திங்கள், 2 ஜூன், 2014

மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்!

தலித் ஆண்களை அர்ச்சகர்களாக்குவோம் என்ற மோடியின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதாக தோன்றினாலும்அது குஜராத்தில் கடுமையான தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் வால்மீகி சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் மோசடி தவிர வேறென்றும் இல்லைதலித் மக்கள் வரலாற்று ரீதியாக சந்தித்து வரும் கொடுமைகள் குறித்து மோடி இதுவரை பேசியதேயில்லை என்று கூறலாம்.  ஆக,  இது தலைப்பு செய்திகளில் இடம்பெறும் உள்நோக்கம் கொண்ட  பச்சை இரட்டை வேடமன்றி வேறில்லை.
ஒளிரும் குஜராத் குறித்து தொடர்ந்து ஊடகங்கள் நிரம்ப பேசிவிட்டனஇது ஊடகங்கள் மறைத்து வைத்த அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டிய தருணம்தலித் இளைஞர்களுக்கு  அர்ச்சகர் பயிற்சி அளிக்கும் புரட்சியை செய்ய கிளம்பியுள்ள(!) இந்து இதயங்களின் சாம்ராட்’ மோ()டியை அம்பலப்படுத்த வேண்டிய தேவையின் பொருட்டே இந்தக் கட்டுரை.
இந்தக் குறிப்பிட்ட திட்டத்திற்காக மோடியின் அரசு ஒதுக்கியுள்ள தொகை 22.50 லட்சம்.  பெருமுதலாளிடாட்டாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு மோடியின் அரசு பிப்ரவரி மாதம் வழங்க ஒப்புக் கொண்டிருக்கும் கடன் தொகை ரூ.545 கோடிமுதலாளிகளுக்காக கோடிகளை ஒதுக்க முடிந்த மோடிக்கு,தலித் மக்களின் சுயமரியாதைக்கான திட்டமென்று பீற்றிக் கொள்ளும் திட்டத்திற்கு சில லட்சங்களை மட்டும் ஒதுக்கியிருப்பதே மோடியின்  அக்கறையின் லட்சணத்தை புரிந்து கொள்ள போதுமானது.
இந்த திட்டத்தின்  கீழ் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு சமஸ்கிருத அறிவு ஊட்டப்படுவதன் மூலமாக அவர்கள் சுயமாக பூஜைபுனஸ்காரங்களில் ஈடுபட இயலும்.  இதற்கான பயிற்சி சோம்நாத் சமஸ்கிருத வித்யா பீடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஇது உண்மையிலேயேசமூக சமத்துவத்திற்கான முன்னெடுப்பா அல்லது இந்து சமூகம் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுபடஇந்து மதத்தை விட்டு வால்மிகி சமூகம் வெளியேறிவிடாமல் தடுக்கும் கயமைத்தனமா? (சுய விருப்பத்தோடு மதமாறும் உரிமையை தடுக்க பாஜக கும்பல் தீட்டியுள்ள திட்டமென்று இதை புரிந்து கொள்ளலாமா?)
மோடிக்கு ஜால்ரா தட்டும் காவி ஆதரவாளர்கள் மோடியை புரட்சியாளராகவும்சீர்திருத்தவாதியாகவும் விளம்பரப்படுத்துகிறார்கள்சிலரோ,  அவர் பிற்படுத்தப்பட்டவர் ஆகையால்தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சுயமரியாதையோடு இந்து சமூகத்தில் வாழ வைக்கும் முயற்சி என்று புகழ்கிறார்கள்வால்மீகி சமூகத்தினிரிடையே ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது, “நீங்கள் ‘நகரத்தின் அர்ச்சகர்கள்’நகரத்தை சுத்தப்படுத்தும் நீங்கள் அர்ச்சகர்களை விட உயர்ந்தவர்கள்” என்றார் மோடி.அவருடைய சொற்கள் கேட்க  இனிப்பாகத்தான் இருக்கின்றது. (ஆனால்மலமள்ளும் தொழிலாளர்கள் அதே கையோடு தேனை தொட்டு சாப்பிட முடியுமா என்ன?).  இதுபோன்ற கரிசனங்களின் போர்வையில் மோடி சாதிக்க விரும்புவது என்னஅதை புரிந்து கொள்ளசமீபத்தில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவோடு கலந்து கொண்ட ‘சபரி மேளா’வில் மோடி பேசியதை நினைவில் கொள்ளுதல் சிறந்ததாக இருக்கும்.
