|
வியாழன், 13 நவம்பர், 2008
அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம்
கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம்
கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம்
[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
ஆர்பிஜி எறிகணை - 01
புறப்பலர் - 01
ரி-56 ரக துப்பாக்கிகள், படையப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட இரு உடலங்களும் சிறிலங்கா படையினரிடம் கையளிப்பதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடந்த சனிக்கிழமை (08.11.08) ஒப்படைக்கப்பட்டது.
இந்த உடலங்களை புதுக்குடியிருப்பில் வைத்து விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிறுவனங்களின் இணைப்பாளர் கு.பாவரசன் கையளித்தார்.
இந்திய உளவு நிறுவனங்களின் சதி பற்றி கருணாநிதி
“ரா” உளவு நிறுவனம் தான் இந்த குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே “ரா”வின் நோக்கமாக இருக்கிறது, எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத்தமிழ் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு “ரா” தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையே செய்து கொண்டிருக்கிறது”
என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார், தமிழகத்தின் முதல்வர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது!
தமிழக முதல்வர் கலைஞர் கருணநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குபிரகுதான் தமிழ்நாட்டில் பதநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.
பக்கம்:64-65
ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.
வெளியீடு:பெரியார் திராவிடர் கழகம்
முதல் பதிப்பு:2007
யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?
ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா- இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் 1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூழைமேட்டில் இந்த சம்பவம் நட்ந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்.
நன்றி :
பக்கம்:58
ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.