வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பூணூல் தத்துவத்தின் மீதான பாசமும்...பூணூல்களின் மீதான கோபமும்

சாதிவாரியாக மக்கள் தமது பாட்டன், முப்பாட்டன் சாதியின் பெயரால் செய்து வந்த தொழிலை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்ய வேண்டும், என்பதுதானே...அதைத்தானே இந்து மத அவதார யோக்கியன்(?) கண்ணன் தன் கீதையில் சுவதருமம் என்று கூறுகிறான். அந்த தரும்ம் அழியும் போதுதான் தான் மீண்டும் தோன்றுவேன்என்று கீதையில்யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத। அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ... யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்। பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே என்று மிரட்டுகிறான். அதே கண்ணனின் தரகர்களிடம்தான் இப்பொழுது கருத்து யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

பெரியாருக்கே அல்வா கொடுத்துவிட்டு, ஈரோட்டு பகுத்தறிவு பேரொளியை மங்கலாக்கிய பார்ப்பனீய கூட்டாளிகளின் அதே பார்ப்பன குரல்... தமிழகத்திலிருந்து மீண்டும். கிளம்பியிருக்கிறது ஒன்று கிண்டல், மற்றொன்று வேண்டுகோள்

முதலில் கிண்டல்

கலைஞர் தொடங்கி பேரன் வரையிலான திரைத்துறை ஆதிக்கத்தை குறித்தது...வந்தது ஒரு பார்ப்பன இதழில்..

““கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்

இந்த கிண்டல் கலைஞரை மிகவும் பாதித்து விட்டதாம்……

விடுவாரா கலைஞர்….புலம்பி தீர்த்து விட்டார்…..அவரின் புலம்பலின் விரிவான சுறுக்கம்

““என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?”

இதைத்தானே சுவதருமம் என்கிறது பார்ப்பன தத்துவம்….அதை தமிழகத்து குல்லுக பட்டர் ராஜாஜி, அதாவது கலைஞர் கூட்டத்தின் முதல் கூட்டாளி குலக்கல்வி திட்டமென அறிவித்தார்...பெரியார் மற்றும் சில தமிழக தலைவர்களின் எதிர்ப்புக்கு பிறகு கைவிடப்பட்டது..

ஆனால், இதே கலைஞர் தமது இயக்க மேடைகளில் படத்தில் மட்டும் பெரியாரை வைத்துக் கொண்டு, தம் குடும்பம் அரசியலில் மட்டும்தானா கொள்ளையடிக்க வேண்டும், வாரிசு வாரிசாய்

சினிமாவில் கொள்ளையடிக்க உரிமையில்லையா? என்று மனுதரும காவலர் என்ற உரிமையோடு கேட்கிறார்…(மக்கள் தலைவர் சு.சாமிக்காக சூத்திர வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கியது நினைவில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..)

பூணூல் கூட்டத்திற்கோ இந்நேரத்தில் வேறு சிந்தனை நூலறியா, பூணூலறியா வடிவரசி மம்மி ஜெயலலிதாதான் சுரண்ட வேண்டும். அந்த அம்மா எவ்வளவு வெளிப்படையா ஆர்லிக்சு மட்டும்தான்(அழுத்தம் எமது) திருடலைன்னு சொல்றாங்க….தமிழகத்து பிஜேபியின் தலைவராக, மன்னிக்கவும், அ.தி.மு.கவின் தலைவியாகவும் இருக்கிறார். அப்படியிருக்க மிக மிக என்று 100க்கு மிகாமல் போட்டுக் கொள்ளும் தலைவனை கொண்ட அமைப்பு எப்படி சுரண்டலாம்…..

தெற்காசிய முதலாளித்துவத்தின் புனைபெயரான பார்ப்பனீயத்தை காப்பாற்றா விட்டால் கண்ணன் என்னும் Play Boy கடவுள் வந்து அவதாரம் எடுத்து ஜகத்தை அழிச்சுடுவாரோயில்லையோ……

ஏதோ கலைஞர் ஈரோட்டு நினைப்பில் தமிழர் தலைவர்(எத்தனை பேருடா கிளம்பிருக்கீங்க?) வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை ராமகோபாலனுக்கே கொடுத்தார்..அதற்கு பரிகாரமாய்த்தான் வைத்தியநாதனையும், இந்து ராமையும் அழைத்து அழைத்து செம்மொழி மாநாடு நடத்தி விட்டாரே? இன்னும் ஏன் இந்த பார்ப்பனர்களுக்கு தன் மீது கோபம் தொடர்கிறது என்பதுதான் கலைஞரின் உள்மன ஆதங்கம்..

(செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்
பாவலர் அறிவுமதி)

பார்ப்பனீயம் உட்பட அனைவரது கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லும் கருணாநிதியின் இந்த உயர்ந்த அரசியல் பண்பை பார்ப்பன பத்திரிக்கைகள் புரிந்து கொண்டார்களா? நன்றி கெட்டவர்கள்...மீண்டும் அவர்களின் பார்ப்பன பாசம் ஜெயலலிதாவை நோக்கி திரும்பி போக வைத்து விட்டதே என்ற வருத்தம்தான் தமிழக கருணாவை வாட்டி வதைக்கிறது

(பொறுக்கி தின்பதற்கு பெயர் இந்நாட்டில் அரசியல் பண்பு, கூட்டணி தருமம்)

ஆனால் , இதற்கெல்லாம் அசந்திடுவோமா என "சுரண்டல் பார்ப்பனீயத்தின் சொத்து, ஐந்தாண்டுக்கு மேல் உமக்கு ஜால்ரா தட்ட முடியாது" என்று புரட்சி முழக்கத்தோடு கிளம்பிற்று காண் சிங்க சமஸ்கிருத கூட்டம்(நன்றி: செம்மொழி மாநாடு).

பூணூல் தத்துவம் பாசம் வெற்றி பெறுகிறதா? அல்லது பூணூல் வெற்றி பெறுகிறதா என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்அதுவரை மானாட மயிலாட பார்ட்-5..

தமிழ் வாழ்க!!!

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க........! - பாரதிதாசன்

“செந்தமிழை; செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.”

“பொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனித மோடதை எங்கள் உயிரென்று காப்போம்
உடலைக் கசக்கி உதிர்த்த வேர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலக உழைப்பவர்க்கு உரியதென்பதையே.”

“கைத்திறனும், வாய்த்திறனும் கொண்ட பேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம்
கொத்திக் கொண்டு ஏப்பம் விட்டு வந்ததாலே
கூலி மக்கள் அதிகரித்தார், என்ன செய்வேன்
பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்.”

“இந்த நிலை இருப்பதனால் உலகப்பா நீ
புதுக்கணக்கு போட்டுவிடு; பொருளையெல்லாம்
பொதுவாக எல்லோர்க்கும் குத்தகை செய்.”

“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களை தீர்க்க ஒர் வழியில்லை - அந்தோ
நெஞ்சு பொறுக்குதில்லையே.”

“ஆடுகிறாய் உலகப்பா யோசித்துப்பார்
ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்.”

“ஓடப்பாயிருக்கும் ஏழையப்பர்
உதையப் பராகிவிடில் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா நீ”

“சதுர் வர்ணம் வேதன் பெற்றால்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்று போட்டதடி - சகியே
எது பெற்று போட்டதடி?”

“ஊரிற் புகாத மக்கள்
உண்டென்னும் மூடர் – இந்த
பாருக்குள் நாமேயடி – சகியே
பாருக்குள் நாமேயடி”

“குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்
கொஞ்சமும் தீட்டில்லையோ? – நாட்டு
மக்களில் சிலர் மாத்திரம் – அந்த வகையில்
கூட்டில்லையோ?”

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நீங்கள் வணங்குவது அறியாமையைத்தானே - அம்பேத்கர்

ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ளும் தலித்துகளை நோக்கி,
நம்முடைய மக்களின் எத்தனை தலைமுறைகள் இப்படி இந்த ஆலயப் படிக்கட்டுகளில் தம் நெற்றியை தேய்த்து தேய்த்து, தேய்ந்து போயின. எந்த காலத்திலாவது இந்தக் கடவுள் உங்களுக்குக் அனுதாபம் காட்டியதுண்டா? அதன் மூலம் என்ன பெரிய பலன் கிட்டியுள்ளது? தலைமுறை தலைமுறையாக இந்தக் கிராமத்தின் குப்பைகளைக் கூட்டியதற்கு இந்தக் கடவுள் உங்களுக்கு கொடுத்ததென்ன? செத்த மாட்டைத் தானே, நீங்கள் வணங்குவது கடவுளை அல்ல, உங்கள் அறியாமையைத்தானே…. – அம்பேத்கர்

புதன், 14 ஜூலை, 2010

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு

பாகிஸ்தானிய, சீன ஊடுறுவலை கண்டித்தால் கைது...!!!! சட்டம் வர வாய்ப்பு....ஆமாம், அதற்கான வாய்ப்பை சமூக நீதி தளத்தில் முன்னோடி என்று மார்த்தட்டி கொள்ளும் தமிழகத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது....