பழங்குடியினர்களுக்கு மருத்துவ உதவிகளையும்உணவையும் வழங்கி வேறு மதத்திற்கு மாற்றுவதை இனி சகித்துக் கொள்ள முடியாதுஇது சொந்த மதத்திற்கு திரும்பும் காலம் வந்துவிட்டது.” (இணைப்பு)
எது சொந்த மதம்அப்படி இவர்கள் சொல்லும் சொந்த மதத்திற்கு திரும்பினால் என்ன சுயமரியாதை இருக்கும்.என்ன சாதியில் சேர்த்துக் கொள்வார்கள்இந்து மதத்திற்கு மாறுவதால் என்ன பொருளியல்,வாழ்வியல் முன்னேற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றதுஇவர் மதம் மாறுவதை  சாப்பாட்டுக்காக மதம் மாறுபவர்கள் என்று இழிவுப்படுத்துவதற்குஇவர் யார் மதம் மாறுவதை சகித்துக் கொள்ளாமல் இருக்க,இவருக்கும் நமக்கும் என்ன தொடர்புகொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்
எங்கள் அடிமைகள் மதம் மாறிய ஒரே காரணத்தினால் எப்படி சுயமரியாதை கோரலாம்எங்கள் அடிமைகளை நாங்கள் இழக்க தயாராக இல்லை.’ என்னும் வக்கிரம் தவிர வேறென்ன வெங்காயமிருக்கின்றது இந்த உரையில்இதையொட்டிஇந்த தலித் அர்ச்சகர் திட்டத்தை பரிசீலித்தால் தலித்துகள் இந்து மத சங்கிலிக்குள் பிணைத்து வைக்கும் திட்டத்தை புரிந்து கொள்ளும் எளிதாகும்.புரிதலை இன்னும் எளிதாக்க இன்னும் சில தகவல்களை சரி பார்ப்போம்.
இந்தியாவை வல்லரசாக்குவோம்சமத்துவம் படைப்போம் மேடை போட்டு விளம்பரம் பேசும் மோடியின் குஜராத்தில்அனைத்து சமூகத்தினரும் துப்புறவு பணியில் ஈடுபடவில்லை மாறாகஅங்கும் மனுதரும சிந்தனையின்படி தீண்டப்படாத வால்மீகி சமூகம்தான் துப்புறவு தொழிலில் ஈடுபடுகின்றது.
அகமதபாத் நகரத்தை 2031க்குள் கழிவில்லா நகரமாக மாற்றும் தொலைநோக்கு திட்டம்’என்று ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமொன்று வெளியிடப்பட்டதுஅந்த அறிக்கையின்படி ஒவ்வொரு மாதமும்1,10,667 மெட்ரிக் டன் திட கழிவை அகமதாபாத் நகரம் வெளியேற்றுவதாகவும்அதில் 1,08,454 மெட்ரிக் டன் அளவுக்கு மனிதர்களே அள்ளுகின்றனர்ஆனால்எங்கேயும் துப்புறவு தொழிலாளிகளின் பாதுகாப்பு குறித்து எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
Dalit woman in manual scavenging
Sample Image: Dalit woman in manual scavenging
1992 ஆம் ஆண்டு குஜராத் அரசு மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்து விட்டதாக அறிவித்தது. 2001 ஆம் ஆண்டுதான் மோடி குஜராத்தில் ஆட்சிக்கு வந்தார். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2500வீடுகளில் மனிதர்களே கையால் மலம் அள்ளும் அவலம் தொடர்வதாக தெரிவிக்கின்றதுமானவ் கரிமா என்னும் ஒரு அமைப்பு நடத்திய ஆய்வின்படி அகமதாபாத் நகரத்தில் மட்டும், 126 இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்வதையும், 188உலர் கழிப்பிடங்கள் உள்ளதாக அம்பலப்படுத்தியது அதை குறித்துதேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு மனுவை கையளித்ததுஇந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மோடியின் தலைமையிலான அரசு 1993 ஆண்டு சட்டத்தை எங்கள் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றது என்றும்அதன் படி மனித கழிவை மனிதனே அள்ளும் நிலை குஜராத்தில் இல்லையென்றது. (இணைப்பு)
மோடி மாயையை விலக்கி மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் உண்டுநடுநிலை ஊடகங்கள் கண்ணை மறைக்கும் காவிப்புழுதியை கிளப்பி நம்மை ஏய்க்க பார்க்கின்றனஇந்தியாவை காப்பாற்ற வந்த அவதாரம் போன்று பிரச்சாரம் செய்யும்  மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் 64 லட்சம் வீடுகளுக்கு கழிவுகளை வெளியேற்றும் சாக்கடை வசதிகள் இல்லை, 52 லட்சம் வீடுகளுக்கு கழிவறைகள் இல்லை(கேரளாவில் 71% வீடுகளுக்கு கழிவறை வசதிகள் இருப்பதும்பிற மாநிலங்கள் குஜராத்தைவிட முன்னேறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.) கழிவறை வசதிகள் கூட உருப்படியாக இல்லையென்றால்என்ன பொருள்? மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மக்கள் வெட்ட வெளியில் ‘கக்கா’ போகின்றார்கள் என்பதுதானேஆனால்இதை சரிசெய்யும் நோக்கமெல்லாம் இல்லாத மோடிக்கு இருப்பதெல்லாம் காவி திமிர்தான்அதற்கு உதாரணம் கீழ்க்கண்ட உளறல்
karmayog 2
கர்மயோக் புத்தக அட்டை
ஒரு சமூகம் தன் பெண்களை பொதுவில் செல்லும் போது புர்கா அணியச் சொல்கின்றதுஆனால்அதே பெண்கள் காலைக் கடனை கழிக்க காடுகளுக்குத் தான் செல்ல வேண்டியிருக்கின்றது.” (இணைப்பு)
மேற்கண்ட உளறலில் இஸ்லாமிய சமூகத்தை இழிவுப்படுத்தும் மோடி தலித் மக்களை துப்புறவு தொழில் தள்ளிய பார்ப்பனியத்திற்கு எப்படி விளக்கு பிடிக்கின்றார் தெரியுமா?
தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக மட்டும் துப்புறவு பணிகளை செய்து வருகின்றார்கள் என்று நான் நம்பவில்லைஅதுவாழ்வாதாரத்திற்கானதாக இருந்திருந்தால் தலைமுறைதலைமுறையாக அதே தொழிலை செய்து வந்திருக்க மாட்டார்கள்ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட்டத்திற்கு பிறகு யாராவது ஒருவருக்கு திடீர் அறிவொளி வந்துநாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகம் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்கானதுஆகையால்கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தொழிலைபல நூற்றாண்டுகளாக ஒரு ஆன்மீக பணியாகவே செய்து வருகின்றார்கள்அதனால்தான்தலைமுறை தாண்டியும் அவர்கள் மட்டும் செய்யும் தொழிலாகவே நீடிக்கின்றதுஎனவேவேறுவழியில்லாமல்வேறு தொழிலில்லாமல் இந்த தொழிலை மேற்கொண்டார்கள் என்பது நம்புவதற்குரியதாக இல்லை.”
karmayog(கர்மயோக் நூலின் 48-49 ஆவது பக்கத்தில்(இணைப்பு)
என்ன திமிர் பார்த்தீர்களாகழிவறை கட்ட வக்கில்லாதவ ஒருவர்தன் ஆளுகைக்குட்பட்ட பெண்களை இழிவுப்படுத்தும் முறையை பார்த்தீர்களாதலித் மக்களின் வலியை ஏதோ அவர்கள் வாங்கி வந்த வரம் போல திரிக்கும் கயமைத்தனத்தையும் பாருங்கள்கேட்டால் சிறந்த நிர்வாகியென்று மோடியின் தமிழ்நாட்டு தரகர் ‘தமிழருவி மணியன்’ ஊரெங்கும் கூவிக் கொண்டு திரிகிறார்இந்த மோடிதான் ஒளிரும் குஜராத்தை உருவாக்கியிருக்கிறாம்.
அதையெல்லாம் விடுங்கப்பா என்ன இருந்தாலும்இந்த அர்ச்சகர் திட்டம் வரவேற்கத் தக்கதுதானே என்று சிலர் இன்னும் மோடியின் காவிக் கொடிக்கு கையசைத்துக் கொண்டிருக்கலாம்வால்மீகி சமூகத்தை அர்ச்சகராக்கும் திட்டத்தை அமுல்படுத்தும் மோடிக்கு அந்த சமூகத்தின் மீது எந்த பெரிய அக்கறையுமில்லை என்று புரிந்து கொள்ள மேலும் சில தரவுகளையும் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
  1. நவ்ஷ்ர்ஜன் என்னும் அமைப்பு 2010 ஆம் ஆண்டு 1589 கிராமங்களை ஆய்வு செய்ததுஅவற்றில் 98%கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகின்றது.
