சனி, 9 மே, 2009

பெரியாரின் பேரர்கள்

பெரியாரின் குடும்பத்தில் பிறந்ததால் மட்டும் பெரியாரின் பேரனாக ஆகிவிட முடியாது.

நாயைக்கூடத்தான் வீட்டில் வளர்க்கிறோம், அந்த நாய் அங்கேயே வளர்ந்ததால் நாய்க்கும் வீட்டின் பண்பாடு பேணுதலுக்கும் தொடர்பு உண்டு என்று சொல்ல முடியுமா? நாய் என்னதான் பணக்காரன் வீட்டில் வளர்ந்தாலும் நக்கிதான் குடிக்கும், பெரியாரின் உறவு வழி தொடர்பு இருந்தாலும், காங்கிரசை நக்கி பிழைக்கும் நாய்கள், பெரியாரியல் வாதிகளை கேள்வி கேட்க தகுதியற்றவர்கள்.

ஈ.வி.கே.எஸ் என்று பெயருக்கு முன் பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நாதாரி எவனும் பெரியாரின் பேரனாக முடியாது? நாங்கள்தான் பெரியாரின் கொள்கை வழி பேரர்கள். அவருடைய கொள்கைகள் எங்கள் உடைமை.எம் சமூகத்தின் தந்தை பெரியார், அவரை கொச்சப்படுத்த எவனோட அப்பன் வந்தாலும் எங்களால் தாங்க இயலாது, இதில் பெரியாரின் பேரன் எம்மாத்திரம்.

வரும் தேர்தல் உனக்கு தேர்தலில் தோல்வி தரும், வரும் தலைமுறை நீ அரசியல் களத்தில் தலையெடுக்காதவாறு பார்த்துக் கொள்ளும்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

10,000 தமிழ் மக்களை கொல்ல திட்டமிட்டுருப்பதாக தகவல்

இன்று இரவு 12 தொடங்கி காலை 5 க்குள் இலங்கை இராணுவம் 10,000 தமிழ் மக்களை கொல்ல திட்டமிட்டுருப்பதாக தகவல் அமெரிக்க உளவு நிறுவனம் மூலமாக செய்தி வெளியாகியுள்ளது.- காலம் கடக்கும் முன் ஏதாவது செய்யுங்கள்.

Pls forward this to as many as possible. Act Soon

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

எம்மை கேள்வி கேட்க, எங்களை அடிமைப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை. - தமிழன்

எம்மை கைகட்டி, வாய்மூடி நிற்க சொல்கிறான் சிங்களவன்

சிங்களவனுக்கு ஊதுகுழலாய் இந்தியா!

அடிமைத்தனம் சரியென்றா,


இந்தியா என்றொரு நாடு உருவானது?


இந்திய விடுதலை சரியென்றால்,எங்கள் ஈழ விடுதலைப்போரும் சரிதான்

எம்மை கேள்வி கேட்க, எங்களை அடிமைப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை.

காலம் பதில் சொல்லும்.......

-உள்ளம் கனன்று கொண்டிருக்கும் தமிழன்


வியாழன், 23 ஏப்ரல், 2009

எம் இனத்தை அழிக்கும் துரோகிகளே!எதிரிகளே!

எங்கள் சோகம், நாளை பதில் சொல்லும்

தம் மகனுக்கு முதுகில் காயம்பட்டால் அவனுக்கு பால் சுரந்த முலையறுத்து எறிவேன் என்றாலாம் ஒரு தமிழ்த்தாய்,

நீங்கள் முதுகில் குத்துகிறீர்களே, எதை அறுத்து எரிவது

எங்கள் சாவின் விளிம்பிலும் உங்களுக்கு இரக்கம் இல்லை,

உங்கள் நாவின் விளிம்பிலும் உண்மை இல்லை.

துரோகம்! துரோகம்!!

நாங்கள் உயிருக்காக அழுகிறோம், உரிமைக்காக அழுகிறோம்,

நீங்கள் ஓட்டுக்காக அழுகிறீர்கள்

எங்கள் இனமானம் குப்புற விழுந்து கிடக்கிறது, மண்டியிடச் சொல்கிறான் எதிரி. எங்கள் இனத்தலைவனாம் நீ, முதல் ஆளாக மண்டியிட்டுக் கிடக்கிறாய்

எம் உறவுகளின் உரிமைகளை முகம்காண முடியாத அளவு பேரினவாதம் சிதைத்துக் கொண்டிருக்கிறது, முகம் காணாதவர் போல் இருக்கிறது உலகம், நடிக்கிறது எம்மிடம்.

என் தம்பி அடிபட்டு கிடக்கிறான் என்னால் தங்க முடியவில்லை,

ஆனால், துரோகியும், எதிரியும் அவ்வலியை உணர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறுதான் என்று இன்றுவரை உள்ளத்திற்கு புரிய மாட்டேன் என்கிறது.

நாய்களே உங்களை நோக்கியே மீண்டும் கோரிக்கை வைத்து உங்கள் வீட்டுவாசலிலல்லவா கூடி அழுகிறது எம் இனம்

எம் தாய்மார்களின் மார்பில் வெடிவாசனை, கண்களில் கண்ணீர், கருப்பையில் வெடிகுண்டு.

எந்த இனமும் காணாத துயரம் நாங்கள் கண்டோம், கண்டு கொண்டிருக்கிறொம்.

துரோகிகளே!எங்களிடம் அழ கண்ணீர் இல்லை, நாங்கள் அழுதால் கண்ணீரை சேமித்து அதையும் பையிலிட்டு, விற்று காசாகவோ, ஓட்டாகவோ தின்று விடுவீர்கள்.