"மானமிகு சிங்கள் இனவெறி இராணுவத்தின் மதிப்புமிக்க மானங்கெட்ட செயலை அன்போடு வன்மையாக கண்டிக்கிறோம்,"என்று கண்டிக்காததால், தமிழக ஊழல் பெருச்சாலிகளின் அதிகார வர்க்கம் சீமானை கைது செய்திருக்கிறது.

கையூட்டு கொடுத்தால் கையை கூட வெட்டி கொடுத்து விடும் இன்றைய நேர்மையான ஊழல் அரசியல்வாதிகளுக்கு, இனத்தை காட்டி கொடுப்பது பெரிய செயலா? நாம்தான் புரியாமல் இவர்களை நோக்கி வெற்றுக் கூச்சல் போடுகிறோம்.

சோனியா என்னும் இரக்கத்தின் உருவை கொண்டு, தமிழை கொன்ற தமிழ்நாட்டில், தமிழனை கொன்ற ஓராண்டில் மாநாடு நடத்தும், மதிப்பிற்குரிய டாஸ்மாக் புகழ் அரசிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.

ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க குரல் கொடுக்கும் தமிழர்களை நோக்கி கண்டிக்கும் குரல் கொடுக்கும் மானமிகு ( ஆமாம் அதென்ன மிகு? ) அமைச்சர் பெருமக்களுக்கு ஒரு கேள்வி, தன்னை அடிமையாக அறிவித்துக் கொண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் தங்கள் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பிடம் கேட்டுப்பாருங்கள்...

தனது வீரத்தை, சமூக நீதி கோட்பாட்டை ஏன் உத்தபுரத்தில் நிலைநிறுத்த முடியவில்லை என்று? வீராதி வீரர்கள் இலங்கைக்கு சென்று காப்பாற்றி வர முடியுமா என்று எள்ளி நகையாடும் உங்கள் தலைவருக்கு தில்லியை விட உத்தபுரம் தொலைவில் இல்லை என்ற செய்தி தெரியாதா? ஆமாம், தில்லிக்கு போனால் பதவி கிடைக்கும்.....உத்தபுரத்திற்கு போனால்..................?
இதைத்தான் ................வக்கில்லாதவனுக்கு.......................ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க தோழர்கள் நிரப்பிக் கொள்ளவும், எனக்கு மறந்து போச்சு....

(தமிழர்களுக்கு ஓங்கி குரல் கொடுப்பவர்களின் விழிகளுக்கும், செவிகளுக்கு உத்தபுரம் அவலம் போய் சேரவில்லையோ என்ற கவலை எமக்குண்டு, சேர்ந்தால் அதற்கும் குரல் கொடுங்கள்.....தயவு செய்து...)


ஆனாலும், இந்தியா என்னும் முதலாளிகளின் கூட்டமைப்பில், காசுமீரம், தண்டகாரண்யா காட்டில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் உரிமைக்கான போராட்டங்களை அங்கிருக்கும் பொம்மை அரசுகள் எப்படி காட்டி கொடுக்க வேண்டுமென்று முன்மாதிரி ஒன்றை ஒரு மாதிரி ஏற்படுத்தி தந்திருக்கும் தமிழ்நாட்டு அரசை அதிகார வர்க்க ஹிட்லர்-முசோலினி சகோதர, சகோதரிகளின் சார்பாக பெருத்த வருத்தம் கலந்த மகிழ்ச்சியோடு பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்....

அதோடு, இந்தியாவில் இருந்த பொடா, போடா சட்டம், தடா சட்டம், என்றும் இருக்கும் தாடா சட்டம்(லஞ்சம்) என எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் சீமானின் கைது,


இந்திய பனியா கூட்டம் கட்டியமைத்திருக்கும் எதிரி பாகிஸ்தானை விமர்சிப்பவர்களை சிறையில் தள்ளும் சட்டம் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு வர இருக்கிறது..........

இதை இப்பொழுது, இந்த சட்டத்தின் முன்வரைவு தீர்மானத்தை கலைஞர் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் இணைந்தே நேரடியாக ஒளிபரப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை....கூட்டு களவாணிங்கதானே இவிங்க