  2. நாட்டை தூய்மைப்படுத்தும் அர்ச்சகர்கள் என்று மேடையில் புகழும் மோடியின் அரசின் கீழ் துப்புறவு தொழிலாளர்களுக்கு அரசு வேலை கூட கிடையாது பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்தான்ஊதியமோ மாதம் நாளைக்கு 50-100 ரூபாய்தான் கொடுக்கிறாங்க.(இணைப்பு)
  3. முடிவெட்டுவதற்கு கூட சாதி பார்க்கும் குஜராத்தின் சாதி இந்துக்கள் கொடுக்கும் மன உளைச்சல் தாளாமல் 200 குடும்பங்கள் பௌத்தத்திற்கு மாறியிருக்கின்றார்கள். (இணைப்பு)
  4. தலித் குழந்தைகள் துப்புறவு வேலை செய்ய பணிக்கப்படுகின்றார்கள். (இணைப்பு)
  5. ஒரு தலித் மைனர் பெண் வன்புணர்ச்சிக்குள்ளானதை கண்டித்து தலித் மக்கள் ஆர்பாட்டம் நடத்தினால் காவல்துறை லத்தி சார்ஜ் செய்கின்றது. (இணைப்பு.1இணைப்பு.2)
  6. ஒரு தலித் குடும்பத்தை ஊரை விட்டு காலி செய்ய சொல்லிய ஆதிக்க சாதி பஞ்சாயத்து. (இணைப்பு)
  7. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் செய்யப்பட்ட ஆய்வு, 90 விழுக்காடு தலித் குழந்தைகள் மருத்துவத்தின் போதும், 80 விழுக்காடு தலித் குழந்தைகள் ரத்த பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளின் போதும் பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்என்று தெரிவிக்கின்றது.
  8. 2010 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் 1298 தடவை மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள், 1181 தடவை பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். 10 இல் தடவை தலித் குழந்தைகள் பாகுபாடுகளுக்கு உள்ளாகின்றார்கள் என்றும் தெரிவிக்கின்றது. (இணைப்பு)
  9. தலித் மக்களுக்கு மோடியின் குஜராத்தின் குடிக்க தண்ணீர் இல்லைஇது குறித்து குரல் கொடுத்தால் மேல்சாதி மக்களின் முதல்வரான மோடிக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்இதன் காரணமாக எங்களை அவர்கள் தாக்கக் கூடும் என்பதால் மவுனம் காத்ததாக சொல்கிறார்கள். (இணைப்பு)
இன்னும் அச்சில் ஏறாதஇங்கே பட்டியலிடப்படாதபொதுவெளிக்கு வராத கொடுமைகள் ஏராளம் குஜராத்தில் உண்டுஒவ்வொரு சாதியும்ஒரு தேசமாக இருக்கின்றதென்றார் அண்ணல் அம்பேத்கர்.அதற்கு குஜராத்தொன்றும் விதிவிலக்கல்லஇந்த கோரமான உண்மையை மறைக்கத்தான் இந்து முஸ்லீம் கலவரமும்இந்து ஒற்றுமையை இந்துத்வ கும்பலால் கோரப்படுகின்றது.
எப்பொழுதெல்லாம் தலித் மக்களோபிற்படுத்தப்பட்டவர்களோ தமது உரிமைக்காக போராட தொடங்குகின்றார்களோ அப்பொழுதெல்லாம் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி தம் உரிமைகள் மீதான கவனத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை திசை திருப்பிஇஸ்லாமியர்களை பொது எதிரியாக்கி தம் சகோதரர்களை வெட்டி சாய்க்க செய்துவாக்கு சேகரித்துக் கொள்ளும் இந்துத்வ கும்பல். (.காமண்டல் கமிசன் அறிக்கைக்கு பின்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்இந்து முஸ்லீம் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதும்).
தலித் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் கார்ப்பரேட்டுகளாலும்காவித் தீவிரவாத கும்பலாலும் ஊதிப்பெருக்கப்படும் மோடியின் பலூனில் ஊசியை ஏற்றி அதை உடைக்கும் கூடுதல் பொறுப்பு தலித் மக்களுக்கு இருக்கின்றது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை 25% தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர்களின் என்ணிக்கை இருப்பதாக தெரிவிக்கின்றதுதெகல்காவின் கட்டுரையின் படி இதுவரை 12% தலித்துகளின் வாக்குகளை பாஜக மட்டுமே பெற்றிருகின்றது. (இணைப்புஅது மட்டுமில்லாமல் 189 தொகுதிகளில் வெற்றி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்றும் தெகல்காவின் ஆய்வு தெரிவிக்கிறது. (இணைப்பு) இந்த வாக்குகள் மதவாத, மக்கள் விரோத கும்பலுக்கு கிடைக்காமல் செய்வதோடுஇதர ஜனநாயக சக்திகளோடு இணைந்து பாஜக கும்பலை மண்ணை கவ்வ வைப்பது நமது கடமைஇணைந்து பணியாற்றுவோம்சோர்வடையாமல் சிந்தித்து பணி புரிந்தால் இது வெகு எளிதான வேலையே.

நன்றி :மாற்று

பிச்சையிடப்பட்டதல்ல தலித் மக்களின் உரிமை!

