியிலிருந்து, கப்பல்படை தளபதி வரை இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் அரசியல்கள் நோக்கம் அடங்கி இருக்கிறது என்பதை, இது அப்பட்டமாக வெளிப்படுத்தி விடுகிறது.

நடந்த சம்பவங்களை உன்னிப்பாகப் பரிசீலித்தால், தமிழக காவல்துறையும், மத்திய உளவுத்துறையும் மக்களை திசை திருப்பிட, திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவே அழுத்தமான சந்தேகங்கள் எழுகின்றன.

மார்ச் 4 ஆம் தேதி கன்யாகுமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கரை திரும்பவே இல்லை. அவர்களை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக உளவுத் துறையும், காவல்துறையும் கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் மறுத்துவிட்டது. தமிழக மீனவர்களைப் பிடித்து தமிழர்களோடு முரண்பாட்டை வளர்க்க வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு என்ன வந்தது என்பது முதல் கேள்வி? தமிழகத் தமிழர்களின் நட்புக்கும், நேசத்துக்கும் ஆதரவுக்கரம் நீட்டி நிற்பவர்கள் - தமிழ் ஈழப் போராளிகள்.

தற்போது தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உளவுத் துறையில் கடற்புலிகள்என்று சுட்டப்படுகின்ற, 6 தமிழர்களும் யார்? அவர்கள் உண்மையில் கடற்புலிகளா? அல்லது மீன் பிடிக்க வந்த ஈழத் தமிழர்களா? யார் இவர்கள்?

இவர்கள் கன்யாகுமரி அருகே நடுக்கடலில் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், இவர்கள் பிடிபடுவதற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு, கடலில் மீன்பிடிக்கப் போன 12 தமிழ்நாட்டின் குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை சுட்டுக் கொன்றது, இப்போது பிடிப்பட்டவர்கள்தானா என்ற சந்தேகங்களும பத்திரிகைகளால் எழுப்பப்பட்டன.

இது பற்றி - தமிழ் நாளேடுகளான தினமணி’, ‘தினத்தந்தியில் வெளியான செய்திகள் என்ன கூறின?

மார்ச் மாதம் 4 ஆத் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 தமிழ்நாடு மீனவர்கள் கரை திரும்பவில்லை.

மார்ச் 29 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 5 தமிழக மீனவர்கள் இறந்து விட்டனர். அதே படகில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி, கரை திரும்பிவிட்டனர். அப்படி, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் வந்த படகில் மரியாஎன்று எழுதப்பட்டிருந்தது.

ஏப்ரல் 11 ஆம் தேதி - இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை கடலில் ரோந்து சென்றபோது, தூத்துக்குடி அருகே தமிழக கடல் பரப்பில் 6 ஈழத் தமிழர்களையும், 6 தமிழக மீனவர்களையும், கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீன் பிடிக்க வந்தபோது, படகு பழுதாகி, கடலில் தவித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் மீனவர்கள், தங்களிடம் உதவி கேட்டபோது, அவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்ததாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஈழத் தமிழ் மீனவர்களின் படகில் மரியாஎன்ற பெயர் காணப்பட்டதால், ஒரு சந்தேகம் எழுந்தது. இதே பெயர் எழுதப்பட்ட படகில் வந்தவர்கள்தான் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக, அவர்களுடன் சென்று உயிர் தப்பி வந்த மீனவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன், இவர்களிடம் விசாரணை நடத்தினார். ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சூட்டில், உயிர் பிழைத்து கரை திரும்பிய கன்யாகுமரி மீனவர்கள், தூத்தக்குடிக்கு அழைக்கப்பட்டனர். இப்போது மரியா படகில் பிடிப்பட்டுள்ளவர்களைக் காட்டி, “இவர்கள்தான், உங்களைச் சுட்டவர்களா?” என்று கேட்டபோது, தமிழக மீனவர்கள் அவர்களைப் பார்த்து - எங்களைச் சுட்டது இவர்கள் இல்லைஎன்று கூறிவிட்டனர். அத்தோடு இந்த மரியாபடகும் - எங்களைச் சுட்டவர்கள் வந்த படகு அல்ல என்றும் தெரிவித்தனர். பிடிபட்ட ஈழத் தமிழ் மீனவர்களின் பெயர், ஊர்களோடு பத்திரிகைகளுக்கு செய்தி தரப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டது, பிடிபட்ட, ஈழத் தமிழ் மீனவர்கள் அல்ல என்று காவல்துறை திட்டவட்டமாக அறி வித்தது. கைதானவர்களிடமிருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. எல்லை தாண்டி - தமிழ் நாட்டுக்குள் நுழைந்தார்கள் என்பது மட்டுமே குற்றச்சாட்டு. அந்த வழக்கைப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்கள்; பிரச்சினை முடிந்துவிட்டது.

இதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் முகாமிட்டு, ‘கூட்டு ரோந்துக்குஉரிய அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு, திட்டமிட்டு செயல்பட்டு வரும் மத்திய உளவுத் துறை, தமிழ் ஈழப் போராளிகள் மீது பழி போட்டு, தமிழ் நாட்டுக்கும், ஈழப் போராளிகளுக்கு மிடையே முரண்பாட்டை கூர்மைப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்கின. இப்படிக் கருதுவதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன.

தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் சுடப்பட்டது மார்ச் 29, 2007. அடுத்த நாளே - அதாவது மார்ச் 30 ஆம் தேதியே சிறிலங்கா அரசு, தமது கப்பல்படை, சுடவில்லை என்று மறுக்கிறது. அது மட்டுமல்ல, இதில் விடுதலைபுலிகளுக்கு தொடர்பு இருக்கலாம்என்றும், பழியை விடுதலைப்புலிகள் மீது போடுகிறது.

(The Srilanka Government said the complicity regarding the incident must be attributed to the LTTE, March 31, ‘Daily Mirror’)

சிறீலங்கா அரசு மறுப்பு வெளியிட்ட அதே நாளில், அதே குரலை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தியாவினுடைய கப்பல் படை தலைமை அதிகாரி அட்மிரல் சுரேஷ் மேத்தா, அதே மார்ச் 31-ல் அவரது பேட்டியை இந்துநாளேடு வெளியிடுகிறது. இதில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உண்டு என்ற கருத்தை புறக்கணித்துவிட முடியாதுஎன்கிறார், இந்திய கப்பல்படையின் தலைமை அதிகாரி. இன்னும் ஒரு படி மேலே போய், தமிழ்நாடு அரசையும் குற்றம்சாட்டுகிறார். தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி, தமிழக மீனவர்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்க, தமிழ்நாடு அரசு தவறிவிட்டதுஎன்றும் தமிழக அரசைக் குற்றம் சாட்டினார்.

மீனவர்கள் சுடப்பட்டது மார்ச் 29. உடனே - ஒரே நாள் இடைவெளியில் எந்த விசாரணையுமின்றி விடுதலைப்புலிகள் மீது, இந்திய கப்பல்படை அதிகாரி எப்படிப் பழி போட முடிகிறது? இப்படி யூகத்தின் அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை, பொறுப்புமிக்க அதிகாரி ஏன் பிரச்சார காரரைப் போல் பரப்ப வேண்டும்? சிறீலங்கா அரசின் குரலை அப்படியே ஏன் எதிரொலிக்க வேண்டும்? தமிழக அரசையும் சேர்த்து, ஏன் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்? ஆக, இதற்குப் பின்னால், திட்டமிட்ட உள்நோக்கம் ஒன்று இருக்கிறது என்ற சந்தேகம் எழத்தானே செய்கிறது?

இந்த நிலையில், அடுத்த நாளே - ஏப். முதல் தேதியன்று, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் இளந்திரையன், இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் என்று மறுத்து விடுகிறார்.

தாயகத் தமிழ் உறவுகளும், ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறீலங்கா அரசும் இணைந்த இச்சம்பவத்தில் எங்களைத் தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். தாய்த் தமிழக உறவுகளும், ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே ரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும் நாடு இனபேதமின்றி தமிழ் மக்களைக் குறி வைத்துப் படுகொலை செய்கிற சிறீலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும்

-
என்று அந்த அறிக்கை கூறியது. ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை விரும்பாத தீய சக்திகள், சிறீலங்கா அரசோடு இணைந்து நடத்தும் சதி என்கிறது அந்த அறிக்கை!

இதற்குப் பிறகு - இரண்டு வாரங்கள் ஓடுகின்றன. மீண்டும் ஏப்.17 ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும், இலங்கை அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் அறிக்கை விட்டது. அடுத்த நாள் - ஏப். 18 ஆம் தேதி இலங்கை கடற்படை அதிகாரி, கமாண்டி டி.கே.பி. தசநாய்க்கே என்பவர் கொழும்பில் பத்திரிகையாளர்களைக் கூட்டி, தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று கூறினார். அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழ் நாட்டில், உளவுத் துறை தீவிரமாக செயல்படத் துவங்குகிறது.

ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு, மீனவர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட, ஈழத் தமிழ் மீனவர்களை மீண்டும் தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு சிறையிலிருந்து வெளியே எடுத்து விசாரணை நடத்துகிறது. ஏப்.20 ஆம் தேதி காவல்துறை அவர்களை விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த இரு நாட்களில் ஏப்.23 இல் உளவுப் பிரிவு, விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த நான்கு நாட்களில் ஏப்.27-ல் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் தான் என்று அறிக்கை விடுகிறார். தமிழக முதலமைச்சரும் இதே அறிக்கையை சட்டசபையில் உறுதி செய்கிறார். மீண்டும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இதை மறுத்துள்ளனர்.

உளவு நிறுவனமும், சிங்கள அரசும் இணைந்து தமிழ்நாட்டு மக்களிடமிருந்து போராளிகளை தனிமைப்படுத்த தயாரித்த திட்டம் - தமிழக காவல்துறை வழியாக, அமுலாக்கப்பட்டு, அதையே தமிழக முதல்வரின் அறிக்கையாகவும், சட்டசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்திற்கு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏதுமில்லை. சிங்கள மீனவர்கள்களையே சுட்டுக் கொல்லாத விடுதலைப்புலிகள், தமிழக மீனவர்களையா சுட்டுக் கொல்லப் போகிறார்கள்?

கடந்த காலங்களில் அப்படி எந்தத் தொந்தரவும் புலிகளிடமிருந்து வந்தது இல்லை என்பதால், இதனை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது. நான் இது பற்றி டி.ஜி.பி., கியுபிராஞ்ச் எஸ்.பி. ஆகியோரிடம் பேசினேன். உயர் அதிகாரிகள் அறுதியிட்டுச் சொல்லும் போது நம்பித்தான் ஆக வேண்டியுள்ளதுஎன்கிறார் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு அமைப்பாளர் சர்ச்சில்! (பேட்டி - குமுதம் ரிப்போர்ட்டர்)

ஈழப் போராளிகளான விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்நாடு மீனவர்களுக்கும் உள்ள நெருக்கமான உறவை, ஈழத் தமிழ் மீனவரான நாதன் தாமஸ் என்பவர் இணையதளம் ஒன்றில் (www.yarl.com) எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று கூறிய தமிழக காவல்துறை அதிகாரியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் இரணை தீவு கடல் தொழில் சங்கத்துக்கு தலைவராக இருந்தபோது நடந்த சம்பவத்தைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்தியத் தமிழ் மீனவர்கள் எமது உடன் பிறப்புகள். 1990 ஆம் ஆண்டு ஆடி மாதம் - இரணைத் தீவு கடற்கரையில் தமிழ்நாடு மீனவர்களின் 250 படகுகள் தனித்து நின்றன. அவற்றை சிறீலங்கா அரசு தங்களது வான்கலங்களைக் கொண்டு (விமானங்கள்) அழிக்க முயற்சித்தது. அப்போது - எமது கிராமத்தில்தான், ஆயிரக்கணக்கான இந்தியத் தமிழ் மீனவர்களுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றினோம். அவர்களை விடுதலைப்புலிகளின் பாதுகாப்போடு தமிழகத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தோம். அது மட்டுமல்ல, அச்சம்பவத்தின்போது, இலங்கை விமானப் படை தாக்குதலால் பல படகுகள் சேதமாக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் உதவியால் - அப்படகுகளை சரி செய்து மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைத்தோம். காயமடைந்த 205க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு விடுதலைப்புலிகள் உதவியோடு, சிகிச்சைகள் வழங்கினோம். அந்த உறவு தொடர்ந்து நீடித்தது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களின் கிராமங்களிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்று எமது மக்களை, நாங்கள் இங்கு செய்த உதவிக்காக, அங்கே இந்திய மீனவர்கள், உணவு, தேவைக்கான பொருள்களை வழங்கி, நன்றாகக் கவனித்தார்கள். எங்களுக்குள் உள்ள இந்த உறவை, தமிழக காவல்துறை அதிகாரி அறிவாரா? எதற்காக, இப்போது, உண்மைகளை தலைகீழாகப் புரட்டி கூறுகிறார்? இதனால் உண்மைகளைப் புதைத்து விட்டோம் என்றோ சிங்களவன் தப்பி விட்டான் என்றோ அவர் தப்பாகக் கருதி விடக்கூடாது. அப்படி கருதினால் அது முட்டாள்தனம். எங்களது உறவுகளை சிங்கத்துக்கு (சிங்களருக்கு) காவு கொடுக்க நினைக்கிறாரா, அந்த அதிகாரி? - என்று, தனது உள்ளக் குமுறலைக் கொட்டியிருக்கிறார் அந்த மீனவர்! உண்மைகள் நீண்டகாலம் உறங்காது. அவைகள் விழித்தெழும்போது பொய்மைகள் வெளிச்சத்துக்கு வரவே செய்யும்.

http://www.keetru.com/periyarmuzhakkam/may07/fishermen.php