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930 டிசம்பரில் தீண்டப்படாதவர்களுக்கு எட்டுத் தடைகளை விதித்தனர். இந்தத் தடைகள் மீறப்பட்டதால் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக கள்ளர்கள் கடும் வன்முறையைப் பயன்படுத்தினர். தீண்டப்படாதவர்களின் குடிசைகள் தீவைத்து சுட்டெரிக்கப்பட்டன; அவர்களுடைய களஞ்சியங்களும் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன; அவர்களது கால்நடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கள்ளர்கள் தீண்டப்படாதவர்களுக்கு விதித்த தடைகள் வருமாறு:
  1. ஆதி-திராவிடர்கள் தங்க நகைகளையோ வெள்ளி நகைகளையோ அணியக் கூடாது.
  2. ஆண்கள் முழங்காலுக்குக் கீழேயோ, இடுப்புக்கு மேலேயோ எந்த ஆடைகளையும் அணியக் கூடாது.
  3. ஆண்கள் கோட்டுகளையோ, சட்டைகளைய, பனியன்களையோ உடுத்தக் கூடாது.
  4. எந்த ஆதி-திராவிடரும் சிகை அலங்காரம் செய்துக் கொள்ளக் கூடாது.
  5. ஆதி-திராவிடர்கள் தங்கள் வீடுகளில் மண்பாண்டங்கள் தவிர வேறு எந்தப் பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது.
  6. பெண்கள் ரவிக்கைகளோ, தாவணிகளோ அணிந்து தங்கள் உடலின் மேற்பகுதியை மூடிக்கொள்ளக் கூடாது.
  7. பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது; நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளக்கூடாது.
  8. ஆண்கள் வெயிலுக்கோ, மழைக்கோ குடைகளைப் பயன்படுத்தக் கூடாது; கால்களில் செருப்புகள் அணியக் கூடாது.
இந்த எட்டுத் தடைகளும் திருப்திகரமாக நிறைவேற்றப்படாததால் 1931 ஜூனில் கள்ளர்கள் ஒன்றுகூடி மேலும் பதினோரு தடைகளை விதித்தனர். இந்தக் தடைகளை அவர்கள் செயல்படுத்த முற்பட்டபோது வன்முறை முன்னிலும் கொடிய முறையில் தலைவிரித்துத் தாண்டவமாடிற்று. இப்போது கள்ளர்கள் விதித்த பதினோரு தடைகள் வருமாறு:
  1. ஆதிதிராவிடர்களும் தேவேந்திர குல வேளாளர்களும் முழங்கால்களுக்குக் கீழ் வேஷ்டி கட்டக்கூடாது.
  2. மேலே கண்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஆடவரும், பெண்டிரும் தங்க நகைகளை அணியக் கூடாது.
  3. பெண்கள் மண்குடங்களில்தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்; பித்தளை அல்லது வெண்கலப் பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வரக்கூடாது. தண்ணீர்க் குடங்களைத் தலையில் வைத்து சுமந்து வருவதற்கு அவர்கள் வைக்கோல் சும்மாடைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, துணி சும்மாடைப் பயன்படுத்தக் கூடாது.
  4. அவர்களுடைய குழந்தைகள் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளக்கூடாது.
  5. குழந்தைகளை மிராசுதாரர்களின் கால்நடைகளை மேய்க்கும்படி கூற வேண்டும்.
  6. ஆண்களும், பெண்களும் மிராசுதாரர்களின் பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும்.
  7. அவர்கள் மிராசுதாரர்களுக்கு வாரத்துக்கோ, குத்தகைக்கோ நிலத்தை சாகுபடி செய்யக்கூடாது.
  8. அவர்கள் தங்கள் சொந்த நிலங்களை மிராசுதாரர்களுக்குக் குறைந்த விலைக்கு விற்று விட வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களது நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட மாட்டாது. மழை பெய்து ஏதோ சிறிது விளைந்திருந்தாலும் அது இரவோடு, இரவாக களவாடப்படும்.
  9. அவர்கள் மிராசுதாரர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும்; ஆண்களுக்கு 4 அணாவும், பெண்களுக்கு 2 அணாவும் கூலியாகத் தரப்படும்.
  10. மேலே கூறிய வகுப்பினர் தங்கள் வீட்டுத் திருமணங்களின் போதோ, வேறு விசேஷங்களின் போதோ மேளவாத்தியத்தை பயன்படுத்தக் கூடாது.
  11. திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்னர் குதிரை மீது ஊர்வலம் வருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்; கல்யாண ஊர்வலங்களுக்கு தங்கள் வீட்டு கதவுகளையே பல்லக்குகளாக பயன்படுத்த வேண்டும்; எந்த காரியத்துக்கும் வாகனங்களை உபயோகிக்கக் கூடாது. ( அண்ணல் அம்பேத்கர் தொகுதி 10, பக்கம் 238-240)
மனு எங்கே நடைமுறையில் உள்ளது? இந்து மதத்தை மனுவை வைத்து மதிப்பிடக் கூடாது என்று முட்டுக் கொடுக்கும் இந்துத்வாதிகள். என்ன பதில் சொல்வார்கள் கள்ளர்கள் இந்துக்கள் இல்லையென்றா? அவர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள் என்றா?
ambமேற்கண்ட கொடுமைகளை சில கள்ளர்கள், அதுவும் வளம் படைத்த நிலச்சுவந்தார்கள்தான் முன்னின்று இதை நடைமுறைப்படுத்தினார்கள் என்று உழைக்கும் ஏழை கள்ளர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு கூறி சாதிவெறியை நியாயப்படுத்தலாம். நானும் அந்த ஏழை உழைக்கும் கள்ளர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை. மேல்மட்டத்தில் இருக்கும் வளம் படைத்தவர்கள் செய்யும் வன்கொடுமைகள், சாதிவெறி கொண்டு செய்யும் திமிர்த்தனங்களை சகித்துக் கொண்டிருப்பதோடு, அதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல், ஏதோ ஒரு வகையில் ‘ஆழமனதை’( நீயா நானா Effect) திருப்திப்படுத்திக் கொள்வதோடு, தன்னை மேலானவர் என்ற அங்கீகாரம் தருகின்றது என்ற அந்த வளம் படைத்தவர்களின் மேலாதிக்கம் நீடிக்கும்படிக்கு சாதி கட்டமைப்புக்கு காவலாக நிற்கும் காவல்காரர்களாக கள்ளர்களை போன்றே பிற உழைக்கும் சாதி இந்துக்கள் நிற்கின்றார்கள் என்ற உண்மைதான் சுடுகின்றது .
வளம் படைத்த அயோக்கியவர்கள் தீண்டப்படாத மக்களை மட்டுமல்ல, தம் சொந்த சாதி உழைக்கும் மக்களையும் சுரண்டுகிறார்கள். அந்த சுரண்டலை எதிர்த்து போராடுவதற்கு, தீண்டப்படாத சாதிகளின் உழைக்கும் மக்களோடு இணைந்து போராட வேண்டுமென்ற விழிப்புணர்வு இல்லாமல் தேங்கி நிற்கின்றார்கள். தங்கள் தேக்கத்தை இயலாமையை சாதி மேலாதிக்கம் தரும் போதையில் மீசையை தடவிக் கொண்டே குப்புற விழுந்து கிடக்கின்றார்கள்.
மேற்கண்ட விசயங்களெல்லாம் இன்று மாறிவிட்டதே, இப்பொழுது ஏன் இதைபற்றியெல்லாம் பேசுகின்றீர்கள்? உங்களுக்கு மக்கள் பிளவுண்டு கிடக்க வேண்டுமென்ற ஆவலால்தான் இப்படியெல்லாம் பேசுகின்றீர்கள். தமிழ்த்தேசிய இனமென்று பெருமை கொண்ட இனத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயல்கிறீர்கள். அம்பேத்கர் வடநாட்டுக்காரர், இந்தியை ஆதரித்தாரென்று என்று அவசர, அவசரமாக உள்ளூர இருக்கும் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு போகின்றார்கள்.
மாற்றம் என்பது சாதி இந்துக்களின் அப்பனாத்தாவோ, பாட்டன் – பாட்டியோ மனமிறங்கி பெரும் இழிவுக்கு உள்ளான மக்களுக்கு பிச்சையிட்டதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த மாற்றங்களுக்கு காரணம் அந்த மக்களின் போராட்டங்கள்தான் காரணம். அதற்கு சில பொதுவுடமை இயக்கங்களோ, பெரியாரிய இயக்கங்களோ, தலித் அமைப்புகளோ உரிமைகள் கோரலாம். இவற்றில் தலித் மக்களின் போராட்டமும் முதன்மையான காரணம். அதேவேளையில், தங்களுடைய சாதி சட்டகத்தை களைந்துவிட்டு தலித் மக்களோடு கைகோர்த்து போராடிய தலித் அல்லாத தோழர்களின் பங்கும் மறுக்கத்தக்கதல்ல.
ஆனால், அந்த போராட்டங்கள் முழு எல்லையை தொடுவதற்கான வேலைகள் இன்னும் மீதமிருப்பதால் சாதியம் பழைய கடுமையை கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் துணையோடு பல்வேறு தீண்டாமை வடிவங்களை இன்னும் நடைமுறைப்படுத்தத்தான் செய்கின்றன. நாம் இப்படி பேசிட்டிருந்தா ஒரு டீம் வந்து தலித் மக்கள் நடுவில் தீண்டாமையில்லையா? சாதி வேறுபாடுகள் இல்லையா? என்று எதிர்கேள்வி கேட்கலாம்.
அதற்கு நம் மொழியில் பதில் சொல்வதற்கு முன் அண்ணல் அம்பேத்கரின் வரிகளை அவர்களுக்கு நினைவுப்படுத்துவோம்.
“சாதிமுறை முக்கியமாக, இந்துக்களின் மூச்சுக்காற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்துக்கள் அந்த மூச்சுக்காற்றால் சுற்றிலும் உள்ள காற்று முழுவதையும் கெடுத்துவிட்டார்கள். அதன் மூலம் சீக்கியர், முஸ்லீம், கிறிஸ்துவர் உள்ளிட்ட அனைவரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.” (தொகுதி 1, பக்கம் 118)
வேற்று மதத்தினருக்கும் தங்கள் மதத்தினருக்கு பிடித்திருக்கும் நோயை கடத்திக் கொண்டு போகும் ஆற்றலை பெற்ற பார்ப்பனிய இந்து மதம் தலித் மக்கள் நடுவில் சாதி என்னும் தொற்று நோயை பரப்புவது கடினமான காரியமா என்ன? எப்படி பிறசாதி உழைக்கும் மக்கள் தாங்கள் பின்பற்றும் சாதியம் தங்கள் சுதந்திரத்திற்கும் எதிரானது என்பதை உணராது சாதியத்திற்கு காவல் காக்கின்றார்களோ, அதுபோல தங்களது முதல் எதிரியான சாதியத்திற்கு விழிப்புணர்வு பெறாத தலித் மக்கள் தங்களுக்குள் இருக்கும் உட்சாதிகளிடையே சாதிய பிளவுகளை பிறாண்டி பார்க்கின்றார்கள்.
ஆனால், ஒன்று இங்கே கவனிக்கத்தக்கது எப்படி இஸ்லாமியர்களையோ, கிருத்துவர்களையோ சாதி இந்துக்கள் எதிர்க்கின்றார்களோ அதேபோலவே, தம்மை போலவே இந்து பண்பாட்டை பின்பற்றினாலும் தலித் மக்களை வெறுக்கும் வாய்ப்பை சாதி இந்துக்கள் தவற விடுவதேயில்லை.
இதெல்லாம் நல்ல வக்கனையா பேசுறீங்க. எதுக்குய்யா இட ஒதுக்கீடு கேக்குறீங்க என்று பழைய மொன்னையான கேள்வியை இன்னும் முன்வைத்து தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு எதிரான தங்கள் ஆழ்மனதுக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள் ஆதிக்கசாதிகள். ஆனால், இட ஒதுக்கீடு சாதி வளர்க்கின்றது என்பது சுத்த பேத்தலான வாதமென்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதற்காக, மீண்டும் ஒருமுறை இந்த கேள்விக்கு விரிவாக பதிலளிக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அதற்கு முதலில் இட ஒதுக்கீட்டால் தலித் மக்கள்தான் அதிகம் பலனடைந்தார்கள் என்று உளறிக் கொண்டு திரியும் அறிவுஜீவிகள்(?), தலித் மக்கள் இந்த சுதந்திர இந்தியாவில் சாதி இந்துக்களை விட கூடுதலாக அடைந்த பலன்கள் என்னென்ன என்பதை பட்டியலிடுங்கள். அதோடு, இட ஒதுக்கீட்டல் சாதி இந்துக்கள் பெற்ற பலன்கள் தலித் மக்களைவிட குறைவானவை என்பதை தரவுகளோடு உணர்த்துங்கள். அதுவரை, உங்கள் பல்லிடுக்கின் நடுவில் இருக்கும் தலித் வெறுப்பு என்னும் சாதிவெறி நஞ்சை ஒடுக்கப்பட்டு மக்கள் எளிதில் கண்டுகொள்வார்கள் என்ற எச்சரிக்கை உணர்வோடு காவி கோவணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சனி, 5 ஏப்ரல், 2014

மரம்வெட்டிகளின் பங்காளிகள் மரம்வெட்டிகளே!

மாசுபட்ட சபர்மதி ஆறு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான 22 மார்ச் 2010 அன்று டி.என்ஏ நாளிதழில் வெளியான ஆவணமொன்று  இந்தியாவிலேயே அதிகமாக மாசுபட்ட மாநிலமாக குஜராத்தை அறிவிக்கின்றது,  அந்த ஆவணத்தில்,
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் ஆபத்தான கழிவுகளில் மிக அதிகபட்சமாக 29% குஜராத்தே வெளியேற்றுகின்றது, அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா 25% ஐ வெளியேற்றுகின்றது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் குஜராத்தை மிக அதிகமாக மாசுபட்ட மாநிலமாக அறிவிக்கின்றது. தொடர்ந்து அபாயமான கழிவுகளை வெளியேற்றுவது தொடர்ந்து அதிகரித்து வருவதிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டது.

குஜராத்தில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றியோ அல்லது சுரங்கம் தோண்டுவது போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகின்றன. மோடியின் அமைச்சரவை சகா பாபுபாய் போக்ரியா சட்டத்திற்கு புறம்பான சுரங்க பணிகளுக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேபோல மோடி பாலூற்றி வளர்த்த மக்கள் விரோத நச்சுப்பாம்பான  அதானி மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அனுமதியின்றியே தமது முக்கியமான தொழில்களை நடத்தி வருகின்றார் என்பதை வாசிப்பவர்கள் ஆழ்ந்து தம் கவனத்தில் இருத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதானி கும்பலின் இந்த மோசடியை 13, ஜனவரி 2014 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்ததோடு, அதானி கும்பலின் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (APSEZ) மூட  உத்தரவிட்டது. நைவால் கிராம மக்கள் சார்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த பாஸ்கர் பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. (இணைப்பு)

இந்த பொதுநல வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு முன் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் சுனிதா நாரெய்ன் தலைமையில் நிபுணர் குழு அமைத்தது.அதானியின் சிறப்பு பொருளாதார மண்டலம்  ‘75 ஹெக்டர் மாங்க்ரோவ் காடுகளுக்கு கடுமையான தீங்கை செய்திருப்பதாக’ தமது அறிக்கையில் அந்த குழு குற்றம் சுமத்தியது.  
இந்த காவி கும்பல்தான் நமக்கு முன்னேற்றம் பற்றி வகுப்பெடுக்கின்றது. அனைத்து உயிர்களையும் வணங்குவதுதான் இந்து மதத்தின் சுபாவம் பீற்றித் திரியும் இந்த கும்பல், வனங்களை மட்டும் முதலாளிகளின் காலடியில் வைப்பதன் மர்மமென்ன? ஒருவேளை இந்த காவி கும்பல் வணங்கும் உற்சவ மூர்த்தியே முதலாளிகள்தானோ?
நம் மூதாதையர்கள் வாழ்ந்து பாதுகாத்த பூமியை, அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்காமல், பணத்தாசை பிடித்து தெரியும் இந்த பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த மோடி என்னும் பொய்யர் என்ன  உளறியிருக்கின்றார் தெரியுமா? சுற்றுச்சூழல் குறித்து கிஞ்சித்தும் அக்கறையில்லாத இந்த நரமாமிச மோடி மரங்களையும் வெட்டி வீழ்த்தி காடுகள் அழிய துணை போன எப்படி தன்னை மீட்பர் போல கட்டமைக்கின்றார் தெரியுமா?
தனது கோவா பிரச்சாரத்தில்,
“நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.”
“ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தில்  பணத்தை கொடுக்காமல் எந்த கோப்புகள் விரைவாக நகர்ந்ததே இல்லை. ”
இது மட்டுமில்லாமல், தனது ட்வீட்டர் கணக்கில்
“கோவா மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கினேன்” என்று வேறு  எழுதி தொலைத்திருக்கின்றார்.
            பொய் சொல்வது பாசிஸ்டுகளுக்கு வெட்கமாயிருக்காதுதான். ஆனால்,  இந்த    பொய்களை நம்புபவர்களுக்கு  வெட்கம் வர வேண்டாமா?
[ஜெயந்தி நடராஜனுக்கு பிறகு 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய தடையேதுமில்லாமல் ‘தடையில்லை’ ஆவணத்தை வழன்கும் மொய்லி அமைச்சராக இருப்பதையும், அந்த ஆளை பற்றி மோடி வாய்  திறக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க]

மன்மோகன் கும்பல் மக்கள் நலனில் கரைதேர்ந்தவர்கள் என்றோ, மிகவும் நேர்மையானவர்கள் என்றோ நாம் கூறவில்லை. அவர்கள் உலக மகா திருடர்களே. ஆனால், மன்மோகனுக்கு மாற்று மோடி கும்பல் என்பது முட்டாள்தனத்தின் உச்சம். காங்கிரஸ் திருடர்கள் சுற்றுச்சூழல் விசயத்திலும் தேர்தல் நெருங்க, நெருங்க கார்ப்பரேட்டுகளுக்கு வேக, வேகமாக உரிமம் வழங்கியதை நாம் அறிவோம்.

ஆனால், அப்படி உரிமம்  வழங்குவதற்கு எதிராக ஒற்றை கேள்வியை இந்த கொலைக்கார கும்பல் கேட்டிருக்குமா? கேட்காது. 
ஏனென்றால், பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே.

நன்றி : இணைப்பு